வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Monday, March 08, 2010

இடஒதுக்கீடு....தினமணி (பூணூல்) கூறும் பேர​பா​யம்.

அய்யா மதிப்பிற்குரிய தினமணி வைத்தியநாத அய்யர் அவர்கள், இன்றைய (09 .03 .2010 ) தினமணியில் தலையங்கம் செய்தி ஆரம்பிக்கும் போதே

"அரசு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைத் தாக்கல் செய்திருப்பது ஏதோ மகளிர் நலத்தின் மீதுள்ள அக்கறையால் என்று யாராவது நினைத்தால், அது தவறு. பிரச்னையைக் கிளப்பும் இந்த மசோதாவை இப்போது தாக்கல் செய்திருப்பது, ஒவ்வோர் இந்தியக் குடிமகளின் வருங்காலத்தையும் பாதிக்க இருக்கும் சர்ச்சைக்குரிய இன்னொரு மசோதா நாடு தழுவிய விவாதத்துக்கும், எதிர்ப்புக்கும் வழிகோலாமல் இருப்பதற்காக.மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியாகப் பயன்படுத்த முற்பட்டிருக்கிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்பதுதான் உண்மை."

அதாவது மகளிர் நலன் கருதி இட ஒதிக்கீடு வரவில்லை என்று ஆரம்பிக்கீறார். முடிக்கும் பொது எப்படி சொல்லுகிறது தினமணி பூணூல் "நமது இடமே விலை பேசப்பட்டுவிடும் போலிருக்கிறது. நாம் இடஒதுக்கீடு பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். பேராபத்து காத்துக் கொண்டிருக்கிறது. நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்." நாம் என்றல் யாரு என்று தெரியவில்லை இந்த இடத்தில. ஒரு வேலை பி.ஜே.பி ஆதரவை மறைமுகமாக சொல்லுகிறார்களோ என்னவோ.

தினமணி உண்மையிலேயே பேராபத்து ஏற்படும் அணு உலை பற்றி என்ற நோக்கத்தில் தான் என்றல் நாம் அதனை எந்த வெறுப்பு இன்றி ஏற்றுக்கொள்ளலாம். அனால் அவர் கூறும் பேர​பா​யம் உண்மையிலேயே அணு உலை பற்றி இல்லை என்பது நமக்கு மிக தெளிவாக தெரிகிறது. அவா கூறும் பேர​பா​யம் முதலில் இட ஒதிக்கீடு அப்புறம் உள் ஒதிக்கீடு என்ற திராவிட கட்சிகளின் நிலை பற்றி. இப்படி வர இட ஒதிகீடுல கூட பார்பனர்களுக்கு முழுமையாக அனுபவிக்க கொடுக்க மட்டேன்குரங்கலேன்னு ஒரே கவலை தினமணிக்கு. இந்த பேர​பா​யம் சொல்லத்தான் அணு உலை என்கிற உவமையை கையில் எடுத்துகொண்டு தினமணி விளையாடி இருக்கிறது. அது ஒன்று தெரியாதவர்களுக்கு வேண்டுமானால் அணு உலை மட்டும் பற்றிய பேர​பா​யம் மாக தோன்றலாம். ஈரோட்டு கண்ணாடி போட்டு அய்யா அவர்களின் வழியில் உற்று நோக்கினால் நன்றாக விளங்கும் என்ன சொல்ல வருகிறது தினமணி என்று.

இட ஒதுக்கீடு என்றாலே பார்பனர்களும் பார்பன பத்திரிக்கைகளும் அய்யா காலத்திலிருந்து இன்று வரை எப்பொழுதும் எதிர்ப்புதான் முன்னெரெல்லாம் நேரடியாக சொல்லி எதிர்பார்கள் இன்று 1000 அடி பள்ளத்தில் பார்பனியத்தை குழி தோண்டி புதைததனால் கொஞ்சம் இல்லை மறை காயாக எதிர்ப்பு கண்பிகிறர்கள். அது இன்றளவும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது எவளவு பெரிய அவலம். தமிழர்களே கொஞ்சம் சிந்தியுங்கள்.

12 comments:

vijayan said...

ஜனதா கட்ச்ச்சிகளை தவிர எந்த திராவிட கட்சிகள் மகளிர் மசோதாவில் உள் ஒதுக்கீடு கேட்டது.மூன்று படிக்கு இணையான ஜல்லியடி இது.

Unknown said...

இன்னும் எத்தணை வருடங்களுக்கு பார்ப்பன எதிர்ப்பு எனும் செத்த பாம்பை அடிப்பீர்கள்.சாதீய எதிர்ப்பு செய்யும் பொழுது சொல்ல வரும் கருத்து பழுதாகிறது. பெரியார், கம்யூனிசம் போன்ற கருத்துக்கள் அனைவருக்கும்/ அனைத்து காலங்களுக்கும் பொருந்தாது. தற்காலத்தில் சுய மரியாதை பங்கம் மிகக்குறைவு. பெண் இட ஒதுக்கீடு காலத்தின் கட்டாயம்.

