வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Monday, March 29, 2010

அரசமரத்துக்கும், வேப்பமரத்துக்கும் திருமணமாம்! வெட்கம்

சென்னையில் 300 ஆண்-டுகள் பழமைவாய்ந்த அரசமரத்துக்கும், வேப்-பமரத்துக்கும் கோலாகல-மாக திருமணம் நடந்த-தாம். சென்னை வண்-ணாரப்பேட்டை ஜி.ஏ. ரோட்டில் மறைந்த காத்தவராயன் என்பவர் 300 ஆண்டுகளுக்கு முன்பு வீடுகட்ட தோண்டிய இடத்தில் காமாட்சி அம்மன் சிலை ஒன்று கிடைத்ததாம். அதைத்-தொடர்ந்து அக்கோவில் 3 தலைமுறையில் விரி-வாக்கம் செய்யப்பட்டு இன்று பிரபலமாகி உள்-ளது. இக்கோவிலின் இடது பக்கத்தில் அரச மரமும், வேப்பமரமும் உள்ளது.


இந்த மரங்களை வலம் வந்தால் திருமணம் தடை-பட்டவர்களுக்கு திரு-மணம் கைகூடும் என்-றும், குழந்தை பேறு இல்-லாதவர்கள் இதனை வலம் வந்தால் குழந்தை பேறு கிடைக்கும் என்-றும், தீராத நோய்களும் இந்த மரத்தை சுற்றி வந்தால் குணமாகும் என்பதும் இப்பகுதியில் உள்ள மக்களின் நம்பிக்-கையாக இருந்து வருகிற-தாம். இந்த மூட நம்பிக்-கையை உண்மை என்று நம்பி பகுத்தறிவற்ற முட்-டாள் பக்தர்கள் அங்கு சென்று வருகின்றனர்.

300 ஆண்டு பழமை வாய்ந்த தெய்வீக மரங்-களுக்கு திருமணம் செய்து வைத்தால் இப்பகுதி மக்கள் எந்த குறையும் இல்லாமல் எல்லா வள-மும் பெற்று நலமுடன் வாழ்வார்கள் என்று கருதிய கோவில் நிருவா-கத்தினர் தெய்வீக மரங்-களுக்கு திருமணம் நடத்த முடிவு செய்தனர்.

அதன்படி நாகராஜ சுவாமி என்கிற அரச-மரத்திற்கும், நாகாயட்-சினி அம்பிகை என்கிற வேப்பமரத்திற்கும் திரு-மணம் நடந்ததாம். இந்த திருமண நிகழ்ச்சியில் அந்த பகுதியைச் சேர்ந்த சுற்றுவட்டார பக்தர்கள் சீர்வரிசையுடன் கலந்து கொண்டார்களாம்.

21ஆம் நூற்றாண்டி-லும் இன்னும் மரங்களை சுற்றினால் குழந்தை வரம் கிடைக்கும், திரு-மணம் நடக்கும் என்று மூடத்தனமாக நம்பும் இந்த பாமரர்கள் எப்-போதுதான் திருந்தப்-போகிறார்களோ? இராய-புரம், வண்ணாரபேட்டை-யில் உள்ள மருத்துவ-மனை மற்றும் ஸ்டான்லி மருத்துவமனைகளை எடுத்துவிடலாமா? பக்தர்களே சிந்திப்பீர்!

---------- நன்றி விடுதலை (28.03.2010)

1 comment:

kaja nazimudeen said...

கூறு கெட்ட மடையர்கள் .... திருந்தவே மாட்டீர்களா?

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]