வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Monday, May 17, 2010

ஏன்? ஜாதி கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்?

மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட ஜாதியினரைக் கணக்கிட்டால், சமூக நீதிக்கொள்கைத் திட்டங்களைச் செயல்படுத்திட வலுவான ஆதாரங்களைத் தந்து உதவிடும் என்கிறார் சிறந்த அரசியல் நோக்கரும் ஆய்வாளருமான யோகேந்திர யாதவ். தற்போது பெர்லினில் விஸ்சன் ஷாப்ட்ஸ் கோலெக்-இல் இருக்கும் இவர் டெல்லி சிஎஸ்டிஎஸ் நிறுவனத்தின் மூத்த ஆய்வறிஞர்.


தப்பான காரணங்களுக்காகச் சரியான முடிவுகளை மேற்கொள்ளும் தந்திரம் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு இருக்கிறது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் ஜாதிவாரி விவரம் சேகரிப்பது தொடர்பான அறிவிப்பு அவற்றில் ஒன்று. தெலுங்கானா பிரச்சினையைப் போலவே, நீண்ட காலமாகத் தேங்கிக்கிடக்கும் பிரச்சினையில் அவசரப்பட்டு முடிவு எடுத்தாற் போன்ற தோற்றம்தான், இந்தப் பிரச்சினையிலும் ஏற்பட்டுள்ளது. மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்புத்திட்டம் போலவே, நாட்டின் நலன் கருதி கையைப் பிசைந்துகொள்ளும் நிலைதான். இதர பிற்படுத்தப்பட்ட ஜாதிகளை சென்சசில் கணக்கெடுப்பது தொடர்பான அறிவிப்-பும்-கூட, நீண்ட நாள்பட்ட கோரிக்கை மீது முற்-போக்கான முடிவு எடுத்ததைப் போலத் தோன்றினாலும்,சமூக நீதிக்கான திட்டங்களைச் செயல்படுத்திட இது உதவக்கூடியது என்றாலும், வேண்டாவெறுப்புடன் செய்யப்படுவது போலக்காட்சி அளித்துத் தேவையற்ற கெடுத-லான விமரிசனங்களை வழக்கமானவர்களிட-மிருந்து வரவழைத்துவிட்டது.

என்னதான் முடிவு என்பதுபற்றி அரசின் மவுனம், குழப்பத்தைத்தான் மேலும் ஏற்படுத்தி-யுள்ளது. ஊடகங்களின் செய்தித் தலைப்புகளும், நாடாளுமன்ற விவாதங்களும் ஜாதிக் கணக்-கெடுப்பு என்றே கூறுகின்றன. காலனி ஆட்சிக்-காலத்தில் செய்யப்பட்டது. போன்று, இந்து மதத்தின் எல்லா ஜாதி, உள் ஜாதிப் பிரிவு-களையும் கணக்கெடுத்துத் தரம்பிரிப்பது போன்று பிரமையை உருவாக்கி விட்டது. ஆனால், எஸ்.சி., எஸ்.டி பிரிவுகளுடன், ஓபிசி பிரிவையும் கணக்கெடுப்பது என்கிற அளவில் குறிப்பிட்ட மாதிரி விவரங்கள் சேகரிப்பது மட்டுமே செய்யப்படவிருக்கிறது என பிரணாப் முகர்ஜியின் அறிக்கை தெரிவிக்கிறது. வேறு வகையில் சொன்னால் கணக்கெடுப்பின்போது, எஸ்.சியா, எஸ்டியா எனக்கேட்பதைப் போல ஓபிசியா என்று மட்டுமே கேட்கப்படும். அவர்கள் தெரிவிக்கும் பதிலுக்கேற்ப, ஜாதியின் பெயர் பதிவு செய்து கொள்ளப்படும். மற்றவர்களின் ஜாதி பற்றிய கேள்வி கேட்கப்படமாட்டாது. தற்போதைய சூழலில், இது மிகவும் நாயமான அணுகுமுறை; ஜாதி வாரிக் கணக்கெடுப்புக்குச் சரியான வகையில் பொருள் கொள்ளும் முறை ஆகும்.

சதிஷ் தேஷ்பாண்டே கூறியது போல, ஜாதி வாரிக்கணக்கெடுப்புக்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. கணக்கெடுப்பு தொடங்கப்பட்டு வாதங்கள் நடைபெற்று வரும் சூழ்நிலையில் அவற்றிற்குத் தேவை இல்லை. ஓபிசியினரின் ஜாதி பற்றிய முழு கணக்கெடுப்பை நடத்தினால், 80 ஆண்டுக் காலமாகக் கைக்கொள்ளப்படும் திட்டத்தைத் திருப்பிப் போட்டதாக ஆகாது; என்றாலும் ஏற்கெனவே கடைப்பிடிக்கப்பட்ட அணுகு முறைகளை தர்க்க ரீதியாக மாற்றுவதாகவே அமையும். கடந்த காலங்களில், கருநாடகா, ஆந்திரா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில், பிரத்தி-யேகமாக அமைக்கப்பட்ட கமிஷன்களின் மூலம், இம்மாதிரி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கருநாடக மாநிலம் முன்னோடியானாதும் சிறப்பான வகையிலும் அமைந்தது எனலாம். இந்திய அளவில் மாதிரி சர்வே ஒன்று மண்டல் கமிஷனால் நடத்தப்-பட்டது. அவற்றையெல்லாம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சேர்த்து செய்யப்படாதது இவ்வகை ஆதாரங்கள் பகுதியாகவும் சரிபார்த்திடாமலும் அமைந்திடும் நிலையில் உள்ளன.

