வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Thursday, July 15, 2010

தமிழர்கள் நம்பும் பல கருத்துகளுக்கு ஆரியர் (பார்ப்பனர்கள்) கொண்டுள்ள உண்மையான கருத்து

(தமிழர்கள் நம்பும் பல கருத்துகளுக்கு ஆரியர் கொண்டுள்ள உண்மையான கருத்து)


கோயில்

கோவென மக்களை வெளியே அழ வைத்து வாழ்வதற்காக ஆரியர் தமிழரைக் கொண்டே கட்டிவைத்துக் கொண்ட இல்லங்கள்.

கும்பாபிஷேகம்
கும்பம்= வயது, அபிஷேகம்= ... செய்வது, ஆரியர் வயறு குளிர... வாழ்,ஓர் வழி.

அர்ச்சனை...

ஹர்- சேனை என்பதன் மருஉ. ஹர் என்ற கொள்ளைக் கூட்டத்தாரின் சேனை போல், தமிழரைக் கொள்ளையடிக்க உபயோகமாகும் தந்திரம்.

திராவிட மக்களின் செல்வத்தை வாழ்வையும் இந்த நாட்டிலே கரைக்க உபயோகித்த ஆயுதம். இன்று கொஞ்சம் கூர் மழுங்கிக் கிடக்கிறது.

அரன்.
அரம் என்பதன் திரிபு. தமிழர் வாழ்வைத் துண்டு துண்டாக்க உபயோகிக்கப்பட்ட அரம்= ஒரு ஆயுதம்.

கௌபீனம்.

தமிழருக்கு, அவர்கள் பட்டு பீதாம்பரம். பவுன்புட்டா சேலை முதலிய ஆடைவகைகள் செய்யும் திறமை உள்ளவர்களாக இருந்தாலும், யார் என்ன அணிய வேண்டும் என்பதைக் குறிக்கும் பதம். லகரம், னகரமாகி விட்டது. தமிழர்களுக்கு விஷயம் தெரியாமலிருக்க.

வினாயகன்
வினா- அகன், என்பதன் கூட்டுச் சொல். ஏன் இப்படி எங்களைத் துரத்தினீர் என்ற வினா தமிழர்களுக்கு தோன்றினாலும், அதை மனத்திற்குள்ளேயே முடங்கும்படி செய்வதற் காக ஏற்பட்ட கற்பனைத் தேவன், வினா அகன், என்பதை வினாயகன் என்று தொகுத்துத் தமிழருக்குத் தந்தோம்.

ராவணன்
ரா+வண்ணன், ராவணன் என்றாயிற்று, ரா= இரவு, வண்ணன்= நிறமுடையவன், அதாவது கரிய மேனியன், தமிழன்.

இதிகாசம்
இது, காசம், என்பது தமிழருக்குத் தெரியாதிருக்கும் பொருட்டு, இதிகாசம் என்று கூறப்பட்டது. இது= இந்தக் கதை, காசம்= கேட்டு நம்பினவருக்குக் கருத்து, காசநோய்க்காரரின் உடல் கெடுவது போல் கெட்டு விடும் என்பது புதைந்துள்ள பொருள்.

வேதம்

பேதம், என்பதையே, வேதம் என்று விளம்பினோம். நாட்டிலே பேதம் இருக்கவே, இந்த வேதம் பயன்படுவிதிலிருந்து, இந்த இரகசியம் விளங்கும்.

வைகுண்டம்

வை! முண்டம்! என்பதைத் திரித்து எழுதினோம். எம்மிடம், ஏமாறும் முண்டமே! வை, காசு பணம் என்று நம்மவர், திதி முதலிய காரியங்களின் போது தமிழரைக் கேட்க, வை குண்டம் என்ற இரகசிய கோட் (ஊடினந) உபயோகிக்கிறோம்.