பரணீதரன் said...

பார்பனியம் செத்து போச்சுன்னு எங்கே படிச்சிங்க தோழரே. சும்மா ஒரு சின்ன உதாரணம், பார்பனியம் செத்துபோச்சு ன்ன ஏன் இன்னும் அகிரகாரம் இருக்கு. நாங்க என்ன வேணுமுன்ன அத எதிர்த்துகிட்டு இருக்கோம். நாங்க சொல்லுறது எல்லாம் அகிரகரம் வேண்டாம் ,சேரியும் வேண்டாமுன்னு தான். இது ரெண்டு ஒளியும் வரை நாம் போராட வேண்டிதான் உள்ளது. நல்ல யோசிங்க...........பெரியாரியலை ஆழமா படிங்க ....அது ஒரு வாழ்வியல் என்றைக்கும் தேவை படும். சும்மா மேம்போக்க பேசவேண்டாமே..

Unknown said...

அன்பருக்கு வணக்கம்.கருத்துக்ளை விமரிசனம் செய்யுங்கள். கருத்தை கூறியவரின் சாதியை கூறீ இழியாதீர்.நகரங்களில் சாதி பாகுபாடு மறைந்து வருகிறது.அக்ரஹாரங்களில் இட ஒதுக்கீடு வேண்டுமா? பார்ப்பனர்கள் பெரியார் காலத்தில் ஆதிக்க சாதியாக இருந்தனர். அதனால் அவர்களை எதிர்த்தார்.முற்போக்கு பெரியாரின் சீடர்கள் பிற்போக்கு சாதீய சிந்தனைகளை கை விடுங்கள்.

பரணீதரன் said...

முதல்ல சாதி வெறிக்கும் பார்பனியதுக்கும் வேறுபாடு தெரிஞ்சுகோங்க தோழரே. இவளவு சாதி தோன்றியது பார்பனிய என்னும் நச்சு பாம்பால் தான். அதனை ஒழித்தால் கடவுள் அது கூறும் சாஸ்திரம் அப்புறம் அதன் அடிபடையில் பிரித்து வைத்து இருக்கும் சாதி எல்லாம் ஒழிந்து விடும். கொஞ்சம் நல்ல படிங்களேன் பெரியாரியலை.

பரணீதரன் said...

மேலும் இக்காலத்தில் பார்பனியம் இல்லை என்று யார் சொன்னது..எங்கே படித்தீர்கள் அது இல்லாமலா எங்கே பிராமணன் எங்கே பிராமணன்னு சோ தேடிண்டு பார்பனியத்தை பரப்பிண்டு இருக்கார். ஆவா அவ வேலையே பார்த்துண்டு தான் இருக்கல். நீங்கள் தொங்கிடு இருந்தேள் மீண்டும் உங்களை பார்பனியம் என்ற குழி வெடி புதைத்து விடுவார்கள் தோழரே நீங்கள் பார்பனராக இல்லாத பட்சத்தில்....

Unknown said...

பார்ப்பன எதிர்ப்பு மட்டும்தான் பெரியார் கூறிய பகுத்தறிவா? இதைத்தான் உங்கள் பகுத்தறிவு கூட்டம் போதித்ததா? கள்ளுண்ணாமையை பெரியார் வலியுருத்தினாரே , அதைப் பற்றி உங்கள் விடுதலை கற்பிக்கவில்லையா? கனவிலும் நினைவிலும் பார்ப்பன எதிர்ப்பு ! தாங்கள் வெறுக்கும் ஒன்றை திரும்ப திரும்ப துவேசித்து மூளை சலவை செய்து வறுகிறார்கள். ஒரு தலைமுறையே சாராய ஆற்றில் குளிக்கிறதே,அதை பகுத்தறிவு பாசறை உவகையோடு ரசிக்கிறதே, தினமும் ஒரு வலைப்பூ/ போர் தொடுங்களேன்.

பரணீதரன் said...

நீங்கள் இன்னும் மூன்றாம் வகுப்பில் 500 தென்னை மரத்தை வெட்டினர் என்ற பெரியாரை படித்துவிட்டு அரைவேக்காடு பேச்சு பேசுகிறீர்கள் தோழரே. உங்களுக்கு பெரியாரியல் அடிப்படை தெரியணுமுன்ன கொஞ்சம் http://paraneetharan-myweb.blogspot.com/2009/12/blog-post_26.html இங்கே போயி படிங்க.

Gopalakrishnan said...

