வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, June 25, 2011

அவா பற்று தலைக்கேரியதும் புத்தி புல் மேய போயிற்றோ?

திரிநூல் தினமணி எப்பொழுதும் காஞ்சி மடம் என்றால் அப்படியே புல்லரித்து செய்தி வெளியிடும்..அதுபோன்ற ஒரு செய்திதான் இன்று வந்தது...

தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா பல்கலை வளாகத்தில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளும், ஸ்ரீ ராகவேந்திர மடாதிபதி சுவாமிகளும் வெள்ளிக்கிழமை பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர்.

சாஸ்த்ரா பல்கலைக் கழகத்திற்கு வந்திருந்த காஞ்சி சுவாமிகள் அங்கு நித்ய, நைமித்ய பூஜைகளை நிகழ்த்தினார். மூல ராம பூஜையை மந்த்ராலய சுவாமிகள் (ஜூன் 22, 23) நிகழ்த்தினார். (---- தினமணி, 25-06-2011)

இதுல என்ன இருக்கிறது என்று நினைக்கீரீர்களா? ..இந்த செய்தியை பார்த்ததுமே சமச்சீர் கல்வியின் ஒரு சில வகுப்புகளில் தமிழ் பாடத்தில் சென்னை சங்கமம் பற்றிய தொகுப்புக்கு தினமணிகள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் போட்டது தான் நினைவுக்கு வந்தது..

கவிஞர் கனிமொழி அவர்களின் இலக்கியம் சார்ந்த சங்கமம் பற்றிய நிகழ்ச்சி சமச்சீர் கல்வியில் இடம் பெற்றதற்கு, இந்த தினமணி, தினமலர்...துக்ளக் எல்லாம் என்ன சொன்னது?.......இதனை நடத்தியவர் இப்போது திகார் ஜெயிலில் இருக்கும் போது அவர் நடத்திய சங்கமம் பற்றிய நிகழ்ச்சி பற்றி மாணவர்களுக்கு பள்ளியில் சொல்லித்தருவது உகந்தது அல்ல என்று மாணவர்கள் மீது அப்படியே அக்கறை உள்ளவர்கள் போல தன் பார்ப்பன புத்தியை காண்பித்தது........இப்போ இந்த காஞ்சி ஜெயந்திரன் என்று பார்ப்பனர்களால் அழைக்கபடும் சுப்பிரமணியன் யோகிதை என்ன? இவர் மாணவர் பக்கம் போகலாமா?..இவரின் யோகிதை என்ன?

சங்கராச்சாரியாராம் இந்த ஜெயந்திரன்....நானே கடவுள் என்று கூறிக் கொள்பவர்களாம்..... கொலையின் பீடம் அதுதான் என்று கண்டுபிடித்து ஒரு தீபாவளி நாளில் (11.11.2004) ஜெயந்திர சரஸ்வதி கைது செய்யப்பட்டார்.

ஆந்திரா சென்று அங்கிருந்து கம்பியை நீட்டி விடலாம் என்று திட்டம் போட்டிருந்தார் போலும்! காஞ்சிபுரம் கொண்டு வந்து, நீதிமன்றம் முன் நிறுத்தப்பட்டு 15 நாள் வேலூர் மத்திய சிறையில் தள்ளப்பட்டார்.

 அவர் மீதுள்ள உள்ள குற்றச்சாற்றுகளோ சாதாரணமானவை அல்ல. இ.பி.கோ. 302, 120 பி, 34,201 கொலை செய்யத் தூண்டுதல், கூட்டுசதி, பொய்யான சாட்சியங்கள் சமர்ப்பித்தல் கொலை வழக்குகளில் ஆசாமி சிக்கிக்கொண்டார், 61 நாள்கள் வேலூர் சிறையில் கம்பி எண்ணினார் ஜெகத் குரு. எங்கு சென்றாலும் ஜாமீன் கிடைக்காது என்று உச்ச நீதி மன்றம் சென்று பெற்றுக் கொண்டு வந்தார்.

