வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, July 17, 2010

ரவிசுப்பிரமணியத்தின் இங்கே பிராமணன் (காஞ்சிமட மர்மங்கள்) - 3

ரவி சுப்ரமணியத்தின் இங்கே பிராமணன் முந்தய ரெண்டு தொடர்களும் படிக்க இந்த சுட்டியை பார்க்க பகுதி-1 மற்றும் பகுதி-2 . அதன் தொடர்ச்சி இந்த பகுதியில்  தொடருவோம். இன்னும் மகா பெரியவளின் அக்கிரமங்கள் போக போக படிக்க வியப்பூட்டும்.இப்பேற்பட்டவாளுக்கு பவளவிழா  ஒரு கேடா என்று நினைப்பீர்கள். அதோடு மட்டும் அல்ல இப்பேர்ப்பட்ட பார்ப்பனர்களை எல்லாம் காஞ்சி சங்கரமடத்தில் வைத்துவிட்டு சோ ராமசாமி எங்கே பிராமணன்? எங்கே பிராமணன்? எபிசோடு போட்டு தேடுவது எவளவு பெரிய கயவாளித்தனம் என்பதும் புலப்படும்....சரி வாருங்கள் இங்கேதான் பிராமணன் என்பதை ரவிசுப்ரிமணித்தின் நானும் அவரும் தொடரில் இருந்து பார்ப்போம். இதோ ரவிசுப்பிரமணியம் பேசுகிறார்...

