வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Monday, November 09, 2009

பார்ப்பனர்களை ஒழிக்க வேண்டுமென்றால் அவர்களைக் கொண்று ஒழிப்பது என்பது அல்ல….


வாயில் - நாக்கில் - குற்றம் இருந்தா லொழிய வேம்பு இனிக்காது; தேன் கசக்காது; இபறவியில் மாறுதல் இருந்தாலொழிய புலி புல்லைத் தின்னாது; ஆடு இறைச்சி உண்ணாது. அதுபோன்றதே பார்ப்பனர் தன்மை. தன் சுய இன நன்மை ஒன்றே அவர்கள் குறியாக இருக்கும்.


பார்ப்பான், பணக்காரன் என்ற இரண்டில், பணக்காரன் என்பது இயற்கையான பேதம் அல்ல; செயற்கையே யாகும். அதாவது எவனும் தான் பிறக்கும் போதே பணக்காரனாகவே பிறந்து பின் சாகும்போதும் பணக்காரனாகவே சாவான் என்பதில்லை. ஆனால், பார்ப்பான் பேதம் அப்படியில்லையே. அது அவன் அம்மா வயிற்றிலிருந்து வரும் போதே நான் பார்ப்பானாக வருகின்றேன் என்கின்றான்.

பார்ப்பானுடைய தர்மம் உடல் வியர்க்கப் பாடுபடல் கூடாது. பிச்சை எடுத்துப் புசிக்க வேண்டும். பார்ப்பான் கேட்டால் எந்தப் பொருளையும் உடனே கொடுக்க வேண்டியது நம்முடைய (சூத்திரம்) தர்மம். பார்ப்பான் யாரிடம் பிச்சை கேட்டாலும் தன் பொருளையே சொத்தையே வாங்கிக் கொள்கிறான். பூமி, பணம் எல்லாம் பார்ப்பானுடையது. அதைக் கொடுக்காவிட்டால் உதைத்து வாங்கலாம் என்பது பார்ப்பான் தர்மம். ஏர் கலப்பை, வட கயிற்றைப் பார்ப்பான் கையால் தொட்டாலே பாவம். நாம்தான் உழ வேண்டும்.

ஆரியர் இந் நாட்டுக்கு வருமுன், நிலம், நீர் , இடம் காரணமாக மக்கள் பழக்க, வழக்க, இயற்கைத் தன்மைகளில் பேதமிருந்ததாக்க் காணப்படுவதல்லாமல் மதம், மதத்தின் பயனாய் ஏற்பட்ட வேடம், சடங்கு, சாதி என்பவைகள் காரணமாகப் பேதம், பிரிவு இருந்ததாகச் சொல்லுவதற்கு அறிகுறிகள் காணப்படவில்லை.

பார்ப்பனரின் நடத்தையும், கொடுமையும், அக்கிரமும்தான் நம்மைப் பார்ப்பானே வெளியேறு என்று கூறும் முடிவுக்கு வரச் செய்தது.ஒரு இடத்தில் ஒரு வியாதி ஏற்பட்டால் - வியாதிவந்தவனைப் பார்த்துப் பார்த்து மருந்து கொடுத்துக கொண்டு வருவதால் - வியாதியை ஒழித்துவிட முடியாது. வியாதியின் மூலாதாரத்தைக் கண்டுபிடித்து, அதை அடியோடு அழிக்க வேண்டும். அது போலவே கொசுக்கள் இந்த மண்டபத்திற்குள் வருவதற்குக் காரணம் என்ன என்பதைக் கண்டு பிடித்து அதை அழிக்க வேண்டும். இந்த மண்டபத்தில் இவ்வளவு அதிகமான கொசுக்கள் கொச கொச வென்று இருக்கின்றனவென்றால் இதற்குக் காரணம் இங்குள்ள ஓதம், அருகிலுள்ள நீர்த் தேக்கம், அதிலுள்ள அசுத்தம், அழுக்கு ஆகிய காரணங்களால்தான் கொசுக்கள் உண்டாகின்றன என்பதை நன்றாய் அறிய வேண்டும். கொசு உபத்திரவங் கூடா தென்கிறவர்கள் மேற் கண்ட அசிங்கங்களையும் தீர்த் தேக்கங்களையும் அழிக்க வேண்டும். அக்கம் பக்கம் உள்ள வல்லா இடமும் சுத்தமாக வைக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் கொசுக்கள் ஒழியும், இல்லா விட்டால் வெட்ட வெட்டத் தழைக்கும் மரம் போல எவ்வளவு அழித்தாலும் வட்டியுடன் பெருகும் என்பதை என் அபிப்பிராயம். அது போலவே பார்ப்பனர்கள் எப்படி உண்டானார்கள்? அவர்கள் தொல்லை எதனால் ஏற்பட்டது? அதை எது பாதுகாத்து வளர்க்கின்றது? என்பவைகளைக் கண்டு பிடித்து அவற்றை அழியுங்கள்; நசுக்குங்கள்; அதுதான் பார்ப்பனீயத்தை ஒழிக்கும் மார்க்கமாகும்.

