வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Thursday, January 21, 2010

இப்போ தெரியுதா பெரியார் தாக்கம்?

நடிகர் சிவகுமார் ஓவி-யக் கல்லூரியில் படித்துத் தேர்ந்த முழுமையான ஓவியர். அதனைத் தொழி-லாகக் கொள்ளாமல் திரைப்படத் துறையிலே அடியெடுத்து வைத்து உன்-னத நிலையை அடைந்-துள்ள அருமையான பண்பாளர். தமிழ்ப் பற்றும், இனப்பற்றும் மிகுந்த சீலர்.


ராணி இதழில் உங்க-ளோடு பேசுகிறேன் என்ற தொடரை எழுதி வருகி-றார். இவ்வார ராணியில் (24.1.2010, பக்கம் 22) ஒரு செய்தி.

பார்ப்பனர்களைக் குறை கூறுவதுதான், எதிர்ப்பதுதான் தி.க.காரர்-களின் வேலை என்று பொறுப்பில்லாமல் பேசும் பேர்வழிகளின் செவிப்-பறை-யில் அறைந்து கண்-களைத் திறக்கச் செய்யும் தகவல் அது.

அவர் ஓவியர் ஆத-லால் பல கோயில்களுக்-கும் சென்று நேரிடையாக ஓவியம் தீட்டுவது அவ-ரது வழக்கம். அந்த வகை-யில் தஞ்சாவூர் பெருவு-டையார்கோயில், திருச்சி மலைக்கோட்டைக் கோயில்-களுக்குச் சென்று கோபு-ரங்-களின் ஓவியங்களைத் தீட்டினார். பலரும் அதற்கு உதவி செய்தனர்.

சிறீரங்கம் கோயில் கோபுரத்தையும் நேரில் சென்று ஓவியம் வரைந்-திட விரும்பி அங்கு சென்ற போது ஓர் அவ-மதிப்பு அவருக்காகக் காத்துக் கொண்டிருந்தது.

கோபுரத்தில் சூரிய வெளிச்சம் நேரிடையாகப் படுகிற கோணம் புஷ்ப-கரணி தெப்பக்குளம் பக்-கம்-தான் கிடைக்கிறது என்பதால் அந்தப் பக்கம் சென்றார் இளைஞரான ஓவியர் சிவக்குமார்.

என்ன நடந்தது?

கோயில் அர்ச்சகப் பார்ப்பனர் ஒருவர் அந்த இடத்துக்கு வந்தார். உடனே, நீ யார்? உன் குலகோத்திரம் என்ன? என்ற கேள்விக் கணை-களை அவர்முன் எறிந்-தார். பேச்சு, உடை, முக பாவனைகளை வைத்து வந்தவர் பார்ப்பனர் இல்லை என்று தெரிந்து-கொண்டதும் அர்ச்சகர் முகம் போன போக்கே சரியில்லையாம். முறையா அனுமதி வாங்காம கோயி-லுக்குள்ள படமெல்லாம் வரையக்கூடாது என்று முகத்தில் அடித்ததுபோல் கூறினாராம்.

நான் ஓர் ஓவியக் கல்லூரி மாணவன் என்று சொல்லிப் பார்த்திருக்-கிறார். மசியவில்லை அர்ச்-சகர்.

இத்தனை சொன்ன பிறகும் நீங்கள் கோபப்படு-வது நியாயமில்லை என்று பணிவாக சொன்-னா-ராம். ஓ, நீ நியாய தர்மம் வேறு பேசுறீயா? என்று கூறி உள்ளே போய் வேறு சில அர்ச்-சகப் பார்ப்பனர்களையும் அழைத்து வந்தாராம்.

அடிக்காத குறைதா-னாம் _ அவமதிப்புடன் திரும்-பினேன் என்று கூறும் சிவ-குமார் ஒன்றைக் கூறுகிறார்:

இந்த இடத்தைக் கொஞ்-சமென்ன, அதிகமாகவே கவ-னிக்கவேண்டும்; நெஞ்-சில் நிலை நிறுத்தியும் கொள்ளவேண்டும்.

தந்தை பெரியார் மீது எனக்கு அப்பொழுது தான் பெரிய மரியாதை வந்தது இப்படி எழுதியுள்ளார் மானமிகு சிவகுமார்.

தலைவலியும், திருகு-வலி-யும் அவரவர்களுக்கும் வந்தால்தானோ!

-விடுதலை (21.01.2010) மயிலாடன்

3 comments:

கண்ணகி said...

தலைவலியும், திருகு-வலி-யும் அவரவர்களுக்கும் வந்தால்தானோ!

அதேதாங்க....அதேதாங்க....

ஸ்ரீநி said...

முறையா அனுமதி வாங்காம கோயி-லுக்குள்ள படமெல்லாம் வரையக்கூடாது என்று முகத்தில் அடித்ததுபோல் கூறினாராம்.


appa sivakumar kitta muraya anumadhi vanga istam illa appdithaaney

avatar said...

காஞ்சிபுரம் கோவில் பார்ப்பான் தேவநாதனின் கருவறை திருவிளையாடல் பதிவிறக்கம் செய்து பார்த்து மகிழுங்கள்DOWNLOAD VIDEO
அல்லது இந்த இணைய முகவரியை பயன்படுத்துங்கள்

http://cid-5bb4a696064102c6.skydrive.live.com/self.aspx/.Public/$Temple.avi?lc=16393

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]