வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Thursday, February 25, 2010

செவ்வாய் கிரகமும் செவ்வாய் தோஷமும்

"செவ்வாய் கிரகமும் செவ்வாய் தோஷமும்" என்ற நூலை படித்தேன். பல ஜோதிட புளுகளுக்கு கேள்விகள் மற்றும் பதில்கள் அறிவியல் ஆதரங்களுடன்  விளக்கங்களுடன் எழுதி உள்ளார் இந்த நூலின் ஆசிரியர் ஏற்காடு இளங்கோவன். அதனை தொகுத்து ஒரு பதிவுதான் இது.

மனித வாழ்க்கையில் மிக முக்கியமானது திருமணம் ஆகும். ஜோதிடத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் திருமணத்தின் போது ஜாதக பொருத்தம் பார்கிறார்கள். செவ்வாய் தோஷம் உள்ள ஒரு ஜாதகத்திற்கு அதே தோசம் உள்ள ஒருவருடன் திருமணம் செய்ய வேண்டும். இல்லையேல் ஆபத்து. பெண்ணாக இருந்தால் கணவருக்கும் மாமியாருக்கும் ஆபத்து. மேலும் விவகாரத்து, பிரிவு மரணம் போன்ற பல நடக்கும், பிறக்கும் குழந்தைக்கு ஆபத்து எனவும் சொல்லுகிறார்கள். இதனை நம்பவும் ஒரு கூட்டம்.


கிலோ கணக்கில் தங்கமும், டன் கணக்கில் சீர்களும் செய்யத் தயாரானால் அதே செவ்வாய் தோஷம் கொண்ட பெண்ணை திருமணம் செய்துகொண்டு போவது எப்படி? நாள் பார்த்து, நட்சத்திரம் பார்த்து, பார்பனர்கள் வேதம் ஓத நடந்த கண்ணகி கோவலன் வாழ்வில் சோக முடிவுகள் ஏற்படவில்லையா? நடந்த எல்ல விவகாரதுகளும் செவ்வாய் தோஷம் உள்ள ஜாதக காரர்களுடயாத? விதவைகள் எல்லோருன் செவ்வாய் தோசம் உடையவர்களா? உடல் ஆரோக்கியம் குடும்ப சூழல் என பல காரணிகளால் பிரச்சனைகள் ஏற்படலாம். அதற்கும் செவ்வாய் தோஷம் என முடிச்சு போடுவது அறிவீனம் இல்லையா?

அதாவது ஜாதகத்தில் லக்கனம், ஜென்மராசி மற்றும் சந்திரன் இருக்கும் இடம் ஆகிய வீடுகளில் செவ்வாய் இருந்தால் அது செவ்வாய் தோஷம் உள்ள சாதகம் ஆகும். உதாரணமாக மேஷ லக்கன ஜாதககாரருக்கு ரிசபம்,கடகம்,துலாம்,விருச்சிகம்,மீனம் ஆகிய ராசிகளில் செவ்வாய் இருப்பின் அவர் செவ்வாய் தோஷம் உடையவராவர்.

இப்படி பார்க்கும்போது 12 ராசிகளில் 6 ராசிகள் செவ்வாய் தோஷம் உடையதாகி விடுகிறது. அப்படி என்றால் பிறப்பதில் பாதிப் பேர் (50 சதவீதம்) தோஷம் உடையவர் ஆகிவிடுகிறார்கள். இப்படி பாதிப் பேர் தோஷம் உடையவர் என சொல்லிவிட்டால் ஜோதிடத்தின் மீது உள்ள நம்பிக்கை போய்விடும் அல்லவா? ஆகவே இதில் விதிவிலக்குகள் கொடுக்கிறார்கள். சனி,ராகு,கேது,குரு,சூரியன் செவ்வாயுடன் இருந்தால் அந்த ஜாதகம் செவ்வாய் இல்லாதது என்பர். மேலும் சிம்மம்,கடகம் ஆகிய வீடுகள் தொசமற்றதாகி விடுகின்றன. இது போல் இன்னும் பல பரிகாரங்கள் உள்ளன. அனால் இதையும் மீறி செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் பிறக்கீரார்கள்.

எப்படி பார்த்தாலும் தினமும் இரண்டு மணி நேரத்தில் பிறக்கிற குழந்தைகள் செவ்வாய் தோஷம் உடயவர்கலகா பிறக்கின்றனர். எப்படி என்றால் சூரியன் ஒவ்வொரு ராசியிலும் இரண்டுமணி நேரம் இருப்பார். அவர் 12 ராசியை கடக்க 24 மணி நேரம் ஆகிறது. ஆக பல நிவர்த்திகள் கிடைத்தாலும் குறைந்தது இரண்டு மணிநேரத்தில் செவ்வாய் தோசம் உடைய குழந்தைகள் பிறப்பார்.


