வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, December 02, 2009

அய்யப்பனும் - அயோக்கியத்தனமும்!

அய்யப்பனுக்கு அபார சக்தியிருக்கிறது என்றும், அய்யப்பனுக்காக விரதம் இருந்து, இருமுடி கட்டி சபரிமலை சென்று வந்தால் தீராத நோய்-கள் எல்லாம் தீருமென்றும், தீவினைகள் எல்-லாம் அகலும் என்றும், சதா பிரச்சாரம் செய்தும் குறுந்தகடுகளை வெளியிட்டுக் கொண்டும் இருக்கின்றனர்.


ஆனால், நடப்பது என்ன? அய்யப்பப் பக்தர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகி மரணம் என்கிற பரிதாப செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. மாரடைப்பு ஏற்பட்டு பக்தர்கள் சபரிமலையிலேயே மரணம் என்றும் ஏடுகள் செய்திகளைப் போடுகின்றன. போதும் போதாதற்கு அய்யப்பன் கோயிலில், பிரத்தி-யேகமாக உள்ள மருத்துவர்கள் இப்பொழுது அறிக்கையினைக் கொடுத்துள்ளனர்.

இதய நோயாளிகள், ரத்த அழுத்தம், கொழுப்பு (கொலஸ்ட்ரால்) பாரம்பரிய இதய-நோய் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், 55 வயதுக்குமேல் ஆனவர்கள், சபரிமலை ஏறும்-போது தேவையான முன்னெச்சரிக்கை நட-வடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்.

பயணத்திற்குமுன் மருத்துவரிடம் பரி-சோத-னை-கள் மேற்கொள்ளவேண்டும். இத-யத்--தின் செயல்பாட்டைத் தெரிந்து-கொண்ட பின்னரே பயணம்பற்றி முடிவெடுக்கவேண்டும்.

அவ்வாறு வரும்போது, வியாதிபற்றிய குறிப்பு--களும், சாப்பிடும் மருந்துபற்றிய குறிப்பு-களும் டைரியில் எழுதிக்கொண்டு வர-வேண்டும்.

மலை ஏறுவதற்கு முன்னர் பம்பையில் அதிக உணவு சாப்பிடக் கூடாது. லேசாக சாப்பிட்டு-விட்டு மலையேறவேண்டும். வயிறு நிறைய சாப்பிட்டால் இதயத்தின் வேலைப் பளு-வும் கூடும். மலை ஏறும்போது நெஞ்சு வலியோ, மூச்சுத் திணறலோ, அசாதாரண நிலையோ ஏற்பட்டால், உடனடியாக மலை ஏறு-வதை நிறுத்தி, மருத்துவர்களின் ஆலோ-சனைகளைப் பெற-வேண்டும். ஏறும்போது நாடித் துடிப்பு நிமிடத்துக்கு 140_க்குமேல் இருக்கக்கூடாது.

மலையேறும்போது அய்கோர்டின் மாத்தி-ரையை அதிகமாக நாக்குக்கு அடியில் வைப்ப--தால் ரத்த அழுத்தம் குறைந்து தலை சுற்றல் போன்றவை ஏற்படும்.

மேலும் வழக்கமாக மருந்து சாப்பிடுபவர்-கள் மலையேறும்போது ரத்தத்தில் சர்க்கரை குறைந்து உடல் தளர்ச்சி ஏற்படலாம். இதற்-காக அவர்கள் கையில் குளுகோஸ் வைத்துக் கொள்ள-வேண்டும்!

இவ்வாறு அய்யப்பன் கோயில் சன்னிதான மருத்துவர் ஹரீந்திரபாபு கூறியுள்ளதாக தினமலரே (1.12.2009) கூறியுள்ளது.

இது முழுக்க முழுக்க அய்யப்பன் சக்தியைக் கேலி செய்வதாக இல்லையா? தன்னை நாடிவரும் பக்தர்களின் உயிரைக் கூடக் காப்பாற்ற முடியாத கடவுள் அய்யப்பன், சக்தி வாய்ந்தவன் என்றும், பக்தர்களின் குறைகளை, கஷ்டங்களை, நோய் நொடிகளை, பாவங்களைப் போக்குபவன் என்றும் சொல்லுவதெல்லாம் பச்சையான பித்தலாட்டம் அல்லவா?

