வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Thursday, August 19, 2010

அறிவு ஆசான் பெரியாரை என்றும் நினைவில் வைத்திருக்கும் பார்ப்பனர்கள்

அய்யா தந்தை பெரியாரின் பார்ப்பனிய வேரருப்பினால் தமிழ்நாட்டு பார்ப்பனர்கள் குய்யோ முறையோ என்று அந்தகாலம் தொட்டு இந்தக்காலம் வரை அய்யாவை நினைவில் வைத்துகொண்டுள்ளர்கள். அது முதல் மகிழ்ச்சி. தமிழ் நாட்டில் பிறந்த பார்ப்பனர் வீட்டில் பெரியார் படம் இருக்கோ இல்லையோ அவர்கள் உள் மனதில் அவர் நினைவு நீண்டுகொண்டுதான் இருக்கிறது  என்பது மட்டும் நன்கு விளங்குகிறது.அவர்கள் மூச்சுக்கு 32 தடவை ராமசாமி..ராமசாமி என்று கூறும்போதே..அய்யாவின் தாக்கத்தை நன்கு உணரமுடிகிறது. அய்யாவை என்றும் நினைவில் வைத்திருக்கும் பார்ப்பனர்களுக்கு பாராட்டுகள்....அறிவு ஆசானின் அடி எப்பேர்பட்ட அடி....அய்யாவை மறக்ககூடாது பார்பனர்கள்.... சரி ஆஸ்திகம் நாஸ்திகம் பற்றி அண்ணா என்ன கூறியுள்ளார் என்பதை பார்ப்போம்....

1. ஆஸ்திகம் என்று உண்டானதோ, அன்றே நாஸ்தீகமும் உண்டாயிற்று.

2. ஆஸ்திகம் அறியாமை, பயம், சுயநலம் இவற்றில் முளைத்து; நாஸ்திகம் அறிவின் விசாரணைகளில் முளைத்தது.

3. ஆஸ்திகம் அறிவைப் பாழ்படுத்துகிறது. நாஸ்திகம் அறிவை ஓங்கச் செய்கிறது.

4. ஆஸ்திகம் உலகை மிருகநிலைக்கு அழைத்துச் செல்கிறது; நாஸ்திகம் அதை நாகரிக நிலைக்கு அழைத்துச் செல்கிறது.

5. ஆஸ்திகம் மக்களை அவமதிக்கிறது. நாஸ்திகம் மக்களை மேன்மைப்படுத்துகிறது.

6. ஆஸ்திகம் மக்களை அழியவைக்கும் நாஸ்திகம் மக்களை வாழவைக்கும்.

7. ஆஸ்திகத்தால் வறுமை, பிணி முதலியன ஓங்கும் நாஸ்திகத்தால் அவை அழியும்.

8. ஆஸ்திகமும நாஸ்திகமும் என்றும் தீராப்பகை கொண்டன.

9. ஆஸ்திகத்திற்கு அறியாமையும் அரசாங்கமும், முதலாளித்வமும் துணை. நாஸ்திகத்திற்குப் பகுத்தறிவே (விஞ்ஞானம்) துணை.

10. ஆஸ்திகம் அழியக் கூடியது நாஸ்திகம் என்றும் அழியாதது.

11. ஆஸ்திகம் சில சமயம் சாஸ்திகத்தைப் புறம்பே அழிக்கும் ஆனால், நாஸ்திகமோ ஆஸ்திகத்தை உள்ளும் புறமும் அழிக்கவல்லது.

12. ஆஸ்திகத்தின் வெற்றி தற்காலிக வெற்றியாகும் நாஸ்திகத்தின் வெற்றியோ நிலைபெற்ற வெற்றியாகும்.

13. ஆஸ்திக நாஸ்திகப் போராட்டத்தின் லாப நஷ்டக் கணக்கு. ஆஸ்திகத்திற்குத் தோல்வியும், நாஸ்திகத்திற்கு வெற்றியும் சரித்திர முறைப்படி இதுவரை உண்டு, இனியும் உண்டு.

