வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, July 21, 2010

நாத்திக உலகின் சுடர் விளக்கான கர்னல் ராபர்ட் இங்கர்சால்

நாத்திக உலகின் சுடர் விளக்கான கர்னல் ராபர்ட் இங்கர்சால் அவர்களின் நினைவு நாள் இந்நாள் (1893).


நியூயார்க்கில் பாதிரி யாரின் மகனாகப் பிறந்து, பைபிளையும், மதத் தொடர் பான நூல்களையும் அவர் கரைத்துக் குடித்ததுண்டு. தன் மகனும் தன் வழியில் மதப்போதகராக மணம் வீச வேண்டும் என்பதுதான் அவர்தம் தந்தையாரின் தணியா வேட்கை.

அந்த முயற்சியும், கற் பித்தலும்தான் இங்கர் சாலை மத எதிரியாகவும், கடவுள் மறுப்பாளராகவும் மாற்றிற்று. முழுவதும் படித் துணர்ந்ததால்தான் முழு ஆற்றலோடு அவற்றை மறு தலிக்க முடிந்தது அவரால்.

அவர் எழுப்பிய வினாக் கணைகள் முன் நிமிர்ந்து நிற்க முடியாத மதவாதிகள் மருண்டு ஓடினார்கள்.

ஏழையாக வாழ்பவன் தான் மேல் உலகில் இன்பம் அடைவான். உணவு இல்லை என்பதற்காக நீ வருந்தாதே! ஏன் எனில் மேல் உலகில் உனக்கு உணவு கிடைக் கும்! என்பது போன்ற கவைக்கு உதவாத கசுமா லங்களைக் கண்டித்து கருத்து மழை பொழிந்தார்.

நாட்டு மக்கள் முன் னேற்றம் அடையவேண்டு மாயின் , சண்டைகளும் துன்பங்களும் ஒழிந்து நாட் டில் நிரந்தர ஒற்றுமையும் நன்மையும் நிலவ வேண்டு மாயின், மக்களைப் பீடித் துள்ள மதவெறி, மூடநம்பிக் கைகள், குருட்டு வழக்கங் கள் மண்ணோடு மண் ணாய் மடியவேண்டும் என்று அரிய சொற்பொழிவு களை நிகழ்த்தினார்.

எல்லையற்ற ஒரு கடவுள் மக்களையும் அவர்களின் சந்ததியினரையும் படைத் தாரா? அப்படியெனில் மூட மக்களை அவர் ஏன் படைத்தார்?

நடைபெற்ற போர்க ளுக்கும், அவற்றில் பெருகி ஓடிய மனித ரத்த ஆறு களுக்கும் இக்கடவுள்தான் பொறுப்பாளியா? அனேக நூற்றாண்டுகளாக நிகழ்ந் திட்ட அடிமை வியாபாரத் துக்கும், சதா சவுக்கடியி னால் தீராத் துன்பத்தில் ஆழ்ந்த மக்களுக்கும், பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தைகளைத் தாயிடம் இருந்து பிரித்துக் கொடிய மாந்தர்கள் விற்பனை செய் ததற்கும் காரணகர்த்தா உங்கள் கடவுள்தானா?

இங்கர்சாலின் எரிமலைப் பொழிவின் முன் மதம் மதப் பிரச்சாரகர்கள் தாக் குப் பிடிக்க முடியவில்லை. அவர் சொற்பொழி வைக் கேட்க ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் திரண்டனர்.

ஒரு நாள் பாதிரியார் ஒருவர் இங்கர்சாலிடம் சிக் கினார். அந்தப் பாதிரியார் ஞானஸ்நானம் பற்றிப் பெரிதாக அளந்து கொட்டி னார்.

இங்கர்சால் ஒரே வரியில், எனது ஞானஸ்நானம் சுத்தமாகக் குளிப்பதுதான் அது உங்கள் ஞானஸ் நானத்தை விட சாலச் சிறந்தது என்று ஒரு போடு போட்டாரே பார்க்கலாம். அதற்கு மேல் பாதிரியாரின் பாதம் அந்த இடத்தில் பதியுமா?

வழக்கறிஞராகவும், அட்டர்னி ஜெனரலாகவும் இருந்து ஈட்டிய பொருளை எல்லாம் பொதுப் பணிக்கே செலவிட்ட பெருமகன் அவர். இவருடைய நூல்களையும் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளி யிட்டுள்ளது.

- விடுதலை (21.07.2010) மயிலாடன்
                                                                                                                                                                     




No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]