வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Monday, January 18, 2010

கடவுள்கள் எப்படி தோன்றினார்கள்...

மக்களின் மனதில் தெய்வங்களை பற்றியும் , பேய் பிசாசுகளை பற்றியும் எழும் எண்ணங்களுக்கு காரணம் என்ன என்பதை நம்மால் அறிய முடியும். அதில் ஒன்றும் ஆச்சர்யமில்லை. அவைகளை உண்டு பண்ணியவன் மனிதன். தன்னை சுற்றிலும் சூள்ந்துள்ளவைகலையே தான் படைத்த கடவுளுக்கு மனிதன் அமைத்திருக்கிறான். மனிதன் தனக்கு இருக்கும் கை,கால்களை போலவே ,தான் படைத்த கடவுளுக்கும் அமைத்தான் . கண்,காது,மூக்கு முதலியவைகளையும் வைத்திருக்கிறான்.அந்தந்த நாட்டினர் அவரவர்கள் படைத்த கடவுள்களுக்கு அவர்கள் பேசும் மொழியையே கற்பித்தனர். அந்த நாட்டிற்கு எந்த அளவு பூலோக சரித்திரம் தெரியுமோ, எந்த அளவுக்கு வான சாஸ்திரம் திரியுமோ, அந்த அளவுக்குத்தான் அந்தக் கடவுள்களும்,பிசாசுகளும் தெரிந்து கொள்ளமுடிந்தது. எந்த கடவுளும் தன்னைப் படைத்த மனிதனைவிடச் சற்று அதிகமான புதியுள்ளவர்களாய் இருக்கவில்லை.


ஆபிரிக்காவில் நீக்ரோக்கள் தங்கள் கடவுள்களுக்கு தங்களை போலவே கருத்த உடலும், சுருண்ட மயிரும், வைத்து உண்டாக்கினார்கள். மஞ்சள் நிற உடம்புடன், கருமையான பாதம் பருப்பு போன்ற கண்களுடன், மங்கோலியர்கள் தங்கள் கடவுள்களை படைத்தது கொண்டனர். யூதர்கள் தங்கள் கடவுள்களுக்கு உருவம் உண்டாக்க கூடாது என்று எண்ணம் கொண்டார்கள். அப்படி அவர்களுக்கு எண்ணம் இல்லாவிட்டால் அவர்களும், அவர்களது கடவுளான யேகோவாவிற்கு நீண்டு தொங்கும் தாடியும், நீண்ட முகமும் கதியை போன்ற மூக்கும் உண்டக்கியிருப்பர்கள். பாவம்! கிரக்கர்களின் பெரும்தெய்வம் ஜீவ்ஸ். இதை பற்றி நான் சொல்லி தெரிந்து கொள்ளும் நிலைமையில் நீங்கள் இருக்கமாடிர்கள். எவோ - இந்தக் கடவுள் ரோமாபுரியின் சட்டசபையில் ஓர் உறுப்பினர்.

எகிப்பது நாட்டு கடவுள்கள் அந்த நாட்டு அன்பு மக்களை போலவே குளிர்ச்சியான முகமும், அமைதி நிறைந்த பார்வயுமுடயவனவாக விளங்கின. குளிர் பிரதேசமான வடக்கிலோ தங்கள் கடவுள்களுக்கு கம்பளிகளை போர்த்து வைத்தனர். உஷ்ண பிரதேசங்களில் கடவுள்கள் நிர்வாணமாய் நின்றன.இந்திய தெய்வங்கள் யானைகளின் மேல் அமர்ந்து கொண்டு பவனி வரும். தீவுகளில் உள்ள தெய்வங்கள் நீஞ்சலில் தேர்ந்தவைகள்.

இந்த கடவுள்களை அந்தந்த நாட்டினர் செதுக்கியும் , எழுதியும் வைத்திருக்கின்றனர். இந்த பொம்மைகளை பாமர மக்கள் கடவுள் என சொல்லி வழிபடுகின்றனர். அதனாலே தான் இந்த பொம்மை கடவுள்களுக்கு தங்கள் பலிகளையும், வணக்க வழிபாட்டையும் செலுத்தி வருகின்றனர்.

ஒவ்வொரு நாட்டினரும் தாங்கள் படைத்த கடவுள்களுக்கும் தங்களுடைய குனதிசயன்களே கற்பித்தனர். இதிலிருந்து கடவுள்கள் எப்படி தோன்றினார்கள் என்பதை எளிதாக அறிந்துகொள்ளமுடிகிறது.

-- இங்கர்சால் (கடவுள்கள் கோவில்கள் நூலிலிருந்து)

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]