 சின்ன பெரியவாள் விஜயேந்திர சரஸ்வதியும் கைது செய்யப்பட்டு (10.01.2005) 31 நாள் கம்பி எண்ணினார்.நிபந்தனை ஜாமீன் கிடைத்தது. சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் மூன்று வாரம் நாள்தோறும் கையொப்பம் சாற்ற வேண்டும். கேடி லிஸ்டில் ஜூனியர் சங்கராச்சாரியார் இடம் பெற்றார்.

 இதுதான் இந்த தினமணி சங்கராச்சாரிகள் என்று அழைக்கும் ஜெயந்திரன்,விஜயேந்திரனின் யோகிதை..... இந்த ஜெயந்திரன் அவர் தம்பி விஜெயந்திரன் நீதிமன்ற காவல் கூட இல்லீங்க....போலிஸ் காவலில் இருந்தார்கள் (கனிமொழி நீதிமன்ற காவலில் இருக்கிறார்)........இந்த யோக்கிய சிகாமணிகளை, திரிநூல் தினமணி எந்தனை சுவாமிகள் போட்டு எழுதுகிறது பார்த்தீர்களா? எல்லாம் தினமணி ஆசிரியர் அஜாதசத்ரு அம்பி வைத்தி அவர்களின் இனப்பற்று......அதோடு மட்டுமா..சாஸ்த்ரா பலகலையில் இருக்கும் மாணவர்கள் இந்த ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் 60 நாள் வாழ்ந்த அயோக்கியர் காலில் விழலாம? இவர்களை மாணவர்கள் சந்திக்கலாமா?...இவர்கள் மாணவர்களுக்கு ஆசி வழங்கலாமா? யோசியுங்கள்.

 கலைஞர் அவர்களை ஆயிரம் முறை கருணாநிதி என்று சொல்லும் இந்த திரிநூல் தினமணி வைத்தி.......இந்த அயோக்கியனை பேர் சொல்லி எழுதினால் என்ன? கூப்பிடத்தானே பெயர் இருக்கு என்ற இந்த அம்பி கேட்டாரே? இப்போ அவா பற்று தலைக்கேரியதும் புத்தி புல் மேய போயிற்றோ?

 இந்த தினமணிதான் சொல்லுகிறது, சமச்சீர் என்ற பெயரில் திராவிடர் இயக்க கொள்கைககளை மாணவர்களிடம் திணிக்ககூடதாம்.....இது யார் நாடு....ஆரியர் நாடா? இல்லை திராவிட நாடா? (திராவிட உத்கல பன்காவா? இல்லை ஆரிய உத்கல பன்காவா? எது நம் தேசிய கீதத்தில் தாகூர் கூறியுள்ளார்).....இந்த திராவிடர் நாட்டில் திராவிட இயக்க தலைவர்கள் அவர்களின் கொள்கைகளை மாணவர்கள் படித்தால் என்ன குடி முழுகி போய்விடுகிறது.
ஒரு சிறிய உதாரணம் சொல்லவேண்டும் என்றால், முகநூளில் அறிமுகம் ஆனா ஒரு நண்பர் என்னுடன் விவாதம் செய்யும் பொழுது சில தீர்வுகள் சொன்னார்..இதோ அவர் கேட்ட கேள்விகள் அப்படியே தருகிறேன் .....

