வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, December 02, 2009

ஆசிரியரின் பிறந்தநாள் அவரின் ஆசிரியருடன்.........


தமிழர் தலைவர் பிறந்த இதே நாளில் பிறந்தவர் அவரின் குருநாதரான ஆ. திராவிடமணி (1914).


சிறுவன் சாரங்கபாணி, வீரமணியானதற்கும், தலை-சிறந்த சொற்பொழிவாளராக உருப்பெற்றதற்கும் தந்தை பெரியார் அவர்களின் கரங்-களைப் பற்றியதற்கும், திரா-விடர் கழகப் பொதுச்செய-லாளராக, தலைவராக, தமிழர் தலைவராக பரிணாமம் பெற்றதற்கும் அடித்தளமிட்ட அவரின் ஆசிரியர் ஆ. திரா-விடமணி அவர்களுக்கு ஆயிரம் ஆயிரம் வணக்-கங்-களையும், நன்றியினை-யும் பெருமிதத்தோடு தெரி-வித்துக் கொள்வோம் இந்நாளில்.

அவரின் சொந்த ஊர் பொன்னேரியை அடுத்த ஆசான் புதூராகும். அந்தக் காலத்திலேயே பி.ஏ. பட்ட-தாரி என்பது சாதாரண-மானதல்ல. தொடக்கத்தில் கடலூரில் இஸ்லாமியர்களால் நடத்தப்-பட்ட இடைநிலைப் பள்ளியில் தலைமை ஆசி-ரியராகப் பணி-யாற்றி, அதன்பின் மணிலா மார்க்-கெட்டிங் சொசைட்டியில் அலுவலைத் தொடர்ந்தார். அப்போது அவரின் சக எழுத்தர்தான் பிற்காலத்தில் தமிழக அமைச்சராக வந்த திரு. ஏ. கோவிந்தசாமி ஆவார்கள்.

ஆசிரியர் திராவிடமணி தங்கியிருந்த இடம் இராம-லிங்க பக்த ஜனசபையாகும். மாலை நேரத்தில் மாணவர்-களுக்குத் தனியே பாடம் (டியூசன்) சொல்லிக் கொடுப்-பார். பள்ளிப் பாடங்களோடு, தந்தை பெரியார் அவர்-களின் பகுத்தறிவுக் கருத்து-களையும் குழைத்துக் கொடுப்பார். குடிஅரசு, திராவிட நாடு இதழ்களை-யும் கொடுத்துப் படிக்கச் செய்வார். அந்தப் பட்டறை-யில் தயாரிக்கப்பட்ட போர்-வாள்தான் நமது ஆசிரியர் கி. வீரமணி. அவ-ரின் இயற்பெயர் சுப்பிரமணி-யம் _ தன்னிடத்தில் பாடம் பயின்ற மாணவர்களின் பெயர்களையெல்லாம் நல்ல தமிழில் மாற்றம் செய்தார்.

ஆசிரியர் திராவிட-மணி என்னை ஒரு வளர்ப்புப் பிள்-ளைபோல கருதி பகுத்-தறிவையும், பாட அறிவையும், கல்வியையும் அளித்து வருகிறார் என்ப-தால், என் தந்தையார் அவ-ரிடமே, என்னை முழுமை-யாக ஒப்-படைத்ததுபோல் ஆக்கிவிட்-டார் என்று கூறு-கிறார் நமது ஆசிரியர் வீர-மணி அவர்கள். (ஆதாரம்: அய்யாவின் அடிச்சுவட்-டில் பக்கம் 29).

ஆசிரியர் திராவிட மணி-யைச் சுற்றி 20, 30 மாணவ சீடர்கள் எப்பொழு-தும் சூழ்ந்து கொண்டே இருப்பார்-கள். வாங்கும் சம்பளத்தில் பெரும்பகுதி கட்சிப் பணிக்கே!

குடும்பம் ஒரு பக்கம், இவர் இன்னொரு பக்கம்!

வெளியூர்ப் பேச்சாளர்-களை வரவழைப்பது, வழிச் செலவுக்குப் பணம் கொடுப்-பது, தங்க வைப்பது, உண-வளிப்பது எல்லாமே அவர் செலவுதானாம்!

அவர் எழுதிக் கொடுத்-ததை மனப்பாடம் செய்து மேசைமீது ஏற்றப்பட்டு பேச ஆரம்பித்தவர்தான் _ இன்-றைய நாடறிந்த தலைசிறந்த சொற்பொழிவாளரான நம் தலைவர் வீரமணி. அப்படி சிறுவன் வீரமணி பேசிய பேச்-சைக் கேட்டுத்தான் திராவிடர் கழகத்தின் திரு-ஞான சம்பந்தர் என்று அறி-ஞர் அண்ணா (29.7.1944, திருப்பாதிரிப்புலியூர்) பாராட்டினார். ஆ. திராவிட-மணி அவர்கள் திராவிடர் கழகத்தின் கூட்டுப் பொதுச்-செயலாளராகவும் பிற்-காலத்தில் இருந்திருக்கிறார் என்பது முக்கியமான வரலாற்றுக் குறிப்பாகும்.

ஆசான் திராவிடமணி-யை-யும், அவர்தம் சீடர் மான-மிகு வீரமணியையும் ஒரே பிறந்த தேதியில் சந்திப்பதும், சிந்திப்பதும் எவ்வளவுப் பொருத்தமானது, விசித்திர-மானது!

வாழ்க திராவிடமணி!

- மயிலாடன் விடுதலை (2.12.2009)

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]