வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Thursday, December 31, 2009

கைபர் கணவாய் வழியாக வந்த பார்ப்பனர்களின் திராவிட வெறுப்பு...


தமிழ் செம்மொழிபற்றி முதலமைச்சர் கலைஞர் அவர்கள் முரசொலியில் அரிய தகவல்களைக் கொண்ட தொடர் கட்டுரை-களை எழுதி வருகிறார். ஆறாவது கட்டுரையில் ஒரு முக்கிய வரலாற்றுக் கருத்-தினைப் பதிவு செய்துள்-ளார்.


மத்திய ஆட்சியில் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பெரும்பங்கு வகித்து வந்த பா.ஜ.க.வில்; முரளி மனோகர்ஜோஷி போன்ற முன்னணித் தலை வர்கள் சிலர், திராவிட மொழிக் குடும்பத்தின்மீது இருந்த தீராத வெறுப்பின் காரணமாக, தமிழ் செம் மொழியென அறிவிக்கப் பட வேண்டுமெனும் கோரிக்கை தொடர்பாகக் கொண்டிருந்த எதிர் மறை யான அணுகுமுறையும், காட்டிய தாமதமும் தமிழ் செம்மொழி அறிவிப்பைத் தள்ளிப் போடச் செய்தன என்ற நிகழ்வினை வர லாறு கருத்தில் எடுத்துக் கொண்டுள்ளது என்பதை மறுத்திட இயலாது (முர-சொலி, 30.12.2009) என்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

தமிழை நீச்ச பாஷை என்று சொல்லும், கருதும் கூட்டத்தினைச் சேர்ந்த-வர்கள் இவர்கள். அதன் காரணமாகவே இந்த வெறுப்பும், எதிர்ப்பும்!

திராவிட மொழிக் குடும்-பத்தின் மீது இவர்களுக்கு இருந்த தீராத வெறுப்பு என்று கலைஞர் அவர்கள் குறிப்பிட்டது ஏதோ ஒரு கோப உணர்வாலோ, குற்றம் சாற்றவேண்டும் என்ற எண்ணத்தாலோ, மேம்-போக்காகவோ கூறப்பட்ட-தல்ல.

இது ஒரு துல்லியமான வரலாற்று ரீதியான கருத்து என்பதற்கு ஒரே ஒரு எடுத்-துக்காட்டை எடுத்துக்கூறி-னாலே போதுமானது.

உலகளாவிய திராவிட மொழியியற் பள்ளி (International School of Dravidian Linguistics) திருவனந்த-புரத்தில் இயங்கி வருகிறது. இதன் தோற்றுநர் திராவிட மொழிப் பேரறிஞரும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முதல் துணை-வேந்தருமான டாக்டர் வி.அய். சுப்பிரமணியம் ஆவார். 2000_2001 ஆம் ஆண்டில் மனிதவள மேம்-பாட்டுத் துறை அமைச்சரும், பார்ப்பனருமான முரளி-மனோகர் ஜோஷியைச் (பா.ஜ.க.) சந்தித்து, திரா-விடியன் என்சைக்ளோ-பீடியா என்ற நூலை அன்பளிப்பாகத் தந்தார்.

நூலைப் பெற்றுக்-கொண்ட ஜோஷி, இந்-நூலின் பெயரில் உள்ள திர விடியன் என்ற சொல்லை நீக்கிவிடலா-மன்றோ என்றார்.

இதற்குப் பேராசிரியர் டாக்டர் வி.அய். சுப்பிர-மணியம் அவர்கள் அளித்த பதில்தான் மிகமிக மிக முக்கியமானதும், அவரின் அறிவு நாணயத்துக்கும், அஞ்சாமைக்கும் கட்டியம் கூறுவதும் ஆகும்.

ஜனகனமன நாட்டுப் பண்ணிலிருந்து திராவிடம் என்ற சொல்லை நீக்கி விடுங்கள்; நானும் திராவிடக் களஞ்சியம் என்பதிலிருந்து திராவிடம் என்ற பெயரை நீக்கிவிடுகிறேன் என்றாரே பார்க்கலாம். (ஞிலிகி ழிமீஷ், பிப்ரவரி 2003).

மானமிகு கலைஞர் அவர்கள் பா.ஜ.க.வினர்மீது வைத்த குற்றச்சாற்று மிகமிக மிகச் சரியானது என்பது இப்-பொழுது விளங்க வில்-லையா? -

- விடுதலை (31.12.09) மயிலாடன்

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]