வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Monday, May 31, 2010

ஆரியர்-திராவிடர் பேதம் ஒழிந்து விட்டதா?

பார்ப்பான் என்பவன் தனி ஜாதி என்பது போல சில பார்ப்பனர்கள் கூறுவதை நம்மில் உள்ள சில பார்ப்பன அடிவருடிகள் நம்பி ஏமாறுகிறார்கள். இதன் மூலம்  திராவிடர் என்ற ஒற்றுமை குலையுமா என்றும் பார்பனர்கள் எதிர் பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு நம்மவர்கள் தீனி போடுற மாறி பத்தாம் பசலி தனமாக விவாதம் செய்துகொண்டும் வருகிறார்கள்.

ஆரியம் என்பது என்ன என்றே நம்மில் சிலருக்கு புரியாமல் அவர்கள் மேல் சாதியினர் என்றும் அவர்களை ஏன் நீங்கள் (திராவிடர் கழகம்) இன்னும் எதிர்த்துக்கொண்டு அலைகிறீர்கள் என்றும் சில அதி மேதாவிகள் போகிற போக்கில் பொத்தாம் பொதுவாக கூறி கொண்டு போவர்கள்.

ஆரியம் என்பது நடமாடும் பாசிசம் தம்பி அதனிடம் உனக்கு வேண்டாம் பாசம் தம்பி என்று அறிஞர் அண்ணா அவர்கள் கூறியதை தான் இன்றைய நம் இளைஞர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும்.
இதோ அண்ணாவே விளக்கம் கொடுக்கிறார் தன்னுடைய ஆரிய மாயை என்ற நூலின் மூலமாக.....அதனை அப்படியே தருகிறேன் படியுங்கள்.

"ஆரியரவாது! திராவிடராவது! எப்பொழுதோ எழுதி வைத்த பழைய சரித்திரத்தை பேசுவதற்கு இது காலமா? இப்பொழுது ஆரியர் இன்னார் என்று யாரால் குறிப்பிட முடியும்? இரு சமூகமும் எவ்வளவோ  ஆண்டுகளுக்கு முன் ஒன்றாக கலந்து விட்டன. மறந்து போன இனப்பிரிவை உயிர்ப்பிக்க முனைவது நாட்டுக்கு நலமன்று. அரசியல் முன்னேற்றத்திற்கு அடுத்ததன்று" என்று ஒரு சாரார் கூறுகின்றனர்.

"இந்த நாட்டில் உள்ளவர்கள் எல்லோரும் திராவிடர்கள் தாம்; ஆரியர்கள் என்பவர்கள் இந்தநாட்டில் குடியேறினார்கள் என்று சொல்லுவதே தவறு; இது உண்மையான சரித்திரம் அல்ல; இந்திய மக்களை பிரித்து வைக்க வெள்ளைக்காரர்களால் செய்யப்பட சூழ்ச்சி; அவர்களால் செய்யப்பட்டபொய் சரித்திரங்கள்" என்று கூறுவார் நமது காங்கிரஸ் சரித்திர கனிகள்.

இவர்கள் பேச்சை கேட்டுக்கொண்டு, நம்மவர்களிலும் சிலர் 'ஆமாம்' போடுவர். தங்கள் பகுத்தறிவுக்கு சிறிதும் வேலை கொடுக்காமல் ஆரியர்கள்-பார்பனர்கள் சொல்லுவதை அப்படியே ஒப்புக்கொண்டு, ஐஷ்டீஷ் கட்சியும்,சுயமரியாதை கட்சியும், இக்கட்சிகளின் தலைவராகிய பெரியாரும், அவருடைய தோழர்களும், ஆரியர் ,திராவிடர் என்ற வகுப்பு பிரிவினைப் பிரச்சாரம் செய்கின்றனர் என்று கூறுகிறார்கள். இவர்களுக்கு எத்தனை முறை ஆரியர்-திராவிடர் போராட்ட உண்மையை விளக்கினாலும், அவர்கள் மரமண்டையில் உண்மை குடிபுகுவதேயில்லை. ஆயினும் அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பதை கருதி, நாமும் இது சம்பந்தமாக உண்மைகளை எடுத்துக்காட்டி வருகிறோம். (ஆரிய மாயை: பக்கம் 45)