"--------எதனை பேருக்கு இன்று திராவிட கொள்கைக்கு விளக்கம் தெரியும் என்று நினைகிறீர்கள்? என்னை பொருத்தவரை நான் தமிழன். நான் திராவிடனா என்று கேட்டால் எனக்கு தெரியாது....இளைஞர்களை குறை சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை நண்பரே. நமது பாட திட்டத்தில் திராவிட போராட்டத்தை பற்றியோ, மொழி போர் தியாகிகளை பற்றியோ எந்த ஒரு பாடமும் இல்லை. நாம் போராடி பெற்ற சுதந்திரத்தை பற்றி எத்தனை பாடங்கள்.. ஆனால் ஏன் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடை பெற்றது என்ன விதமான ஹிந்தி திணிப்பு ஏற்படுத்தப்பட்டது என்பதை பள்ளிகள் தோறும ஒரு பாடமாகவோ அல்லது கண்காட்சியாகவோ ஏற்படுத்த தவறியது யார் குற்றம்? தாய் மொழியின் முக்கியத்துவத்தை அனைவரும் உணரச்செய்யாதது யார் குற்றம்? நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதையே பெறுகிறீர்கள். உணர்ச்சி பிளம்பாக பேசுவதாலோ அல்லது எழுதுவதாலோ எந்த வித பலனும் ஏற்படபோவதில்லை. தவறு எங்கே என்று ஆராய்வோம். குழந்தை பருவத்தில் இருந்தே பள்ளிகளில் தமிழ் உணர்வை ஊட்டுவோம்.------"

இப்படித்தான் அவர் கூறினார்....நாங்கள் உரையாடியது இரண்டு வாரங்களுக்கு முன்பு...அதனை நிருபிக்கும் வகையில் திராவிடக் கொள்கை எது என்ற வினாவை எழுப்பியுள்ளது துக்ளக் (22.6.2011).சரியான கூட்டணி அமைந்ததால், சரியாகவே ஜனங்கள் ஓட்டுப் போடுகிறார்கள். ஆனால், உலகம் போகிற போக்குத் தெரியாமல் கருணாநிதி இன்ன மும் திராவிடம், திராவிட இனம் என்று, கீறல் விழுந்த இசைத்தட்டு மாதிரி அதையே சொல் லிக் கொண்டு திரிகிறார். இன்றுள்ள இளைஞனும் திராவிடம் என்றால் கிலோ என்ன விலை என்றுதான் கேட்பான் என்று எழுதுகிறது துக்ளக்...எப்படி பொருந்துகிறது பாருங்கள்...

நான் அவருக்கு கூறிய பதில் (இது சமீபத்தில் துக்ளக் அடித்த நக்கலுக்கும் பொருந்தும்), கொஞ்சம் கொஞ்சமாகத்தான் இந்த பார்ப்பனியத்திடம் இருந்து விடுதலை பெற முயற்ச்சிக்க வேண்டியுள்ளது........என்னதான் திராவிடர் இயக்கம் ஆட்சி செய்தாலும்...தமிழ் வாழ்க என்று விளம்பர பலகை வைத்தால் வீட்டுக்கு பிரியாணி வருமா என்று கேட்கும் தி(இ)னமலர் இருக்கத்தான் செய்கிறது.......தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை என்றால் அதற்கும் ஒரு கூட்டம் பூணூலை முறுக்கிக்கொண்டு கிளம்புகிறது......இதனை எல்லாம் எதிர்நீச்சல் போட்டு கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நாம் நாட்டிலேயே நம் உரிமைகளை,நம் கொள்கைகளை சட்டம் போட்டு இந்த இளைங்கர்களுக்கு பெற்று தரவேண்டியுள்ளது.....இதோ இந்த சமச்சீர் கல்வி பட புத்தகத்தை கொஞ்சம் பாருங்கள்......அதனை இந்த பார்ப்பன கும்பல் திராவிட பாசிசம் என்று சொல்லி முடக்க பார்கிறது.....

