வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Friday, December 18, 2009

ஜோதிடப் பட்டயமாம்! பா.ஜ.க ஆறாண்டு காலம் ஆண்டதன் விளை-வாகப்....

பாரதீய ஜனதா கட்சி ஆறாண்டு காலம் ஆண்டதன் விளை-வாகப் பலவித மூடத்தனங்கள் வளர்க்கப்பட்டன. ஜோசியம் ஒரு அறிவியல் எனக் கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட்டது. அது எப்படி அறிவியல் ஆகும் என்கிற கேள்வி நாட்டின் பலதரப்பு-களாலும் கேட்கப்பட்டதால், மந்திரி முரளி மனோகர் ஜோஷி அதனை ஒரு கலை என்ற அளவில் கற்றுக் கொடுக்கப்போகிறேன் என்று அறிவித்தார். இதனைப் பாடமாக வைத்தால் 5 கோடி ரூபாய் நிதி அளிக்கப்படும் என்றெல்லாம் கூட ஆசை காட்டினார். மய்ய அரசின் புதுவைப் பல்கலைக் கழகத்தில் அது பாடமாக உள்ளது.

மதுரையில் ஒரு பல்கலைக் கழகத்தில் அது பட்டயப் படிப்பாகக் கற்றுத் தரப்படுகிறது. இந்த ஆண்டு முதல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பட்டயப்படிப்பு சொல்லித் தரப் போகிறார்களாம். விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள்

பார் கெடுக்கும் எண்ணமுடன் பார்ப்பனர்.
அறிவற்ற ஜோதிடத்தைப் போற்றி
வேரில் வெந்நீர் வார்த்தனர், அய்யா.
செறிவுற்ற கருத்தால் அதை ஒழித்தார்.
பார் இன்றைய நிலை பாடமாம் அது.
பட்டமாம் பட்டயமாம் ஜோதிடத்தில்!

என்று நொந்து கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லையா?

ஜோசியனுக்கு ஜெயில்

1930_க்கு முன் நம் நாட்டில் நடந்த உண்மைச் சம்பவம் இது. நூற்றுக் கணக்கான சமஸ்தானங்களில், கபுர்தலா சமஸ்தானமும் ஒன்று. இதன் மன்னர் ஜகத்சிங். இவரின் மகன் இளவரசர் பரம்ஜித்-சிங். அவரின் மனைவி ஜப்பால் சமஸ்தான இளவரசி பிருந்தா. இவர்களுக்கு மூன்றும் பெண் பிள்ளைகள். தனக்குப் பிறகு தன் மகன், அவருக்குப் பிறகு ஆள்வதற்கு ஆண் வாரிசு இல்லையே என்கிற குறை மகாராஜாவுக்கு இருந்தது.

அரண்மனை ஆஸ்தான ஜோசியர் சிறீராம் பண்டிதர் மாமன்-னரிடம் அடித்துச் சொன்னார் - இளவரசரின் நான்காம் குழந்தை மகன் என்று! மாமன்னர் மகிழ்ந்தார். அவரின் மகனுக்கு நான்காம் குழந்தையை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். குழந்தை பிறக்கும் நாள் நெருங்கியது. அரச குடும்பத்தினரைத் தவிர்த்து, அரசாங்க அதிகாரிகள் மத்தியிலும் பெருத்த எதிர்பார்ப்பு, பிறக்கப்-போவது நாட்டின் எதிர்கால மன்னராயிற்றே!

குழந்தை பிறந்தவுடன் அரச மரியாதை அளித்து வரவேற்றிட வேண்டும் என்று தளபதி பக்சி பூரன் சிங் பகதூருக்குக் கட்டளை. அரண்மனை, ஊர் முழுவதும் வண்ண விளக்கு அலங்காரங்கள். பட்டாசு வகைகளை கல்கத்தா நகரத்திலிருந்து வரவழைத்துத் தயாராக வைத்திருந்தனர். 101 குண்டுகள் முழக்கத்துடன் குழந்தை பிறந்ததை நாட்டு மக்களுக்கு அறிவித்திட அனைத்தும் தயார். எல்லா வகைச் செலவுகளுக்காகவும் 20 லட்சம் ரூபாய் ஒதுக்கப் பட்டது அந்தக் காலத்திலேயே!

1926 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் தேதி, விடியற்காலை 3.30 மணிக்கு பிருந்தாவுக்குப் பெண் குழந்தை பிறந்தது. லேடி டாக்டர் பெனாரா குழந்தை பிறந்த சேதியைக் கண்களில் நீர் வழிய அறிவித்தார். எதிர்கால மன்னர் பிறக்கவில்லையே என்கிற வருத்தம் வெள்ளைக்கார டாக்டர் அம்மணிக்கும் இருந்தது.

ஆஸ்தான ஜோசியர் சிறீராம் பண்டிதர் எவ்வித விசாரணையும் இல்லாமல் 9 ஆண்டு காலச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளே தள்ளப்பட்டார். திவான் ஜர்மனிதாஸ் என்பார் எழுதிய மகாராஜா என்ற நூலில் எழுதப்பட்டிருக்கும் செய்தி இது! இதுதான் ஜோசியத்தின் யோக்தை! சிறீராம் பண்டிதரை சிறைக்குள் தள்ளிய கபுர்தலா மகாராஜாவைப் போல, இன்றைய அரசுகள் இருந்தால் இத்தகைய மோசடிகள்நடக்குமா?

- சு.அறிவுகரசு கட்டுரை விடுதலையில் (18.12.09) எழுதியது

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]