வில்லாளி வீரனே
வீரமணி கண்டனே,
தாங்கி விடப்பா
ஏந்தி விடப்பா
தூக்கி விடப்பா
ஏற்றி விடப்பா

என்று அய்யப்ப சரணம் பாடிச் செல்லும் பக்தர்-களைக் காப்பாற்றும் சக்தி அய்யப்பனுக்கு இல்லை என்பதைத்தானே சன்னிதான மருத்து-வரின் அறிக்கை தெளிவுபடுத்துகிறது.

எந்தப் பக்தராவது _ இது கடவுளை அவ-மதிக்கும் செயல் என்று சொல்லவில்லையே, ஏன்?

இவற்றையெல்லாம்விட மிகக் கேவலமானது _ அய்யப்பன் பெயரால் நடத்தும் மகரஜோதி பித்தலாட்டம்!

கேரள மின் வாரியத்தைச் சேர்ந்த ஊழியர்கள் செயற்கையாக சூடத்தைக் கொளுத்திக் காட்டு-கின்றனர் என்பதை கேரள மாநில முதலமைச்சர், இந்து அறநிலையத் துறை அமைச்சர், அறக்-கட்ட-ளைத் தலைவர், கோயில் தலைமை அர்ச்-சகர் வரை ஒப்புக்கொண்ட பிறகும் மகர-ஜோதியை அனுமதிப்பது எந்த வகையில் சரி?

பக்தியின் பெயரால் எந்தப் பித்தலாட்டத்தை-யும் அரசு அங்கீகாரத்தோடு அரங்கேற்றலாம் என்-றால், பக்தியின் யோக்கிய-தையையும், அரசின் தன்மையையும் தெரிந்துகொள்ளவேண்-டாமா?

கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன் என்று தந்தை பெரியார் ஏன் சொன்னார் என்பது இப்பொழுது விளங்குகிறதா?

விடுதலை தலையங்கம் 02.12.2009

6 comments:

Ramarajan said...

ஒம் சுவமியே சரண்ம் ஐயப்பா.!

நம்பிக்கை தான் கடவுள்.
அவறுக்கு சக்தி இறுக்கு/இல்ல
ஆராய்ச்சி பன்றத விட்டுட்டு வேலைபோய் பாருங்கசாமி.
எல்லாரும் ஒரு நாளைக்கு சாகத்தன் போரோம்.
விப்த்து நடந்தா தப்பு பன்னிருப்பாங்க.
அதுக்கு கட்வுள தப்பு சொன்னா எப்படி.?

Ramarajan said...

மகர ஜோதி:-

மகர ஜோதி என்பது வானதுல தெரியும் நட்சத்திரம்.
பொன்னம்பல மேட்டுல தெரியுரது. மகர விள்க்கு.
அது தான் தீப ஆரதனை பன்றது.
மக்கள்தான் தப்பா நினைச்சிட்டிருக்காங்க.
ஜனங்க பன்ற வேலைகளுக்கு
கடவுள் எப்படி வருவாறு பாருங்க.
நம்பிக்கைததான் எல்லாமே.

Ramarajan said...

ஏதோ ஒன்னு அவரால ஒரு மண்டலத்துக்காவது
ஒழுங்கா இருக்காங்களா.?
அத பாருங்க சாமி.
இல்லனா கண்டத சாப்பிட்டுட்டு
குடிச்சிட்டு் கும்மாளம் போடுவாங்க தானே.
நீங்க எப்படி சாமி.?

Ramarajan said...

