வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Sunday, July 18, 2010

'ஓ' அந்த ஞானிதானா இவர்?

தோழர் ஞாநி மீண்டும் ஓ போட வந்துள்ளார் எதற்காம்? பெரியாரின் எழுத்து பேச்சு முதலியவற்றை யாரும் வெளியிடலாம் என்று நீதிமன்றம் தீர்ப்புக் கூறி விட்டதாம். அதற்காக ஓ போட முன் வந்துள்ளார். பெரியாரின் எழுத்துகள், பேச்சுகளை யார் வேண்டுமானாலும் வெளியிட்டால்தான் திரிபுவாதங்கள் தலை தூக்கும், புத்தர்பற்றி ஜாதகக் கதைகள்போல் கிளம்பினால்தான் பெரியார் கருத்துகள் திரிபுவாதங்களுக்கு ஆளாகும். அதன் மூலம் நீர்த்துப் போனால் நல்லதாகப் போயிற்று என்ற நச்சு எண்ணங்களை நெஞ்சங்களில் தேக்கி வைத்துள்ளவர்கள் இப்படித்தான் ஓ போடுவார்கள்.

குமுதம் இதழில் எழுதும் எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை குமுதம் அனுமதியின்றிப் பயன்படுத்தக் கூடாது என்று சொன்னதற்காக குமுதத்திடமிருந்து முறுக்கிக் கொண்டு கிளம்பியவர். இப்பொழுது அதே குமுதத்திடம் சரணம் அடைந்து ஓ போடுகிறார்! ஓ அந்த ஞானிதானா இவர்? இவருக்குச் சுயமரியாதை என்பது தவணை முறையில் தான் வந்து வந்து போகும் போலும். சாமி. சிதம்பரனார் எழுதிய நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டது என்றவுடன் அவரால் எழுதப்பட்ட தமிழர் தலைவர் என்ற தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலை வெளியிட்ட ஒரு பதிப்பகம் தமிழர் தலைவர் (A Life History of Periyar E.V. Ramasamy Naicker) என்று வெளியிட்டுள்ளதே.

ஜாதி ஒழிப்புக்காகத் தம்மையே ஒப்படைத்துக் கொண்ட தலைவரை ஜாதி அடைமொழி போட்டு நூல் வெளியிட்டுள்ளதே. அதற்கு இந்த நூலாரின் எதிர்ப்பு வெடித்துக் கிளம்பாதது ஏன்? இவர் யாருக்காக ஓ சபாஷ் போடுகிறாரோ அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் நடிகவேள் எம்.ஆர். ராதா பெயரால் நூல் வெளியிட்டு, தந்தை பெரியாரை சிறுமைப்படுத்தி எழுதியுள்ளார்களே. அதனைச் சீண்டி எழுதியதுண்டா இந்தத் திருவாளர்?

அவாளுக்கு மிக நன்றாகவே தெரியும். பெரியார் பெயரைச் சொல்லும் மற்றவர்களைப் பற்றி புகழ்ந்து எழுதினாலும் பாதிப்பு ஏற்படப் போவதில்லை. திராவிடர் கழகத்தையும், அதன் தலைவரையும் சிறுமைப்படுத்தினால்தான் தங்கள் ஆத்துக்கு நல்லது என்ற நினைப்புதான் அவாள் ஆழத்தில் உள்ளது; அதன் வெளிப்பாடே இந்த ஓ கூட்டம்.

--------- விடுதலை ஞாயிறு மலர் (17.07.2010)

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]