வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Thursday, December 10, 2009

அம்பேத்கரையே கரு-வேப்பிலையாகப் பயன்-படுத்தி தூக்கியெறிந்து விடவில்லையா?


அலிகார் பல்கலைக்-கழகத்தில் ராகுல்காந்தி எம்.பி. தெரிவித்த கருத்தி-னைக் குறித்து சமாஜ்-வாடி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் அமர்சிங் குறிப்பிட்டுள்ளார்.


‘‘தகுதியும், திறமையும் இருந்தால் முசுலிம்களில் ஒருவர் இந்தியாவில் பிரத-மர் ஆகலாம்; அதை யாராலும் தடுக்க முடி-யாது’’ என்று ராகுல்காந்தி பேசிய பேச்சை சுற்றிதான் அவர் பேசினார்.

“அப்படியானால், காங்கிரஸ் கட்சியில் இது-வரை தகுதியான முஸ்-லிம்களே கிடையாதா? காங்கிரசில் பக்ருதீன் அலி உள்ளிட்ட பல தலைவர்கள் ஜனாதிபதி பதவிக்கு மட்டும்தான் லாயக்கா? பிரதமர் பத-விக்கு மட்டும் அவரைப் போன்ற தலைவர்களிடம் தகுதியில்லாமல் போய்-விட்டதா?’’ என்ற வினா-வைத் தொடுத்தார் அமர்-சிங்.

பேசிய இடம் தெரு-முனையல்ல; மாநிலங்க-ளவையில். இதற்குச் சரி-யான விடை பொறுப்பான காங்கிரஸ் தலைவர்களிட-மிருந்து வரவில்லை.

இப்பொழுதெல்லாம் ‘தகுதி’ ‘திறமை’ பற்றிப் பேசுவதெல்லாம் ஒரு நாகரிகமாகவே போய்-விட்டது.

இந்தியாவில் பிரதமர்-கள் எல்லாம் எந்த அடிப்-படையில் வந்தார்கள் என்-பது எளிய பாமர மனி-தருக்கும் தெரிந்த உண்மை-தான். அப்படி வந்த பிரத-மர்கள் எந்தத் தகுதியின் அடிப்படையில் வந்தார்-கள் என்பதும் அனை-வருக்குமே தெரியும்.

பேசிய இடம் முசுலிம்-களின் அலிகார் பல்-கலைக்கழகம் என்பதால், திருவாளர் ராகுல் காந்தி அப்படியொரு ‘யுத்த அனு-சாரத்தோடு’ பேசியி-ருக்கக்கூடும்.

முசுலிம்கள் ஒருபுறம் இருக்கட்டும்; இந்துக்-களில் மட்டும் என்ன வாழ்-கிறது? தாழ்த்தப்பட்ட ஒருவர் பிரதமராக அவ்-வளவு சுலபத்தில் வந்து-விட முடியுமா?

பாபு ஜெகஜீவன் ராமைவிட தியாகத்திலும், அரசியல் அனுபவத்திலும், நிருவாகத்திலும் திறமை-யுள்ள ஒருவரைக் காண முடியுமா?அவரே மனம் வெதும்-பிக் கூறினாரே, ‘தாழ்த்-தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இந்தியா-வில் பிரதமராக வருவ-தற்கு இன்னும் நூறு ஆண்-டுகள் தேவைப்-படும்!’ என்று சொன்னாரே, அந்த மூத்த தலைவரின் கருத்தையும் இந்த இளை-ஞர் ராகுலின் தகவலை-யும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

அறிவுலக மேதை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சிற்பி அண்-ணல் அம்பேத்கரையே கரு-வேப்பிலையாகப் பயன்-படுத்தி, அதற்குப் பின்னர் தூக்கியெறிந்து விடவில்லையா?

வார்த்தைகளைக் கொட்டுவதற்குமுன் வள-மான சிந்தனை தேவை! பொதுவாக ராகுல் காந்தி ‘தகுதி’, ‘திறமை’பற்றி அதி-கம் பேசுகிறார் _ உண்மை-யான ‘தகுதி’ ‘திறமை’ என்பது வேறாகவே இருக்கிறது.

- விடுதலை (10.12.2009) மயிலாடன்

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]