வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Friday, January 22, 2010

பலே, பலே! கட-வு-ளுக்கே அய்.எஸ்.ஓ. 9001_2008 அங்கீகாரம்!

கோவை காந்தி-புரத்தில் சித்தி விநாயகர் என்ற ஒரு கோயில்; திருவாச்சி, பார்வை தகடு, மூஷிக வாகனத்துக்கு தங்கக் கவசம் அணியும் பணி நிறைவுறும் நிலை-யில் உள்ளது.


இந்து அறநிலையத்-துறையின் கட்டுப்பாட்-டில் உள்ள இந்தக் கோயிலுக்கு இதுவரை எந்த கோயிலுக்கும் இல்லாத அய்.எஸ்.ஓ. 9001_2008 (International Standard Organisation) தரச்சான்று அளிக்கப்-பட்டுள்ளதாம்.

பலே, பலே! கட-வு-ளுக்கே ஓர் அமைப்-பின் அங்கீகாரம் தேவைப்-படு-கிறது என்-பது நினைத்து நினைத்து நகைக்கவேண்-டிய படு ஜோக்!

தரம் என்றால் அதற்கு விளக்கம் என்னவோ! இந்த சித்தி விநாயகரிடம் எது கேட்-டாலும் அது கறாராகக் கிடைத்துவிடும் என்ற உத்திரவாதமோ! அல்-லது பக்தர்கள் கேட்பதைச் சித்தி விநாயகர் கண்டிப்-பாக கொடுத்தே தீர-வேண்டும் என்ற கட்ட-ளையா? அப்-படி கொடுத்து அரு-ளாவிட்-டால் சித்தி விநா-யகர் மீது ஒழுங்கு நட-வடிக்கை (Discipilinary Action) எடுக்கப்படும் என்ற நிபந்தனையா?

இந்த நிபந்தனை-களுக்கு சித்தி விநாயகர் கட்டுப்படாவிட்டாலோ அல்லது கடமை தவறும் பட்சத்திலோ கொடுத்த அங்கீகாரத்தை ரத்து செய்யும் நிலைப்பாடா?

இவற்றைப்பற்றியெல் லாம் விளக்கினால் நல்லது.

சரி... கோவை காந்தி நகர் சித்தி விநாயகருக்கு இந்த அந்தஸ்து அளிக்-கப்பட்டால் மற்ற கோயில்கள், கடவுள்-களின் நிலை என்ன?

இவையெல்லாம் தரச் சான்றுக்கு லாயக்கு இல்லாத மட்டக் கிளாஸ் கோயில்களா _ கடவுள்-களா? பக்தர்கள் இந்த வகை-யில் சிந்திக்கத்-தானே வேண்டும்.

உலக மயம் என்ற ஒரு விஷயம் வந்தாலும் வந்தது _ கோயில்கள், கடவுள்கள்வரை இது-போன்ற சமாச்சாரங்கள் நுகர்வோர் கலாச்-சா-ரத்தின்கீழ் வரவேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டு விட்டது.

எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவர் கடவுள்; அவரை எந்த சக்தி-யாலும் கட்டுப்படுத்த முடி-யாது என்பதெல்-லாம் பழைய கதை.

இனிமேல் எந்தக் கோயில் அய்.எஸ்.ஓ. முத்திரை பெற்றுள்ளதோ, அந்தக் கோயிலுக்குத்-தான் செல்லுவது என்ற நிலை ஏற்பட்டால், ஆச்சரியப்படுவதற்கில்லை.

கடவுளைக் கேலி செய்யும் இந்த முறை கூடாது என்று எந்தக் கடவுளிடம் போய் பக்-தர்கள் முறையிடுவார்-களோ தெரியவில்லை.

பக்தி, ஒரு பிசினஸ் என்று சொன்ன பெரிய-வாளின்பெரிய வாய்க்கு ஒரு கட்டுக் கரும்பைக் கொடுத்துத் தின்ன சொல்லலாம், பலே! பலே!!

-விடுதலை (22.01.2010) மயிலாடன்

4 comments:

எட்வின் said...

இந்த கொடுமய எல்லாம் எங்கிட்டு போய் சொல்றதுங்க :(

avatar said...

காஞ்சிபுரம் கோவில் பார்ப்பான் தேவநாதனின் கருவறை திருவிளையாடல் பதிவிறக்கம் செய்து பார்த்து மகிழுங்கள்DOWNLOAD VIDEO
அல்லது இந்த இணைய முகவரியை பயன்படுத்துங்கள்

http://cid-5bb4a696064102c6.skydrive.live.com/self.aspx/.Public/$Temple.avi?lc=16393

priyamudanprabu said...

பக்தி, ஒரு பிசினஸ் என்று சொன்ன பெரிய-வாளின்பெரிய வாய்க்கு ஒரு கட்டுக் கரும்பைக் கொடுத்துத் தின்ன சொல்லலாம், பலே! பலே!!

ha ha

ஸ்ரீநி said...

இந்தக் கோயிலுக்கு இதுவரை எந்த கோயிலுக்கும் இல்லாத அய்.எஸ்.ஓ. 9001_2008 (International Standard Organisation) தரச்சான்று அளிக்கப்-பட்டுள்ளதாம்.
தோழர் பதில் இதுதான் """" தரச்சான்றிதழ் கோயில் என்ற அமைப்பிற்கு வழங்கப்படுகிறது.
""""
இப்படி பட்ட ஆத்திக தகவல்களை பகிர்தலுக்கு மிக்க நன்றி

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]