வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Thursday, December 03, 2009

திருப்பதி ஏழுமலையான் என்னும் கல் முதலாளி.....

கையில் காசில்லாதவன் கடவுளேயானாலும் கதவை சாத்தடி என்ற ஒரு பாடல் வரி இந்த நேரத்தில் நினை-வுக்கு வந்து தொலைகிறது.

திருப்பதி ஏழுமலையான் என்னும் கல் முதலாளியை உடனடியாக தரிசிக்க வேண்டுமா? நீங்கள் கோடீஸ்வரராக இருக்க-வேண்டும். வெறும் கோடீசு-வரராக இருந்தும் பய-னில்லை. ஏழுமலையானுக்கு ரூ.100 கோடி நன்கொடை _ மன்னிக்கவேண்டும்; லஞ்சம் கொடுப்பவராக இருக்கவேண்டும்.
துண்டு துக்கடா _ கிச்சு கிச்சு மூட்டும் தகவல் இல்லை இது. திருப்பதி தேவஸ்தானம் அறிவித்-துள்ளது.
திருமலைக்குப் பக்தர்-கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நாள் கணக்கில் காத்திருந்துதான் ஏழுமலையானைத் தரிசிக்க முடிகிறது. இதனால் முக்கிய பிரமுகர்களுக்கு மகாதுவார தரிசன ஏற்பாடுகளை திருப்-பதி தேவஸ்தானம் செய்-துள்ளது.
இந்த வசதிமூலம் முக்கிய பிரமுகர்கள் எந்த ஒரு சிரமமும் இல்லாமல் மகாதுவாரம் வழியாக மிக அருகில் இருந்து தரிசனம் செய்யலாம். திருப்பதி ஏழு-மலையானுக்கு ரூ.100 கோடி நன்கொடை வழங்க முன்-வருபவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை (குடும்ப உறுப்-பினர் நான்கு பேர்களையும் சேர்த்து) அனுமதிக்கப்-படு-வார்கள்.
இந்தத் தரிசனத்தின்-போது ஏழுமலையானுக்கு அணிவிக்கப்படுகிற பட்டு வஸ்திரம் குடும்பத்தில் உள்ள ஆண்களுக்கும், பத்மாவதி தாயாருக்கு அணிவிக்கப்பட்ட பட்டு-சேலை அந்தக் குடும்பத்-தைச் சேர்ந்த பெண்களுக்-கும் அன்பளிப்பாக வழங்-கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்-துள்ளது.
அரசன் வருமானத்தைப் பெருக்கிக் கொள்வதற்குக் கோயில் கட்டவேண்டும் என்று அர்த்தசாஸ்திரம் எழுதிய கவுடில்யன் கூறி-யுள்ளான் _ அதனைக் கறா-ராக திருப்பதி தேவஸ்தானத்-தவர்கள் கடைபிடிக்கிறார்-கள் போலும்.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், திருப்பதி தேவஸ்தானத்தில் இந்த ஏற்பாட்டை அர்ச்சகர்களும், பக்தர்களும் எதிர்க்கிறார்-களாம். இது ஆகம விதி-களுக்கு முரணானது என்று குரல் கொடுத்துள்ளனராம். ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தால் ஏழுமலையா-னைத் தொடுவதற்கு அனு-மதிப்பார்களோ என்றும் கேட்கிறார்களாம் _ பரவா-யில்லை, பக்தர்களுக்குக்கூட கொஞ்சம் பகுத்தறிவு வேலை செய்கிறது போலி-ருக்கிறது.

அறிஞர் அண்ணா அன்று எழுதினார்:

கள்ளக் கையொப்பக்-காரன் கரம் கூப்புகிறான். விபச்சாரி விசேஷ அபி-ஷேகம் செய்கிறாள். குடி-கெடுப்பவன் கும்பாபிஷேகம் செய்கிறான். கொள்ளை லாபம் அடித்தவன் வெள்ளி ரிஷபம் செய்து வைக்கி-றான். ஒழுக்கக் குறைவு உள்ளோர், அழுக்கு மனம் படைத்தோர், இழுக்கான வழி செய்பவர்கள் ஆல-யங்-களிலே நுழைய முடியாத தடை உண்டா? இல்லை. ஆனால், ஆதிதிராவிடர் மட்டும் ஆலயத்துக்கு வரக்-கூடாது என்று தடுக்கிறோம், நியாயமா? (நூல்: தீண்-டாமை, 1948).

இந்த நூறு கோடி ரூபாய் நன்கொடையாளர்கள் பட்டியலில் எத்தனைக் கள்ளமார்க்கெட்காரர்களோ!

இதற்கு மேலும் விளக்க-மும் தேவையோ!

- விடுதலை 03.12.09

3 comments:

DESTINY said...

KANGALAI MUDINAL IRUTI VIDATHU ....
KADAVUL ILLAI ENDRAL ILLAMAL POGATHU.....

வீர அந்தனன் said...

என்ன காந்தி செத்துட்டாரா?

நம்பி said...

//வீர அந்தனன் said...

என்ன காந்தி செத்துட்டாரா//

இல்லபா!...நாதுராம் கோட்சே பார்ப்பனன் இந்து மதவெறிக்காக அதாவது உனக்காக கொன்னுட்டாம்பா.....! இப்ப சந்தோஷமா பா...போய் கவுந்தடிச்சி தூங்கு போ...இன்னும் எவனை சாகடிக்கலாம் என்று திட்டம் தீட்டு போ...

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]