கைலாயம்

தானை முன், என்பது முந்தானை என்று ஆயிற்று, தானை சேலை, முன்= முன்னால் இருக்கும் பாகம். அதுபோலவே லாயம் கை, என்பது கைலாயம் என்றாயிற்று. லாயம்= ஆரியருக்குச் செக்குமாடுகளாக உள்ள ஏமாளி களை அடைத்து வைத்திருக்கும் பட்டி, கை= நம்முடைய கையில் இருக்கிறது என்று, நம்மவர், தமிழரின் சடங்குகளிலே சொல்லுகிறோம். இதுவும் இரகசிய கோட் (ஊடினந) தேசிய சர்க்கார் எங்ஙனம் அமைப்பது, இங்கு மூன்று தேசங்கள் உள்ளனவே என்றுரைத்தாலோ, முப்புரிகள் முணு முணுக்கின்றன. பின்னர் எப்படித் தேசீய சர்க்கார் அமைப்பது! இதுசமயம் தேவை, தேசீய சர்க்காரால்ல, இன்று தேசீயம் என்பது, ஓர் கதம்பக் குழம்பாக இருக்கிறது. நாட்டுப் பிரிவினைக்குப் பிறகே, தெளிவான தேசீயம் தோன்ற முடியும்! இன்று அவசியமானது, போரைத் திறம்பட, வெற்றிகரமகா நடத்தித் தரக்கூடிய, பலமான சர்க்கார்- அதைப் பரிபூரண மாக ஆதரிக்கும் மக்கள்- அம்மக்களைக் சரியான வழியிலே நடத்திச் செல்லும் தலைவர்கள்- இவையே! இவைகட்குக் குறுக்கே நிற்பது, ஆச்சாரியார்ர் போன்றோர், அடிக்கடி விடும் அறிக்கைகள், சில சீமை மகாத்மாக்கள் விடும் யோசனைகள், பேட்டிகள் ஆகிய நிகழ்ச்கிகளே என்போம்.

தேசீய சர்க்கார் தேவை, தேவை என்று இன்று கூறும், ஆச்சாரியார், அதை அமைக்க, அவருக்கு இருந்த அருமையான சந்தர்ப்பங் களைத் தவற விட்டுவிட்டார் என்பதை, தர்க்கத் துக்காக அவர் மறுக்கலாமே தவிர, மனதார மறுக்க முடியாது!! போர் துவங்கிய உடனே, பிரிட்டனுடன் பேரம் பேசும் காரியத்திலே இறங்காது, பிணக்கு தீர, இங்குள்ள கட்சிகளைக் கலந்து சமரசம் உண்டாக்கியிருந்திருப்பின், இன்று ஆச்சாரியார் கோரும் சர்க்கார் இருந்திருக்கும்! அன்று அவரது ஆசை, வாலியை வீழ்த்த வேண்டும் என்பதன்றி வேறில்லை, இன்று விம்மிடுவது வீண் என்போம். இப்போதும், மூன்றாண்டுகட்கு முன்பு பேசியிருக்க வேண்டியதைப் பேசிக் கொண்டிருந்து பயன் இல்லை.

இன்று, ஆச்சாரியார் ஆங்கிலேயருக்கு, வேண்டுகோளோ, எச்சரிக்கையோ விடுவதை விட உண்மையிலேயே நாடு, ஜப்பானியரிடம் சிக்காமலிருக்க வேண்டுமென்ற எண்ணமிருப் பின், போர்க்காலத்திலே பேரம் பேசக்கூடாது என்று கூறிவிட்டு, களத்தை வேவல்கள் கவனிக்கட்டும், மக்களை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம் என்று கூறிவிட்டு, மற்றத் தலைவர்களுடன் கலந்து பேசி, மக்களிடையே, போரில் வெற்றிபெறுவதற்கான ஆர்வம் பிறக்கும் வேலையைச் செய்தலே, முறை என்போம்.

