வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, February 06, 2010

தள்ளாடும் மார்க்ஸியம்

அரசியல் ரீதியாக மேற்கு வங்காளம், கேரளாவில் பெரும் நெருக்கடி முட்டுச் சந்தில் சிக்கிக் கொண்ட மார்க்ஸிஸ்ட். கம்யூனிஸ்-ட் கட்சி, சித்தாந்த நெருக்கடியிலும் மாட்டிக் கொண்டு விழிபிதுங்கி நிற்கிறது.
கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் தோழர் பிரகாஷ்காரத் மத-சம்பந்தமான கட்சியின் நிலைப்பாடு என்று ஒரு பரிதாபகரமான விளக்கத்தைக் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட்க் கட்சியின் நாடாளுமன்ற முன்-னாள் உறுப்பினர் டாக்டர் கே.எஸ். மனோஜ் கட்சியை விட்டு வெளியேறுவதாக அறிவித்-தார்.
அதற்கு அவர் கூறும் காரணம் என்ன?
கட்சி தனது நெறிப்படுத்தும் இயக்க ஆவணத்தில் மத நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது என்று கட்சி உறுப்பினர்களுக்கு வழிகாட்டியுள்ளது. இது தாம் கொண்டி-ருக்கும் உறுதியான மத நம்பிக்கைக்கு எதிராக இருப்பதாகக் கூறி கட்சியிலிருந்து விலகியுள்-ளார். இதற்காகத்தான் முழு கட்டுரை ஒன்றை கட்சியின் அகில இந்திய செயலாளர் தோழர் பிரகாஷ்காரத் மூச்சுப் பிடித்துக் கொண்டு எழுதுகிறார். (தீக்கதிர் 27.1.2010)
கடவுள் நம்பிக்கை மத நம்பிக்கை உள்ள-வர்கள் கட்சியில் தாராளமாக சேரலாம் _ அதில் ஒன்றும் அட்டியில்லை என்று கட்சி-யின் கதவைத் தாராளமாகவே திறந்து விட்-டுள்ளார்.
கட்சியில் உள்ளவர்களை இரு பிரிவு-களாகப் பிரித்துக் காட்டுகிறார்.
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்-பினர்களிடையே மத நம்பிக்கை கொண்ட சிலர் இருக்கலாம். அவர்கள் தொழி-லாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். விவசாயிகள் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் உழைக்-கும் மக்களின் இதர பிரிவு-களைச் சேர்ந்த-வர்கள். அவர்களிடையே சிலர் கோவிலுக்குச் செல்லலாம், மசூதிக்குச் செல்லலாம்; அல்லது தேவாலயத்திற்குச் செல்லலாம்.
இன்னொரு பிரிவினர் கட்சியில் இருக்கிறார் கள். கட்சியின் முன்னணி ஊழியர்கள், மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் செயல் பாடுகள் தொடர்பானது.
அவர்கள் மத நிகழ்ச்சிகளையோ அல்லது தனிப்பட்ட முறையிலான மதச் சடங்கு-களையோ நடத்தக் கூடாது என்றும் வலி-யுறுத்தப்பட்டுள்ளது. கட்சியின் மாநிலக் குழு, மாவட்டக் குழு, மண்டலக் குழுக்கள் போன்ற மட்டங்களில் செயல்படும் தலைவர்-களைப் போன்ற கட்சியின் முன்னணி ஊழியர்கள் தங்களது சொந்த வாழ்விலும், சமூக வாழ்விலும் முற்போக்கான மாண்பு-களை உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறுகிறார் தோழர் பிரகாஷ்காரத் கொள்கைகளைக் கடைப்பிடிப்பதில் இரண்டு வகையானவர்கள் என்ற விசித்திரத்தை மார்க்ஸியவாதிகள் ஏற்படுத்திக் கொண்டி-ருப்பதாகத் தெரிகிறது. அது ஒருபுறம் இருக்-கட்டும். தோழர் பிரகாஷ்காரத் கூறியுள்ள அந்த அளவுகோல்படி கட்சியைவிட்டு விலகுவதாகக் கூறியுள்ள டாக்டர் மனோஜ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற நிலையில் இருந்தவராயிற்றே!
அவர் கண்டிப்பாக மார்க்ஸிய கொள்-கையைக் கடைப்பிடிக்கக் கடமைப்பட்டவர்-தானே! மத நம்பிக்கைகளைத் துறந்தவராக இருக்க வேண்டியது அவசியம்தானே! அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது இதனைக் கடைப்பிடிக்கவில்லையா? அல்லது கட்சியின் நெறிப்பாட்டு முறைகளைத் தெரிந்து வைத்திருக்கவில்லையா?
நாடாளுமன்றத்தில் கட்சியின் சார்பில் அவர் தேர்வு செய்யப்பட்டபோது கட்சியின் நெறிமுறை பற்றிய ஆவணத்தில் கையொப்-பம் பெறப்படவில்லையா? அந்த விதிமுறை கட்சியில் இருக்கிறதா இல்லையா என்கிற கேள்வி எழுகிறது. இவரைப்போலவே இதற்குமுன்பும்கூட கண்ணனூர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அப்துல்லாகுப்பு இதே காரணத்தைக் கூறி கட்சியிலிருந்து வெளியேறியதுண்டு.
