வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Sunday, June 05, 2011

எதற்கெடுத்தாலும் நீ ஒதுக்கீடு கோட்டாவில் கல்லூரிக்கு வந்தவன்தானே!...


இவ்வாண்டு மே மாதம் 8 ஆம் தேதி இந்து ஏட்டில் ஒரு செய்தி.

சண்டிகர் மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர் நூலகத்தில் தற்கொலை செய்து கொண்டார் என்பதுதான் அந்தச் செய்தி.

ஏன் அந்தத் தற்கொலை? படிப்பில் அக் கறையில்லையா? புரிந்து கொள்ளும் திறன் இல்லையா? அதெல்லாம் ஒரு மண்ணாங் கட்டியும் கிடையாது.

பட்டமேற்படிப்பில் இறுதியாண்டு பயிலும் இந்த மாணவர் படிப்பில் படுசுட்டி - ஒரு பாடத்தில் கூடத் தோல்வி அடைந்த தில்லை.

கெட்டிக்கார மாணவன் ஏன் தற்கொலை செய்து கொண்டானாம்?

மாணவன் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதுதான் பிரச்சினையே!. ஒரு தாழ்த்தப்பட்ட மாணவன் கெட்டிக்காரனாக இருக்கிறானே என்ற ஆத்திரம்.

எதற்கெடுத்தாலும் நீ ஒதுக்கீடு கோட் டாவில் கல்லூரிக்கு வந்தவன்தானே! என்னும் உயர்ஜாதி பார்ப்பனப் பேராசிரியர் களின் கேலி - கிண்டல்!

மாணவன் மன உளைச்சலுக்கு ஆளானான். அதன் விளைவுதான் இந்தத் தற்கொலை! அந்த மாணவன் பெயர் ஜஸ் பிரித்சிங். அண்ணன் மாண்டான் என்ற வுடன் அவரது தங்கையும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இவ்வளவுக்கும் அந்தப் பெண்ணும் கணினி பாடப் பட்டதாரி.

இன்னொரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் பால்முகுந்த். டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் படிக்க வந்தவர். 2010 மார்ச்சில் தற்கொலை செய்து கொண்டார்-_ காரணம் சண்டிகர் மருத்துவக் கல்லூரி மாணவனுக்கு ஏற்பட்ட அதே நிலைப்பாடுதான். உயர் ஜாதி பார்ப்பனர்களின் கீழிறக்கமான பேச்சுகள் -சாடல்கள்தான்.

எய்ம்சில் ஜாதி பார்த்து மதிப்பெண் போடுகிறார்கள் பார்ப்பனப் பேராசிரியர்கள் என்று குமுறும் உள்ளத்துடன் மாணவர் கள் கூறியதுண்டு. தாழ்த்தப்பட்ட மாண வர்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டவர்கள் 18 பேர் என்று இன்சைட் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

டில்லி உயிரி மருத்துவ அறிவியல் கல்லூரியில் ஆராய்ச்சி மாணவர் லினேஷ் மோகன் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஏழைக் குடிசைவாசி. ஜாதி நாகம் கொட்டிய நஞ்சால் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னையில் அய்.அய்.டி. என்ற ஒரு பெரிய அக்ரஹாரம் இருக்கிறது. அங்கும் அடிக்கடி தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலை. ஆந்திராவைச் சேர்ந்த நிதின்குமார் (சித் தூரையடுத்துள்ள குத்தளம்பட்டு சொந்த ஊர்.)

பெங்களூருவில் வளாக நேர் தேர்வில் (கேம்பஸ் இன்டர்வியூ) நல்ல வேலை கிடைத்திருக்கிறது. ஆனால் தன் திட்ட அறிக்கையை முடித்துக் கொடுத்துவிட்டு பெங்களூருவுக்குச் சென்று சேர்ந்திடலாம் என்று மனக்கோட்டை கட்டியிருந்தான்.

ஆனால் பார்ப்பனப் பேராசிரியர் என்ன சொன்னாராம்? உன் பிராஜக்ட் ரிப்போர்ட் சரியில்லை. இன்னும் ஆறு மாதம் தங்கி யிருந்து அறிக்கையைக் கொடுத்துவிட்டுப் போ என்று சொல்லியிருக்கிறார். மாண வனின் ஆசைக் கோட்டை அடியோடு நொறுங்கி விழுந்தது.

கடந்த மார்ச் 24 ஆத் தேதிதான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக பெற்றோர்களுக்குத் தெரிவித்து விட்டு, பெற்றோர்கள் அதிர்ந்து ஓடி வருவதற்குள் நிதின் தன் வாழ்வை முடித்துக் கொண் டுள்ளான்.

நிதினின் மனக்கோட்டை மட்டுமல்ல; அவரின் பெற்றோர்கள் தங்கள் மனதில் நீர் ஊற்றி வளர்த்து வந்திருக்கிற கனவுகள் எல்லாம் அனலில் பட்ட பட்டாசாக வெடித்துச் சிதறிவிட்டதே!

