வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Tuesday, May 25, 2010

எனக்குள்ளதெல்லாம் மனிதப்பற்றுதான் என்று கூறிய புரட்சியாளர் பெரியார்!

மானுடப்பற்று மட்டுமே எனக்குரியது என்று கூறிய மாபெரும் புரட்சி-யாளர் பெரியார் என்றார் மத்திய தொலைத்-தொடர்புத் துறை அமைச்சர் ஆ. இராசா.


தந்தை பெரியாரின் பாதையில் கலைஞரைப் போன்ற பகுத்தறிவாளர்கள் ஆட்சிக்கு வரும்-போதுதான் சமூக வளர்ச்சி, சாமான்யனுக்கும் கிடைக்-கிறது என்று அய்தராபாத்தில் தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்ட பெரியார் திரைப்-படப் பாடல் கேசட் வெளியீட்டு விழாவில் கலந்து-கொண்டு மத்திய அமைச்சர் ஆ. இராசா பேசினார்.

மேலும், வடபுலத்திலும், பெரியார் திரைப்-படத்தை மொழி மாற்றம் செய்து வெளியிடும் பணி-யினை சமூகநீதி ஆர்வலர்கள் மேற்கொள்ள-வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஆந்திர மாநில பகுத்தறிவாளர் கழகம் சார்பில், பெரியார் திரைப்படம் தெலுங்கு மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. இத்திரைப்படத்-தின் தெலுங்கு ஆடியோ கேசட் வெளியீட்டு விழா அய்தராபாத்தில் நடைபெற்றது. இந்த கேசட்டை மத்திய அமைச்சர் ஆ. இராசா வெளியிட்டு பேசியது வருமாறு:

இந்த விழாவில் பங்கேற்பதில் நான் அளவற்ற மகிழ்ச்சியடைகிறேன். என்னுடைய மகிழ்ச்சி இரண்டு கோணத்தில் அமைகிறது.

இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் எத்தகைய புரட்சிகரமான முன்னேற்றம் அடைய-வேண்டுமென தந்தை பெரியார் அவர்கள் அய்ம்-பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்பு கனவு கண்-டாரோ அந்தக் கனவு நனவாகி இருக்கிறது. பெரி-யாரின் கொள்கை வெற்றியடைந்ததற்கு அடை-யாளம்-தான் இந்த விழா. இது ஒரு மகிழ்ச்சி. இந்த விழாவில் சாதாரண சாமானிய தமிழனாகிய நான், இந்தத் துறைக்கு அமைச்சராக பங்-கேற்றிருப்பது இன்னொரு மகிழ்ச்சியாகும்.

கலைஞரின் தம்பியாக...

இதைவிட, பெருமை அளிப்பது _ பெரியாரின் கொள்கையை அரசியல் களத்திலும், சமூகத்-தளத்-திலும் சாதனைகளாக மாற்றிய மாபெரும் தலைவரான கலைஞரின் தம்பியாக இந்த நிகழ்ச்சி-யில் பங்கேற்றிருப்பது.

தந்தை பெரியார் அவர்கள், திராவிடர் கழகம் திராவிட இயக்கம் என்கிற கட்டமைப்பு-களில் ஆற்றியிருக்கின்ற மகத்தான கொள்கைப் பணிகளை தென்னகம் தாண்டி வட இந்தியா முழுக்க இன்றைக்கு வர-வேற்றுக் கொண்டிருக்-கின்ற சூழலில் அரசு கருவூலத்திலிருந்து, 95 லட்ச ரூபாயை பெரியார் திரைப்படத்திற்குத் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் வழங்கியிருப்பதும், அந்தப் படத்தை தெலுங்கு மொழியில் மொழி பெயர்த்து இங்கே வெளியிடுவதும் மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்.

தலைசிறந்த புரட்சியாளர் தந்தை பெரியார்

வடபுலத்தில் இருக்கின்ற சமூகநீதி ஆர்வலர்கள், பகுத்தறிவாளர்கள், அம்பேத்கரிஸ்டுகள், இந்தப் பணியை வடபுலத்திலும் மிகச் சிறப்பான முறை-யில் மேற்காள்ள வேண்டும். கடவுள்பற்றோ, மதப் பற்றோ, ஜாதிப் பற்றோ, ஏன் நாட்டுப் பற்றோகூட எனக்குக் கிடையாது. எனக்கு இருப்பதெல்லாம் மனிதப்பற்று ஒன்றுதான் என்று முழங்கி, ஜாதி பேதம் ஒழியவேண்டும் என்பதற்காக, தன் வாழ்-நாட்களை அர்ப்பணித்த இந்தியாவின் தலைசிறந்த புரட்சியாளர்களில் ஒருவரான தந்தை பெரியாரை அரசியல் எல்லை கடந்து, மாநில மொழி, இன தடை-களைக் களைந்து இந்தியா முழுக்க பெரியாரை-யும், அவருடைய கொள்கைகளையும் பரப்பவேண்-டிய அவசியம் இளைஞர்களுக்கு, பகுத்தறிவாளர்-களுக்கு வேண்டுமென்கிற உணர்வை இந்தப் பெரியார் திரைப்படம் ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.

வேறு எந்த நாட்டிலும் இல்லாத இந்தியாவில் உள்ள இந்து மதமும், அதன் வைதீகத் தளமும் ஏற்படுத்தியிருக்கின்ற ஜாதி என்கிற கொடிய நோய் தான் இந்தியாவின் வறுமைக்கும், சரிவுக்கும் தரித்திரத்திற்கும், அறியாமைக்கும், அடிப்படைக் காரணங்கள் என்றும் இவற்றைக் களையாமல் இந்தியாவின் வளர்ச்சி அரசியல் துறையாகட்டும், சமூகத் துறையாகட்டும், பொருளாதாரத் துறை-யாகட்டும், எந்தத் துறையிலும் வளர வாய்ப்பில்லை என்று இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பாகவே எச்சரித்தவர் தந்தை பெரியார் அவர்கள்.

