வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, October 31, 2009

பூணூல்


நெல்லை மாவட்டம் சங்கரன்கோயில் சங்கர நாராயணப் பெருமாளுக்கு ஜெயேந்திரர் 3 அடி நீளமுள்ள 288 கிராம் எடையில் 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கப் பூணூல் அணிவித்தாராம்.

இது இப்பொழுது மட்-டுமல்ல, திருப்பதி ஏழு-மலை-யானுக்கே 3 கிலோ தங்-கத்தில் பூணூல் அணி-வித்தார் (5.4.2002).

கடவுளுக்கே பூணூலா? ஆச்சரியமாக இருக்கிறதா!

இதன் பொருள் என்ன? பக்தியுள்ளவர்கள் கூட கொஞ்சம் புத்தியைச் செலுத்தினால் மிகமிக எளி-தில் புரிந்துகொள்ளலாம்.

கடவுளும், பார்ப்பனர்-களும் ஒரே ஜாதி; இன்-னும் சொல்லப்போனால், கடவுளுக்கும்மேலே பிராமணர்கள் என்பது-தான் அவர்களின் நினைப்-பும், ஏற்பாடுகளும் ஆகும்.

தமிழ்நாடு பார்ப்பனர்-கள் சங்கம் வெளியிட்ட அந்தணர் ஆற்றிய அருந்தொண்டு என்னும் நூலினை வெளியிட்ட ஜெயேந்திர சரஸ்வதி கடவுளுக்கும்மேலே பிரா-மணர்கள் என்று சொன்-னதை நினைவு கூர்ந்தால் இதன் உண்மை புரியும்.

இவர் மட்டுமல்ல, அவர்களின் வேதங்களும் அதனைத்தான் குறிப்பிடு-கின்றன.

தேவாதீனம் ஜெகத்-சர்வம்

மந்த்ரா தீனம் ததேவதா

தன் மந்த்ரம் பிரம்மாதீனம்

பிராமண மம தேவதா

(ரிக், 62 ஆவது பிரிவு 10 ஆம் சுலோகம்)

இதன் பொருள்:

உலகம் தேவர்-களுக்-குக் கட்டுப்பட்டது; தேவர்-கள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். மந்-திரம் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டது. பிராமணர்-களே நமக்குக் கடவுள் ஆவர்.

இந்து மதத்தைப் பொருத்தவரை எல்லா ஏற்பாடுகளுமே பார்ப்-பனர்களை முதன்மைப்-படுத்துவதேயாகும்.

பூணூல் அணிவது அவர்கள் இரு பிறவியா-ளர்கள் என்பதற்கு அடை-யாளம். பிரம்மாவின் நெற்றியில் பிறந்தவர்கள் என்று பறைசாற்றுவதாகும்.

சூத்திரர்கள் பூணூல் அணிவது மனுதர்மப்படி தடை செய்யப்பட்ட ஒன்-றாகும்.

சூத்திரன் பிராமண ஜாதிக்குறியை _ பூணூல் முதலியதைத் தரித்தால், அரசன் சூத்திரனின் அங்-கங்களை வெட்டவேண்-டும் (மனுதர்மம் அத்தி-யாயம் 9; சுலோகம் 224).

கடவுளுக்கும் பூணூல் போடுவதன் தாத்பர்யம் இப்பொழுது விளங்-குகிறதா?

- மயிலாடன்

விடுதலை 30.10.2009

2 comments:

Anonymous said...

amam, idila yenna problemda vunakku? yellam therinja vishayamdhane?

Muthukumara Rajan said...

please watch cho's enga bhramanan. Tv show ..
avaliable in you tube also or in techsatish.net.
i hope after that you remove this article .

-
பகுத்தறிவோம் முழுமையாக

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]