அண்ணா அவர்கள் 60 வருடங்களுக்கு முன்னால் சொன்ன சேதி அப்படியே இன்றும் பொருந்தி கொண்டுதான் இருக்கிறது. இன்றைக்கு நிறைய கூமுட்டைகள் இப்படி சொல்லித்தான் பார்ப்பன அடிவருடியாக அலைந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் சென்று அவர்கள் எழுதுவதை முற்போக்கு என நம்பி ஒப்புகொள்ளும் நம் இளைய சமுகத்தை என்னவென்று சொல்ல? காரி உமிழ வேண்டும் போல் இருக்கிறது.

இதோ மேலே அப்படி சொல்லிவிட்டு அண்ணா அவர்கள் அதே புத்தகத்தில்,அந்த கால கட்டத்தில் ஆரிய-பார்ப்பனிய ஆதிக்கத்திற்கு உதாரணமாக நடந்த ஒரு நிகழ்வையும் நம்மிடம் வைக்கிறார். இதோ அதனையும் தருகிறேன் அப்படியே....

"சென்ற 5 -2 -1946 - ல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவர் செய்த ஒரு முக்கியமான தீர்ப்பை இப்பொழுது எடுத்துக் காட்டுகிறோம்.

நெல்லூரில் வக்கீலாக இருந்த ஜானகிமூர்த்தி என்ற பார்ப்பனர், 16-09-1926 ல் நீலவேங்கடசுப்பம்மா என்ற திராவிடப் பெண்ணைச் சென்னையில் மணந்தார். இப்பெண் ஓர் ஆரம்பப் பள்ளிக்கூட உபத்தியாயினி. இவருக்கும் மேற்படி ராமமுர்த்திக்கும் இரு குழந்தைகள் உண்டு. இவர் இரண்டாவது மனைவி . முதல் மனைவி பார்பன மாது.ஜானகி ராமமூர்த்தி இறந்தவுடன், அவருடைய திராவிட மனைவி தன் 2 குழந்தைகளுக்கும் தனக்கும் ஜீவனாம்சம் கொடுக்குமாறு, பார்ப்பன மனைவி மீது வழக்கு தொடர்ந்தாள். ஜில்லா நீதிபதி, திராவிட மனைவிக்கும் அக்குழந்தைகளுக்கும் மாதம் 20 ரூபாய் ஜீவனாம்சம் கொடுக்குமாறு தீர்ப்பு செய்தார். பார்ப்பன மனைவி அத்தீர்ப்பை எதிர்த்து, உயர்தர நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாள். இவ்வழக்கை பாண்டுரங்கராவ், சோமையா ஆகிய இரு பார்ப்பன  நீதிபதிகளும் விசாரித்தனர். இறுதியில் இந்த திராவிடர்-ஆரியர் கலப்புமணம் செல்லாது என்று தீர்பளித்து விட்டனர். இது போன்ற ஒரு கலப்புமண வழக்கில், பார்ப்பனரல்லாத நீதிபதி வெங்கடசுப்பராவ் கூறியுள்ள தீர்ப்பையும் தவறானது என்று குறுப்பிட்டுவிட்டனர்.

இந்த நாட்டில் ஆரிய- திராவிடர் வேற்றுமை இல்லை என்று கூறும் சாதுக்களுக்கு, இப்பொழுதாவது புத்தி வருமா என்பது நமக்கு சந்தேகம் தான்.

இந்த தீர்ப்பு கால நிலையை ஆதாரமாக கொண்டு கூறியதும் அல்ல; சட்ட ஆதரவை கொண்டு கூறப்பட்ட தீர்ப்பாக இருக்குமானால், ஜில்லா முன்சீப்பின் தீர்ப்புக்கும், மற்றொரு வழக்கில் நீதிபதி வெங்கடசுப்பராவ் கூறியுள்ள தீர்ப்புக்கும் முரண்பாடு ஏற்பட்டிருக்காது. சட்டமென்றால் எல்லோருக்கும் ஒன்றாகத்தானே அமைந்திருக்க வேண்டும்.