...நண்பர் சங்கமித்திரனுக்கு, வணக்கம். நீங்கள் பார்பனீயம் குறித்து பேசியது தவறில்லை. ஆனால் இப்போது அதை விட எவ்வளவோ பெரிய சமூக அவலங்கள் இருக்கும்போது அதையே பிடித்து கொண்டு அலைகிறீர்களே, அதுதான் வேதனையாக இருக்கிறது. அதுசரி. அடிப்படை என்பது மூன்றாம் வகுப்பில் படிப்பது தானே, அவர் தென்னை மரத்தை வெட்டியது போல நீங்கள் இப்போது என்ன செய்தீர்கள் மது ஒழிப்புக்காக...சும்மா எதற்கு எடுத்தாலும் பெரியாரியலை படியுங்கள் என்று சொல்லாமல் படித்த நீங்கள் பதில் கூறுங்கள்!!

பரணீதரன் said...

படித்ததை கூறினால் பார்ப்பனியத்தை விட ஏதோ பெரிய கொடும இருக்கிறது என்கீர்கள்.....இங்கே பார்பனீயம் அவர்கள் கூறும் சாஸ்திரம் அதன் மூலம் வளர்க்கப்படும் சாதி,மதம்,கடவுள் இவற்றை விட கொடியவை எவையும் இல்லை. இவை ஒழிந்து மக்களிடத்தில் சமதர்மம் நிலைத்தால் எல்லாம் கேள்விக்கு உட்பட்டு அணைத்து கொடியவைகளும் இருக்கும் இடம் காணமல் அடிபட்டு போகும்.... பெரியாரை போல தென்னை மரத்தை வெட்ட நாங்கள் பெரியார் அல்லவே...அவரின் தொண்டர்கள்........எல்லாரும் பெரியாற ஆகிட்ட பெரியாரின் தொண்டர்கள்தான் யார்......அவர் விட்ட பணியை தொடர்ந்து செய்வோம்.........அப்படி ஒரு சந்தர்பம் வந்தால் தென்னை மரம் என்ன ....மக்களை அடிமை படுத்தும் எதனையும் வெட்ட தயார்....பெரியார் தொண்டர்கள்.....

வாழ்க பெரியார் ! வாழ்க மணியம்மையார்! ...வாழ்க பகுத்தறிவு

நம்பி said...

rammy said... //நகரங்களில் சாதி பாகுபாடு மறைந்து வருகிறது.அக்ரஹாரங்களில் இட ஒதுக்கீடு வேண்டுமா? பார்ப்பனர்கள் பெரியார் காலத்தில் ஆதிக்க சாதியாக இருந்தனர். அதனால் அவர்களை எதிர்த்தார்.முற்போக்கு பெரியாரின் சீடர்கள் பிற்போக்கு சாதீய சிந்தனைகளை கை விடுங்கள். //

இன்னும் சாதிகள், சாதி வெறிகள் இணையத்திலேயே இருக்கிறது..மதவெறிகள்,வர்ணாசிரம தர்மம் இணையத்திலேயே இருக்கிறது...அதை கடுமையாக பார்ப்பனர்கள் ஆதரித்தும் வருகின்றனர், ஒரு வேளை பெரியார் இருந்தால் இன்னும் வேகமாக போராட்டத்தை முடுக்கி விட்டிருப்பார்...

பார்ப்பதற்கு நவீனமாக தெரிகிறது...பார்வைகள் அனைத்தும் பின்னோக்கியப் பழமைவாதப் பார்வைகளாகத் தான் இருக்கிறது...அந்த வஞ்சம் அப்படியே செஞ்சத்தில் குடிகொண்டிருப்பதை அன்றாடம் சமூகம் கண்டுவருகிறது.
சரி...இதோ..நகரத்தில்....கிராமத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழே எத்தனை சதவீத மக்கள் உள்ளனர்...தமிழ்நாட்டில் பார்ப்பனர் எத்தனை சதவீதம் பேர் உள்ளனர் அவர்களில் எத்தனை சதவீதம் பேர் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளனர் என்பதை ஒப்பிட்டு தெரிந்து கொள்ளலாம்...தமிழ் நாட்டு அளவில் மட்டும் இப்போதைக்கு...2004-2005 வருடத்தில் கண்க்கெடுக்கப்பட்ட பட்டியலின் படி...

தமிழ் நாடு மக்கள் தொகை 6,63,96,000 2006 தோராய கணக்கெடுப்பின்படி...பார்ப்பனர்கள் சதவீதம் 3 சதவீதத்திற்கும் குறைவானவர்கள்...அதன்படி 19,91,880 (ஒட்டுமொத்தம்..குழந்தைகள் , பெரியாவர்கள் என).

இது போக தமிழக மக்களில் மீதமுள்ளவர்கள் பார்ப்பனரல்லாதவர்கள். 6,44,04,120. பேர்கள்...

