வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, January 02, 2010

எங்கள் சாமி எவ்வளவு சக்தி வாய்ந்த சாமி பார்த்தீரா

1.வைணவர்களின் புண்ணியதலமான திருவரங்கத்தில் வாழ்ந்த தீவிர வைணவர் ஒருவர் இயற்கை கடன் கழிபதற்க்கு ,அருகில் உள்ள சைவர்களின் புண்ணிய தளமான திருவானைக்கா கோவில் மதிற்சுவரின் அமர்வது வழக்கம் .இதன் மூலம் சைவ சமயத்தை பழி தீர்ப்பதாக அவர் எண்ணினார்.ஒரு நாள் வழக்கம் போல் மதிற்சுவரின் அருகில் அவர் இயற்கை கடன் கழித்து கொண்டிருந்த போது தலையில் ஒரு சிறு கல் வேகமாக வந்து தாக்கியது .வலியுடனும் கோபத்துடனும் அவர் அண்ணார்ந்து பார்த்தார்.கோவி மதிற்சுவரை காக்கை ஒன்று காலால் பிராண்டி கொண்டிருந்தது கண்ணில் பட்டது .உடனே வழியை மறந்து ''அப்படி இடி மதிலை ' என்றாராம்.


2.சைவரும் வைணவரும் ஒன்ற இயற்கை கடன் கழிப்பதற்க்காக ஊருக்கு வெளியே சென்றார்கள்.ஒரு குறிப்பிட இடத்தில சைவர் உட்கார முயன்ற போது ,வைணவர் அதை தடுத்து வேறு பகுதிக்கு இழுத்து சென்றார்.இதற்க்கான காரணத்தை சைவர் கேட்டபோது தனது பெருமாள் சாமிக்குரிய துளசி செடி மிகுதியாக வளர்ந்திருப்பதால் அப்பகுதியை தாம் அசுத்தமாக்க விரும்பவில்லை என்றார்."அப்படியா " என்று கூறிய சைவர் துளசி செடியால் தன் ஆசன வாயை துடைத்து கொண்டார்.வைணவருக்கு ஒரே ஆத்திரம். ஆனால் அதை வெளிக்காட்டாமல் 'ஒங்க சாமிக்கு எந்த செடி பிடிக்கும் ' என்று கேட்டார் .சைவர் ஒரு குறிப்பிட்ட பகுதியை காட்டி அங்கு வளர்ந்துள்ள செடி சிவபெருமானுக்கு உகந்த செடி என்றார்.உடனே வைணவர் அதை அவசரமாக பிடுங்கி சைவர் துளசி செடியை பயன் படுத்தியது போல் பயன் படுத்தினர்.ஆத்திரம் மிகுதியா சற்று அழுத்தமாகவே தேய்த்தார் .சில நிமிடங்களில் வேதனை தாங்க முடியாமல் குய்யோ முறையோ கத்தினார்.பாவம்! சைவர் காட்டிய செடி "'செந்தட்டி' (காஞ்சிரங்காய் ) செடியாகும்.(இதை காஞ்சிராணி என்றும் கிராமங்களில் கூறுவார்).சைவரோ 'எங்கள் சாமி எவ்வளவு சக்தி வாய்ந்த சாமி பார்த்தீரா'என்று கூறி நமட்டு சிரிப்பு சிறிது கொண்டார்.

இக்கதைகளில் இடம் பெற்றுள்ள சமய வெறி கொண்ட சைவ வைணவர்களை போன்று கிருத்தவ,இஸ்லாமிய சமயங்களிலும் சமய வெறி கொண்டவர்கள் உண்டு.இத்தகைய மட்டு மீறிய உணர்வு உடையவர்கள் பிற சமயத்தினருடன் இணக்கமாக வாழ முடியாதென்றாலும் மிகபெரிய அளவில் வகுப்பு மோதல்களை தோற்று விப்பதில்லை.அதே நேரத்தில் இவர்களை மிக எளிதில் வகுப்பு வாதிகளாக மாற்ற முடியும்.இதனால்தான் மத அடிப்படை வாத இயக்கங்கள் முதலில் தீவிரமான சமய உணர்வை தூண்டி விடுகின்றன.

வகுப்புவாத அதிகாரத்துக்கான ஒரு கருவி என்று பார்பவர்கள் சமயங்களை பின்பற்றுவோரிடையே பகை உணர்வை உருவாக்கி ,வளர்த்து வகுப்பு மோதல்களுக்கு வித்திடுகின்றன.கே.எம்.பணிக்கர் குறிபிடுவது போல் இத்தகையவர்களுக்கு,வகுப்பு வாதம் என்பது அடிபடியில் ஆட்சியை பிடிபதற்க்கான ஒரு தந்திரமேயாகும்.

இத் தந்திரத்தின் வெளிப்பாடகவே பிள்ளையார் ஊர்வலம் தமிழ் நாட்டில் அறிமுகப்படுதபட்டுள்ளது.

- பிள்ளையார் அரசியல் என்ற நூலில் இருந்து.....

2 comments:

Muhammad Ismail .H, PHD., said...

அன்பின் சங்கமித்திரன்,

// இக்கதைகளில் இடம் பெற்றுள்ள சமய வெறி கொண்ட சைவ வைணவர்களை போன்று கிருத்தவ,இஸ்லாமிய சமயங்களிலும் சமய வெறி கொண்டவர்கள் உண்டு.//

இது உண்மையான விஷயம். ஆனால் கீழே உள்ள

// இத்தகைய மட்டு மீறிய உணர்வு உடையவர்கள் பிற சமயத்தினருடன் இணக்கமாக வாழ முடியாதென்றாலும் மிகபெரிய அளவில் வகுப்பு மோதல்களை தோற்று விப்பதில்லை.//


இது சரியான தகவல் அல்ல. உங்களின் கருத்திற்க்கு மாற்றமாக இதற்கான ஆதாரப்பூர்வமான பதில்கள் இங்கே உள்ளது. http://en.wikipedia.org/wiki/Chronology_of_terrorist_incidents_in_Pakistan


மனிதனைப் பொருத்தவரே மார்க்க பற்று என்ற நிலையிலிருந்து, மதப்பற்று என்ற நிலைக்கு மாறிவிட்டால் சண்டேனா ரெண்டு என்பது போல் அங்கே (அ)பாக்கியஸ்தானில் ப்ரைடேனா குண்டு தான். அங்கே பெரும்பாலான குண்டுவெடிப்புகள் வெள்ளியன்றே நடந்துள்ளது.

இதில் உயிரிழப்பவர்களும், உயிரிழக்க வைப்பவர்களும் 'லாயிலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர்ரசூலில்லாஹ்' என்றவர்கள் தான். அப்ப எங்கே பிரச்சினை?


with care & love,

Muhammad Ismail .H, PHD,
http://gnuismail.blogspot.com

பரணீதரன் said...

தோழர் இஸ்மாயில் அவர்களே,

பதில் அந்த பதிவின் கிழே உள்ளது

/* இதனால்தான் மத அடிப்படை வாத இயக்கங்கள் முதலில் தீவிரமான சமய உணர்வை தூண்டி விடுகின்றன. */

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]