வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Tuesday, July 27, 2010

கல்யாண வீட்டில் கருமாதி மந்திரம் கூறிய புரோகிதர்..தடுத்தவர் நாவலர் சோமசுந்தர பாரதியார்

நாவலர் சோமசுந்தர பாரதி யார் அவர்களின் பிறந்த நாள் இந்நாள் (1876). இவர் சைவ மெய்யன்பர் என்றாலும், தமிழ், தமிழர் இனவுணர்வில் யாருக் கும் சளைத்தவர் அல்லர்.

1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தந்தை பெரியார் அவர்களுக்கு உற்ற துணை வராக இருந்தவர்.

இந்தியை எதிர்ப்பவர்கள் யார்? ஓர் ஈரோட்டு ராமசாமி நாயக்கரும், ஒரு புலவரும் தானே? என்று அன்றைய சென்னை மாநில பிரதமர் சக் ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி யார் (ராஜாஜி) சட்டப் பேரவை யில் கேலி செய்தபோது ஆமாம் - இந்தியை எதிர்ப்பவர்கள் இவர்கள் இருவர்தான். ஆனால், இந்தியை ஆதரிப்பவர் நீங்கள் ஒருவர் மட்டும்தான்! என்று ஆச்சாரியாரின் முகத்துக்கு முகம் பதிலடி கொடுத்தார் சர். ஏ.டி. பன்னீர்செல்வம் அவர்கள்.

ஆச்சாரியார் சொன்ன அந்தப் புலவர் பெருமகன் வேறு யாருமல்லர் - நாவலர் சோமசுந் தர பாரதியார்தான். அந்த அளவுக்கு நாவலர் பாரதியார் இந்தி எதிர்ப்புக் களத்தில் தளகர்த்தராகத் திகழ்ந்தார்.

கம்ப இராமாயணத்தைக் கொளுத்தவேண்டும் என்ற விவாதப் போர் 1948-களில் நடந்தது. சென்னையில் அறிஞர் அண்ணாவோடு விவாதம் புரிந்தவர் ரா.பி. சேதுப்பிள்ளை. சேலத்தில் அண்ணாவோடு மோதியவரோ இதே நாவலர் பாரதியார்தான் (14.3.1948).

அந்த விவாதத்தில்கூட தமது பார்ப்பன எதிர்ப்புணர்வைப் பதிவு செய்யத் தவறவில்லை நாவலர் பாரதியார் அவர்கள்.

என்னுடைய 14 வயதி லேயே எனக்குக் கல்யாணம் நடந்தபோது நேரிட்டதைச் சொல்லுகிறேன். எட்டையபுர சமஸ்தானத்தில் ஓர் கிராமத் திலே நாகரிக உணர்ச்சி பரவ முடியாத ஊரிலே எனக்குக் கல்யாணம். நான் வைதீக உணர்ச்சி உள்ளவன். நல்ல சைவன். இப்போது இருக்கும் சைவம் போன்றதல்ல. என் னுடைய சிவநெறி வேறு. இன்று சைவப் பண்டிதர்கள் கூறும் சைவம் நான் கொள் வதல்ல. உண்மையே எனக் குச் சிவம். எனக்குக் கல்யா ணம் பார்ப்பனரை வைத்துச் செய்வதாகக் கூறினார்கள். அப்படிப்பட்ட கல்யாணம் எனக்கு வேண்டாம் என்றேன். சைவ ஆகமங்களின்படி பார்ப்பனர்களைச் சண்டாளர் கள் என்று கூறப்பட்டிருக் கிறது - கோயில்களிலே அவர் கள் துவஜஸ்தம்பத்துக்கு அப்புறம் நுழையக் கூடாது. வந்தால் தீட்டாகிவிடும் என்று ஆகமம் கூறுவதால், அப்படிப் பட்ட சண்டாளர்களைக் கொண்டு நான் கலியாணம் செய்துகொள்ள மாட்டேன் என்றேன். என் குடும்பத்தார் திருநெல்வேலிக்கும், மது ரைக்கும் போய் பண்டிதர் களைக் கேட்டார்கள். திரு நெல்வேலி பண்டிதர்கள்கூட சரியாகச் சொல்லவில்லை. மதுரையிலிருந்த பண்டிதர் கள் பையன் சொல்லுவது உண்மைதான். ஆகமம் அப் படித்தான் கூறுகிறது என்று சொன்னார்கள் - என்று நாவ லர் பாரதியார் கூறிய கருத்தும், தகவலும் கருத்தூன்றத் தக்க வையே!

நாவலர் பாரதியார் ஒரு முறை நண்பர் வீட்டுத் திரு மணத்துக்குச் சென்றிருந்தார். அது பார்ப்பனரால் நடத்தப்பட் டது. அய்யர் கூறிக் கொண்டி ருந்த மந்திரங்களைக் கவனித் துக் கொண்டிருந்த அவர் (சமஸ் கிருதமும், பாரதியாருக்குத் தெரியும்) திடீரென எழுந்து, ஓ, அய்யரே மந்திரத்தை நிறுத்து! என்றார்.

கூடியிருந்தவர்களுக்கு ஒரே திகைப்பு! அப்பொழுது நாவலர் சோமசுந்தர பாரதியார் சொன்னார்: இந்தப் புரோகிதன் கருமாதி மந்திரத்தை கல்யாண வீட்டில் சொல்லிக் கொண்டிருக் கிறான் என்று சொன்னாரே பார்க்கலாம்.

கூடியிருந்தோர் அனை வரும் அதிர்ச்சி அடைந்தனர். நாவலர் பக்தர்தான் - ஆனா லும், தமிழின உணர்வின் சின்னமாவார்!

- விடுதலை (27.07.2010) மயிலாடன்

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]