வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Friday, December 18, 2009

புராணங்கள் புகட்-டப்படும் வரை நாடு முன்-னேறுமா? சிந்திப்பீர்!


குருவாயூர் கிருஷ்-ணன் கோயிலில் குசேலர் தினம் கொண்டாடப்பட்ட-தாம். நைவேத்தியத்துக்காக மட்டும் ரூ.2 லட்சம் செலவு செய்யப்பட்டதாம்.


பிரசாதத்தைப் பெற சிறப்பு ஏற்பாடுகள் (சிஷீuஸீtமீக்ஷீ) உண்டாம். நீண்ட வரிசையில் நின்று இதற்-கான சீட்டுகளைப் பணம் கொடுத்துப் பக்தர்கள் பெற்றார்களாம்.

எதற்காக இந்தக் குசேலர் விழாவாம்? வறு-மையில் வாழ்ந்த குசேலர். தனது வறுமையைப் போக்க பால்ய நண்ப-னான கிருஷ்ணனைத் தரி-சிக்க துவாரகை சென்றா-னாம். கிருஷ்ணன் தன் நண்-பன் குலேசனின் வறு-மையைத் தீர்க்க ஆவன செய்தானாம்!  
இந்தக் குசேலர் கதையை நினைத்தால் ஒரு பக்கம் சினமும், இன்-னொரு பக்கம் சிரிப்பும்-தான் வருகிறது. இது-குறித்து தந்தை பெரியார் குறிப்பிடுவது மிகவும் சிந்-திக்கத் தக்கதாகும். இதோ பெரியார் பேசுகிறார்:

‘‘குசேலர் கதையில் குசேலருக்கு 27 பிள்ளை-கள் என்றும், 27 பிள்ளை-கள் பெற்று குசேலர் தரித்-திரத்தில் துன்பப்பட்டு, 27 பிள்ளைகளை அழைத்துக்-கொண்டு கிருஷ்ணன் (கடவுள்) இடத்தில் சென்று பிச்சை கேட்டதாக-வும், கடவுள் ஏராளமாகச் செல்வம் கொடுத்ததாக-வும் கதை சித்தரித்த ஆசி-ரியர் சிறிதுகூடப் பகுத்-தறிவைப் பயன்படுத்த-வில்லை. ஒருவனுக்கு 27 குழந்தைகள் இருந்தால், அவன் வருஷத்துக்கு ஒரு குழந்தை பெற்றிருந்-தால், இருபது வயதும், அதற்கு மேற்பட்ட வய-தும் நிறைந்த குழந்தைகள் எட்டாக இருக்கவேண்-டும். இந்தக் குழந்தை-களும் சோம்பேறித் தடி-யன்கள்போல் ஒரு வேலைக்கும் இலாயக்கில்-லாத மாமிசப் பிண்டங்-களாகவா இருந்திருக்கக் கூடும்? இப்படி 20 வய-துக்கு மேற்பட்ட மக்-களை வீட்டில் வைத்துக்-கொண்டு ஒருவன் பிச்சைக்குப் போயிருந்தால், அந்த நாட்டில் மற்றவர்களும் இதுபோல் இருந்திருக்க-வேண்டாமா? அப்படியி-ருந்-தால் அந்த நாடு எப்படி உருப்படியாகி இருக்கும்? இப்படிப்பட்ட சோம்பேறித் தடியன்க-ளுக்கு கடவுள் செல்வம் கொடுக்கலாமா?

இப்படி ஒரு கூட்டம் நம்மிடம் வந்து பிச்சை கேட்டால், நாம் என்ன சொல்லுவோம் என்பதைச் சிந்தியாது, இவ்வளவு முட்-டாள்தனத்தை கடவுள் மீது ஏற்றிய ஆசிரியர் எவ்வளவு அறிவற்றவராக இருக்கவேண்டும்?’’ என்று வினாக்களை அடுக்கிக்-கொண்டே போகிறார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.

குலேசன் தினத்தைக் கோயிலில் ஆண்டு-தோறும் கொண்டாடு-வதன் தாத்பரியம் என்ன?

சோம்பேறியாகக் கிடந்தாலும் கடவுளிடத்-தில் சென்றால் சோறு கிடைக்கும், செல்வம் கிடைக்கும் என்றுதானே சொல்ல வருகிறார்கள்? அதாவது உண்மையா? கடவுளிடம் சென்றால் கிருஷ்ணன், குலேசனுக்-குக் கொடுத்ததுபோல், இப்-பொழுதும் கொடுப்பானா? அப்படி ஒரு நிலை ஏற்-படின் நாட்டில் அரசுகள் எதற்கு? திட்டங்கள் எதற்கு? இந்தப் புராணங்கள் புகட்-டப்படும் வரை நாடு முன்-னேறுமா? சிந்திப்பீர்!

- விடுதலை 18.12.09 மயிலாடன்

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]