வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Sunday, December 20, 2009

பகுத்தறிவாளர் கழகத்தில் பார்ப்பானைச் சேர்க்காதீர் என்று கூறுவது ஏன்?



வெற்றி பெற்றவர்களைப் பாராட்டுவதோடு வெற்றி பெற ஓட்டளித்த வாக்காளர் பெரு-மக்களையும் பாராட்ட வேண்-டும். இத்தேர்தலில் பார்ப்-பனர்களின் பெரும் எதிர்ப்புக்--கிடையே அவற்றை எல்லாம் இலட்சியம் செய்-யாமல் ஓட்ட-ளித்து வெற்றிபெறச் செய்தது பாராட்டிற்-குரியதாகும். இத்-தேர்தலில் மட்டுமல்ல; எல்லா தேர்தல்-களிலுமே பார்ப்பனர்-கள் நமக்கு எதிராகவே பாடு-பட்டு வந்திருக்கின்றனர். இந்த நாட்டில் பறையனாக, சூத்தி-ரனாக இருப்பதைவிட துலுக்-கன் நாட்டில் வாழ்வதில் பெரு-மைப்படுகின்றேன். கிறிஸ்தவன் நாட்டில் வாழ்வதில் பெரு-மைப்-படுகிறேன்.
 சுதந்திரநாடு என்றால் அங்கு பார்ப்பான், பறையன், சூத்திரன், மற்ற எந்த ஜாதி-யுமே இருக்கக் கூடாது. மனி-தன் தான் இருக்க வேண்டும். எப்படிக் கடவுளும், மதமும், கோயிலும் நம்மை மடையர்-களாக்கி இழிமக்-களாக்கி வைத்திருக்கிறதோ, அது போன்று தான் சுய-ராஜ்யம், சுதந்திரம், ஜனநாயகம் என்பது நம்மை இழிவு-படுத்தி வைத்தி-ருக்கிறது. இதனை நான் சாதா-ரணமாகச் சொல்லவில்லை, 50 ஆண்டுகால அனுபவத்தைக் கொண்டே சொல்கிறேன். உங்களிடம் மட்டும் சொல்ல-வில்லை. காந்தி, நேரு ஆகிய-வர்களிடமே சொல்லி இருக்-கின்றேன். அவர்கள் உணர ஆரம்பித்தது மிக மிகப் பின்னாலேயே ஆகும்.

கடவுள், மதம், ஆத்மா, மோட்சம், நரகம், மறுபிறப்பு, பிதிர்லோகம் என்பவை யாவும் மனிதனை மடையன் ஆக்கு-வ-தற்காகப் பார்ப்பானால் கற்-பிக்கப்பட்டவையே ஆகும். கடவுள் நம்பிக்கையுள்ள முஸ்-லிம்கள் 50 கோடிக்கு மேலிருக்-கிறார்கள், அவர்கள் கடவு-ளுக்கு உருவ-மில்லை. அதே-போல் 100 கோடி கிறிஸ்த-வர்கள் இருக்கிறார்கள். அவர்-கள் கடவுளுக்கும் உருவ-மில்லை; அவர்கள் கடவுளை வணங்குவது நம்மைப்போல் காட்டு-மிராண்டித்தனமாக அல்ல. மனத்தால் நினைப்ப-தோடு சரி. நம்மைப் போல் பூசை- படையல்கள் செய்வது கிடையாது.

இந்த உலகில் சுமார் 20 கோடி மக்களாகிய இந்-துக்கள் என்று சொல்லப்படுகிற நம் மக்கள் தான் கடவு-ளுக்கு உருவம் செய்து அதற்கு 6 கால பூசை, திரு-மணம், திருவிழா என்று சொல்லி விழாக்கள் கொண்-டாடி மக்களை மடை-யர்களாக்கிக் கொண்டிருக்-கிறார்கள்.

