வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Friday, December 04, 2009

விடுதலைப்புலிகளை முதலில் அடையாளம் காட்டியவர் ஆசிரியர்!


திராவிடர் கழகத் தலைவரின் 77 ஆம் பிறந்த நாளினையொட்டி சென்னை, மந்தைவெளியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் தொல். திருமாவளவன் எம்.பி., சுப. வீரபாண்டியன் மற்றும் கவிஞர் கலி. பூங்குன்றன், வழக்கறிஞர் அருள்மொழி ஆகியோருக்கு விழாக்குழுவினர் நினைவுப் பரிசினை வழங்கினர் (2.12.2009).
தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களை அவரின் 77ஆம் ஆண்டு பிறந்தநாளில் நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ளும் வாய்ப்பு இன்று கிடைக்கா-விட்டாலும் இந்த எழுச்சி மிக்க பொதுக்கூட்டத்தின் மூலம் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகள் நாட்டில் பரவிட, வெற்றி பெற தமிழ்த் தேசிய உணர்வு நாட்டில் செழித்-தோங்க தந்தை பெரியார் போல நோய் நொடி-யின்றி நீடு வாழ்க வாழ்க என விடுதலைச் சிறுத்தை-கள் அமைப்பின் சார்பில் வாழ்த்துகின்றோம்.

பெரியார் திடல்தான் நான் வளர்ந்த இடம்

எந்த மேடையிலும் நெஞ்சுயர்த்தி நான் சொல்-வேன். எனக்கு சமூக, அரசியல் மேடை போட்-டுக் கொடுத்த இடம் பெரியார் திடல்தான். எத்தனை எத்தனை மாநாடுகள், எத்-தனை எத்தனைக் கருத்-தரங்குகள், போராட்டங்-கள், பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் அறி-வார்ந்த உரைகள் _ இவை எல்லாம் என்னை வார்த்து வளர்த்து எடுத்தன. இதனை எத்தனை முறை வேண்டுமானாலும் எந்த இடத்திலும் சொல்வதில் பெருமைப்படுகிறேன்.

உலகில் எங்கு சென்றா-லும் நான் பெரியம்மாவின் பிள்ளை என்பது எப்படி உண்மையோ, அது போன்-றது தான் பொதுவாழ்வில் தன்மானக் கொள்கையில் நான் பெரியாரின் பிள்ளை ஆவேன்.

பெரியாரின் கொள்கை வாரிசு ஆசிரியர்

தந்தை பெரியாரின் கொள்கையால் அடை-காக்கப்பட்டு அவரின் கொள்கை வாரிசாக விளங்-குபவர் நம் ஆசிரியர்.

கொள்கை உறுதிப்-பாட்டுக்குச் சாட்சியாக விளங்குபவர் அவர். இடையில் எத்தனைக் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும், மானமிகு கலைஞர் அவர்களால் வாழ்த்தப்படுபவர், பாராட்-டப்படுபவர் வீர-மணி ஒருவர் தான்.

நான் வியந்து போகி-றேன் _ நமது தமிழர் தலை-வருக்கு வயது 77 என்-பதை என்னால் நம்பவே முடியவில்லை. ஒருநாள் கூட ஓய்வில்லாமல் தமிழ்-நாட்டைச்
சுற்றி சுற்றி வருகிறார். பெரியார் கருத்துகளைப் பரப்பி வருகிறார்.

நாட்டைச் சுற்றி வரு-வதிலும், உழைப்பதிலும் கூட தந்தை பெரியார் அவர்களுக்குச் சரியான வாரிசு இவர்.

எனக்கு ஊக்கம் அளித்த தலைவர்

எனக்கு இந்த 47 வய-திலேயே கசப்புணர்வும், சோர்வும் பல நேரங்களில் ஏற்படுவதுண்டு. குறிப்பாக இவ்வாண்டு மே 17ஆம் நாள் நான் அதிர்ந்தே போனேன். என்ன செய்-வது என்று திகைத்துப்-போனேன். ஈழத்தில் ஓர் இனம் அழிக்கப்பட்டு-விட்டது. பிரபாகரன் இல்லாமல் போய் விட்-டார் என்றெல்லாம் கொக்-கரித்தார்கள். என்னை அறியாமலேயே கூட தடுமாறினேன். சோர்ந்தி-ருந்த அந்த நேரத்தில் ஓர் இளைஞனைப் போல என்னைத் தட்டிக் கொடுத்து தடுமாற்றத்தி-லி-ருந்து என்னை மீட்டவர் ஆசிரியர் அவர்கள். சோர்ந்த போன என்னை தட்டிக்கொடுத்து, பொது வாழ்வில் போராட்டக் களத்தில் இவையெல்லாம் சகஜம் என்று ஆற்றுப்-படுத்தினார்.

