வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Friday, December 11, 2009

ஆணை போடுகிறார் ‘சிவசேனா’ தலைவர் பால்தாக்கரே!

இஸ்லாமியர் ஒருவர் இந்தியாவின் பிரதமர் ஆக வேண்டுமானால், முசு-லிம் சமுதாயத்து மக்-கள் பொது சிவில் சட்டம் இயற்ற ஆதரவு தர-வேண்டும்; குடும்ப நலத் திட்டத்திற்கு ஆதரவு தரவேண்டும்; வந்தே மாதரம் பாடலை ஏற்க-வேண்டும்; எல்லாவற்றிற்-கும் மேலாக அயோத்தி-யில் ராமன் கோயில் கட்ட ஒப்புக்கொள்ள-வேண்டும்’ என்று ஆணை போடுகிறார் ‘சிவசேனா’ தலைவர் பால்தாக்கரே!

அதைச் சொல்ல இவர் யார் என்று தெரிய-வில்லை. இந்தியாவின் சர்வாதிகாரியாக இவர் எந்தத் தேதியிலிருந்து பொறுப்பு ஏற்றுக்கொண்-டார் என்றும் தெரிய-வில்லை.

இந்தியாவில் பிறக்கும் எல்லோரும் சமமானவர்-கள்தாம்; சம உரிமை படைத்தவர்கள்தாம். இதில் வேறுபாடு காட்டப்-படக்கூடாது என்பதை ஒப்புக்கொண்டு இந்து மதத்தில் உள்ள ஜாதியை ஒழிக்க ஒப்புக்கொள்ள-வேண்டும்; உயர்ஜாதி ஆணவச் சின்னமான பூணூலை அகற்றவேண்-டும் என்ற நிபந்தனை-களை சிவசேனா, சங் பரிவார் வகையறாக்கள் ஒப்புக்கொள்வார்களா?

இந்தச் சமத்துவத்தை ஏற்றுக்கொண்டவர்கள்தாம் இந்தியாவின் குடிமக்க-ளாக இருக்கவேண்டும் என்கிற நியாயமான, அறி-வார்ந்த, மனித உணர்வை மதிக்கும் குரலை ஏற்றுக்-கொள்வார்களா இவர்கள்?

இன்னொரு மதத்தைச் சார்ந்தவர்கள் இப்படி-யெல்-லாம் நடந்துகொள்ள-வேண்டும் என்று வலி-யுறுத்த இவர்கள் யார்?

ஆர்.எஸ்.எஸின் முன்-னாள் தலைவர் சுதர்சன் இப்படித்தான் ஒருமுறை சொன்னார். முசுலிம்கள் தங்கள் மதத்தை இந்திய மயமாக்கிக் கொள்ள-வேண்டும். ராமன், கிருஷ்-ணன் கடவுள்களை வழி-படவேண்டும் என்று கூறினார். ‘சிவசேனா’ தலை-வரோ, இதே கருத்தை வேறு சொற்களில் சொல்-கிறார் என்பதுதான் இதன் பொருள்.

இன்னொரு முக்கிய கேள்வி: இந்து மதத்தின் பிரதிநிதிகளாக இவர்களை யார் ஏற்றுக்கொண்-டார்-கள்?

இந்து மதத்தில் ஒரு பிரிவுதான் இருக்கிறதா? ஒரு பிரிவு இன்னொரு பிரிவை ஏற்றுக்கொள்-கிறதா? ‘வைத்தியரே, முத-லில் உங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள்-ளுங்-கள்!’ என்பதுதான் நமது முதலாவது வேண்டு-கோள்!

‘இந்து’ மதம் என்ற பெயர் அதற்கு உண்டா? என்பதற்கு முதலில் அவர்-கள் பதில் சொல்லட்டும்; மற்றவற்றை பிறகு பேசிக் கொள்ளலாம்.

- விடுதலை 11.12.2009 மயிலாடன்

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]