வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, August 18, 2010

திராவிடர் கழகத் தலைவர் என்றாலே தினமலருக்கு வேப்பங்காய்....

தினமலருக்கு திராவிடர் கழகமும் அதன் தலைமையும் என்றால் வேப்பன்காயிதான்...... இதோ இன்றைய டவுட் தனபாலு பகுதியில் தினமல(ம்)ர் அதன் வேகத்தை மிகவும் பரிதாபத்துடன் கூறியுள்ளது.....இதோ அந்த பகுதி

முதல்வர் கருணாநிதி: நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, என்னை விழுப்புரத்துக்கு அழைத்துச் சென்று தனியாக நாற்காலி ஒன்றைப் போட்டு, நான் முதல்வராக வந்தால்தான், சமூக நீதியைக் காப்பாற்ற முடியுமென்று முழக்கமிட்ட ராமதாஸ், தற்போது, "சமூக நீதியைப் பற்றி கருணாநிதி பேசலாமா' என்று கேட்கிறார்.

டவுட் தனபாலு: ஏதோ அவர் மட்டும் தான் இப்படிப் பேசறது மாதிரி சொல்றீங்க... ஜெயலலிதாவுக்கு, "சமூக நீதி காத்த வீராங்கனை'ன்னு பட்டம் கொடுத்த ஒரு தலைவர் இப்ப உங்க கூட ஒட்டிட்டு, நீங்கதான், சமூகநீதி காத்த வீரர்னு மாத்தி சொல்லலையா...!

எப்ப சமூகநீதி காத்த வீரர்ன்னு மாத்தி சொன்னாருன்னு மட்டும் தினமலத்திடம் கேட்காதிர்கள். அது அப்படித்தான்....ஆதாரம் இல்லாமல் மொட்டை தாதன் குட்டையில் விழுந்தான் நெட்டை கையன் வேடிக்கை பார்த்தான் என்று தான் எழுதும்...

ஆசிரியர் அவர்கள் தன்னுடைய அறிக்கையிலேயே அந்த அம்மாவின் பேரை சொல்லி அவர்கள் ஆட்சியில் தான் 69 %இடஒதிக்கீடு நிறைவேற்றப்பட்டது என்று கூறி விட்டு இப்போதுள்ள ஆட்சி அந்த இடஒதிகீடை பாதுகாக்க தக்க நடவைக்கை எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.   திராவிட இயக்க தலைவர்கள் அனைவரும் சமூக நீதி காத்தவர்கள் இன்றும்  சமூக நீதிக்கொடி கிழே விழாமல்  பாதுகாத்து வருபவர்கள். அனால் அந்த அம்மாவுக்கு ஏன் அந்த பட்டம் என்றால் ஒரு பார்ப்பனர் 69 % இடஒதிக்கீடுக்கு ஒத்துழைத்தார் என்ற ஒரே காரணத்தால் தான். உண்மை இப்படி இருக்க தினமலர் ஏதேதோ உளறுகிறது.

எப்படியோ மகிழ்ச்சி...பார்ப்பனர்களும் அவா பத்திரிக்கையும் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை புகழ்ந்தால் தான் நாங்கள் சந்தேகப்படவேண்டி  வரும்...ஆசிரியர் என்றும் எங்கள் கொள்கை வழிகாட்டிதான்.
                                                                                                                                                        

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]