வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Monday, February 15, 2010

கழுதைத் திருமணம் - இந்து முன்னணி ராம.கோபாலன் தலைமை

காதலர் தினத்தைக் கேவலப்படுத்திட_ இந்து முன்னணியினர் கழுதைக்-கும் _ கழுதைக்கும், நாய்க்-கும் _ நாய்க்கும் கல்யா-ணத்தைக் கட்டி வைத்துள்-ளனர். கழுதைத் திரு-மணத்தை இந்து முன்னணி ராம.கோபாலன் தலைமை தாங்கி நடத்தியுள்ளார்.


பலே, பலே இந்து மதப் பக்தர்களா கொக்கா! இதோடு சீதா கல்யாணத்தையும் நடத்தலாம். ரெங்கநாதனைக் காதலித்து ஆண்டாள் கல்யாணம் கட்டிக் கொண்-டாரே _ அதையும்கூட சேர்த்துக் கொள்ளலாம்.

காதல் கடவுளான கிருஷ்ண பரமாத்மா கோபீ-காஸ்திரிகளுடன் கொஞ்சிக் குலவுவதையும் இணைத்துக் கொள்ளலாம்.

கழுதையைக் கேவலப்-படுத்துகிறார்கள் இந்து முன்னணியினர். காங்கேய முனிவன் கழுதைக்குப் பிறந்தான் என்று இந்து மதப் புராணங்கள் கூறுகின்றன.

அசுவத்தாமன் குதி-ரைக்குப் பிறந்திருக்கிறான். கலைக்கோட்டு முனிவர் மானுக்குப் பிறந்தார் என்று எழுதி வைத்துள்ள இந்து மதத்தின் சிரேஷ்டப் புத்-திரர்கள் வெட்கம் சிறிது-மின்றி மனித உணர்வின் மெல்லிய இழையான காதலைக் கொச்சைப்படுத்-துவதாக நினைத்துக்கொண்டு நாய்க்கும் _ நாய்க்கும், கழுதைக்கும் _ கழுதைக்கும் கல்யாணத்தைப் பண்ணி வைக்கிறார்களாம்.

நாயும்கூட இந்து மதத்-தில் சாதாரணமா? வேத உருவமாம்; கடவுளின் வாக-னமாம் (பைரவர்); அதைக் கேவ-லப்படுத்துகிறார்-களே, இவர்கள் நாத்தி-கர்களாகி-விட்டார்களோ!

5.2.2010 நாளிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏட்டில் ஒரு செய்தி வெளி-வந்ததே. வேலூரையடுத்த சோளிங்கூரில் காதலர்-களுக்கான கிருஷ்ணன் கோயில் (க்ஷிணீறீமீஸீவீஸீமீ ஷிக்ஷீவீ ரிக்ஷீவீலீஸீணீ ஜிமீனீஜீறீமீ) ஜெகன் அறக்கட்டளையின் சார்பில் கட்டப்பட்டு வருகிறதே _ ஏப்ரலில் திறப்பு விழாவாமே!

இந்து முன்னணி வகை-யறாக்கள் பாபர் மசூதியை இடித்ததுபோல, கடப்பாறை-களையும், மண் வெட்டி-யையும் எடுத்துக்கொண்டு அவர்கள் பாஷையில் கரசேவையை ஜாம்ஜா-மென்று நடத்தவேண்டி-யதுதானே!

பதினாறாயிரம் கோபி-காஸ்திரீகளுடன் லார்டு கிருஷ்ணன் கொஞ்சி விளையாடலாம். அதற்கு அவாள் கொடுத்த தலைப்பு லீலைகள். கடவுள் செய்-தால் லீலை; மனிதன் அன்-பைப் பரிமாறிக் கொண்டால் கலாச்சார சீர்கேடா?

குளிக்கும் பெண்களின் ஆடைகளைக் கவர்ந்து சென்று மரத்தின் கிளையில் ஓடிப்போய் உட்கார்ந்து கொண்டு நிர்வாணமாகக் கரைக்கு வந்து இரு கைகளையும் தூக்கிக் கும்பிட்டால்தான் ஆடை-களைக் கொடுப்பேன் என்று கூறும் காமவெறியனைக் கடவுளாகக் கும்பிடும் இந்து முன்னணிகள் அன்பின் அடையாளமான காதலர் தினத்தைக் கொச்சைப்-படுத்தத் தகுதி உடைய-வர்கள்தானா?

- நன்றி விடுதலை (15.02.2010) மயிலாடன்

1 comment:

bala said...

ஜாதி வெறி பிடித்து அலையும் திராவிட தமிழ் முண்டம்,கருப்பு சட்டை சொறி நாய் சங்கமித்திரன் அய்யா, என்னது,மானமிகு முண்டத்தின் பாசறை நாய்களான சங்கமித்திரனுக்கும்,பழனி ஓவியாவுக்கும் கல்யாணம் செய்து வைத்துவிட்டார்களா?அதை படம் வேறு போட்டு காட்டியிருக்கீங்களேடா.அட நாய்களா என்னிக்குடா நீங்க பகுத்தறிவோடு சிந்திக்க கற்றுக்கொண்டு மனுஷனாக வாழப்போகிறீங்க.எனக்கு நம்பிக்கையில்லை. பாலா

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]