14. ஒரு மதத்தின்படி அதனை நம்பாத மற்ற மதங்கள் நாஸ்திகமானபடியால், எல்லா மதத்தையும் நம்பாத முழு நாஸ்திகமோ நன்மையளிக்கும் பெருமையளிக்கும், ஆகையால், அம்முழு நாஸ்திகமே எங்கும் பரவுக! ஓங்குக!! (--------அறிஞர் அண்ணா, திராவிட நாடு 31.10.1943)
                                                                                                                                                    

10 comments:

subra said...

நாத்திகத்திற்கு அருமையான விளக்கம்

Muthukumara Rajan said...

1. ஆஸ்திகம் என்று உண்டானதோ, அன்றே நாஸ்தீகமும் உண்டாயிற்று\
மிக சரி

2. ஆஸ்திகம் அறியாமை, பயம், சுயநலம் இவற்றில் முளைத்து; நாஸ்திகம் அறிவின் விசாரணைகளில் முளைத்தது.
ஆஸ்திகம் மனதின் அடிப்படையில் thondriythu அறிவின் அடிப்படையில் வளரவது .
நாஸ்திகம் மடமையால் வருவது
amil
3. ஆஸ்திகம் அறிவைப் பாழ்படுத்துகிறது. நாஸ்திகம் அறிவை ஓங்கச் செய்கிறது.
நாஸ்திகம் தமிழகத்தில் அறிவை பாழ்படுத்திய அளவுக்கு ஆஸ்திகம் பாழ்படுத்த வில்லை

4. ஆஸ்திகம் உலகை மிருகநிலைக்கு அழைத்துச் செல்கிறது; நாஸ்திகம் அதை நாகரிக நிலைக்கு அழைத்துச் செல்கிறது.
தங்கள் அகராதியில் நாகரிகம் என்றால் என்ன

5. ஆஸ்திகம் மக்களை அவமதிக்கிறது. நாஸ்திகம் மக்களை மேன்மைப்படுத்துகிறது.
நாஸ்திகம் மலை மென்படுத்து கிறதா.. முட்டாள் , தேவடியா பசங்க என்ன பல நுறு நல்ல தமிழ் கலை சொற்கள் நாஸ்திகம் வந்ததால் தன மேடைக்கு வந்தது

6. ஆஸ்திகம் மக்களை அழியவைக்கும் நாஸ்திகம் மக்களை வாழவைக்கும்.
நாஸ்திகம் - ரொம்ப சரி கருணாநிதியும் வீரமணி மற்ற அல்லக்கைகள் மட்டும் மக்கள் என்றால் மிக சரி
.
7. ஆஸ்திகத்தால் வறுமை, பிணி முதலியன ஓங்கும் நாஸ்திகத்தால் அவை அழியும்.
நாஸ்திகம் - தமிழ்நாடில இது எல்லாம் இல்ல யா

8. ஆஸ்திகமும நாஸ்திகமும் என்றும் தீராப்பகை கொண்டன.
அப்படியா

9. ஆஸ்திகத்திற்கு அறியாமையும் அரசாங்கமும், முதலாளித்வமும் துணை. நாஸ்திகத்திற்குப் பகுத்தறிவே (விஞ்ஞானம்) துணை.
பகுத்தறிவு என்றால் என்ன என்பதை அறியவும்

10. ஆஸ்திகம் அழியக் கூடியது நாஸ்திகம் என்றும் அழியாதது.
எப்ப்போம் அழியும்

11. ஆஸ்திகம் சில சமயம் சாஸ்திகத்தைப் புறம்பே அழிக்கும் ஆனால், நாஸ்திகமோ ஆஸ்திகத்தை உள்ளும் புறமும் அழிக்கவல்லது.
ஒனும் பண்ண மாதிரி தெரியலய

12. ஆஸ்திகத்தின் வெற்றி தற்காலிக வெற்றியாகும் நாஸ்திகத்தின் வெற்றியோ நிலைபெற்ற வெற்றியாகும்.
நாஸ்திகம் - பெரியார் தாசன் மணிவண்ணன் இடம் கற்கவும்

13. ஆஸ்திக நாஸ்திகப் போராட்டத்தின் லாப நஷ்டக் கணக்கு. ஆஸ்திகத்திற்குத் தோல்வியும், நாஸ்திகத்திற்கு வெற்றியும் சரித்திர முறைப்படி இதுவரை உண்டு, இனியும் உண்டு.

