வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Thursday, January 07, 2010

பெரியார் அவர்களுக்கு அரணாக இருந்து எதிரிகளைப் பந்த்தாடியவர்



பணம், காசைப்பற்றியோ தண்டனைகளைப் பற்றியோ, துன்பம் தொல்லைகளைப்-பற்றியோ சிறிதும் கவலை கொள்ளாமல் தலைவரால் எந்த உத்தரவு பிறப்பிக்கப்-படுகிறதோ அதற்கு இசை-யவே படையை நடத்திய தளபதி என்று குடிஅரசு இதழால் பாராட்டு வழங்கப்-பட்ட மாயவரம் சி. நடராசன் அவர்களின் பிறந்த நாள் இந்நாள் (1902).


பள்ளிப் படிப்பு அதிகம் கிடையாது. அவர் சென்-னையில் ஒரு ஆங்கிலோ இந்தியன் வீட்டில் தங்க நேரிட்ட சூழ்நிலையில் சரளமாக ஆங்கிலம் பேசக் கூடியவர். ஆங்கிலத்திலி-ருந்து மொழி பெயர்த்து கட்டு-ரைகளை குடிஅரசுக்-குத் தந்தவர்.

அவர் தொண்டின் தனித் தன்மை என்ன? பட்டுக்-கோட்-டையில் தந்தை பெரியார் பொதுக்கூட்டம். அங்கு மாயவரம் நடராசன் வந்திருந்தார். அவரைப் பார்த்து அஞ்சாநெஞ்சன் அழகிரி எதற்காக இவ்-வளவு தூரம் வந்துள்ளீர்-கள்? என்று வினா தொடுக்க, பெரியார் கூட்டம் என்றால் நான் வந்து விடு-வதுதானே வழக்கம் என்று கூறிட, மற்ற ஊர்களில் பெரி-யார் பாதுகாப்புக்காக வரு-வது சரி, பட்டுக்கோட்டை-யில் பெரியாரை எதிர்ப்ப-வர்-களுக்குத்தான் பாதுகாப்புத் தேவைப்படும் என்று அழகிரி சொன்னார் என்பதி-லிருந்து மாயவரம் நடராசன் அவர்களின் பணி எத்தகை-யது என்பதைத் தெரிந்து கொள்ளலாமே!

அந்தக் காலத்தில் தந்தை பெரியார் பேசுகிறார் என்றால், எதிரிகள் பல கல-வரங்களில் ஈடுபடுவார்கள்; அந்த நேரத்தில், எல்லாம் மாயவரம் சி. நடராசன் அவர்-கள் தந்தை பெரியார் அவர்களுக்கு அரணாக இருந்து எதிரிகளைப் பந்-தாடுவார். நாகைமணி, திரு-வாரூர் தண்டவாளம் அரங்-கராசு என்ற ஒரு படையே அவ்வாறு இருந்ததுண்டு.

சர்க்கஸ் கம்பெனியில் ஓராண்டுகாலம் சாசகங்கள் புரிந்து, பின் இராணுவத்-துக்குச் சென்று, நாடு திரும்பி, காங்கிரசிலும் சேர்ந்து, தந்தை பெரியார் காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டை விட்டு வெளி-யேறியதையொட்டி தந்தை பெரியாருடன் நடந்தவர் மாயவரம் நடராசன்.

வெற்றி முரசு என்ற ஏட்டையும் நடத்தியுள்ளார். மாயவரத்தில் இம்பீரியல் பிரஸ் இவருக்குச் சொந்த-மானது.

தந்தை பெரியார் அய்-ரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்த நிலையில், அன்னை நாகம்மையார் உடல்நலவுற்ற நிலையில், அவர்களை மாயவரம் அழைத்து வந்து தம் வீட்-டில் தங்க வைத்து வைத்திய உதவிகளைச் செய்தவர்.

மகன் லெனின், மகள் மங்கையர்க்கரசி, துணைவர் மீனாம்பாள்.

மகன் சென்னையில் பிர-பல ஆடிட்டராகப் பணி-யாற்-றிக் கொண்டு இருக்கிறவர்.

35 வயதிலேயே தந்தை பெரியார் அவர்களின் மெய்க்-காப்பாளராக நம்பிக்கை நாயகனாகவும் விளங்கிய மாயவரம் நடராசன் ஒரு தலைவருக்கு ஒரு தொண்-டர் எப்படி என்பதற்கான இலக்கணத்தைச் சமைத்துக் கொடுத்த மாவீரர் ஆவார்! வாழ்க நடராசனார்!

- விடுதலை (07-01.2010) மயிலாடன்

குறிப்பு: மயிலாடுதுறையில் (9.3.2002), மாயவரம் நட-ராசன் அவர்களின் நூற்-றாண்டு விழா தமிழர் தலை-வர் தலைமையில் வெகு-சிறப்பாக திராவிடர் கழகத்-தின் சார்பில் கொண்டாடப்-பட்டது.

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]