வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Tuesday, October 27, 2009

சுயமரியாதை!

ஒவ்வொரு கிராமத்-திலும் கோயில் உள்ளது. ஆனால், புரோகிதர் மகன் புரோகிதம் செய்ய வருவ-தில்லை. கிராமத்தில் உள்ள புரோகிதனுக்கு 500 ரூபாய் கொடுத்தால் திருமணம் செய்து வைத்துவிடுவர். புதிதாகப் புரோகிதம் செய்யப் புறப்பட்டுள்ளவர்கள் வந்தால் 50 ஆயிரம் ரூபாய் செல-வாகும். கட்_அவுட் வைக்கவேண்டும் என்று இந்து முன்னணி ஆர்.எஸ்.எஸ். இராமகோபாலன்-வாள் திருவாய் திறந்து தீர்த்தம் கொடுத்துள்ளார் காஞ்சி-புரத்தில் நடந்த புரோகிதர்கள் மாநாட்டில்.

புரோகிதப் பார்ப்பனர்கள் தட்சணை வாங்கிக்கொண்டு மனிதர்களுக்கு மட்டுமா கல்யாணங்களை நடத்தி வைக்கிறார்கள்? நாய்க்கும் நாய்க்கும், கழுதைக்கும் கழுதைக்கும்கூட மந்திரங்-களைச் சொல்லி நடத்தி வைத்துக்கொண்டுதானிருக்-கிறார்கள்.

சுயமரியாதைத் திரு-மணம் என்பது வெறும் பொருளாதாரப் பிரச்சினை-யல்ல. அது ஓர் இனத்தின் சுயமரியாதைப் பிரச்சினை. பார்ப்பனர் அல்லாதாருக்கு சமஸ்கிருத மந்திரங்களைச் சொல்லக்கூடாது என்பதற்-காக ஒரு முகூர்த்த நாழி-கைக்கு மணமகனுக்குப் பூணூல் மாட்டி, தற்காலிக வருணப் பதவி உயர்வு கொடுத்து, மந்திரங்களைச் சொல்லி கல்யாணத்தை முடித்தவுடன், மறக்காமல் அந்தப் பூணூலைக் கழற்றிக் குப்பைக் கூடையில் போடு-வதன் பொருள் என்ன? பூணூலார் விளக்குவாரா?

அவர்கள் நடத்தும் கல்-யாணத்தில் எந்த வகை மந்-திரங்கள் சொல்லப்படுகின்-றன? கீழாத்தூர் சீனிவாசாச்-சாரி-யார் பி.ஓ.எல். என்ற பார்ப்-பனரால் மொழி பெயர்க்கப்-பட்டு விவாஹ சுபமுகூர்த்த போதினி என்ற பெயரால், பார்ப்பன நிறுவனமான தி லிட்டில் ஃப்ளவர் பதிப்-பகத்தால் வெளியிடப்பட்-டுள்ள நூல் 22 ஆம் பக்-கத்தில் அந்தக் கல்யாண மந்திரம் கூறப்பட்டுள்ளது.

ஸோம; ப்ரதமோ விவிதே

கந்தர்வ விவத உத்தர: த்ருதீயோ

அக்னிஷ்டபதி: துரீயஸ்தே

மநுஷ்ய ஜா

இதன் பொருளும் அந்நூலில் கூறப்பட்டுள்ளது.

ஸோமன் முதலில் இவளை (மணமகளை) அடைந்தான். பிறகு கந்தர்-வன் இவளை அடைந்தான். உன்னுடைய மூன்றாவது கணவன் அக்நி. உன்னு-டைய நான்காவது கணவன் மனித ஜாதியில் பிறந்தவன் என்று கூறப்பட்டுள்ளது

பார்ப்பனப் புரோகிதனை அழைத்து கல்யாணத்தை நடத்தச் சொன்னால், மண-மகள் அதற்குமுன் மூன்று பேர்களுக்கு மனைவியாக இருந்தாள் என்பதை ஒப்புக்-கொள்ளவேண்டுமே!

அய்ந்து பேருக்கும் தேவி அழியாத பத்தினி என்பது பார்ப்பனர்களின் கலாச்சாரத்துக்கு வேண்டு-மானால் பொருத்தமாக இருக்கலாம். தமிழர்களுக்குப் பொருந்துமா?

பார்ப்பனர்களை அழைத்து தமிழர்கள் கல்-யாணத்தை நடத்தினால் மணமகளை விபச்சாரி என்று ஒப்புக்கொண்டதாகப் பொருள். மானம் கருதி அதனை ஒதுக்கி சுயமரியா-தைத் திருமணத்தை தந்தை பெரியார் அறிமுகப்படுத்தி-னார் என்பதை ராமகோபால-னின் கூட்டம் தெரிந்து-கொள்ளட்டும்!

திருமணச் செலவுகூட ஒரு குடும்பத்தின் பத்து அல்லது 15 நாள் வரும்படிக்-குமேல் செல்லக்கூடாது என்பதுதான் தந்தை பெரி-யார் அவர்களின் கருத்தா-கும். (விடுதலை, 10.6.1970).

சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு!

நன்றி விடுதலை 26-10-2009

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]