முக்கிய விவரம்

இம்மாதிரிக் கணக்கெடுப்பினால் நமக்கு என்ன விவரம் கிடைக்கும்? நிறைய கிடைக்கும். பல்வேறு ஜாதியினர் தொடர்பான எண்ணிக்கை, பிற்படுத்தப்-பட்ட தன்மை தொடர்பான சோதனை முடிவுகள் சேகரிக்கப்பட்டு, அவை தொடர்பாக முடிவே இல்லாமல் செய்யப்பட்டுவரும் வாதங்களை முடிவுக்குக் கொண்டுவந்து, சீரமைத்திடும் செயல்களை நடைமுறைக்குக்கொண்டு வர முடியும். ஓபிசியினரின் எண்ணிக்கை தொடர்பான விவாதங்களுக்கு முடிவு கட்டுவதோடு, அவர்களின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலைகளையும் கணித்திட பெருமளவு உதவும். ஓபிசி தொடர்பான அனைத்து வகையான எண்ணிக்கை பாலின விகிதம், இறப்பு, பிறப்பு கணக்கு, கல்வி, பள்ளி செல்வோர் எண்ணிக்கை, பட்டதாரிகளின் எண்ணிக்கை முதலிய அனைத்து விவரங்களையும் அறிந்திட இயலும். பொருளாதார நிலை, சொத்துகள், தொழிலாளிகளின் தொகை போன்ற பலவற்றை அறிந்திட முடியும். ஒவ்வொரு மாநிலத்திலும் மாவட்ட வாரியாக, ஜாதி வாரியாக, இவ்விவரங்கள் கிடைக்கும். இதன்மூலம் இடஒதுக்கீடு முறையைச் செம்மையாகச் செய்திட முடியும். பட்டியலில் சேர்ப்பது, நீக்குவது போன்ற அரசியல் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்திடவும் திட்டங்களைச் சீராகச் செயல்படுத்திடவும் முடியும். சீரமைத்திடும் நடவடிக்கைகளை உருவாக்கிட இது உதவாது, சென்சசில் மிகஅதிக ஊதியம் பெறும் வேலைகளையோ, ஏனைய விவரங்களையோ சேகரிப்பதில்லை என்றாலும், இது ஒரு பெரிய முயற்சிதான்.

(ஓபிசி) இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் கணக்கெடுப்பு விருப்புத்திட்டம் அன்று தம்மால் சட்டப்படியும் திட்டப்படியும் அங்கீகரிக்கப்பட்ட சமூகக் குழுக்களைக் கணக்கிடாமல் இருந்திட தற்கால மாநிலங்களால் முடியாது. ஓபிசியினருக்கு அரசு வேலை வாய்ப்புகளிலும் கல்விச்சாலை-களிலும் இடஒதுக்கீடு முதலிய பல்வேறு நலத்திட்டங்களை அவர்களுக்கு அளிப்பதானது அவர்கள் பற்றிய கணக்கெடுப்பு நடத்துவதைக் கட்டாயமாக்குகிறது. சரியான, ஆய்வு முறையிலான ஆதாரங்களை நீதித்துறை அடிக்கடி கேட்கிறது. ஓபிசியினர் பற்றிய கணக்கெடுப்பு அவர்களுக்கான இடஒதுக்கீடு அளிக்கப்பட்ட பிறகு செய்யப்பட்ட 2001 சென்சசிலேயே எடுக்கப்பட்டிருக்க வேண்டும். உண்மையில் அப்போதைய சென்சஸ் தலைமைப் பதிவாளர் இதற்கான யோசனையைத் தெரிவித்தார். ஆனாலும் இந்திய உள்துறை அமைச்சகத்தால் அய்க்கிய ஜனநாயக முன்னணி அரசில் புறந்தள்ளப்பட்டு விட்டது.

எது சரியான தருணம்?