நமது கடவுள்கள், புராணங்-கள், அவதாரங்கள் என்பவை யாவும் நம் மக்களைக் கொல்-வதற்காக ஏற்பாடு செய்யப்பட்-டவையே ஆகும். நம் கடவுள் கதைகளும், பெருமைகளும் எத்தனை கோடி பேரைக் கொன்றது என்பதில் தானிருக்-கிறது. கொன்றதை விழாவாகக் கொண்-டாடுகிறார்கள், கதா காலட்சேபம் செய்கிறார்கள். கடவுள் அவதாரங்கள், அழித்-தது எல்லாம் நம் மக்களையே என்-பதற்குப் பலஆதாரங்கள் இருக்கின்றன. பல அறிஞர்-கள் ஆராய்ச்சி செய்து எழுதியுள்-ளனர். நேருவே தன் மகளுக்கு எழுதிய கடிதத்தில் இராமாய-ணம் என்பது தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் நடைபெற்ற போராட்-டமே ஆகும் என எழுதி இருக்கிறார்.

கடவுள், மதம், ஜாதி, புராணம், ஆகிய இக்கற்பனை-கள் அனைத்தும் பார்ப்பான் மேல் ஜாதியாக இருப்-பதற்கும், நாம் கீழ் ஜாதியாக இருப்ப-தற்கும் கற்பிக்கப்-பட்டவையே ஆகும். இதை எல்லாம் நாங்-கள் ஒழிக்க வேண்டும் என்பது திமிரினால் அல்ல. இவை தான் நம்மை இழி மக்களாக, சூத்-திரர்களாக ஆக்கி வைத்திருக்-கின்றன. அதனால் தான் நம் இழிவைப் போக்க இவற்றை ஒழிக்க வேண்டும் என்கின்-றோம்.

இந்த நாட்டில் நாங்கள் ஒருவர் தான் பார்ப்பானைப் பார்ப்பான் என்றழைக்கின்-றோம். மற்றவன் பார்ப்பா-னைப் பிராமணன் என்று தான் கூப்பிடுகின்றான்? ஒருவனைப் பிராமணன் என்றால் மற்றவன் யார்? சூத்திரன் தானே! ஒரு பெண் இன்னொருத்தியைப் பார்த்து பதிவிரதை என்று சொன்னால் அவள் யார்? பதிவிரதைத் தன்மையற்ற விப-சாரி என்று தானே பொருள்.

நம் மந்திரிகள் கூட பார்ப்-பானைப் பார்ப்பான் என்று சொல்லத் தயங்குகின்றார்கள். மடாதிபதிகள் முதல் பார்ப்-பான் என்று சொல்ல தயங்கு-கிறார்கள்.

கடவுளை ஒழித்த கோயில்-களை, இடித்த பார்ப்பனர்-களை (கடவுள் பிரசாரகர்களை, மதப் பிரசாரகர்களை) எல்லாம் வெட்டி வீழ்த்திய நாடுகள் பல இருக்கின்றன. அந்நாடுகளில் எல்லா மனிதர்களும் சம அந்தஸ்துள்ளவர்களாக இருக்கி-றார்கள். பணக்காரன் ஏழை என்கின்ற பேதமில்லை.

முதலாளி, தொழிலாளி என்கின்ற பேதமில்லை. அந்த நாட்டில் போலீஸ் அய்.ஜி.க்குள்ள மதிப்பு சாதாரண கான்ஸ்-டேபிளுக்கும் உண்டு. கலக்டெரும், பியூனும் ஒரே மதிப்புடையவர்கள் என்கின்ற மதிப்போடு வாழ்-கின்றார்கள். எந்தப் பேதமும் அவர்களுக்-கிடையில் இல்லை. இவ்வள-வுக்கும் காரணம் அந்த நாட்-டில் கடவுள் இல்லாததா-லேயே ஆகும்.

நம் நாட்டில் பேதங்களிருப்-பதற்குக் காரணம் கட-வுளே-யாகும். இந்தப் பேதங்கள் ஒழிய இன்று கடவுளைச் செருப்பால் அடிக்கின்றோம். இவற்றில் மாறவில்லை என்றால் நாளைக்கு மனிதர்களையே கொல்ல நேரலாம். சமுதாய மாற்றம் என்றால் கொலை, கொள்ளை, தீவைப்பு, நாசம் யாவும் நடந்து தான் தீரும்.

