வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Monday, August 16, 2010

ஆன்மிகத்துக்கும் சமத்துவத்துக்கும் தொடர்பு உண்டா?

கேள்வி: போட்டியும், பொறாமையும் நிறைந்த உலகத்தைத் திருத்த ஏற்றது ஆன்மிகமா சமத்துவமா?

பதில்: சமத்துவம்தான் என நினைத்து செயல்பட்ட இடங்களில் நாடுகளில் எல் லாம் அக்கொள்கை அடிபட்டு பொடி, பொடியாகிவிட்டதே!

(தினமலர், வாரமலர் கேள்வி பதில் பகுதி 15.8.2010).

தினமலர் வகையறா சொல்லுவதைப் பார்த்தால் ஆன்மிகம்தான் போட்டி, பொறாமையற்ற சமத்துவத் துக்கான அடித்தளம் அப்படிதானே!

உலக வரலாற்றை எடுத் துக்கொண்டால் மதக் கார ணங்களுக்காக மனித ரத்தம் சிந்தப்பட்டதுபோல் வேறு எதற்காகவும் சிந்தப்பட வில்லை என்பதுதான் வரலாறு.

பார்ப்பனர்கள் போற்றும் மனுதர்மம் என்ன சொல்லு கிறது?

சூத்திரன் மற்ற மூன்று வருணத்தாருக்கும் பொறா மையின்றி பணி செய்வதை முக்கியமான தர்மமாக ஏற்படுத்தினார் (மனு அத்தி யாயம் 1 சுலோகம் 91).

சூத்திரனின் கெதியைப் பார்த்தீர்களா? மற்ற மூன்று வருணத்தாருக்கு பொறாமையின்றிப் பணி செய்ய வேண்டுமாம். பொறா மையின்றி என்பதுதான் மிக முக்கியம். அப்படி பொறாமை யின்றிப் பணி செய்வதுதான் அவனுக்குத் தர்மமாம்.

இந்த யோக்கியதையில் போட்டியும், பொறாமையும் உள்ள உலகத்தைத் திருத்த ஆன்மிகம்தான் உதவுமாம்.

பொறாமையின்றிப் பணி செய்வதை தர்மம் ஆக்கிய வெட்கம் கெட்டவர்கள் பொறாமை பற்றிப் பேசுவது தான் வேடிக்கை!

அடிமைப் பணியைப் பொறாமையின்றி ஆற்றுவது தருமம் என்று ஆணி அடித் துச் சொன்ன பிறகு பொறா மையற்ற உலகைப்பற்றிப் பேசுவது அசல் வஞ்சகம் அல்லவா!

தினமலர் தூக்கிப் பிடிக் கும் இந்து மத ஆன்மிகத்தின் கொள்கை என்ன? சதுர் வர்ணம் மயா சிருஷ்டம்! தானே. நான்கு வகையான வருணங்களையும் உண் டாக்கியது நானேதான் அதனை மாற்றியமைக்க நானே முயற்சித்தாலும், அது முடியாத காரியம் என்று சொல்லப்படவில்லையா? (கீதை அத்தியாயம் 4, சுலோகம் 13).

என்ன அந்த வருண தருமம்? பிறப்பின் அடிப்படை யில் உயர்ஜாதி, தாழ்ந்த ஜாதி என்பதுதானே! மனிதன் செத்தாலும் ஜாதி சாகாது சுடுகாடு வரை அந்தப் பேதம் உண்டு என்பதை மறுக்க முடியுமா?

ஏன், இவர்கள் தலையில் கரகமாக வைத்து ஆடும் இந்து மதத்துக்குள்ளேயே சைவ வைணவ சண்டை சாதாரணமானதுதானா?

வைணவத்துக்குள்ளும் வடகலை, தென்கலை சண்டை காஞ்சிபுரம் யானைக்கு வடகலை நாமம் போடுவதா? தென்கலை நாமம் போடுவதா? என்ற சர்ச்சை லண்டன் பிரிவி கவுன்சில்வரை சென்று சிரிப் பாய்ச் சிரித்ததே! இதற்குள் போட்டிகளும், பொறாமை களும் கொப்பளித்துக் கொண் டிருக்கவில்லையா?

அர்த்தமுள்ள இந்து மதத்தில் தாழ்த்தப்பட்டவரும் அர்ச்சகராக உரிமை உண்டு என்ற சட்டத்தை உச்சநீதி மன்றத்தில் இன்றுவரை வழக்குப் போட்டு முட்டுக் கட்டை போட்டுக் கொண்டி ருக்கும் முப்புரி கூட்டமா ஆன்மிகம்தான் சமத்துவத் திற்கான தாய்ப்பால் என்ப தைவிட அதிகபட்சப் பித்த லாட்டம் வேறு ஒன்று இருக்க முடியுமா?

--------- விடுதலை (16.08.2010) மயிலாடன்
                                                                                                                                                      

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]