வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, December 09, 2009

‘பிச்சைக்காரத்-தன-மும்’ ஒழிந்து போய்-விடுமே!


கடந்த மூன்று ஆண்டு-களில் வாராக்கடன் ரூ.25 ஆயிரம் கோடி என்று வங்-கிகள் அறிவித்துள்ளன. 2007இல் ரூ. 9400 கோடி, 2008இல் ரூ.9300 கோடி, 2009 இல் ரூ.11000 கோடி.


இப்படி கடன் வாங்கி திருப்பிக் கொடுக்காதவர்-கள் காந்தியார் கூற்றுப்படி ‘‘தரித்திர நாராயணர்கள்’’ அல்லர். மிகப் பெரிய பணக்காரர்கள், தொழில் அதி-பர்கள் என்ற நிலை-யில் உள்ளவர்கள்தாம்.

இதில் ஒரு கெட்டிக்-கா-ரத்-தனமும், சூழ்ச்சியும் குத்துக்கல்லாக நிற்கின்றன.

வாராக்கடன்களை வசூலிக்க முடியாத நிலை-யில், ஒரே நேரத்தில் தீர்வு (ONE TIME SETTLEMENT) என்ற ஒரே தவணையில் கடனை அளிக்க சலுகைத் திட்டம் அறிவிக்கப்படு-கிறது. இதில் குறிப்பிட்ட சதவிகிதக் கடன் பாக்கி தள்ளுபடியும் செய்யப்படு-கிறது.

பல பணத் திமிங்கிலங்-கள் இந்தச் சலுகை சந்-தர்ப்பம் வரை காத்திருந்து பகுதித் தொகைக்கு மேல் ‘‘சுவாகா’’ செய்யும் தந்திர-சாலிகளாக, சூழ்ச்சிக்காரர்-களாக, ஏமாற்றுக்காரர்-களாக இருக்கிறார்கள்.

இதில் ஒழுங்காக வட்-டி-யும் முதலுமாகக் கட்டிய நேர்மையானவர்கள் ஏமாளி-களாகி, ‘பைத்தியக்-காரர்களாகக்’ கருதப்படு-கிறார்கள் என்பது தானே உண்மை. இத்தகைய நாண-யமானவர்கள் மத்தி-யில்கூட மாற்று எண்-ணம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதே!

ஏழை எளிய மக்கள் கடன் வாங்கினால் அவர்-களை அச்சுறுத்தி எப்படி-யும் கடனை மீட்டு விடு-கின்றனர். கடனாளியால் செலுத்த இயலாவிட்டால் அவருக்காக பொறுப்புறுதி (SECURITY) கையொப்பம் போட்டவர்களிடமிருந்து வசூலித்து விடுவார்கள்.

ஆனால் பணத்திமிங்-கிலங்களோ, சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து ‘டிமிக்கி’ கொடுத்து விடுகின்றனர்.

இந்தியா ஏழைநாடு என்று சொல்லிக் கொள்-ளலாம்; உண்மையில் ஏழைநாடல்ல. இயற்கை வளங்களுக்கும் பஞ்ச-மில்லை.

திருப்பதிகோயிலில் நகை-களின் மதிப்பு மட்டும் 35,000 கோடி ரூபாய். இந்தியக் குடிமக்கள் சுவிஸ் வங்கியில் பதுக்கி வைத்துள்ளவை மட்டும். ரூ.108 லட்சத்து 75 ஆயி-ரம் கோடியாகும். இந்தி-யாவில் அயல்நாட்டுக்-கடன் ரூ.5 லட்சத்து 20 ஆயிரம் கோடி என்று ஒரு பக்கத்தில் புள்ளி விவரம் காட்டுகிறது.

இந்தியாவில் உள்ள கருப்புப்பணம் ரூ.75 லட்-சம் கோடியாகும். இந்தக் கருப்புப்பணம், பதுக்கல்-பணம், வாராக்கடன் பணம் இவ்வளவையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தால் இந்தியா பெரும் பணக்கார நாடாகத்தான் கருதப்படும். இந்தியாவில் 77 சதவிகித மக்களின் நாள் வருமானம் ரூ.20 என்கிற ‘பிச்சைக்காரத்-தன-மும்’ ஒழிந்து போய்-விடுமே!



- விடுதலை மயிலாடன் (09.12.2009)

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]