அவரு கல்யாணமாகாத பிரம்மச்சாரி.
அதனால் மக்களும் பிரம்மச்சாரிய
விரதம் இருக்்கிறோம். இது எவ்வளவு நல்ல விசயம்
அத பாருங்க சாமி. உன்னால முடிஞ்ச வி்ரதம் இருந்த்து பாருங்க சாமி.அவரால ஒரு மண்டலத்துக்காவது ஒழுங்காவது இருப்ப.
“ போட்டால் துளசி மாலை போடு
கேட்டால் சரண கோ்ஸ்ம் கேளூ
சபரி கிரியின் வழியில் மணத்தை அட்க்க பழக்கி விடு.
அணிந் தால் ஆடை கருப்பு நீலம்
குருவின் பாதம்
சபரி கிரியின் வழியில் மணத்தை அட்க்க பழக்கி விடு.
வம்புகளை மறந் துவிடு அம்பலம்ம் தொழுது விடு

vairamuthu said...

Vairam:

Swamyea Saranam Ayyappa.

If the god is not there means this universe is not here.
God is the way towards the goodness. To Reach the God we should maintain

1) Cleanness Body (if the body is clear no disease)

2) Be friend to our heart.(Then v can see d god inside the heart)

3) Should not hurt any religion and others heart.

Then god will come towards us.

Who were all spreading the fame of the god, those peoples are spoken upto now.

Who were all making the fun of god, the went off.

End of those people was bad like severe disease.

நம்பி said...

//Ramarajan said...

ஒம் சுவமியே சரண்ம் ஐயப்பா.!

நம்பிக்கை தான் கடவுள்.
அவறுக்கு சக்தி இறுக்கு/இல்ல
ஆராய்ச்சி பன்றத விட்டுட்டு வேலைபோய் பாருங்கசாமி.
எல்லாரும் ஒரு நாளைக்கு சாகத்தன் போரோம்.
விப்த்து நடந்தா தப்பு பன்னிருப்பாங்க.

அதுக்கு கட்வுள தப்பு சொன்னா எப்படி.?
7:28 PM //

ஆமா கரெக்ட்...

திருட்டு நடந்தா தப்பு பண்ணியிருப்பா...போலிஸ்ல கம்பளெயின்ட் பண்ணக்கூடாது அது விபத்து என்று விட்டுடணும்

கொலை, கற்பழிப்பு நடந்தா விபத்து..நம்ம சகோதரிகளாக இருந்தாலும்....அவங்க தப்பு பண்ணியிருப்பாங்க அதனால நடந்தது கடவுள் செஞ்ச செயல் என்று யாரும் கம்பிளெயின்ட் பண்ணாம விட்டுடணும்.

குடிச்சுட்டு வண்டி ஒட்டி ஒருத்தன் வந்து மோதி இறந்துட்டா விபத்து அவது அவன் செஞ்ச தப்புனால கடவுள் தண்டனை கொடுத்தார் புகார் பண்ணக்கூடாது...வழக்கு போடக்கூடாது விட்டுடணம்.

ஹார்ட் அட்டாக், கிட்னி பெயிலியர் என்றால் விட்டுடணும்..அவன் தப்பு பண்ணியிருப்பான் அவனுக்கு தண்டனை கிடைச்சது விட்டுடணும்..நம்ம அப்பா அம்மா எவருக்கும் வந்தாலும் அப்படியே விட்டுடணும்...என்ன நாஞ் சொல்றது...

தப்பு செஞ்சான்! தண்டனை அணுபவிக்கிறான்!

இதுக்குப் போய் ஆஸ்பிட்டலுக்கு கொண்டு போனா மட்டும் உயிரை காப்பாத்திடலாமா?

மயிரைக்கூட காப்பாத்த முடியாது. சரியா?

அவன் பண்ண பாவம் அப்படி... அதுக்கு நாம என்ன பண்ண முடியும்.

வேலை கிட்க்கலேண்ணா அவன் பண்ண பாவம் அதுக்காக அரசாங்கத்தை திட்டக் கூடாது கடவுள் தண்டிச்சிருக்கார் என்று நினைக்கணும்.

என்னபா இது ஏதோ தத்துவம் சொல்ல போய் எனக்கே வேட்டு வெச்சுகிட்டேனே!

கடைசில எனக்கே வந்து சேர்ந்துடுச்சே!....

அய்யய்யோபோ அய்யோபோ...அய்ய்யோபோ...

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]