புரியவில்லை

14. ஒரு மதத்தின்படி அதனை நம்பாத மற்ற மதங்கள் நாஸ்திகமானபடியால், எல்லா மதத்தையும் நம்பாத முழு நாஸ்திகமோ நன்மையளிக்கும் பெருமையளிக்கும், ஆகையால், அம்முழு நாஸ்திகமே எங்கும் பரவுக! ஓங்குக!! (--------அறிஞர் அண்ணா, திராவிட நாடு 31.10.1943)

பரவினால் பார்க்கலாம்

பரணீதரன் said...

/* 13. ஆஸ்திக நாஸ்திகப் போராட்டத்தின் லாப நஷ்டக் கணக்கு. ஆஸ்திகத்திற்குத் தோல்வியும், நாஸ்திகத்திற்கு வெற்றியும் சரித்திர முறைப்படி இதுவரை உண்டு, இனியும் உண்டு.

புரியவில்லை */

புரியாது எப்படி புரியும் அதன் ஆஸ்திகம் மூளையை மழுங்கடித்து வைத்திருகிறதே.....நீங்களே ஒரு நல்ல எடுத்துகாட்டு..ஆஸ்திகம் பற்றிய
இந்த 14 உங்களுக்கு பொருந்தும்

Muthukumara Rajan said...

மற்ற எல்லா கருத்துகளையும் ஒத்துக் கொண்டமைக்கு நன்றி

பரணீதரன் said...

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்....அதன் மூளை மழுங்கிவிட்டது என்று சொல்லி இருக்கேனே...அப்புறம் எப்படி என்னுடைய பதில் புரியும்......

Muthukumara Rajan said...

ஆட தெரியாத ஆட்டக்காரி தெரு கோணல்னு சொன்னாலம் உங்கள் பதிலை பார்த்தல் அதுதான் ஞாபகம் வருகிறது

வாழ்க உண்மையான பகுத்தறிவு
அழியட்டும் திராவிட இயக்க போலி பகுத்தறிவு வேடம்

தமிழுடன்
முத்துக்குமார்

பரணீதரன் said...

/* ஆட தெரியாத ஆட்டக்காரி தெரு கோணல்னு சொன்னாலம் உங்கள் பதிலை பார்த்தல் அதுதான் ஞாபகம் வருகிறது */

பழமொழி சொன்னால் பதில் புரிந்துவிட்டது என்று அர்த்தம் ஆகிவிடுமோ தோழர்...வாயால் சிரிக்க முடியவில்லை .........

Muthukumara Rajan said...

அப்படினா பார்பனர்களில் ஒரு நல்லவர் காட்டினால் எல்லா பார்பனர்களும் நல்வர்கள் என்ன நண்பா

. said...

gj

நம்பி said...

//.muthukumar said..

அப்படினா பார்பனர்களில் ஒரு நல்லவர் காட்டினால் எல்லா பார்பனர்களும் நல்வர்கள் என்ன நண்பா
7:43 PM //
அப்படியென்றால் பார்ப்பனர்கள் அனைவரும் கெட்டவர்கள்...என்பது 100 க்கு 100 உண்மைதானே!....அது தான் அந்தப் பக்கமே ஒத்துக்கொண்டாயிற்றே!

.muthukumar said..
பார்பனர்களில் ஒரு நல்லவர் காட்டினால்....
.muthukumar said..
பார்பனர்களில் ஒரு நல்லவர் காட்டினால்....
.muthukumar said..
பார்பனர்களில் ஒரு நல்லவர் காட்டினால்....

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]