வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Monday, January 25, 2010

பார்ப்பனர் எவ்வளவு இழிந்தவராயினும் புகழ்தற்கு இச்சென்னைப் பத்திரிகைகள் அஞ்சுகின்றனவல்ல



பார்ப்பனரல்லாதார் ஒருவர் எத்துணை அறிவிற் சிறந்தவராயினும், பேசுவதில் வல்லவராயினும் அரும் பெருந்தியாகம் செய்தவராயினும் அவரைச் சென்னைப் பத்திரிகைகள் புகழமாட்டா! ஆனால் ஒரு பார்ப்பனர், எவ்வளவு இழிந்தவராயினும் அவரை வானமளாவப் புகழ்தற்கு இச்சென்னைப் பத்திரிகைகள் அஞ்சுகின்றனவல்ல. அதற்குக் காரண மென்னையெனின், சென்னையில் இருக்கும் பத்திரிகைகளில் பெரும்பாலன அய்யர், அய்யங்கார்கள், பத்திரிகைகள், அவைகள் இந்தியர் பணத்தில் வெளிநாடு சென்று, இந்தியர்கள் பிறப்புரிமைகளை விற்ற கனம் சாஸ்திரிகளை வானமளாவப் புகழும்.



அவைகள் சர்.சி.பி. இராமசாமி அய்யர் ஆகாயக் கப்பலில் போனார், இங்கே விருந்துண்டார், அங்கே விருந்துண்டார், என்று தனி நிருபர்களின் தந்திகளைப் பத்தி பத்தியாய் வெளியிடும். அம்மட்டோ! ஒரு விஜயராகவாச்-சாரியார் அமெரிக்காவுக்குச் சென்று தன்மகள் வெள்ளைக்காரப் பெண்களைப் போன்று மயிர் கத்தரித்துக் கொள்ள விரும்புகின்றாள்; இந்தியாவில் தென்னை மரமிருக்குமட்டும் குடியை நிறுத்த முடியாது என்று பேசுவராயின், உடனே இப்பார்ப்பனப் பத்திரிகைகள் மனமகிழ்ச்சியுடன் இவைகளை எல்லாம் வெளி-யிடு-கின்றன. சாஸ்திரிகளைக் குறித்தும், ஆச்சாரி-களைப் பற்றியும் இவ்வளவு புகழ்ந்தெழுதிய பார்ப்பனப் பத்திரிகைகள் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று அங்கு இந்தியர்கள் சம உரிமையுடன் நடத்தப்படல் வேண்டுமென வாதாடிய திரு.-ஆர்.கே. சண்முகம் செட்டியார் பயணப்பட்டதைக் குறித்தும், அவர் அங்கு நிகழ்த்திய அரும்பெரும் சொற்பெருக்குகளைக் குறித்தும் யாதொன்றும் வெளியிட்டனவல்ல. திரு. சண்முகம் செட்டியார் கனம் சாஸ்திரிகளைப் போன்று இந்தியர்கள் பணத்தில் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று, இந்தியர்கள் பிறப்புரிமையை விற்றனரல்லர். அவர் ஆஸ்திரேலியாவுக்குத் தம் சொந்தச் செலவில் பயணப்பட்டு, அங்கு இந்திய மக்களின் நாகரிகத்தை எடுத்துரைத்து,

பொதுவாக கறுப்பு மனிதர்கள் தாழ்ந்த-வர்களென்றும், அதிலும் முக்கியமாக இந்தியர்கள் தாழ்ந்தவர்களென்றும் பேசுகின்றவர்களுக்கு எங்களுடைய புராதனமான நாகரிகத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாது. தாழ்ந்தவர்கள் என்று சொல்வதைக்கூட எங்கள் ஜனங்கள் எவ்வளவு பலமாக வெறுக்கிறார்கள் என்பதை நீங்கள் உணரவில்லை போலும். பக்தி வாய்ந்த கிறிஸ்தவர்களடங்கிய கூட்டத்தில் பேசுவதாக நான் நம்புகிறேன். ஏசுநாதர் கறுப்பு மனிதரைப் பற்றி என்ன கூறினார் என்பதை உங்களுக்கு நான் எடுத்து ஞாபக மூட்டட்டுமா? இப்படியிருக்க ஒரு தனிப்-பட்ட நபர் அல்லது ஜாதியார் இவர்களின் நிறத்தால் எப்படி ஏற்றத் தாழ்வு வந்துவிடுமென்று நீங்கள் கூறக்கூடும்? 3 கண்டங்களின் போர்க்-களங்களில் எங்களுடைய தீரர்கள் உங்களுடைய தீரர்களுடன் தோளோடு தோள் கொடுத்து நின்று எதிரிகளுடன் தீரமாகப் போராடி மடிந்திருக்-கிறார்கள். (கரகோஷம்) உங்களுடன் மடிவதற்குச் சமமாக இருக்க இலாயக்குள்ள நாங்கள் உங்-களுடன் சமமாக வாழ்வதற்கும் தகுதியுடையவர்-களல்லவா?

