வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Monday, March 29, 2010

தந்தை பெரியாரால் ஒழிக்கப்பட்ட ராஜாஜியின் குலக்கல்வி திட்டம்

இந்த நாளை எந்த சூத்திரத் தமிழனும், பஞ்சமத் தமிழனும் மறக்கவே முடியாது, மறக்கவும் கூடாது.


இந்த நாளில்தான் (1954) நாகப்பட்டினத்திலிருந்து, தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் நீடாமங்கலம் அ. ஆறுமுகம் தலைமையில் படையொன்று சென்னைக்குப் புறப்பட்டது.

என்ன படை அது? குலக்கல்வித் திட்ட எதிர்ப்புப் படைதான் அது. நாகப்பட்டி-னத்தில் 1954 மார்ச் 27, 28 ஆகிய நாள்களில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் எடுத்த தீர்மானத்தின் அடிப்-படையில் இந்தப் படை புறப்பட்டது.

1952 இல் ராஜகோபாலாச்-சாரியார் சென்னை மாநிலத்-தின் முதலமைச்சராக வந்தார். வந்ததும், வராததுமாக அவர் செய்த ஒரு காரியம் அரை நேரம் படிப்பு; அரை நேரம் அவரவர்களின் குலத்தொழில் என்ற ஒரு கல்வித் திட்டத்தை அறிவித்தார். 6000 கிராமப் பள்-ளிகளையும் இழுத்து மூடி-னார்.

இப்பொழுது மட்டுமல்ல, 1937 இல் அன்றைய சென்னை மாநிலத்தின் பிரதமராக இருந்தபோதும்கூட 2500 கிராமப்புறப் பள்ளிகளுக்கு மூடுவிழா செய்தார்.

சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்கக் கூடாது என்பது-தானே பார்ப்பனர்களின் மனுதர்ம சாஸ்திரம்?

1952 ஜூன் 13 அன்று திருவான்மியூரில் நடைபெற்ற சலவைத் தொழிலாளர் மாநாட்டில் பேசிய முதல-மைச்சர் ஆச்சாரியார் (ராஜாஜி) எல்லோரும் படித்துவிட்டால் வேலைக்கு எங்கே போவது? நீங்கள் துணியைக் கிழிக்காமல் சலவை செய்யக் கற்றுக் கொள்-ளுங்கள் என்று இதோபதேசம் செய்தார்.

ஆச்சாரியாரின் குலக்-கல்வித் திட்டத்தை எதிர்த்துப் பெரும் புயலைக் கிளப்பினார் தந்தை பெரியார். 1954 சனவரி 24 இல் டாக்டர் எஸ்.ஜி. மண-வாள ராமானுஜம் அவர்கள் தலைமையில் ஈரோட்டில் குலக்கல்வி எதிர்ப்பு மாநாட்-டினைக் கூட்டி, அனல் பறக்கும் தீர்மானங்களை நிறைவேற்றினார். ஆச்சாரி-யா-ரின் குலக்கல்வித் திட்டத்தால் 50 விழுக்காடு மாணவர்களும், 70 விழுக்காடு மாணவிகளும் படிப்பை நிறுத்திய அதிர்ச்சிக்கு உரிய தகவலை தந்தை பெரியார் வெளியிட்டார்.

அதனைத் தொடர்ந்துதான் நாகப்பட்டினத்தில் 1954 மார்ச் 27, 28 இல் மாநாடு கூட்டி, மார்ச் 29 இல் குலக்கல்வித் திட்ட எதிர்ப்புப்படை நாகை-யிலிருந்து சென்னை நோக்கிப் புறப்பட முடிவு செய்யப்பட்-டது.

ஆச்சாரியார் குலக்கல்-வித் திட்டத்தை வாபஸ் வாங்காவிட்டால், கழகத் தோழர்களே, தீப்பந்தமும், பெட்ரோலும் தயாராக வைத்திருங்கள் _ நாள் குறிப்-பிடுவேன், அக்ரகாரத்திற்குத் தீ வையுங்கள் என்று அபாய அறிவிப்பைச் செய்தார்!

நாகையிலிருந்து படையும் புறப்பட்டது. ஆச்சாரியாரால் அதற்குமேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை; உடல்நலம் சரியில்லை என்று பதவியிலி-ருந்து ஓடினார் (30.3.1954). தந்தை பெரியார் அவர்களின் ஆதரவோடு காமராசர் முத-லமைச்சர் ஆனார் (14.4.1954). ஏப்ரல் 18 இல் குலக்கல்வித் திட்டத்தின் கழுத்தில் கத்தியை வைத்துத் தீர்த்துக் கட்டினார். கல்வி வள்ளலாக மாறினார் காமராசர்.

அன்றைக்குக் குலக்கல்வித் திட்டம் தந்தை பெரியாரால், கழகத்தால் ஒழிக்கப்-படவில்லையானால், டாக்டர்-களையும், பொறியாளர்களை-யும் தமிழர்களில் காண முடியுமா? நன்றியோடு தமிழர்களே, சிந்திப்பீர்!

- நன்றி விடுதலை மயிலாடன் (29.03.2010)

1 comment:

கோவி.கண்ணன் said...

குல்லுக பட்டர் இராஜாஜியின் திட்டம் மட்டும் நிறைவேறி இருந்திருந்தால் அனைத்து பார்பனர்களும் அல்லது பார்பனர்களின் பெரும்பான்மையினர் கோவிலில் மணி அடிக்கத்தான் போய் இருக்கனும். நல்லவேளை பார்பனர்கள் தப்பித்தார்கள். அந்த வகையில் பார்பனர்கள் பெரியாருக்கு நன்றி கூற வேண்டும்.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]