கல்கத்தாவிலே ஆச்சாரியார் பேசிய போது, தமது காங்கிரஸ் சகாக்களுக்குச் சொன் னார், ``பிரிட்டிஷ் ஆட்சியை இத்தனை வருஷ காலம் பொறுத்துக் கொண்டோம், இனி இரண்டாண்டு பொறுத்துக்கொள்வோம்’’ என்ற அருமையான போதனை! அத்துடன் ஒன்று சேர்த்து ஆச்சாரியாருக்கு நாம் அர்ப்பணம் செய்கிறோம், இந்த மூன்றாண்டுகளாக உமது சகாக்கள் ஒதுங்கி இருந்தது போல், இன்னும் இரண்டாண்டு, வெற்றி கிடைக்கும்வரை, ஒதுங்கி இருக்கட்டும், இந்தச் சமயத்திலே, அவர்களை உள்ளே புகுத்தும் முயற்சி வேண்ண்டாம்.’’

இதனை நாம், எட்டு கோடி முஸ்லீம், நாலு கோடி திராவிடர், ஆறு கோடிக்கு அதிகமான ஆதிதிராவிடர் சார்பாகக் கூறுகிறோம். ``பவதி பிஷாந்தேஹி’ என்று, சியாங்கே ஷெக்கிடமோ, ரூஸ்வெல்ட்டிடமோ சென்று பயனில்லை என்று சீரிய புத்திமதி கூறிய டாக்டர் அம்பேத்காரின் அறிக்கையையும், கண்டவர். காற்றாடியைப் பறக்க விடும் கபடம் வேண்டாம் என்று ஜனாப்ஜின்னா விடுத்த எச்சரிக்கையையும், கவனப்படுத்துகிறோம்.

- அறிஞர் அண்ணாவின் கட்டுரை, திராவிட நாடு, 8-11-1942
                                                                                                                      

6 comments:

Thamizhan said...

அவர்களை நம்பி "சாமி குழந்தைக்கு பேர் வையுங்க" என்று போனவர்களுக்குப் பெயர் சூட்டினார்கள்.

மயிராண்டி (கேசவன் ) ஆதி கேசவன்.
லிங்கம்---

Anonymous said...

தமிழர்கள் நம்பும் பல கருத்துகளுக்கு அரசியல்வாதிகள் (கழகங்கள்) கொண்டுள்ள உண்மையான கருத்து.
மக்கள் நலன் - தம் மக்கள் நலன்.
வாக்கு சீட்டு - அடிமை சாசனம்.
மாநாடு - மக்களுக்கு கோவிந்தா, மகராசர்களுக்கு பேரானந்தா
டாஸ்மார்க் - மக்களுக்கு தரும் இலவச சயனைட்.
கலர் டிவி - மனிதனின் மூளையை மழுங்கடிக்க. மானாட மயிலாட - கவர்ச்சி விருந்து.
பொது நலம் - சுய நலம்.

பரணீதரன் said...

/* அவர்களை நம்பி "சாமி குழந்தைக்கு பேர் வையுங்க" என்று போனவர்களுக்குப் பெயர் சூட்டினார்கள் */

அது மட்டுமா தமிழன் அய்யா.....மாட்டு மூத்திரத்தையும் ....சாணத்தையும் கொஞ்சம் நெய் கலந்து பிரசாதம் என கொடுத்து குடிக்க வைத்து விடுகிறார்களே இந்த பார்பனர்கள்......அதனை குடிக்கும் போது, குடிப்பவர்கள் முகத்தையே பார்ப்பார்கள்..முகத்தை சுழிக்கிறார இல்லை நல்ல இன்பமா குடிகிரற என்று....அதுதான் பார்ப்பனர்கள் நம்மை அளக்கும் தெர்மாமீட்டர்......

பரணீதரன் said...

/*மக்கள் நலன் - தம் மக்கள் நலன்.
வாக்கு சீட்டு - அடிமை சாசனம்.
மாநாடு - மக்களுக்கு கோவிந்தா, மகராசர்களுக்கு பேரானந்தா
டாஸ்மார்க் - மக்களுக்கு தரும் இலவச சயனைட்.
பொது நலம் - சுய நலம். */

மேற்கண்ட அனைத்தும் ஆச்சாரியார் 1932 ஆட்சிக்கு மட்டுமே பொருந்தும்
தம்மக்கள் - பார்ப்பனர்கள்
வாக்குச்சீட்டு - நீங்கள் கூறியது சரியே
மாநாடு - 100 சதவீதம் சரி
டாஸ்மார்க் - அதுவும் சரி .....கல்வி தரமறுத்து அதற்க்கு காரணம் அரசு மதுக்கடை மூடியது என்று சொன்னது...

