வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Tuesday, March 30, 2010

அறிவுக்கு விருந்தான குடியரசு தொகுதிகள் நூல் வெளியீடு விழா

இன்று (30.03.2010) பெரியார் திடலில் நடைபெற்ற குடியரசு நூல் வெளியீட்டு விழா ஒரு புத்தக வெளியீடு விழா மட்டுமல்லாமல் குடும்ப விழா அதாவது திராவிட இயக்க குடும்ப விழா போன்று மிக சிறப்பாக நடைபெற்றது.

மானமிகு மாண்புமிகு பள்ளி கல்வி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள்  வெளியிட முதல் பிரதியை மானமிகு அய்யா சோம.இளங்கோவன் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

இதில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றிய மதிபிற்குரிய கயல் தினகரன் அவர்கள் அறிவு ஆசான் அய்யா பெரியார் இல்லை என்றால் மானம்கெட்டு மதி இழந்து கிடந்த தமிழன் அடையாளம் தெரியாமல் ஆகி இருப்பான். அதோடு ராசகோபலச்சாரியர் கொண்டுவந்த  குல தர்ம கல்வி திட்டம் எந்த அளவு தமிழனை பாதித்தது அதனை எதிர்த்து பெரியார் போராடி இன்று பச்சையாக சொல்ல வேண்டுமானால் பள்ளர் பறையர் என்று எல்லோரும் I.A.S, I.P.S ஆக முடிகிறது என்றால் அது அய்யா அறிவு ஆசான் பெரியார் நமக்கு ஏற்படுத்தி கொடுத்த மிக பெரிய வாய்ப்பு. எனவே நீங்கள் இந்த கூட்டம் முடிந்து செல்லும் போது அனைவர் வீட்டிலும் பெரியார் படம் மாட்ட வேண்டும் என்று முடிவு எடுத்து செல்லுங்கள் என்றார். மேலும் தான் படிக்கும் பத்து வயதில் அரசு சார்ந்த புத்தகத்தில் எப்படி மனுதர்மம் திணிக்கப்பட்டு சிறுவயதில் ஆரிய நஞ்சு கலக்கபட்டதையும் விளக்கினார்.

அடுத்து பேசிய மாநில நூலக இயக்குனர் அறிவொளி தன் பங்குக்கு மிக அருமையாக தன் குடும்ப பின்னணி திராவிட இயக்க பின்னணி என்று ஆரம்பித்து ..இபொழுது பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் தன் மகன் பள்ளி புத்தகத்தை படிக்கிறாரோ இல்லையோ பெரியார் பற்றிய அனைத்து நூலையும் படித்து மிக அறிவு பூர்வமாக செயல்படுவதாக கூறினார்.

பள்ளி கல்வி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் மிக சிறப்பானதொரு உரை நிகழ்த்தினார்கள். அதில் பெரியார் பற்றியும் ஆசிரியர் பற்றியும் மிக தெளிவாக ஒப்பிடு செய்து உரை ஆற்றினார்கள். மேலும் தாங்கள் எந்த ஒரு நூல் வெளியீட்டு விழாவுக்கு சென்றாலும் அய்யா முதல்வர் அவர்கள் அறிவுரை படி நூலை முழுமையாக படித்து விட்டு அந்த விழாவுக்கு செல்வோம் அனால் இங்கு ஆறு தொகுதிகள் வெளியிடும் வாய்ப்பு இருந்து ஒரு தொகுதி கூட படிக்க முடியவில்லை ஏன் என்றால் நாங்கள் வேறு ஒரு தொகுதிக்கு சென்று விட்டோம் என்று சொன்ன நேரம் தான் சிரிப்பு ஒலி நிற்க அயிந்து நிமிடம் ஆகிற்று.

தலைமை தாங்கிய ஆசிரியர் அவர்கள் பள்ளி கல்வி துறை அமைச்சர் உரையை புகழ்ந்தும் அந்த குடியரசு தொகுப்பில் இருந்து நல்ல மேற்கோள்களை எடுத்துக்காட்டி மிக சிறப்பானதொரு உரை நிகழ்த்தி விழாவை மிக சிறப்பாக முடித்து வைத்தார்கள்.

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]