ஒரு நிமிஷம் ...
       காளிகாம்பாலை வணங்கி நெஞ்சுருகி பிரார்த்தனை செய்யாம நான் எதையும் ஆரம்பிக்கிரதில்லை...
       இப்பவும் அந்த அம்மனைதான் துணைக்கு அழைக்கிறேன்.எத்தனை கஷ்ட்டதுல இருந்தாலும் நான் கூப்பிட்டா....அஞ்சு,பத்து நிமிஷம்
கண்ணை மூடிட்டு அவ சந்நிதியில உட்கார்ந்தா கண்டிப்பா என்னை காப்பாத்துவா...அந்த நம்பிக்கை இப்பவும் எனக்கு இருக்கு.      
       என்ன சிரிக்கிரிங்க?
       என்னடா இது.அப்ருவரயிட்டு அம்பாளை கூபிடரான்னு சிரிக்கிரிங்களா?யாருமே தப்பு செய்யரதுக்காக மண்ணுல பிறக்கரதிள்ளே....
 குழந்தை வளர்ந்து படிச்சு பொறுப்புள்ள வேலை பார்த்து நல்ல மனுஷன்னு பேர் வாங்கனும்னு தானே பெத்தவங்க நினைப்பாங்க?
      எங்க அப்பாவும் அப்படிதான் நினைசாரு....
      அதனால  என்னை ராமகிருஷ்ணா பள்ளியில சேர்த்தார்.மற்ற பள்ளிகளை விட இங்கே படிக்கிற மாணவர்களுக்கு பக்தி
உணர்வு அதிகம்.
      நல்ல கலாசாரதுல வந்த குடும்பம் எங்களுடையது.தெலுங்கு  பிராமண வகுப்பை சேர்ந்தவன் நான்.
      ஏற்க்கனவே சொன்னமாதிரி அப்பாவுக்கு மஹா பெரியவாலை தரிசனம் பண்ணினாலே மனசுல இருக்குற சங்கடம் சுமை எல்லாம்
கரைந்சுடும்க்ற நம்பிக்கை.
      என்னை சின்ன பையனா இருக்குரப்பவே அப்பா மஹா பெரியவாவாள்கிட்ட அழைச்சிண்டு போயிருக்கார்.
      அவரோட கடைக்கண் பார்வை பட்டாலே போதும்னு காதுட்டுநின்னிருக்கோம்.
      அப்ப எல்லாம் கற்பனை செஞ்சு கூட பார்த்ததில்லை.இதே சங்கரமடதுல ஜெயேந்திரர்க்கு இத்தனை நெருக்கமா ஆவேன் என்று...
      ௧௯௯௪ ம் வருஷம் தான் நான் ஜெயேந்திரரை முதல் முறையாக சந்திச்சேன்.இவரோட அறிமுகமும்,அன்பும் கிடச்சப்ப எல்லாமே
மஹா பெரியவாளோட கருணையின்னுதான் நினைச்சேன்.
      அப்படித்தானே   ஒரு சாதாரண மனுஷன் நினைப்பான்?
      இப்படியொரு நிலைமை வரும்னு யார் நினச்சு பார்திருப்பங்க?
      எனக்கு படிப்புல ஆர்வம்  ஜாஸ்தி.நிறைய படிப்பேன்.நல்ல மார்க் வாங்குவேன்.மூணு எம்.ஏ. பாஸ் பண்ணியிருக்கேன்.டிப்ளமோ-இன்-
பிசினஸ் கூட படிச்சேன்.எல்லாமே வீட்டுல இருந்து புக்ஸ் வாங்கி படிச்சு பரீட்சை எழுதினதுதான்.
      அதெல்லாம் ரொம்பவும் சந்தோஷமான காலங்க....இப்ப நினைச்ச கூட கண்ணுல தண்ணி தலும்புது....தி.நகர்-ல ராமநாதன்
தெருவுலேதான் இருந்தோம்.எங்க வீட்டுக்கு படிக்கிற பெண்கள் வருவதும் பேசறதும் உண்டு.எங்க வீட்ல எல்லா சுதந்திரமும் உண்டு.
யாரும் எதுவும் சொல்ல மாட்டங்க.மனசுல குப்பை சேராத காலம் அது.ஹிந்தி பாட்டு,ஸ்போர்ட்ஸ் இப்படி ஜாலியா இருந்தேன்.
       எல்லார்கிட்டயும் நல்ல பழகுவேன்.ஆனாலும் ரொம்ப க்ளோஸ் பிரென்ட்ஒருவன் தான்.
      'ஈஸி கோஇங்கா' இருந்ததால படிக்கிரப்போவும் சரி,வேலைக்கு போகும் காலத்திலேயும் சரி எல்லோருக்கும் என்னை பிடிக்கும்.
      எனக்கு பிராமின் -நான் பிரமின்க்ரா வித்தியாசமெல்லாம் கிடையாது.
      என்னை   பொருத்தவரை உலகத்துல ரெண்டே ஜாதிதான்.கடவுள் நம்பிக்கை உள்ள ஜாதி,கடவுள் நம்பிக்கை இல்லாத ஜாதி.
      எனக்கு பிராமணர்களை விட மத்தவங்கதான்நிறைய  உதவியிருக்காங்க.
     காதல் கல்யாணம் தான் செஞ்சுகிட்டேன்.அவ நாயுடு வகுப்பைச் சேர்ந்தவ.நல்லவ.அவதான் எனக்கு காளிகாம்பாளை அறிமுக
படுதிவச்சா.நாலடைவுல தீவிர பக்தனாயிட்டேன்.கண்ணை மூடி அவ கோயில்ல உட்கார்ந்தா அம்பாள் பக்கத்துல வந்து பெசரமதிரி
இருக்கும்.பெத்த தாயை விட..... இருங்க அழுகயா  வருது .....அவதாங்க எல்லாம்.யார் கைவிட்டாலும் அவ கைவிடமாட்ட.
இது நிச்சயம்.
      ஆனா கோட்டா சிஸ்டம் வந்ததுல தொழில் ஆட ஆரம்பிச்சுடுச்சு...வேற வழியே இல்ல.சென்னை வந்துட்டேன்.
      அதே தி.நகர் ராமநாதன் தெரு......
      இங்கே விசுவநாதன்,லீலா,ரமேஷ் இவங்க எல்லாம் என்னோட பால்ய காலத்து இருந்தே தெரிஞ்சவங்க அநேகம எல்லோரும்
ரெண்டு,மூணு வயசு வித்தியாசத்துல இருந்தோம்.         