தமிழ் நாடு வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள்... பட்டியலினத்தவர் 31.2%,, இதர பிற்பட்ட வகுப்பினர் 19.8%, மற்றவர்கள் 19.1% இது 2004-2005 இது கிராமப்புறங்களில் மட்டும்,


நகர்புறங்களில் பட்டியலின்த்தவர் 40.2 %, இதர பிற்பட்ட வகுப்பினர் 20.9%, மற்றவர்கள் 6.5% (மற்றவர்கள் எனபது பார்ப்பனர்கள், முற்பட்ட வகுப்பினர்)

(....தகவல்கள் பெறப்பட்டது இந்திய அரசுத் தளம்)

நகர்ப்புறங்களில் 6.5% ஆனால் அதுவும் முற்பட்ட வகுப்பினர்...அந்த சதவீதத்திலும் பார்ப்பனரல்லோதோரும் அடங்குவர்...ஆக வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழுகின்ற பார்ப்பனர் எண்ணிக்கை மிக மிக மிக குறைவாகவே உள்ளது.
அவர்களுக்கு வறுமையே கிடையாது..எப்பொழுதும் செழுமை தான்....(ஏதோ ஒரு வகையில் பாரப்பனர்க்கு உதவி கிடைத்துவிடும். இல்லை அதை பிடுங்கி கொள்வதற்கும் அவர்களுக்கு வழி தெரியும்..)

யார்? அதிகமாக வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளனர்? பாரப்பனரல்லோதார்...கிரமப்புறங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக...நகர்ப்புறங்களில் 60 சதவீதம்...இப்பொழுது யாருக்கு இடஓதுக்கீடு தேவை...? திராவிடர்களுக்கு...!

இப்பொழுது யார்? ஆதிக்க சக்தியாக இருந்து கொண்டிருக்கின்றனர். யார்? நலிந்து போயிருக்கின்றனர். என்பதை ஓப்பிட்டு பார்த்தாலே தெரியும்.,

எல்லா இடங்களிலும் சாதி பார்க்கப்படுகிறது...இங்கேயே (இணையத்திலேயே), மும்பையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் மேலாளராக பணிபுரியும் சுப்பிரமணி சேகர் என்பவர் வர்ணத்தை மிகவும் மூர்க்கமாக ஆதரிக்கிறார்...இதை ஆதரிக்கும் இந்த ஆதிகாரி... ஒரு தலித் வாடிக்கையாளருக்கு நேர்மையாக கடன் கொடுப்பாரா?...

இவர் மட்டும் தானா?...தொலைக்காட்சியிலேயே அனைத்து வங்கி மேலாளரையும் உள்ளடக்கிய கல்விக்கடன் பற்றிய ஒரு நிகழ்ச்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்ட பொழுது ''நீங்கள் ஜாதி பார்க்கிறீர்கள், அதன்படியே உங்கள் வாடிக்கையாளர்களை அணுகுகிறீர்கள் என்பது உண்மை தானே?, மனச்சாட்சியுடன் ஒத்துக்கொள்ளுங்கள் என்ற கேள்விக்கு '' '' ஆமாம்'' என்று உண்மையை தொலைக்காட்சியிலேயே ஒத்துக்கொண்டனர்.


அந்த நிகழ்ச்சியில் பார்ப்பன அதிகாரிகள் தான் அதிகம்... (விஜய் தொலைக்காட்சி...நிகழ்ச்சி நீயா நானா?) ஆதாரம் இணையத்திலேயே இருக்கும் காணலாம்....பார்ப்பன ஜாதிவெறி இருக்கிறதா? இல்லையா...?

இப்போது தான் திராவிடர் கழகத்தின் அதி தீவிரமான பங்களிப்பு தேவைப்படுகிறது...பெரியார் காலத்தை விட...அதற்கான அத்தாட்சிகள் தான் மேற்குறிப்பிட்டவைகள் எல்லாம்.

நம்பி said...

//rammy said...

இன்னும் எத்தணை வருடங்களுக்கு பார்ப்பன எதிர்ப்பு எனும் செத்த பாம்பை அடிப்பீர்கள்.சாதீய எதிர்ப்பு செய்யும் பொழுது சொல்ல வரும் கருத்து பழுதாகிறது. பெரியார், கம்யூனிசம் போன்ற கருத்துக்கள் அனைவருக்கும்/ அனைத்து காலங்களுக்கும் பொருந்தாது. தற்காலத்தில் சுய மரியாதை பங்கம் மிகக்குறைவு. பெண் இட ஒதுக்கீடு காலத்தின் கட்டாயம்.
4:40 AM //

சுயமரியாதையினால் பர்ப்பனர்க்கு பங்கம்.. அதனால் அவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]