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் பல பெரிய பெரிய காரியங்களைச் சாதித்திருக்கின்றது.

கலைகளிலும் நாகரிகங்களிலும் வித்தியாசப்பட்ட பல ஜாதியர்களிலும் ஒருங்கு சேருவதற்கு அது சந்தர்ப்பத்தை அளித்ததே என் மனதிற்கு எல்லாக் காரியங்களையும் விடச் சிறந்ததாகும் என நான் நினைக்கின்றேன். (சபாஷ்! சபாஷ்!!) ஏகாதிபத்தியத்-திற்குள் இந்தியா இருந்தால்தான் அத்தகைய சந்தர்ப்பம் ஏற்படும். ஆட்சி பெற்றுத் திருப்தியுடன் இருந்துவரும் இந்தியாதான் ஏகாதிபத்தியத்திற்கு மிக்க பலத்தை அளிக்கக் கூடியதாக இருக்கும். ஏகாதிபத்தியமானது உன்னதமான இலட்சியங்-களுக்காக ஏற்பட்டிருக்கின்றது. அதற்குச் சிறந்த சம்பிரதாயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இந்தச் சிறந்த இலட்சிகளையும் இப்புனிதமான சம்பிரதாயங்-களையும் ஏற்றுப் பாதுகாக்கின்றவர்கள் என்ற பெருமை எங்களுக்கு உண்டாகும்படி செய்யுங்கள். இதுதான் எங்களுடைய பெரிய அவா. இது விஷயத்தில் நீங்கள் அனுதாபம் கொண்டு யோசிக்க வேண்டும். நான் உங்கள் நாட்டைவிட்டு இந்தியா-விற்குச் சென்று அன்பும் சுதந்திர தாகமும் கொண்ட ஆஸ்திரேலியர் இந்தியர்களுடன் சினேகமாக வரத்தயாராக இருக்கிறார்கள் என்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தில் அங்கத்தினராக இருப்பதற்குரிய பொறுப்புகளை ஏற்பதுடன் அதற்குள்ள உரிமைகளில் கலந்து கொள்ளவும் சந்தோஷமாக அழைக்கிறார்கள் என்றும் இந்தியரிடம் கூறி, உங்கள் நல்லெண்ணத்தைத் தெரிவிக்கலாம் என்று இந்திய மக்கள் சமத்துவமாய் நடத்தப்படல் வேண்டுமெனப் பேசியிருக்கின்றார். அவரைப் பற்றி ஆஸ்திரேலியா பத்திரிகைகள் புகழ்ந்து பேசியிருக்க, இத்தென்னாட்டுப் பார்ப்பனப் பத்திரிகைகள் ஒன்றும் எழுதினவல்ல. திரு.ஆர்.-கே.சண்முகம் செட்டியார் சுயராஜ்யக் கட்சியைச் சேர்ந்தவராய் இருந்தும், பார்ப்பனப் பத்திரிகைகட்கு அவரைக் குறித்து எழுத மனமில்லை. காரணமென்? திரு.ஆர்.கே.சண்முகம் செட்டியார் பார்ப்பனரல்ல; அவர் பார்ப்பனரல்லாதார்.

_- குடிஅரசு, 05.12.1926

1 comment:

ஸ்ரீநி said...

தொன்மையான வரலாற்றுக் குறிப்புகளுக்கு நன்றி தோழர்

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]