இட ஒதுக்கீடு வாகனத்தில் ஏறியா எங்கள் கோட்டைக்குள் நுழைகிறீர்கள்? நீங்கள் எப்படி படித்து, எப்படி தேர்வு எழுதி, எப்படி வெற்றி பெறப் போகிறீர்கள் பார்க்கலாம் என்று சவால் விடும் பாணியில் உயர்நிலைக் கல்வி நிறுவனங்களில் ஆதிக் கம் செலுத்தும் பார்ப்பனப் பேராசிரியர்கள் நடந்து கொள்கிறார்கள்.

போராடிப் போராடிப் பெற்ற இட ஒதுக்கீட்டை பார்ப்பனர்கள் நயவஞ்சகமாக நசுக்கி வருகிறார்கள்.

இந்தியா முழுமையும் இயங்கி வரும் அய்.அய்.டி., எய்ம்ஸ், அய்.அய். எம். போன்ற கல்வி நிறுவனங்களின் செயல் பாடுகள், இடஒதுக்கீட்டின் அடிப்படையில் இடம் கிடைத்துப் படிக்கும் மாணவர்களுக் கான பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்ய சிறப்புக் குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும். அதில் தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் சிறுபான்மையினர் மற்றும் மகளிர் பிரதிநிதிகள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும்.

இட ஒதுக்கீட்டுக்கு விரோதமாகச் செயல்படும் அதிகாரிகளுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் அமைந்த நாடாளுமன்றக் குழுவின் சிபாரிசு கறாராகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

மத்திய அரசு நடத்தும் அய்.ஏ.எஸ். தேர்வுகளில் திறந்த போட்டியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற தாழ்த்தப்பட்ட, பிற் படுத்தப்பட்டவர்களை - திறந்த போட்டியில் இடம் அளிக்காமல், அவர் களுக்கான எஸ்.சி., எஸ்.டி., பி.சி. பிரிவுகளில் இடம் அளித்து, ஏற்கெனவே இந்தப் பிரிவுகளில் இடம் பெற்றவர்களை வெளியேற்றும் சமூக அநீதி பல ஆண்டு காலமாக நடை பெற்றது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு உச்ச நீதி மன்றம் இப்பொழுதுதான் இதில் தெளிவான வழியைக் காட்டியிருக்கிறது. இதன் காரணமாக இடைப்பட்ட காலங் களில் நூற்றுக்கணக்கான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்குக் கிடைக்க வேண்டிய இடங்கள் சூழ்ச்சியால் பறிக் கப்பட்டனவே. இந்த இழப்புக்கு யார் பொறுப்பு? விதிகளை மீறி நடந்து கொண் டவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப் படவில்லை?

டில்லி பல்கலைக் கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகங்களில் பிற்படுத்தப் பட்டவர்களுக்குத் தகுதி மதிப்பெண் (கட் ஆஃப் மார்க்) நிர்ணயத்துள்ள முறை மிகக் கொடுமையானது -_ விஷமத்தனமானது!

திறந்த போட்டியில் கடைசி மதிப்பெண் ணிலிருந்து 10 மதிப்பெண்களைக் குறைத்து, அதுதான் இவர்களுக்கான கட்ஆஃப் மார்க் என்று அவர்களாகவே எந்த வித விதிமுறைகளுக்கும் ஆட் படாமல் ஆரிய அட்டகாசமாக நடந் துள்ளனரே!

டில்லி உயர்நீதிமன்றம் தலையில் குட்டியதற்குப் பிறகுதானே சரியான இடத் துக்கு சமூக நீதித் தேர் நகர்ந்து வந்துள்ளது.

இடைக்காலத்தில் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இருபால் மாணவர்களுக்கு என்ன நட்ட ஈடு - என்ன பரிகாரம்? தவறு செய்த நிருவாகி களுக்கு என்ன தண்டனை?

சட்டங்களையும், விதிமுறைகளையும் குழியில் தள்ளி நயவஞ்சகமாக ஆதிக்கம் செலுத்தலாம் என்ற ஒரு போக்கு ஆரியப் பார்ப்பனர்களிடம் குடி கொண்டிருக்கிறது. ஒடுக்கப்பட்டவர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை. புரிந்து கொள்ளும் தன்மையோ போராடும் உணர்வோ இல்லை.

பெரியார் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல. இந்தியாவுக்கே தேவைப்படுகிறார்; திராவிடர் கழகத்தின் பணியும் அப்படியாகத்தான் இருக்கிறது.

தமிழ்நாட்டில் இயக்க ஏடுகளும், இதழ்களும் பரவியாக வேண்டும். வெளி மாநிலங்களில் தி மாடர்ன் ரேஷனலிஸ்டு அதிக அளவில் பரவும் வகை செய்தல் பெருக வேண்டும்.

தோழர்களே, நமது கழகத்துக்கு, நமது தொண்டர்களுக்கு நமது தலைவருக்கு பணி மேலும் மேலும் கூடிக் கொண்டே போகின்றது. தயாராவீர்! தயாராவீர்!!

----------- மின்சாரம்,விடுதலை ஞாயிறு மலர், 04-05-2011


No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]