சென்சஸ் பணிகள் தொடங்கப்பட்டுவிட்ட இன்றைய நிலையில் இது சாத்தியமா? எல்லா ஜாதிகள் பற்றிய கணக்கெடுப்பை முழுமையாக நடத்திட தற்போது காலம் கடந்திட்ட நிலை என்றாலும், இதுபற்றிய முடிவு முன்னமேயே எடுக்கப்பட்டிருக்க வேண்டும்தான். ஆனாலும், இப்போதைய நிலையிலும், ஓபிசி பற்றிய கணக்கெடுப்பு சாத்தியப்படக்கூடியதே! ஓபிசிகளின் சட்டப்பூர்வப்பெயரான சமூக, கல்வி ரீதியில் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளின் பட்டியலை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரின் தேசியக் கமிஷன் ஏற்கெனவே தயாரித்துள்ளது. நாட்டில் உள்ள ஜாதியினரை அடையாளம்காண இப்பட்டியல் அடிப்-படையாக அமையும். ஒவ்வொரு மாநிலத்திலும் மனித இனக் குழு சங்கத்தின் சார்பாக எடுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. மாநில வாரியான ஜாதி, இனங்-களின் பட்டியலை இத்துடன் இணைத்துக்-கொள்ளலாம். மாவட்ட அளவில் இப்படிப்பட்ட பட்டியலைத் தயாரிப்பது சிரமமாக இருக்கலாம். ஆனாலும், தொழில், மொழி போன்ற சென்சஸ் புள்ளி விவரங்கள் சேகரிப்பதில் எந்த சிரமமும் இருக்காது. இது தொடர்பான ஆட்சேபணைகள் எல்லாமே தவறாக வைக்கப்பட்டனவே தவிர, விஷமத்தனமானவையல்ல.

கொள்கை அளவிலான எதிர்ப்புகள் என்ன? பொது வாழ்க்கையில் ஜாதிக்கு தரப்படும் முக்கியத்துவம் புரிந்துகொள்ளக்கூடிய சங்கடம்-தான். ஆனால், எஸ்சி, எஸ்.டியினரைக் கணக்-கிடும் போது ஓபிசியினரைக் கணக்கெடுப்பதில் என்ன மாதிரியான சிரமம் வந்துவிடும்? இதை அரைநூற்றாண்டுக்காலமாக நாம் செய்து வந்திருக்கிறோம். எந்த ஒரு பிரிவு பற்றியும்-அதிகாரப் பூர்வமாகக் கணக்கெடுக்கும் போது எல்லைகள் மாறலாம். ஒவ்வொருவரும் சந்தித்து-வரும் பிரச்சினை தொடர்பானவர்கள் அங்கீ-கரிக்கப்படாமல் இருந்துவரும் நிலையோடு, அவர்களின் கணக்கெடுப்பு தொடர்பான சிரமங்கள் கணக்கிட்டுப் பார்க்கப்பட வேண்டும். மதப்பிரிவினர் தொடர்பான கணக்கெடுப்பு கள் மதச்சாற்பற்ற தன்மைக்கு எதிராக இந்தியாவில் அமைந்துவிடாத வரையில், இனவாரிக் கணக்கெடுப்புகள் அமெரிக்க நாட்டை இனவெறி அரசாக ஆக்காத வரையில், இந்தியாவில் மேலும் ஒரு ஜாதிக் குழுவினரைக் கணக்கெடுப்பதானது இந்தியாவை ஜாதிகளின் சிறைச்சாலை என்று ஆக்கிவிட்டது.

எது எப்படியிருப்பினும், ஜாதிகள் தொடர்பான கண்ணோட்டம் நம் கண்களை மூடாமல் அருகில் சென்று பார்த்திடவும், அடையாளம் கண்டிடவும், சிலரைப் பின்னடைவுக்கு ஒதுக்கு வதற்கும் அது காரணமாக அமைந்திருப்பதைக் கண்டறிந்து அந்த ஜாதி முறை எவ்வாறு சமூகப் பிரிவுகளுக்கும் வர்க்க, பாலின பிளவுகளுக்கும் காரணியாக விளங்குகிறது என்பதைக் கண்டுபிடிப்பதற்கும் வாய்ப்பாக அமைந்துள்ளது. அதுதான் இன்றைக்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதற்கான அவசியம் ஆகும்.

நன்றி: தி ஹிண்டு 15.5.2010
தமிழில்: அரசு

4 comments:

vignaani said...

நல்ல மொழிபெயர்ப்பு; நல்ல பதிவு.
சாதி வாரி கணக்கெடுப்பு சரியே என இந்து நாழிதலும், துக்ளக் சோவும் உங்கள் கருத்துடன் ஒத்துப்போவது மகிழ்ச்சி

Unknown said...

பார்ப்பன இன ஏட்டுக்கு நன்றியா? பகுத்தறிவுக்கு அடுக்குமா? சுய மரியாதை செத்து விட்டதா? என்ன கொடுமை ஐயா இது!

Unknown said...

ஜாதி வாரி கணக்கெடுப்பு கட்டாயம் செய்யப்பட வேண்டும்! சென்ஸஸ் பிரதி ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுக்கப்பட வேண்டும்! சென்ஸஸ் எடுப்பவர்கள் நடுநிலை வகிக்க வேண்டும்!

பரணீதரன் said...

/*பார்ப்பன இன ஏட்டுக்கு நன்றியா? பகுத்தறிவுக்கு அடுக்குமா? சுய மரியாதை செத்து விட்டதா? என்ன கொடுமை ஐயா இது! */

என்ன அய்யா பண்ணுவது....இந்த மக்களுக்கு நல்லது வரும் என்றால் சுயமரியாதை பார்க்கமுடியுமா அய்யா? அதனால் தானே அறிவு ஆசான் அய்யா தந்தை பெரியார் செருப்படி கூட வாங்கினார்கள்.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]