பார்ப்பனர்களை ஒழிக்க வேண்டு மென்றால் அவர்களைக் கொண்று ஒழிப்பது என்பது அல்ல…. சாக்கடைக் கசுமாலமு ஒழிந்தால் எப்படி கொசு ஒழியுமோ அப்படி இந்த மதம், கடவுள், கோயில், புராணம் ஒழிந்தால் பார்ப்பனர் ஒழிந்து விடுவார்கள்.

இந்து மத எதிப்புக்கோ, இந்துத்தான் எதிர்ப்புக்கோ, ஆரியர் - திராவிடர் என்கின்ற உணர்ச்சிக்கோ பார்ப்பனத் துவேசம் காரணமல்ல. மக்கள் மீது உள்ள பரிதாபமே காரணம்.

சமுதாயத் துறையில் பார்ப்பனர்கள் அனுஷ்டிக்கிற உயர்வு, அவர்கள் அனுபவிக்கிற அளவுக்கு மேற்பட்ட விகிதம் ஆகியவைகளில் தான் எனக்கு வெறுப்பு இருக்கிறது. இது பார்ப்பனர்களிடம் மாத்திரமல்ல. இந்த நிலையில் உள்ள எல்லோரிட்த்திலுமே வெறுப்புக் கொள்கிறேன்.

பார்பானை  என்ன நாங்கள் இந்நாட்டில் இருக்க வேண்டாம் என்றா கூறுகிறோம்? தாராளமாக இருக்கட்டும் ஆனால் அவர்களு மனிதர்களாக இருக்கட்டும். தேர்களாக இருக்க வேண்டாம் என்றுதானே நாங்கள் கூறுகிறோம். எங்களுக்கும் மற்ற மதத்தவர்களுக்கும் இடையூறில்லாத எந்த உரிமையையும் பார்ப்பனர்க்கும் வழங்க நாங்கள் தயாராகத்தானே இருந்து வருகிறோம்.


----------பார்பனியம் பற்றி தந்தை பெரியார்

3 comments:

Muthukumara Rajan said...

பார்ப்பானையும் பாம்பையும் கண்டால் பாம்பை விட்டிட்டு பார்ப்பானை அடிக்க வேண்டும்

--

என்ன ஒரு அருமையான சிந்தனை

மணிஜி said...

/வேண்டுமென்றால் அவர்களைக் //கொண்று //

முதலில் தமிழை கொல்வதை நிறுத்து தம்பி

nerkuppai thumbi said...

ஐயா பார்பனீயத்தை பெரியார் எண்ணங்களை மீண்டும் வெளியிடுவதற்கு நன்றி.
இவற்றை இயம்பிய காலத்தில் நமக்கு படிக்கக் கொடுத்து வைக்கவில்லை.
ஆனால் ஒன்று : கடந்த ஐம்பது ஆண்டுகளிலே சமூகத்தில் சில பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன; மறுப்பதற்கில்லை. அதை கருத்தில் எடுத்துக்கொண்டு, பார்ப்பனீயம் குறைந்துள்ளதா? மேலும் வளர்ந்து உள்ளதா ? அதற்கு என்ன செய்ய வேண்டும் என சிந்தித்தால் நலமாக இருக்கும். புதிய எண்ணங்களையும் விவாதிப்போம்

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]