ஆரிய வேத ஸ்மிருதிகளை ஆதரவாகக்கொண்டே இத்தீர்ப்பு கூறப்பட்டிருகிறது. ஆரிய வேத ஸ்மிருதிகளோ, பெரும்பாலும் திராவிடர் கொள்கைக்கு மாறுபட்டவை, திராவிடரை அடிமை படுத்த வேண்டும் என்னும் நோக்கத்துடன் எழுதப்பட்டவை. அவை திராவிட அறிஞர்களால் ஒப்புக்கொள்ள முடியாதவை. இந்த ஆரிய வேத ஸ்மிருதிகள் முக்கிய வழக்குகளை முடிவு செய்வதில் இன்னும் ஆதரவாக இருக்குமானால் ஆரியர்-திராவிடர் பேதம் ஒழிந்துவிட்டதாக கூறுவது எவ்வாறு பொருந்தும்?"

(ஆரிய மாயை: பக்கம் 46 - 47)

50 வருடங்களுக்கு முன்னால் ஆரியர்-திராவிடர் பேதத்திற்கு உதாரணமாக எடுத்துக்காட்டிய வழக்கு..இப்படி ஏராளமான உதாரணங்கள் இருக்கிறது. முடிந்தால் ஆரிய மாயை வாங்கி படியுங்கள்...தெளிவு பெறுங்கள்.

இன்றும் இதே போல நிறைய பேர் பார்ப்பனர்கள் சொல்லுவதை அப்படியே ஏற்றுக்கொண்டு ...பேதம் ஒழிந்துவிட்டதாக கூறுவது அண்ணா கூறுவது போல இன்னும் மரமண்டைகள் இருக்கிறார்கள் என்பதைத்தான் நமக்கு புலப்படுத்துகிறது. இன்று நிறைய பார்பனர்களே (நம்மவர்களும் சேர்த்துதான்) என்ன சொல்லுகிறார்கள் என்றால் இவ்வளவு உயர் சாதியினர் இருக்கும் போது பார்பனர்களை மட்டும் சாடுவது ...பார்ப்பனர்களின் மேலுள்ள வெறுப்பையே காண்பிக்கிறது என்று கூறுகிறார்கள். சில பார்ப்பனர்கள் இந்த சூத்திரத்தை திராவிடர் இனத்தை ஏமாற்ற ஒரு வார்த்தை சாலமாக பயன்படுத்திகொள்கிறார்கள். அந்த காலத்தில் நேரடியாக எதிர்த்தார்கள் இன்று அதற்க்கு வாய்ப்பில்லாமல் போனதும் மறைமுகமாக எதிர்கிறார்கள் இந்த பார்பனர்கள். ஆனால் பார்ப்பனீயம் இன்னும் ஒழிந்தபாடில்லை. அதனை வேரறுக்க வேண்டிய அவசியம் இன்னும் நமக்கு உள்ளது.

முதலில் பார்ப்பான் என்பவன் தன்னை தனியாக தனி இனமாக தான் அடையாள படுத்திக்கொள்கிறான். மற்ற உயர் சாதியினர் எனப்படுபவர் அனைவரும் திராவிடர்களே.....என்றாவது பார்ப்பான் தன்னை திராவிடன் என்று சொல்லி கொண்டதுண்டா? ஏன் இன்றைக்காவது சொல்லுவனா? நாங்களும் தமிழன், பார்ப்பான்-திராவிடர் பேதம் ஒழிந்து விட்டது என்று கூறும் பார்ப்பனர்கள், திராவிடர் என்று ஒப்புக்கொள்ள தயாரா? .

ஏன் மற்ற உயர் வகுப்பினர் என்று கூறப்படுபவர்கள் எல்லோருமே வயலில் இறங்கி உழுகிறார்கள், விவசாயம் செய்கிறார்கள்,கல் உடைகிறார்கள்,சாரம் கட்டுகிறார்கள்....மற்றும் நடைபாதை வியாபாரிகளாக கூட இருக்கிறார்கள்.....ஆனால் இதில் ஏதாவது ஒன்றாவது பார்ப்பான் செய்து பார்த்ததுண்டா? பேதம் ஒழிந்துவிட்டது என்று கூறுபவர்களே?. இன்றும் நம் வீட்டு பிள்ளைகள் தான் பெரிய உணவங்களில் சுத்தம் செய்ய,பாத்திரம் பெருக்க என்று வேலை பார்கிறார்கள் ...நீங்கள் சென்ற எந்த உணவகத்திலாவது பார்ப்பான் வீட்டு பிள்ளைகள் இந்த வேலைகள் செய்து பார்த்ததுண்டா? பேதம் ஒழிந்துவிட்டது என்று கூறுபவர்களே?

