வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Monday, July 19, 2010

31சி - மூன்று பார்ப்பன அதிகார வட்டத்துக்குள் நுழைந்து வெளிவந்தது

1994 ஜூலை 19 ஆகிய இந்நாள் சமூக நீதி வரலாற்றில் வைரக் கீற்றைப் பொறித்த புதுநாள் ஆகும். இன்றுதான் தமிழ்நாட்டின் 31சி _ சட்டத்துக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் தந்த ஒரு பொன்னாள்.

எந்த மாநிலத்திலும் இட ஒதுக்கீடு 50 விழுக்காட்டை விஞ்சக்கூடாது என்ற ஒன்பது நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்றம் ஆணி அடித்துக் கூறிவிட்டது. (16.11.1992).

தமிழ்நாட்டில் இருந்து வரும் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் பெரிய பள்ளத்தில் விழுந்துவிட்டது. இனி எழுவது என்பது இயலாத ஒன்று என்று இட ஒதுக்கீடு எதிர்ப்பாளர்கள்_ பார்ப்பன ஆக்டோபஸ்கள் ஆனந்த மலர்ப் படுக்கையில் படுத்துப் புரண்டனர்.

அவர்களுக்கு ஒன்று தெரியாது _ அல்லது ஆத்திரத்தில் மதி மயங்கிவிட்டனர்.

தமிழ்நாட்டில் தந்தை பெரியார் என்ற மாமனிதர் பிறந்தார்_ வாழ்நாள் எல்லாம் சமூக நீதிக்காக சமர் புரிந்தார். தனக்குப் பிறகும் கூட ஓர் இயக்கத்தைக் கட்டுக்கோப்புடன் விட்டுச் சென்றார்.

தளபதிகளைத் தயாரிப்புடன் விட்டுச் சென்றார் என்பதை எப்படியோ மறந்து தொலைத்தனர்.

திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள்_ இந்த நெருக்கடியிலிருந்து சமூக நீதியைக் காக்கத் தயாரித்துத் தந்த சட்ட முன்வடிவுதான் இந்திய அரசமைப்புச் சட்டம் 31சி_யின் அடிப்படையில் அமைந்த ஒன்றாகும்.

31 சி என்ன சொல்லுகிறது?

அரசு வழிகாட்டு நெறிகளை, அரசமைப்புச் சட்டத்தில் நான்காம் பிரிவு கூறுகிறது. அதில் உள்ள கொள்கைகளுக்கு ஏற்ப, மாநில அரசு ஒரு சட்டம் செய்து, அது குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றிருந்தால், அந்தச் சட்டம் அரசமைப்புச் சட்டத்தின் 14 ஆவது மற்றும் 19 ஆவது சரத்துகளுக்கு முரணானது என்ற முறையில் அது செல்லாதது ஆகாது.

இந்திய அரசமைப்புச் சட்டம் நெடுநாளாக இருந்தாலும், இதன் அடிப்படையில் சட்டம் இயற்றி சமூக நீதியைக் காப்பாற்றிடலாம் என்ற எண்ணம்_ செயல் திராவிடர் கழகத் தலைவருக்கு மட்டும்தானே ஏற்பட்டது? இந்தச் சட்டம் மூன்று பார்ப்பன அதிகார வட்டத்துக்குள் நுழைந்து வெற்றிகரமாக வெளிவந்தது என்பது சாதாரணமானதல்ல.

தமிழ்நாடு முதல் அமைச்சர் ஜெயலலிதா (பார்ப்பனர்) சட்டத்தை தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றிக் கொடுத்தார். (31.12.1993)

நாடாளுமன்றத்தில் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் (பார்ப்பனர்) இச்சட்டத்தை நிறைவேற்றிக் கொடுத்தார். குடியரசுத் தலைவர் சங்கர்தயாள்சர்மா (பார்ப்பனர்) ஒப்புதல் அளித்தார்.

பார்ப்பனீய மேலாண்மையை வெல்லும் அளவுக்குச் சமூக நீதி வலிமை உடையது என்பதை வலிமையாக நிரூபித்துக் காட்டிய பெருமையும் தலைவர் மானமிகு வீரமணி அவர்களுக்கு உண்டு.

பார்ப்பனர்களிடமிருந்து இடங்களைப் பறிக்கலாமே தவிர, அவர்களின் மூளையைப் பறிக்க முடியவே முடியாது என்று சொன்னவர் சங்கர்தயாள்சர்மா.

அத்தகையவரை எல்லாம் பயன்படுத்தி, சமூக நீதியைக் காப்பாற்றிக் கொடுத்தார் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி. இந்தப் பெருமையும், புகழும், சாதனையும் இன்னும் அதிக அளவில் சீரிய அங்கீகாரத்தையும், மேலான பதிவையும் உலகளவில் பெற்றிருக்க வேண்டும். என்ன செய்வது, ஊடகங்கள் எல்லாம் அவாள் கைகளில் இருக்கிறதே! நாட்டு அரசியலிலும் பொறாமைத் தீ அடை காத்து நிற்கிறதே!

-விடுதலை (19.07.2010), மயிலாடன்
                                                                                                                                                                 

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]