இன்று நாம் எல்லாம் சூத்தி-ரர்களாக பறையன், சக்-கிலி-களாக இருப்பதற்குக் காரணம் கொலை. சித்திரவதை, கழு-வேற்றல் முதலிய காரியங்-களைச் செய்து தான் ஆகும். இதிலிருந்து மாற நாமும் இக்காரியங்களைக் கையாள வேண்டியது தான். அறிவான காலமாக இருப்-பதால் அடிப்-படையிலிருந்து ஆரம்பித்து இருக்கிறோம். அதாவது கட-வுளைச் செருப்பால் அடிப்பதி-லிருந்து துவக்குகின்றோம். இது வளர்ந்து நாளை அவர்கள் செய்த காரியத்தை நாமும் செய்யும் படி நேரலாம்.

இன்றைக்கு இருப்பதை விட மோசமான நிலை 2500 ஆண்டுகளுக்கு மேலிருந்து அப்போது ஒரே ஒரு மனிதன் சித்தார்த்தன் என்பவன் தோன்றி, தற்போது நாம் செய்வது போன்று அறிவுப் பிரசாரம் செய்த மக்கள் யாவ-ரையும் மாற்றிவிட்டான். வேதங்களை எல்லாம் நெருப்-பில் இட்டுக் கொளுத்தினான். அவன் கொள்கை நாடு முழு-வதும் பரவி மக்கள் எல்லாம் அவன் கொள்-கையைப் பின்-பற்ற ஆரம்பித்தனர். பார்ப்ப-னர்களை எல்லாம் கொலை செய்ய ஆரம்பித்தனர்.

இதைக் கண்டு பார்ப்பான் புத்த கொள்கையை ஏற்றவன் போல் நடித்து, அதில் சேர்ந்து பிரசாரகனாகி புத்த மடங்-களை எல்லாம் கொளுத்தி-னார்கள். பவுத்த கொள்கை-களை ஏற்றவர்களை எல்லாம் நாசம் செய்து அக்கொள்கை-களைத் தடுத்து விட்டனர். அதனால் தான் இன்றைக்குப் பார்ப்பானை பகுத்தறிவாளர் கழகத்தில் சேர்க்கக் கூடாது என்று சொல்கிறேன். அவனைச் சேர்த்-தால் புத்த இயக்கத்தில் சேர்ந்து புத்த கொள்கையைப் பரவவிடாமல் தடுத்தது போல் தடுத்து விடுவான். எனவே நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பார்ப்பானை நுழையவிடவே கூடாது.

பார்ப்பான் எந்த விதமான பாதகமும், அக்கிரமும் செய்-வான். அதற்கு அவன் சாஸ்தி-ரத்தில் அவனுக்கு இடமிருக்-கிறது. பார்ப்பான் தன் தரு-மத்தைக் காப்பாற்றிக் கொள்ள எந்த விதமான அக்கிரமும் செய்யலாம், அது பாவமல்ல என்பது சாஸ்திரமாகும். எனவே பார்ப்பான் நம்மை ஒழிக்க எந்தப் பலாத்காரமான காரியத்திலும் ஈடுபடலாம். அதற்கு எல்லாம் நாம் தயா-ராகத்தான் இருக்க வேண்டும். நம்மில் சிலர் உயிர் விட நேர-லாம். அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் போராட வேண்டியதுதான்.

இப்போதைய காலம் மிகவும் பகுத்தறிவுக் காலம். உலகம் வேகமாக முன்னேறிக் கொண்டு போகிறது. உல-கில் நாம் ஒருவர் தான் இன்னமும் முட்டாள் தன-மாக, மூடநம்பிக்-கைக்காரர்களாக இருக்கின்-றோம். இதி-லிருந்து நாம் விடுதலை பெற்று மற்ற உலக மக்களைப் போன்று இழி-வற்று, அறிவு பெற்று வாழ வேண்டும். இனி நீங்கள் எந்தக் காரியத்தையும் நடுநிலையிலி-ருந்து சிந்திக்க வேண்டும்.

(`விடுதலை’, 22.5.1971) (12.5.1971 அன்று அரூரில் ஈ.வெ.ரா. பெரியார் அவர்கள் ஆற்றிய சொற் பொழிவு)

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]