வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Thursday, December 03, 2009

சமூகநீதிக்குச் சாவுமணியா?



முனைவர் பட்டப் படிப்பில் (பிஎச்.டி.) அண்ணா பல்கலைக்கழகத்தில் இட ஒதுக்கீடு கிடையாது என்று ஓர் அறிவிப்பினைக் கொடுத்-துள்ளார் அப்பல்கலைக் கழகத் துணை-வேந்தர் மன்னர் ஜவஹர். அதே நாளில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டப் படிப்புச் சேர்க்கைக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார் துணைவேந்தர் முனைவர் திருவாசகம்.


பல்கலைக்கழக மானியக் குழு இட ஒதுக்கீடு அளிக்கவேண்டும் என்று கூறியிருக்-கிறது என்றாலும், அண்ணா பல்கலைக்-கழகத்தில் அதனைப் பின்பற்றப் போவதில்லை என்றும் அப்பல்கலைக் கழகத் துணைவேந்தர் கூறியுள்ளது, அதிர்ச்சி தரக்கூடியதாகும்.

அதுவும் அண்ணாவின் பெயரால் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில், சமூகநீதிக்குச் சாவுமணியா? என்ற கேள்வி இப்பொழுது எழுந்திருக்கிறது.


எல்லாப் பிரிவுகளிலும் இட ஒதுக்கீடு உண்டு; முனைவர் பட்டத்திற்கு மட்டும் கிடை-யாது என்று சொல்லுவது எந்த அடிப்படை-யில்? அந்தப் பகுதி மட்டும் நெய்யில் பொரிக்கப்பட்டுள்ளதா?

மத்திய அரசுக்கு உட்பட்ட கல்வி நிறு-வனங்களில்கூட (அய்.அய்.டி., அய்.அய்.எம்., எய்ம்ஸ் போன்றவற்றில்) இட ஒதுக்கீடு அளிக்கப்பட உள்ளது; மத்திய அரசு புதிய சட்டமே இயற்றியிருக்கிறது. பிற்படுத்தப்பட்ட-வர்களுக்கான 27 சதவிகித இட ஒதுக்கீடு ஆண்-டுக்கு 9 விழுக்காடு வீதம் மூன்று ஆண்டு-களில் நிறைவேற்றப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.

அத்தகையதோர் சூழ்நிலையில், தமிழ்நாடு அரசின் கொள்கை இட ஒதுக்கீட்டுப் பிரச்-சினையில் என்பதை நன்கு தெரிந்தவர்தான் அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர். இருந்தும் இப்படி ஓர் அறிவிப்பு என்பது கண்-டிக்கத்தக்கதாகும்.

முனைவர் பட்டம் பெற தாழ்த்தப்-பட்ட-வர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களும் தகுதியற்றவர்கள் என்று முடிவுக்கு வந்துவிட்டாரா, அப்-பல்கலைக்கழகத் துணைவேந்தர்?

இட ஒதுக்கீட்டில் தகுதி, திறமை போய்-விடும் என்று ஒரு கூட்டம் ஒரு பக்கத்தில் கூக்குரல் போட்டுக் கொண்டிருக்கிறது. அந்தக் குரலையெல்லாம் புறக்கணித்துவிட்டு, இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டதால் என்ன தகுதி, திறமை போய்விட்டது?

இன்றைக்குப் பிரபல மருத்துவர்களாக, பொறியாளர்களாக, நிருவாகிகளாக, விஞ்-ஞானிகளாகப் பலரும் இட ஒதுக்கீடு பெற்ற-வர்கள் மத்தியிலிருந்து முகிழ்த்துக் கிளம்ப-வில்லையா? வாய்ப்புக் கொடுக்காமலேயே கதவடைத்து-விட்டு, தகுதி, திறமைபற்றி மதிப்பிடலாமா? ஓர் ஆராய்ச்சி நிறுவனம் ஏன் இத்தகைய ஆராய்ச்சியில் ஈடுபடவில்லை?

கரண்ட் சயின்ஸ் என்னும் இதழில் கீழ்க்-கண்ட புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது.

சிறந்த அறிவியலாளர் விருது வழங்கப்-பட்டதில் மேற்கு வங்காளத்தில் உள்ள 32 பேர்-களில் 26 பேர் கல்கத்தா நகரத்தைச் சேர்ந்த-வர்கள் என்றும், தமிழகத்தில் உள்ள 41 பேர்களில் 10 பேர்கள் மட்டுமே சென்-னையைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்-பிடப்பட்டுள்ளது. புறநகர்ப் பகுதிகளில் மேற்கு வங்கத்தில் 19 விழுக்காட்டினரும், தமிழ்நாட்-டில் 75 விழுக்காட்டினரும் விருது பெற்றுள்-ள-னர் என்ற தகவலையும் அந்த இதழ் தெரி-வித்துள்ளது.

இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ள தமிழ்-நாட்டின் நிலையையும், இட ஒதுக்கீடு அளிக்-கப்படாத மேற்கு வங்க நிலையையும் ஒப்-பிட்டுப் பார்த்தால் இட ஒதுக்கீட்டின் தாக்கமும், செல்வாக்கும் எத்தகையது என்பதை இதன்மூலம் எளிதிற் புரிந்துகொள்ளலாம்.

பல்கலைக்கழக மானியக் குழு அறி-வித்திருந்தும், அதனைப் பின்பற்றப் போவ-தில்லை என்று அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் அறிவித்திருப்பது முறை-யானது-தானா? இதுகுறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி அவர்கள் தலையிடுவார் என்று எதிர்பார்க்-கிறோம். சமூகநீதி, இட ஒதுக்கீடு பிரச்சினையில் அத்துபடியானவர் அவர் என்பதால், இந்தக் கோரிக்கையை
அவர் முன் வைக்கிறோம்.       --விடுதலை தலையங்கம் 3.12.2009

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]