பார்ப்பானில் ஏழை பார்ப்பானாக இருக்கும் அவர்களுக்கு இட ஒதிக்கீடு சலுகை இருப்பதால் படிக்க முடியவில்லை என்று கிருமிலேயரை ஆதரிக்கும் பார்ப்பன அடிவருடிகளே.....ஏழை பார்ப்பான் நடை பாதை வியாபாரி ஆவானா? சாரம் கட்டுவானா? கல்லு உடைப்பானா? உணவகத்தில் சுத்தம் செய்யும் வேலை பார்ப்பானா? ஏழையாக இருந்தால் அவர்கள் வறுமையை போக்கிக்கொள்ள இந்த வேலை பார்க்க வேண்டியது தானே? நாமும் நம் வீட்டு பிள்ளைகளும் எவளவு நாளாக இந்த வேலை பார்த்தோம் இப்பொழுதும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்த இட ஒதிக்கீடு மட்டும் நமக்கு இல்லாமல் இருந்தால் இப்பொழுது ஒரு சில உயர் பதவியில் இருக்கும் பார்ப்பனரல்லதோர் கொஞ்சமும் முன்னேறி மேலே வந்து இருக்க முடியுமா? இந்த இடஒதிக்கீடு வந்து பார்ப்பான் பாதிக்கப்பட்டான் என்று கூறுபவர்களே ...அப்படி பாதிக்கப்பட்டு இருந்தால் அதனால் பாதிக்கப்பட்டு கல்லுடைக்கும் பார்ப்பானை, செருப்பு தைக்கும் பார்ப்பானை, மலக்கழிவு அல்லும் பார்ப்பானை,நடை பாதை வியபாரியாக இருக்கும் பார்ப்பானை,சலவை தொழிலாளியாக இருக்கும் பார்ப்பானை  காண்பியுங்கள் .....நாங்கள்  பார்ப்பனிய எதிர்ப்பை விட்டுவிடுகிறோம்.

பார்ப்பனர்கள் இன்னும் நம்மவர்களை ஏமாற்றலாம் என்று நினைத்துக்கொண்டு அவர்களிடம் இருக்கும் அத்தனை ஊடகங்களின் வாயிலாக பார்ப்பனிய நஞ்சை ஊட்டுகிறார்கள். இந்த பார்ப்பன ஊடகங்களின் செய்திகளை படித்து அதன் மூலம் இப்படி பகுத்தறிவு இழந்து யார் நமக்காக போராடுகிறார்கள் என்று கூட யூகிக்க முடியாமல் திணறும் மரமண்டைகளே இப்போதாவது உணர்வீர்களா?

நம்மில் அனைவரும் திராவிடரே. பார்ப்பனர்கள் "மற்ற உயர்சாதி" என்ற வார்த்தை சாலத்தை கூறியதும் நம்பி ஏமாறும் மரமண்டைகளே! உங்களுக்காக அதனையும் விளக்குகிறேன் கேளுங்கள்.....மற்ற உயர் வகுபினரை கண்டிக்கவில்லை என்று கூறும் இவர்கள் .....எங்கே பிராமணன்? என்று தேடுகிறார்களே ...மற்ற உயர் குலம் என்று பார்ப்பனர்களால் கூறப்படுபவர்கள் யாரும் எங்கே முதலியார்? எங்கே செட்டியார்? என்றா தேடுகிறார்கள்...வெறுக்கத்தக்கதா பிராமணியம்? என்று தொடர் எழுதினார்களே .... மற்ற உயர் குலம் என்று பார்ப்பனர்களால் கூறப்படுபவர்கள் யாரும் வெறுக்கத்தக்கதா முதலியாரியம்? வெறுக்கத்தக்கதா செட்டியாரியம்? வெறுக்கத்தக்கதா நாயுடுவியம்? என்றா எழுதினார்கள்..... இப்பொழுதாவது புரிந்து கொள்ளுங்கள் ஆரியம்-பிராமணன்-பார்ப்பான் என்பவன் தனி ஒரு இனம் என்று....மற்ற அனைவரும் திராவிடரே...திராவிடர்களை ஏமாற்றவே இந்த வேடம் போடுகிறார்கள்.