இவர்களாவது முன்னாள் உறுப்பினர்கள். மாநில அமைச்சர்களின் கொள்கை _ கோட்பாடு எந்த லட்சணத்தில் இருக்கிறது.
படத்தோடு வெளியிட்டதே டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு (30.12.2009 பக்கம் 9).
கேரளாவில் சாஸ்தம் கோட்டா என்ற இடத்தில் உள்ள சாஸ்தா கோயிலில் உள்ள குரங்கு ஒன்று செத்துப் போய் விட்டதாம். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கேரள மாநிலத்தின் நீர்ப்பாசனத்-துறை அமைச்சர் என்.கே. பிரேமச்சந்திரன் மற்றும் சி.பி.எம். சட்டப் பேரவை உறுப்பினர் கோவூர் குஞ்சுமோன் ஆகியோர் செத்துப் போன குரங்குக்கு செங்கொடி போர்த்தி புரட்சி வணக்கத்தைத் தெரிவித்துள்ளனரே -_ இதற்கு என்ன சமாதானமாம்?
தோழர் பிரகாஷ்காரத் அளவுகோல்படி கட்சியின் நெறிப்படுத்தும் ஆவணத்துக்கு உட்பட்ட நிலையில் உள்ளவரா _ இல்லையா?
தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் கட்சியின் நெறிப்படுத்தும் ஆவணத்துக்குக் கட்டுப்பட்டவர் என்று கூறப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் ஒருவரும், சட்டப் பேரவை உறுப்பினர் ஒருவரும் குரங்குக்குச் செங்கொடி போர்த்தி புரட்சியின் சின்னத்-தைக் கொச்சைப்படுத்தியுள்ளனரே _ இவர்-கள்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
மேற்குவங்கத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராகயிருந்த சுபாஷ் சக்ரவர்த்தி காளி கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடன் கழித்தாரே! உண்டியலில் காணிக்கை செலுத்-தினாரே! (2006 செப்டம்பர்)
அவர் கட்சியின் நெறிப்படுத்தும் ஆவ-ணத்துக்குக் கட்டுப்பட்டவர் இல்லையா?
கட்சியின் மூத்த தலைவர் மறைந்த ஜோதிபாசு அதுபற்றிக் கடுமையாக விமர்சித்தபோது அந்த அமைச்சர் அளித்த பதில் என்ன?
நான் முதலில் ஒரு இந்து, அடுத்து பிரா-மணன், மரபுகளை என்னால் மீற முடி-யாது. அடுத்துதான் நான் ஒரு கம்யூ-னிஸ்ட் என்று கூறினாரே _ எவ்வளவு பெரிய அதிர்ச்சிக்குரியது? கடவுள், மதம் மட்டுமல்ல ஜாதிய உணர்வும் அல்லவா தலை கொழுத்துத் துள்ளு-கிறது. இதையும்கூட விட்டுத் தள்ளு-வோம். சோம்நாத் சட்டர்ஜி ஒரு காலத்தில் எப்படிப்பட்ட மார்க்ஸிஸ்ட்- தலைவர்! அந்தக் கால கட்டத்-திலேயே தன் பேரனுக்கு அழைப்புப் போட்டுப் பூணூல் கல்யாணம் நடத்-தினாரே!
இந்தியத் துணைக் கண்டத்தில் பார்ப்பனியத்தை சரியாக அடையாளம் கண்டு புரட்டித் தள்ளாத எந்தக் கட்சிக்-கும் இந்த விபத்து ஏற்பட்டே தீரும்!
தேர்தல் அரசியல் என்ற நிலை வந்து விட்ட பிறகு சறுக்கல்களுக்கு சமா-தானம் சொல்ல முயற்சிக்கும் ஒரு நிலை ஏற்பட்டே தீரும். அதற்கு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் விதிவிலக்கல்ல என்பதே உண்மை!

விடுதலை மின்சாரம் (06.02.2010)

1 comment:

Muthukumara Rajan said...

இந்தியாவில் மார்க்ஸியம் தோல்விக்கான காரணங்கள்

கொள்கை இல்லா கூட்டணி

முதலாளித்துவ எத்ரிப்பு என்ற பேரில் அமெரிக்க என்ன செய்தாலும் தவறு சீனா செய்தால் சரி

நாட்டின் மீது பற்று இல்லாமை

தற்கால பொருளாதார மாற்றகளுக்கு ஏற்ப மாறாமல் இருந்தது

இந்திய தொழிலார் மன நிலை

மார்க்ஸியம் ஆளும் மாநிலங்களின் வளர்ச்சி மந்தநிலை

ரஷ்யா வெளி நாடினவரின் சதியால் சிதறியது

மார்க்ஸியம் பற்றிய தவறான பிரச்சரங்கள்

மார்க்ஸியம் வாதிகளின் வெட்டி பேச்சுக்கள்

போலி மார்க்ஸியம் வாதிகள்

------------------------------------------------------------------

உலகனின் மிக சிறந்த மார்க்கம் அழிவு பாதையில் செல்வது வருத்தம் அளிக்கிறது

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]