2007 ம் ஆண்டு இந்தியாவில் ஒரு நிமிடத்திற்கு 30 குழந்தைகள் பிறந்தன. ஒரு மணிக்கு 1815 குழந்தைகளும், ஒரு நாளைக்கு 43560 குழந்தைகளும் பிறந்தன. இதில் குறைந்தது தினமும் 3630 குழந்தைகள் தோசமுடைய குழந்தைகளாகும். ஆனால் உண்மையில் மிக அதிகமானவர்கள் செவ்வாய் தோசம் உடயவர்கலகின்றனர். இதனை பார்க்கும் போது செவ்வாய் தோஷம் இவர்கள் வாழ்கையை கேள்விக்கு உள்ளக்கி விடுகிறது. ஆனால் உண்மையில் செவ்வாய் தோஷம் பற்றி எல்ல ஜோதிட சாஸ்திரங்களும் வலியுறித்தி சொல்லப்படவில்லை என சோதிட ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

இந்த ஜோதிட புளுகுகள் இத்துடன் விட்டுவைக்கவில்லை R .H நெகடிவ் ரத்தத்துடன் இந்த தோசத்தை இன்னைத்து வலு சேர்க்க பார்கிறார்கள். புளுகு மூட்டைகள்.


இரத்த வகைகளில் R.H நெகடிவ் இரதம் உடையவருக்கு அதே இரத்த வகையை சார்ந்தவருடன் தான் திருமணம் செய்ய வேண்டும்.அப்படி இல்லை என்றால் குழந்தை பிறக்காது .அல்லது பிறந்த குழந்தை இறந்து விடும் .ஆனால் தற்போது இதற்க்கு ஊசி மருந்து கண்டு பிடித்து விட்டார்கள்.இந்த பிரச்சனைக்கு முடிவு ஏற்பட துடன்கிவிட்டது.

ஆனால் ஜோதிடர்கள் ஜோதிடம் உண்மை எனக் கூறுவதற்காக R.H நெகடிவ் இரத்த வகிக்கும்,செவ்வாய் தோசத்திற்கும் தொடர்பு உள்ளது என கூறி வருகிறார்கள்.செவ்வாய் கிரகம் இரத்த நிறம் கொண்டது இதற்கும் இரத்தத்திற்கும் தொடர்பு உண்டு செவ்வாய் தோஷம் உடையவர்களுக்கு R.H நெகடிவ் இரத்த வகை உள்ளது என்கிறார்கள்.

ஆனால் அதற்க்கான ஆதாரம் எதுவும் கூறவில்லை .ஆனால் இதற்காக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்தியாவில் சுமார் 3 முதல் 4 சதவிதம் பேர் R.H நெகடிவ் ரத்த வகை கொண்டவராக உள்ளனர்.செவ்வாய் தோஷம் உடையவர்களோ யார் யார் என ஜோதிடர்கள் கூறினார்களோ அவர்களின் ஜாதகத்தை பெற்று அவர்களுக்கு இரத்த வகையை பரிசோதித்து பார்த்துள்ளனர்.இதில் 99 சதவீதத்திற்கு மேலானவர்களுக்கு RH இரத்த வகை இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

பல்வேறு பிரச்சனைக்கு காரணம் சமுக பொருளாதார பிரச்சனைகள் தாம் என்பது நன்கு ஆலோசனை செய்பவர்களுக்குப் புலனாகும்.நோய்க்கு காரணம் கிருமிகள் தான் என்பதை ஏற்கனவே விஞ்ஞானிகள் நிருபித்துள்ளனர்.அதனால் தான் நோய் வந்தவுடன் மருத்துவரை நாடுகிறார்கள்.

வளர்ந்திருக்கும் அறிவியல் வளர்ச்சியை கொண்டு மனிதனின் பிரச்சனைகளை தீர்க்க முடியும். பிரச்சனைக்கான காரண காரியங்களை கண்டறிந்து அதனை தீர்ப்பதற்கு முயற்சிமேர்க்கொள்ள வேண்டும். எந்த செவ்வாய் கிரகத்தால் ஆபத்து, தோஷம் என்கிறோமோ அதே செவ்வாய் கிரகத்தில் மனிதன் தன் கால்களை விரைவில் பதிக்கப்போகிறான். அங்கெ தங்கி ஆய்வு செய்ய ஆய்வகமும் கட்டப்போகிறான். இந்த மூட நம்பிக்கையில் இருந்து விடுதலை பெற்று பகுத்தறிவோடு சிந்தித்து ஆவலோடு எதிர்பார்த்து காத்திருப்போம்

4 comments:

வால்பையன் said...

புத்தகம் எங்கே கிடைக்கும்!?

பரணீதரன் said...

இந்த நூல் நான் புத்தக கண்காட்சியில் வாங்கினேன். இதனை வெளியிட்டவர்கள் முகவரி

அறிவியல் வெளியீடு,
245 , அவ்வை சண்முகம் சாலை,
கோபாலபுரம்,சென்னை - 600086

மேல் உள்ள முகவரிக்கு வேண்டுமானால் தொடர்பு கொண்டு பாருங்கள் வால்பையன்.

Unknown said...

தமிழ்மணம் விருது முதல் சுற்றில் தேர்வாகியிருப்பதற்கு வாழ்த்துக்கள்...

பரணீதரன் said...

நன்றி தோழர்..நானே பார்க்கல அத....தெரிவித்தமைக்கு நன்றி

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]