வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Thursday, February 11, 2010

வந்த பாதையை நினைப்போம் போகும் பாதையைத் தீர்மானிப்போம்!

இந்த நாள் தமிழ் நாட்-டின் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க சோகநாள். சேலம் சிறையில் இருந்த கம்யூனிஸ்டுத் தோழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட ரத்தக்கறை படிந்த கறுப்பு நாள்!

கைதி எண் அணிய மறுத்ததுதான் அவர்கள் செய்த ஒரே குற்றம்! அவர்-கள் ஒன்றும் கிரிமினல் கைதிகள் அல்லர்! அரசி-யல் கைதிகள்தான். இதற்-காக காக்கை, குருவி-களைச் சுடுவதுபோல் சுட்டுத் தீர்த்தனர். 17 பேர்-கள் பிணமாக வீழ்ந்தனர். 5 பேர்கள் அடித்தே கொல்-லப்பட்டார்கள். 105 கம்யூனிஸ்டுகள் படுகாயம் அடைந்தனர். ஆம், அந்த பிப்ரவரி 11 ரத்த நாள் என்று சேலம் சிறையில் கல்வெட்டாகப் பொறிக்கப்-படவேண்டும்.

சிறைச்சாலைதான் பாது-காப்புக்குரிய இடம். அங்கே ஆளவந்தார்கள் ரத்த வேட்டை நடத்தி-னார்-கள் என்பது எவ்வளவு பெரிய கொடுமை!

(1976 நெருக்கடி நிலை நேரத்திலும் மிசா கைதி-கள் சென்னை மத்திய சிறையில் தமிழர் தலைவர் வீரமணி, தளபதி மு.க. ஸ்டாலின் முதலியோர் அடித்து நொறுக்கப்பட்ட-தையும் இந்தக் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டியதுதான். சென்னை சிறையில் சிட்டி-பாபு என்ற தி.மு.க. தோழரும், மதுரை சிறை-யில் சாத்தூர் பாலகிருஷ்-ணன் என்ற தி.மு.க. தோழ-ரும் பலியானார்-களே!)

சேலம் சிறையில் கம்யூ-னிஸ்டுத் தோழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட-போது அதனைக் கண்டித்-துப் போர்க்கோலம் பூண்-டது திராவிடர் கழகமே_-தந்தை பெரியாரே -விடு-தலை என்னும் போர்-வாளே!

ஊரெங்கும் 144 தடையும், ஊர்வலத்திற் குத் தடையும், தொழிலா ளர் வாய்களில் அடக்கு முறை துணி முடிச்சும் இல்லாதிருந்தால் சேலம் நிகழ்ச்சிக்கு நாள் தோறும் கண்டனம் சர மாரியாகக் கொட்டு வதைக் காண லாம். இன்று பேச்சு, மூச்சு இல்லை. தமிழ் நாட்டில் சுடுகாட்டு அமைதி நிலவிக்கொண்டி ருக்கிறது. நினைக்க நினைக்க நெஞ்சம் துடிக் கிறது என்று விடுதலை ரத்தக் கண்ணீர் வடித்தது (15.2.1950).

திராவிடர் கழகம் கம்யூனிஸ்டுகளுக்காக மிகவும் பாடுபட்டிருக்-கிறது. நாம் அனைவரும் சர்க்காரின் அடக்கு முறைக்கு ஆளாகி சிறைச் சாலைகளில் அவதியுற்ற பொழுதும், நம் தோழர் கள் சிறையில் சுட்டுக் கொல்லப்பட்ட பொழு தும், இந்தியாவில் உள்ள எல்லாக் கட்சிகளும் நம்-மைப் பற்றிக் கவலைப்-பட்ட-தில்லை. ஆனால் தென்னாட்டின் திலகம், திராவிடத்தின் தந்தை பெரியாரும் விடுதலை பத்திரிகையும் மட்டிலும் நம்மைக் கைவிடாமல் காப்பாற்றியது. ஆகையால்-தான் நாம் திராவிடர் கழகம் உண்மையான மக்கள் கழகம் என்பதை உணருகிறோம்.

தோழர் எஸ்.ஏ.டாங்கே.

(பார்ப்பனக் கோட்டையான பம்பாய் மாதுங்காவில் ஆற்றிய உரை 16.11.1951).

வந்த பாதையை நினைப்-போம்_ போகும் பாதை-யைத் தீர்மானிப்போம்!

-விடுதலை (11.02.2008) மயிலாடன்

2 comments:

bala said...

// போகும் பாதை-யைத் தீர்மானிப்போம்// வெறி பிடித்து அலையும் திராவிட தமிழ் முண்டங்களான மயிலாடன் மற்றும் சங்கமித்திரன் அய்யா, என்னது, போகும் பாதயை தீர்மானிக்கப் போறீங்களா? முண்டங்களா பாசறை வெறி நாய்கள் போக வேண்டிய பாதை தான் தீர்மானிக்கப்பட்டு விட்டதே.நீங்க போக வேண்டிய வழி சோமாலியாவுக்கு போக வேண்டிய வழி.அது தானே திராவிட தமிழ் முண்டங்களின் தாய் நாடு.அங்க போய் உங்கள் தொழிலை(கொள்ளை கொலை)நடத்துங்க.வாழ்த்துக்கள். பாலா

ஸ்ரீநி said...

தற்பொழுது உள்ள சூழலில் கம்முனிச கூட்டணியில் வரும்படி குறைவு என்பதால் துண்டிக்கப் பட்டதா ??

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]