வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Tuesday, October 27, 2009

மரகதலிங்கம்


நேற்று மாலை ஏடு-களில் ஒரு பரபரப்பான செய்தி.

50 கோடி ரூபாய் மதிப்-புள்ள திருத்துறைப்பூண்டி மருந்தீசுவரர் கோயி-லுக்-குச் சொந்தமான மரக-த-லிங்கம் கைப்பற்றப்பட்டது என்பதுதான் அந்தச் செய்தி.

இது 12 ஆம் நூற்-றாண்-டைச் சேர்ந்ததாம். இந்த மரகதலிங்கத்தை இந்திரனே பூஜித்து வந்தா-னாம். (இடையில் விட்டு-விட்டானோ!)

லிங்கம் என்றால் ஆண் குறி! அது மரகதத்-தில் செய்யப்பட்டதாம்! ஆகா, எப்படிப்பட்ட பக்தி!

இன்னும் இந்த மரகத-லிங்-கத்துக்கு என்ன கூடு-தல் விசேஷம்? (கதை அளப்புக்கு என்ன பஞ்சமா?).

அந்த மரகதலிங்-கத்தை முசுகுண்ட சக்ர-வர்த்தியிடம் கொடுத்து ஏழு பிரசித்திப் பெற்ற கோயில்களில் பிர-திஷ்டை செய்து வழிபட்டு வரு-மாறு இந்திரன் கூறினா-னாம்.

இதன் பொருள் என்ன? இந்த மரகத லிங்கத்துக்கு அரும்பெரும் சக்தி உள்-ளது என்பதுதானே இதன் அய்தீகம்.

இவ்வளவு சக்தி வாய்ந்த _ அதுவும் தேவர்களின் தலைவ-னான இந்திரனே வழி-பட்டு வந்த லிங்கத்தை கொள்ளையர்கள் எப்படி திருடியிருக்க முடியும்?

அப்படி திருடியிருக்-கிறார்கள் என்றால் இந்த லிங்கங்கள் தெய்வ சக்தி வாய்ந்தவை என்பதெல்-லாம் அசல் டூப்பாக இருக்க-வேண்டும். இரண்-டில் ஒன்றுதானே உண்-மை-யாக இருக்கவேண்-டும்.

நம் முன் நிற்கும் கேள்விகள் இரண்டே இரண்டுதான். மரகதலிங்-கத்துக்குத் மகாசக்தி உண்டென்றால், அதனைத் திருடிச் செல்ல முடியுமா? அதனைத் திருடியிருக்-கிறார்கள் என்பதிலிருந்து லிங்கத்துக்குச் சக்தியாவது, புடலங்காயாவது என்-பதை மரியாதையாக, நாண-யமாக ஒப்புக்கொள்ள வேண்-டுமா_ இல்லையா?

இந்த சிவலிங்கத் திரு-டர்களைக் கண்டுபிடித்த காவல்துறை அதிகாரி யார் தெரியுமா? காதர் பாஷா.

இது என்ன அநி-யா-யம்? சிவலிங்கத் திருட்டை ஒரு சாயபு கண்டுபிடிக்க-லாமா? என்று அக்ரகாரத்-தார் அலறக்கூடும்.

இது கருணாநிதி சதி என்று இந்து முன்னணி _ ஆர்.எஸ்.எஸ். வகை-யறாக்கள் கூக்குரல் போட்-டாலும் போடுவார்கள் _ யார் கண்டது?

கடவுளையே கண்டு-பிடித்துக் கொடுக்க மனி-தர்கள் (காவல்துறை-யி-னர்)தான் தேவைப்படுகி-றார்கள்.

கடவுளை மற, மனி-தனை நினை! என்ற பெரியார் வாக்கு பலித்-ததா இல்லையா?

- மயிலாடன்

நன்றி விடுதலை 27.10.09

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]