வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Friday, February 19, 2010

இல.கணேசன்கள் ஏற்றுக்கொள்வார்களா?

மூடநம்பிக்கைகளை எதிர்ப்பது தமிழகத்தின் ஒரு சாராருக்கு மட்டும் உரித்-தானது அல்ல_என்று சொல்-லியிருப்பவர் ஆர்.எஸ்.எஸில் பயிற்சி பெற்று அதன்பின் பா.ஜ.க.-விற்குச் சென்ற தமிழக பா.ஜ.க.-வின் முன்னாள் தலைவர் திரு இல.கணேசன் என்பார் (கல்கி 21.2.2010 பக்கம் 90,91).


அவர் யாரை, எந்த இயக்-கத்தை நினைத்துக் கொண்டு இப்படிச் சொல்லியிருக்கிறார் என்பது வெளிப்படை.

பரவாயில்லை, காலந்தாழ்ந்-தாவது மூடநம்பிக்கைகள் நாட்டில் இருப்பதை ஒப்புக்-கொண்டு அவை ஒழிக்கப்-படத்தான் வேண்டும் என்ற நினைப்பது கூட _ ஒரு அடி முன்னேற்றம்தான்_பாராட்டுகள்

அந்த மூடநம்பிக்கை-களை எதிர்த்தவர்களுள் பாரதியார் இல்லையா? கல்கி கிருஷ்ணமூர்த்தி இல்லையா? விவேகானந்தர் இல்லையா என்று எடுத்துக்காட்டியும் உள்ளார்.

அப்படிதான் சிந்திக்க வேண்டும். சிந்திக்கும் வேளை-யில் அவர்கள் எவற்றையெல்-லாம் மூடநம்பிக்கைகள் என்று கூறியிருக்கிறார்களோ அவற்றையெல்லாம் முண்டா தட்டித் தூக்கி எறிவதுதானே புத்தி சாலித்தனம்?

பாரதியாரையே எடுத்துக்-கொள்ளலாம்.

கடலினைத்தாவும் குரங்-கும்_ வெங்
கனலிற் பிறந்ததோர்
செவ்விதழ்ப் பெண்ணும்
என்று ஆரம்பித்து கடைசி-யில் எப்படி முடிக்கிறார்?
கவிதை மிக நல்லதேனும்
அக்கதைகள் பொய்-யென்று
தெளிவுறக் கண்டோம்

_என்று பாடியிருக்கிறாரே பாரதியார்.

இராமாயணத்தில் குரங்கு கடலைத் தாண்டியதாகவும், பாலம் கட்டியதாகவும் கூறி, ராமன் பாலத்தை இடிக்காதே என்று போர்க்கொடி தூக்குவது ஏன் இல.கணேசன்கள்?
எந்த பாரதியார் மூடநம்-பிக்கைகளை எதிர்த்தவர் என்று பெருமையாகப் பேசு-கிறாரோ அந்தப் பாரதியார் மூடநம்பிக்கை என்று சொல்-லுவதைக் கட்டியழுவது ஏன்?
இரண்டாவதாக கல்கி கிருஷ்ணமூர்த்தி மூடநம்பிக்-கைகளை எதிர்த்தவர் என்று சொல்லியிருக்கிறார். அதற்கு கல்கியிலிருந்தே (4.10.2009) எடுத்துக்காட்டி கேள்வி கேட்க முடியும்.

இராகு காலம் பார்ப்பது, அலகு குத்திக்கொள்வது, தீ மிதிப்பது போன்றவை கல்-கிக்குப் பிடிக்காது என்று கூறிவிட்டு, இறை உணர்வு என்பது வேறு, மதம் என்பது வேறு, பகுத்தறிவு என்பது வேறு, இவற்றை ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்திக் குழப்பிக் கொள்ளக்கூடாது. இதேபோல அறநெறி நூல்கள் வேறு, இதிகாசங்கள் வேறு, புராணக்கதைகள் என்பன வேறு என்று கல்கியிலேயே வெளிவந்துள்ளது. (4.10.2009),

இதையாவது இல.கணே-சன்கள் ஏற்றுக்கொள்வார்-களா? இறை உணர்வு வேறு, மத உணர்வு வேறு என்று பிரித்துக் கூறியுள்ளாரே! இவர்கள் மதவுணர்வை மட்டுமல்ல, வெறியையல்லவா தீமூட்டிக் குளிர்காய்கிறார்கள்? அறநெறி நூல்கள் வேறு, இதிகாசங்கள் வேறு என்று சொல்லும்போது இதிகாசமான இராமாயணம் புறந்தள்ளப்பட்-டுள்ளதே! அந்த இராமாயண ராமனைப் பிடித்துக்கொண்டு தானே இல.கணேசன் கூட்டம் தொங்கிக்கொண்டிருக்கிறது!. மூடநம்பிக்கைகளை எதிர்ப்-பது ஒரு சாராருக்கு மட்டும் உரித்தானதல்ல என்று உரிமை முழக்கம் இடும் இவாள் எடுத்துக்காட்டும், பிர--முகர்கள் எடுத்துக்காட்டும் மூடநம்பிக்கைகளை விடத் தயாரா?

- விடுதலை (19.02.2010) மயிலாடன்

1 comment:

நாளும் நலமே விளையட்டும் said...

இவங்க எல்லாம் மூட நம்பிக்கையை எதிர்கிரோம்னு வந்து இந்து மதம் தவிர மத்த எல்லாமே மூட நம்பிக்கை என நிரூபணமே செய்வார்கள்.
கடவுளை சில பேர் மூட நம்பிக்கை என சொல்வர்.
மூட நம்பிக்கை அவர் அவர் பொருத்தது.
இல கணேசன் போன்றோருக்கு எது என நல்ல தெரியும்/

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]