வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Monday, March 08, 2010

பக்தர்களே, சிந்திப்-பீர்களா? கோயிலுக்கான விளம்பரம்!

கோயில்கள் சுரண்டுவ-தற்குரிய கேந்திரங்களாக இருக்கின்றன என்பதில் அய்யமில்லை. வியாபாரத்-தில் போட்டியிருப்பது இல்லையா? அதற்கேற்றாற் போல விளம்பரங்களை-யும் செய்வதில்லையா?


அதே நிலை கோயில்-களுக்கிடையேயும் நிலவு-வதைக் காண முடிகிறது. குறிப்பிட்ட ஒரு ஊரைச் சொல்லி அந்தவூர் கோயில் தான் சக்தி வாய்ந்தது என்று விளம்பரம் செய்கிறார்-களே இதற்கு என்ன பொருளாம்?

திருவண்ணாமலை அருணாசல ஈசுவரரை நினைத்தாலே பாவம் போகுமாம். வேதாரண்யம் மண்ணை மிதித்தாலே வேத புரீஸ்வரர் பாவங்-களை சின்னா பின்னப்-படுத்தி விடுவாராம்.

இன்னும் சில கோயில்-கள் _ அவைபற்றி சிறப்-பிதழ்களில் அடேய்யப்பா! இந்தப் பத்திரிகை வியா-பாரிகள் படுத்தும் பாடு கொஞ்சமா நஞ்சமா?

வளமான வாழ்வு நல்கும் கோடிலீஸ்வரர் கோயில் (ஆனந்தவிக-டன்) சுகமான பிரசவத்-துக்கு சித்தன்னவாயல் சுகந்த குந்தளாம்பாள் (குங்குமம்) இழந்த பொருளைப் பெற வேண்டுமா? தேடி வாருங்கள் தஞ்சபுரீஸ்வரர் கோயில் (திருவையாறு அருகில்) (தினத்தந்தி)

வழக்குகளில்வெற்றி பெற வேண்டுமா? கொல்-லங்குடி வெட்டுடையாள் காளி (சிவகங்கை அரு-கில்) (ராணி)

இப்படி எடுத்துக்-காட்டிக் கொண்டே போகலாம். கடன் தீர்க்கும் விநாயகர் என்றெல்லாம்-கூட உண்டு. இந்தக் கோயில்களுக்-கெல்-லாம் சென்றால் சுகப்பிரசவம், வளமான வாழ்வு, வழக்குகளில் வெற்றி, இழந்த பொருள் மீட்பு, கடன் தீர்தல் _ இவையெல்லாம் கிட்டும் என்பது உண்மைதானா? இவற்றை உள்ளபடியே நம்புபவர்கள் உண்டா? இதுமாதிரி பலன் கிட்டி-யிருக்கிறது என்று ருசு-படுத்த முடியுமா?

பின் ஏன் இப்படிச் செய்கிறார்கள்? கோயிலுக்-கான விளம்பரம்! பக்தர்-கள் வருகை _ உண்டியல் நிரம்புதல் காணிக்கைகள் குவிதல் _ இவையல்லா-மல் வேறு என்னவாம்? ஒரு கோயிலைவிட இன்னொரு கோயில் உயர்ந்தது சக்தி படைத்-தது என்கிற பாணியில் விளம்பரம் செய்வது வியாபார யுக்திதானே!

ஒரு கோயில் சாமியை இன்னொரு கோயில் மட்டப்படுத்திப் பேசுவது தானே!

பக்தி வியாபாரமாகி விட்டது என்ற சங்கராச்-சாரியாரும், வாரியாரும் சொல்லியிருக்கிறார்களே!

கடவுள் ஒருவர் _ அவர் உருவமற்றவர் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு, அதற்கு முரணாக இப்படி கதையளப்பது _ ஏன்? ஒவ்வொரு விஷயத்துக்-கும் கடவுளின் டிபார்ட்-மென்டா இவை?

பக்தர்களே, சிந்திப்-பீர்களா?

-விடுதலை (07.03.2010) மயிலாடன்

2 comments:

Anonymous said...

// கோயில்கள் சுரண்டுவ-தற்குரிய கேந்திரங்களாக இருக்கின்றன என்பதில் அய்யமில்லை. //

ஏற்க முடியாது
அது போகட்டும், னீங்கள் ஏன் மற்ற மதங்களை விமர்சிப்பதில்லை ? பயமா ?

நம்பி said...

//sangumani said...

// கோயில்கள் சுரண்டுவ-தற்குரிய கேந்திரங்களாக இருக்கின்றன என்பதில் அய்யமில்லை. //

ஏற்க முடியாது
அது போகட்டும், னீங்கள் ஏன் மற்ற மதங்களை விமர்சிப்பதில்லை ? பயமா ?
1:26 AM //

ஏன்? அவர்களை விமர்சிப்பதில் ஏன்? இவ்வளவு ஆர்வம்...? மதவிளையட்டில் அவ்வளவு ஈடுபாடு.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]