மணி,லீலா,ரமேஷ் , விசுவநாதன் ..இந்த நாலு பேர்ல மணிதான் பெரியவர். அவர் காலமாகிவிட்டார். லீலாதான் ஜெயந்திறரின் மறுபக்கத்தை எனக்கு உணர்த்திய முதல் மனுசி..

அந்த நாளுல பெரிய பணக்கார குடும்பம் இது. 22 கிரவுண்டு இருந்தது..இவங்க அப்பா,தாத்தா எல்லாரும் சுதந்திர போராட்ட தியாகிகள்.

இவங்க வீட்டுக்கு மகாத்மா காந்தி, நேரு இன்னும் பெரிய மந்திரிங்க எல்லாரும் வந்திருக்காங்க.

நான்   சின்னப் பையனா இருக்குறப்ப நெல்லிக்கா பொருக்குறத்துக்காகவும், விளையாடவும் இங்கே போவேன்..இவங்க இருந்த ராமேஸ்வரம் தெருவும், நாங்க இருந்த ராமநாதன் தெருவும் பக்கத்து பக்கத்துலதான்...

ஆனா நாளடைவுல மூணு கிரவுண்டு வீட்டை மாத்திரம் வச்சிட்டு, மீதிய வித்துட்டாங்க.

இந்த வீடு கூட, ரொம்பவும் கஷ்ட்ட தசயிலதான் இருந்தது. விசுவநாதனும், அவர் பெண்டாட்டி சரஸ்வதியும்தான் உத்தியோகத்துக்கு போறவங்க...

மீதி பேர் எல்லாம் வீட்டோட..

இந்த வீட்டுக்கு மகாப் பெரியவாள், அந்த காலத்துலேயே வந்து 108 நாட்கள் தங்கி இருந்தார்...

அதுக்கு அப்புறம் தான் சுபிட்சம் வந்தது.

பெரியவர் மனசுல சதா சர்வகாலமும் நல்ல எண்ணங்கள், தெய்வ சிந்தனை ஓடினதாலே...அவரோட குரல் தெய்வத்தின் குரலாயிருந்தது அந்த வீடு சுபிட்சம் வந்தது.

பின்னாலே சின்னவர் - அவர்தான் ஜெயந்திரரும் வந்தார்..அவரது எண்ணங்களுக்கு ஏற்ப எல்லாமே தலைகீழா மாறிடுத்து....
                                                                [ரவிசுப்பிரமணியம் எழுதிய நக்கீரனின் நானும் அவரும் நூலில் பக்கம் 14 - 17]

ஜெயந்திரர் தன் என்னத்துக்கு ஏற்ப, பொம்பிளைன்களை மாத்தினார....இல்லே, இந்த பொம்பிளைங்கதான் அவரை அப்படியெல்லாம் ஆட வச்சாங்களா என்று ரவிசுபிரமனியம் கூறிய தொடர்ச்சியை அடுத்த பகுதில் பார்ப்போம்...கொஞ்சம் காத்திருங்கள்......


            





3 comments:

அ.முத்து பிரகாஷ் said...

தொடருங்கள் தோழர் ... காத்திருக்கிறோம் ... கேட்டால் விஷ்ணுவை போல தனக்கும் ஆயிரம் பெயர்கள் என்பார் இந்த காமாபதி ...

பரணீதரன் said...

அதுமட்டும் அல்ல தோழர் நீயோ....... மகா பெரியவாளின் பல முகங்களை தோலுரிக்கும் இந்த தொடர்.......ஜெயந்திரர்,விஜேந்திரர் நடக்கும் போராட்டம் மற்றும் பூசல் எல்லாம் வெளிக்கொண்டு வரும்....அவாளின் சொத்து சண்டை பற்றி பேச அருகதை இல்லாதவர்கள்...துரோகிகளுடன் சேர்ந்து கொண்டு இதுதான் நேரம் என்று பெரியாரின் சொத்துகளை கணக்கு போடுகிறார்கள்


முடிந்தால் "நானும் அவரும்" நூலினை வாங்கி படிக்கவும்.

அ.முத்து பிரகாஷ் said...

கண்டிப்பாக வாங்கிப் படிக்கிறேன் தோழர் !

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]