http://www.scribd.com/doc/57620956/Std10-Tamil-1-
http://www.scribd.com/doc/57621252/Std10-Tamil-2
http://www.scribd.com/doc/57621522/Std10-Tamil-3
நான் மேல் சொன்ன பதிலில் இருந்து அவர் சொன்னது மூன்று சதவிகிதம் இருக்கும் ஒரு இனம் முடக்க பார்ப்பது கண்டிக்கத்தக்கதே என்றார்......இது சமச்சீர் பற்றி விவாதம் செய்யும் பொழுது நடந்த நிகழ்வு
சரி இப்பொழுது விசயத்துக்கு வருகிறேன்...........வருணாசிரம தர்மத்தை வேரோடு சாய்த்து மனிதருள் அனைவரும் சமம் என்று சொல்லி மனிதனை நினை என்று சொன்ன அய்யா பெரியாரை பற்றியும் அவர் தோற்றிவித்த திராவிடர் இயக்கம் பற்றி தமிழ்நாட்டில் இருக்கும் மாணவர்கள் படிக்கமால் வேறு யார் படிப்பது? ஒரு வேலை திரிநூல் தினமணியும்...துக்ளக் சோ வும் எதிர்பார்க்கும் அவா பெரியவா, தாழ்த்தப்பட்டவரை நேரடியாக கண்ணால் பார்க்கக் கூடாது என்பதற்காக, அமைச்சர் கக்கனுக்கும் தனக்கும் இடையில் ஒரு பசுமாட்டை நிறுத்தி வைத்துப் பார்த்தாரே செத்துப்போன சங்கராச்சாரி சந்திரசேகரன் அவர் எழுதிய "தெய்வத்தின் குரல்" பகுதிகளை சமச்சீர் கல்வியில் மாணவர்கள் படிக்கவேண்டுமா?  இல்லை விடுதலையில் சொன்னது போல தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்த பார்ப்பனனுக்கு கடவுள் மோட்சம் கொடுத்ததையெல்லாம் (திருவிளையாடல் புராணம் மாபாதகம் தீர்த்தபடலம்) சொல்லிக்குடுக்க வேண்டுமா? நீங்களே சிந்தியுங்கள்.....

 மீண்டும் சொல்லுவது என்னவென்றால், தாம்பரம் லலிதாவில் இருந்து ஸ்ரீரங்கம் உஷா வரை சில்மிஷம் நடத்திய அயோக்கியர், சங்கரராமன் கொலையில் முக்கிய குற்றவாளியாகிய ஜெயந்திரன் பார்ப்பனர்கள் பத்திரிக்கைகளின் கண்ணில் லோக குரு..

இவர் மாணவர்களை சந்திக்கலாம், உரையாடலாம். கலைஞர் தொலைக்காட்சியில் பங்குதாரர் என்பதற்க்காகவே கனிமொழி குற்றவாளியா? அதற்காக கனிமொழி நடத்திய சங்கமம் நிகழ்ச்சி பற்றி மாணவர்கள் படிக்ககூடாதா? யோசியுங்கள் தமிழர்களே....இப்பொழுதும் ஆச்சாரியார் போன்றதொரு அரசியல்வாதி கிடைத்தால் அவர்கள் நினைத்தை சட்டமாக்குவார்கள், கல்வியிலும் அவர்கள் நினைத்தை வைப்பார்கள். அனால் இப்பொழுது அதுபோன்ற ஒருவரை உருவாக்கத்தான் ஜெ அம்மையாரை சுற்றி வருகிறார்கள்....அதற்க்கு கலைஞர் குடும்பம் என்ற ஒரு துரும்பை பிடித்து திராவிடர் இயக்கத்தை, அதன் கொள்கைகளை வீழ்த்த நினைக்கிறார்கள்....அது சமச்சீர் கல்வி பாடப்புத்தகத்தில் ஆரம்பிக்கிறது. உஷார்! உஷார்!!

குறிப்பு: (துக்ளக் மற்றும் காஞ்சி ஜெயேந்திரன் பற்றிய செய்திகள் உதவி விடுதலை நாளிதழ்)


2 comments:

வலிப்போக்கன் said...

இந்தரெண்டு மட அதிபதிகளும் வழங்கிய அருளாசியை
கொண்டு டாஸ்மாக்கில் புல்லோ,ஆப்போ வாங்க முடியுமா?

Sriram said...

இறை மறுப்புகொள்கை இன்னும் எத்தனை நாளோ ?

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]