அந்த எச்சரிக்கையை மறந்த, மறுதலித்த, பல்வேறு அரசியல் கட்சிகள் இன்றைக்குப் பெரியாரை அவரின் அடையாளமாக திகழ்ந்து கொண்டிருக்-கின்ற ஒப்பாரும் மிக்காருமில்லா தலைவர் கலைஞரை அரசியலிலும், நிருவாகத்திலும், பின்பற்றவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்-டுள்ளனர்.

காரணம் பெரியார்...

1929 இல் செங்கல்பட்டு மாநாட்டில் பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும் என்றார் பெரியார். ஆரம்பப் பள்ளிகளில் பெண்களே ஆசிரியர்-களாக நியமிக்கவேண்டும் என்றார் பெரியார். அரசு அதிகாரங்களில் பெண்கள் பங்குபெறவேண்டும் என்றார் தந்தை பெரியார். 1950_களிலே இதே சீர்திருத்தக் கருத்தை நாடாளுமன்றத்தில் சட்டமாக்கிட எல்லா வழிகளிலும் எத்தனித்தார் அம்பேத்கர். அப்போதெல்லாம் மேல்தட்டு வர்க்கத்தினரால் அம்பேத்கரின் முயற்சி முறியடிக்கப்பட்டது.

இந்தச் சட்டங்களை, திட்டங்களை அரசு சட்டத்தில் அரியணை ஏற்றிய தலைவர்தான் எங்களுடைய தலைவர் கலைஞர் அவர்கள். இன்றைக்கு ஜாதி வாரியாக கணக்கெடுப்பு தேவையா? இல்லையா? என்கிற விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. இதேபோல, 80 ஆண்டு-களுக்குமுன்பு இந்தியாவில் சமூக அமைப்பை ஆராய முற்பட்ட சைமன் கமிஷனை திரும்பிப் போ என்று தேசிய வாதம் என்கிற பெயரில் கூச்சல் எழுந்தபோது, சைமன் கமிஷனே வா என்று வரவேற்று, இந்த நாட்டில் பிற்படுத்தப்-பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி அறிவு இல்லாதவர்களாக, தற்குறி-களாக, சுரண்டப்படுகின்ற மனிதக் கருவிகளாக கொடு-மைப்படுத்தப்படுவதை இந்தியா அறிய-வேண்டும். இவைகளுக்கெல்லாம் கழுவாய் வழங்கப்-படவேண்டும் என்று எதிர்த்துக் குரல் கொடுத்தவர் தென்னிந்தியாவின் பெரியார் ஒருவர்-தான் என்பதை இன்றைய தலைமுறை உணர-வேண்டும்.

இந்தியாவில் இருக்கின்ற மாநிலங்களில் தமிழ்-நாட்டில்தான் உழைக்கின்ற மக்களான சூத்திரர்-களும், பஞ்சமர்களும், அரசியல் அதிகாரத்திலும், அரசு உயர் பணிகளிலும் முன்னேறி இருக்கிறார்-கள் என்றால், அதற்குக் காரணம் பெரியாருடைய இயக்கமும், அந்த இயக்கத்தின் தளபதிகளான அறிஞர் அண்ணாவும், தலைவர் கலைஞரும் வழங்கிய, வழங்கிக் கொண்டிருக்கின்ற புரட்சிகர-மான திட்டங்களே காரணமாகும்.

கலைஞர் உருவாக்கிய பெரியார் நினைவு சமத்துவபுரங்கள்

ஜாதி பேதமற்ற சமுதாயம் காண பாடுபட்ட பெரியாரின் பெயரால் ஜாதியற்ற சமத்துவபுரங்-களை தமிழகத்தில் உருவாக்கி இந்தியாவுக்கே அறிமுகப்படுத்திய சமூகப் புரட்சியாளர் கலைஞர் அவர்கள். தன்னை ஒரு நாத்திகன் என்றும், தன்னு-டைய பாதை பெரியாரின் பாதை என்றும், பிர-கடனப்படுத்திக் கொண்ட தலைவர் கலைஞரைப் போன்ற பகுத்தறிவுவாதிகள் ஆட்சிக்கும், அதிகாரத்திற்கும் வருகிறபோதுதான் சமூகக் கொடுமைகள் களையப்பட்டு, முன்னேற்றமும், வளர்ச்சியும், சமூகநீதியும், சாதாரண சாமானிய உழைக்கும் வர்க்கத்திற்குக் கிடைக்கும் என்பதை இளை-ஞர்களும், குறிப்பாக பொது வாழ்க்கைக்கு வருகின்ற இளம் தலைவர்களும் உணர்வதற்குத் தெலுங்கு மொழியில் வெளிவருகின்ற பெரியார் திரைப்படம் ஓர் அடித்தளமாக அமையும் என்று நம்புகிறேன். _ இவ்வாறு அவர் பேசினார்.

-------- நன்றி விடுதலை (25.05.2010)

2 comments:

Anonymous said...

சமத்துவபுரம் எதிரில் டாஸ்மாக் கடை வராத வரை சந்தோஷம் தான். ஏன்னா சமத்துவம் நிலவுற மற்றொரு முக்கியமான இடம் டாஸ்மாக் கடை தானே.

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]