/*கலர் டிவி - மனிதனின் மூளையை மழுங்கடிக்க. மானாட மயிலாட - கவர்ச்சி விருந்து.*/

மற்ற தொலைக்கட்சியில் நடக்கும் ஜோதிட, பார்ப்பன (எங்கே பிராமணன்?) பீத்தளுக்கு ...பொழுதுபோக்கு எவளவோ மேல்

பரணீதரன் said...

மனிக்கவும் மேற்கண்ட ஆச்சாரியாரின் 1932 ஆம் ஆண்டு ஆட்சி என்பதை 1937 - 1939 என மாற்றி வாசிக்கவும் ...அப்பொழுதுதான் பார்பனிய ராஜாஜியின் ஆட்சி நடைபெற்றது...

நம்பி said...

/*கலர் டிவி - மனிதனின் மூளையை மழுங்கடிக்க. மானாட மயிலாட - கவர்ச்சி விருந்து.*/

ஏன் வெற்றி சரித்திரம்...முதல் உலகப்போர்....தீவிரவாதத்தை உருவாக்கும் வல்லரசு நாடுகள்....இரண்டாம் உலகப்போர்....கருத்து யுத்தம்.....உங்கள் ஊரில்....நேருக்கு நேர்...24 மணி நேர செய்திகள்...உலக செய்திகள்....விலங்குகளின் பரிணாம வளர்ச்சிகள்...அறிவியல் நிகழ்ச்சிகள்...மனிதனும் விலங்கும்...பூதக்கண்ணாடி...குற்றம்...இப்படி...விவாசயம்....தமிழ் பேசுங்கள்....பேச்சாளராவது எப்படி...அறிவியல் ஆயிரம்...தமிழ் வினாடி வினா...தமிழில் பிழையின்றி எழுதுவது எப்படி...என்று இப்படி ஆயிரம் பல்வேறு ஒளிபரப்புகள் வெவ்வேறு நிகழச்சிகள்...மகளிருக்கான சிறப்பு நிகழ்ச்சிகள்...சட்டம் பற்றிய நிகழ்ச்சிகள்..மருத்துவ ஆலோசனை...அத்தியாவசிய சட்டங்கள் இதெல்லாம் பார்க்க தனிக்கண் வேண்டுமோ...?

இல்லை, இதற்கும் அரசு ஆலோசனை வழங்க வேண்டுமோ?...இதையெல்லாம் பார்க்கமாட்டார்கள் என்ற அதீத கற்பனை எண்ணமோ?...இதையெல்லாம் பார்த்தால் மக்கள் அறிவாளிகள் ஆகிவிடுவார்கள்...என்ற பயமோ?

ஆகையால் இது மாதிரி மக்களின் பார்வைகளைவைத்து தான் இதை குறை சொல்ல முடியும் என்ற பெரிய மனதோ? தெரியவில்லை...இது குறையல்ல பக்கப்பார்வை.

வீட்டில் இருக்கும் படித்த, படிக்காத அம்மாவும், ஆயாவும், எதைப்பார்ப்பார்களோ? அதை பார்ப்பார்கள்...முதியவர் எதை பார்க்கவேண்டுமோ? அதை பார்ப்பார்...இளைஞன் எதை பார்க்க வேண்டுமோ? அதை பார்ப்பான்...மாணவன் எதை பார்க்கவேண்டுமோ? அதை பார்ப்பான்...

குறை சொல்பவர்கள் எதை பார்க்கவேண்டுமோ? அதை பார்ப்பார்கள்...இது அவரவர் பார்வைகள் என்று தான் எடுத்துக்கொள்ளவேண்டும்.

நிகழ்ச்சிகளை பார்ப்பவர் பார்வையில் இருக்கிறது அதன் புறக்கணிப்பும், விருப்பமும்...டிவி வழங்கியதில் ஒன்றும் இல்லை. மக்கள் நலத்திட்டம் மட்டுமே உள்ளது.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]