இவை அனைத்தையும் இந்த பார்ப்பன கூட்டம் செய்யும் பொழுது யார் தட்டி கேட்பது ....திராவிடர் கழகமும் அதன் போர் வாளாக இருக்கும் விடுதலையும் அதன் ஆசிரியர் மானமிகு வீரமணி அவர்களும் தானே...உடனே "வேருக்கதக்கத்தே பார்ப்பனீயம்" என்று உண்மையில் அதற்க்கு மறுப்பு தொடர் எழுதினார்களே..வேறு யார் செய்தது? இன்று இந்த பார்ப்பனியத்தை யார் வேரறுப்பது?.. அவர்தானே அந்த பணியினை செய்கிறார். அதோடு அவர் நிழலாக இருக்கும் கவிஞரும் பார்ப்பனிய வேரை அறுக்க மின்சாரம் பாய்ச்சி கொண்டுதானே இருக்கிறார். அப்படியும் இந்த கூட்டத்துக்கு புரியவில்லையே ..யார் நமக்காக போராடிக்கொண்டு இருக்கிறார்கள் என்று.

நான் சில இடங்களில் என்னை யார் என்றே அறிமுகம் செய்து கொள்ளாமல் சில விவாதங்களை, பார்ப்பனிய எதிர்ப்பினை சொல்ல முயலும் போது ஒ நீ வீரமணி கூட்டத்தை சேர்ந்தவனா? என்று ஒரு வினா. எனக்கு அதனை கேட்டதும் மிக மகிழ்ச்சியாக இருக்கும் ...பார்ப்பனிய எதிர்ப்பு என்றாலே எங்களை போன்ற இளைஞர்களுக்கு எல்லாம் அந்த உணர்வினை ஊட்டியது அறிவு ஆசான் அய்யா தந்தை பெரியாரிடம் பயிற்சி பெற்ற ஆசிரியர் வீரமணி தான் என்று அவர்களாகவே ஒப்புகொண்டுவிடுகிறார்கள். பிறகு எதற்கு வெட்டி வேஷம்? பெரியார் விட்டு சென்ற பணியினை திராவிடர் கழகமும் அதன் தலைமையும் ஒழுங்காக எடுத்து செல்லவில்லை என்று நம்மவர்களே பார்பனர்களுக்கு தீனி போடுவது போல ஒரு தவறான பிரசாரம் ஏன் என்று புரியவில்லை.

இதே பார்ப்பானை பாருங்கள் பெரிய சங்கராச்சாரிக்கு பிறகு ...லோககுரு சரியில்லை என்று என்னைக்காவது எந்த பார்ப்பானாவது ஒப்புகொண்டுள்ளான? சங்கரச்சாரியர்களே ஒழுக்க கேடுகளையும்,வருணாசிரமங்களை உயர்த்தி பிடிக்கும் புராணங்களை பேசி பார்ப்பனீயம் வளர்ப்பவர்கள் ஆவர். அவர்கள் இல்லை என்றால் பார்ப்பனீயம் வளர்க்க முடியாது திராவிடர்களை அடிமை படுத்த முடியாது என்று எல்லா பார்ப்பானும் புரிந்து கொண்டு அவர்கள் எந்த குற்றம் செய்தாலும் மூடி மறைத்து அவர்களை பாதுகாக்கிறான்.அனால் இங்கு திராவிடர் கழகமும் அதன் தலைமையும் ராணுவ கட்டுப்பாட்டை போல ஒரு கட்டுப்பாடு விதித்து இளைஞர்களை மிக ஒழுக்கத்துடன் நல்வழிப்படுத்தி பெரியார் வழியினில் பார்பனியத்தினை வேரறுக்க அழைத்து செல்லுகிறது. அதனை விமர்சிக்க நம்மவர்களிலேயே ஒரு கூட்டம் பார்ப்பானுக்கு துணை போகிறது. இதனை என்னவென்று சொல்லுவது? லோககுருவுக்கள் எவளவு கொலை குற்றவாளியாக, பெண்களிடம் தவறாக நடந்து கொண்டு அதற்காக 2 மாதம் சிறையில் இருந்தும் அவருக்கு பவள விழா நடத்தும் பார்பன கூட்டத்தை பார்த்தாவது திருந்த வேண்டாமா? யார் நமக்காக போராடுகிறார்கள் என்று....