விடுதலைப்புலிகள் விசயத்தில் எப்பொழுதும் உறுதியாக இருப்பவர் தமிழர் தலைவர். அவர் துடித்திருக்கின்றார், வேதனைப்பட்டிருக்கின்றார். நான் அறிவேன். என்றா-லும் ஒரு போதும் அவர் சோர்ந்து போய்விடு-வில்லை.

இன்றைக்கும் பிரபாக-ரனைப் பற்றியும், விடு-தலைப்புலிகள் பற்றியும் பலரும் உரிமை கொண்-டா-டலாம். யாரும் நினைத்துப் பார்க்காத கால கட்டத்திலே விடு-தலை புலிகளையும், அதன் நிகரற்ற தலைவர் மேதகு பிரபாகரனையும் நமக்-கெல்லாம், தமிழருக்கெல்-லாம் உறுதியாக அடை-யாளம் காட்டிய தலைவர் நமது ஆசிரியர் வீரமணி அவர்கள். நான் மாண-வனாக இருந்தபோதே அந்த உணர்வை என்னி-டம் விதைத்தவரும் ஆசி-ரியரே! (http://www.youtube.com/watch?v=fSHTC1ambno&feature=player_embedded#at=77)

எனது முக்கியமான நேரங்கள்

தேர்தல் நேரம்_பிரச்-சாரப் பணியில் என்னால் ஈடுபட முடியவில்லை. அந்த நேரத்தில்கூட ஆசிரியர் அவர்கள் எனக்கு தெம்பைக் கொடுத்தார். இந்த நேரத்தில் தேர்தலில் இறங்குவது என்று முடி-வாகிவிட்டது. இந்த நேரத்தில் வேறு சிந்தனை-களைக் கொண்டு பார்த்து குழப்பிக்கொள்ளக் கூடாது. தேர்தலும் ஒரு களம்தான் என்று ஆகி-விட்ட பிறகு அதில் தயக்-கம் கூடாது, வெற்றிக்காக உழைக்க வேண்டும், திட்ட-மிட வேண்டும் என்று என்னை வழிநடத்தினார். இவையெல்லாம் எனக்கு மிகவும் முக்கியமான நேரங்கள். ஒருமுறை முதலமைச்சர் கலைஞர் அவர்களை கோபால-புரத்தில் சந்தித்தேன். அப்பொழுது ஈழத்தில் மிகவும் நெருக்கடியான நேரம். பிரபாகரன் உயி-ருக்கு ஆபத்து நெருங்கு-கிறது. அவரைக் காப்-பாற்ற வேண்டும். ஏதா-வது செய்யுங்கள் என்று உணர்ச்சி வயப்பட்டு கேட்டுக்கொண்டேன். என் கண்கள் கலங்கின. முதலமைச்சரும் அந்த நிலைக்கு ஆளானார்.

சற்று சமாளித்துக்-கொண்டு கலைஞர் சொன்-னார், பிரபாகரன் மாவீரன். அவன் தோற்க மாட்டான். பிரபாகரன் உறுதியையும், வீரத்தையும் கண்டு ராஜீவ்காந்தியே வியந்து போனதை நான் அறிவேன் என்று கலை-ஞர் சொன்னார்.

கலைஞர் அவர்களும் சரி, நமது ஆசிரியர் ஆனாலும் சரி, எப்பொ-ழுதும் தைரியத்தை இழக்க மாட்டார்கள். அடிப்-படை சிந்தனை-யில் மாற்-றம் இல்லாத-வர்கள். அத-னால்தான் இடையிடையே சில நேரங்களில் உரசல்-கள் காணப்பட்டாலும், எப்-பொழுதும் நெருக்க-மாகவே அவர்கள் இருக்-கின்றார்கள் என்பதை புரிந்து கொண்டேன். நல்-லிணக்கத்தையும் பேணி வளர்ப்பது எப்படி என்-பதையும் அவர்கள் மூலம் தெரிந்து கொண்டிருக்-கிறேன்.

(சென்னை மந்தைவெளி தமிழர் தலைவர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன் 2.12.2009)
நன்றி: விடுதலை 04.12.09

1 comment:

அஹோரி said...

என்னது .... கேப்பையில நெய் வடியுதா ?

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]