இறுதியாக ஆரிய கூட்டத்தை நோக்கி ஒரு எச்சரிக்கை விடுகிறோம். ஆரியம் என்பது
வேறு திராவிடம் என்பது வேறு...உங்களுக்கு சமஸ்கிருதம், புராணம் என்றால் அதனை உங்களுடன் வைத்துகொள்ளுங்கள்....ஆனால் தனித்தன்மை வாய்ந்த திராவிடர் இனத்தை சீரழிக்க, ஒழுக்கத்தை கெடுக்க ஏன் அதனுள் உங்கள் ஒழுக்கம் கெட்ட பார்பனிய சிந்தனைகளை புகுத்துகிறீர்கள் என்பதுதான் எங்கள் கேள்வி?

ஆரிய மாயையிலிருந்து விடுபட்ட அன்றே அறியாமையிலிருந்து நம்மக்கள் விடுபடுவர்! ஆண்மை பெறுவர்! உலகின் அணியாவர். ஆரியம் ஒரு மாயை என்பதை விளக்க அறிவாளிகள் தந்துள்ள அறிய உண்மைகளை காண்மின். பிறருக்கு கூறுமின்! அறப்போர் தொடுமின்! வெற்றி நமதே! என்ற அண்ணாவின் கூற்றினை இன்றைய இளைய சமுதாயம் உணர்ந்து ஆரியர்-திராவிடர் பேதம் ஒழிக்க வாருங்கள்.

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

6 comments:

அ.முத்து பிரகாஷ் said...

வாழ்த்துக்கள் பரணீதரன் ...
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ...
நட்சத்திர பதிவராக பெருமைப் படுத்தப் பட்டிருப்பதற்கு ...
அனைவரையும் பகுத்தறிவு எண்ணங்கள் சென்றடையட்டும் ...
மீண்டும் வாழ்த்துக்கள் தோழர் !

தமிழ் ஓவியா said...

நட்சத்திர பதிவராக ஆனதற்கு பாராட்டுக்களுடன் கூடிய வாழ்த்துக்கள் தோழர்.

Arasu said...

நட்சத்திரப் பதிவரானதற்கு பரணீதரனுக்கு வாழ்த்துக்கள். ”எல்லாவித ஒடுக்குமுறைகளும் ஒழிந்து மானுடம் பகுத்தறிவுடனும், மனிதநேயத்துடனும் உயர்ந்து வாழ்ந்திடுதலே” தந்தை பெரியாரின் கொள்கைச்சாரம், உழைப்பின் அடிபடை. உலகெங்கும் பரந்து வாழும் தமிழரிடையே தந்தைபெரியாரின் கொள்கைகளை எடுத்துச்செல்வதில் பரணீதரனின் (சங்கமித்திரன்) பங்கு சிறப்புக்குரியது. அவரை நட்சத்திரப்பதிவராக்கி அவர் எழுத்துக்கள் இன்னும் பரவலாக அறிய உதவியிருக்கும் தமிழ் மணப் பொறுப்பாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

- அரசு

பரணீதரன் said...

இந்த நேரத்துல நான் ஊருல வந்து மாட்டிகிட்டேன் தோழர்களே. அதனால இணைய (online) வசதி இல்லாம ஏதும் பண்ண முடியல.

நியோ, தமிழ் ஓவியா ,அரசு அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து ஒத்துழைப்பு தாருங்கள்.

PRINCENRSAMA said...

வணக்கம் பரணீதரன்.. என்னங்க chat-ல வரும்போது கூட சொல்ல்வேயில்லை...
வாழ்த்துகள்! ரொம்ப மகிழ்ச்சி... இன்னும் அதிக பதிவுகளை நட்சத்திர வேலையில் கூட்டிருங்க!

பரணீதரன் said...

மன்னிக்கவும் பிரின்ஸ் , இந்த நெட் பண்ணுற பிரச்சனையில அதையே மறந்துட்டேன்.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]