வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Monday, November 30, 2009

பாபர் மசூதியை இடித்தவர்களை சிறையில் தள்ளுக!


பாபர் மசூதி இடிப்பு தொடர்பான நீதிபதி லிபரான் ஆணையத்தின் அறிக்கை வெளி-வருகின்ற நிலையில் இந்தியா முழுமையும் பேரலைகளை அது ஏற்படுத்தி விட்டது.


இந்தப் பிரச்சினை அவ்வளவுதான். ஆறிய கஞ்சி பழங்கஞ்சி தான் என்ற ஒரு பொதுக் கருத்தும் கூட உருவாக்கப்பட்டுவிட்டது.

எதை எதைப் பற்றி எல்லாருமே விட்டேனா பார்! என்று தோளை முறுக்கிக் கொண்டு பேனா வாலை யாட்டும் ஊடகங்கள் மதவெறி உணர்வுடனும், உயர்ஜாதி ஆதிக்கத் தன்மையிலும் பாபர் மசூதி இடிப்பு அநீதி பற்றியோ குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நியாயத்தைப் பற்றியோ எழுத ஒரு சொட்டு மையைச் செலவழிக்கத் தயாராக இல்லை.

ஆனால், கீழே தள்ளிய குதிரை குழியைப் பறித்தது போலவே இன்று வரை நடந்து கொண்டும் வருகின்றனர். இன்றைக்குக் கூட முன்னாள் பிரதமர் வாஜ்பேயியை பாபர் மசூதி இடிப்பில் சேர்த்துப் பேசக்கூடாது என்று கூறப்படும் செய்திகளை ஊடகங்கள் வெளியிடும் முறையைப் பார்த்தாலே அவர்களுக்கு உள்ளத்தில் பீறிட்டுக் கிடக்கும் உணர்வின் நிறம் என்ன என்பதை அறியலாம்.

68 பேர் குற்றவாளிகள் பட்டியலில் இடம் பெற்ற, பி.ஜே.பி. யின் முன்னாள் தலைவரும், மனித வள மேம்பாட்டுத் துறை முன்னாள் அமைச்சருமான முரளி மனோகர் ஜோஷி இது பற்றி என்ன கூறியுள்ளார் என்பது மிகவும் முக்கியமானதாகும்.

ராமரின் கோயிலைக் கட்ட வேண்டும் என்று சாமியார்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டபோது, வாஜ்பேயி உடனிருந்தார். எனினும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் அவர் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்குள் குத்திட்டு நிற்கும் சன்னமான உண்மையைக் கவனிக்க வேண்டும். சாமியார்-களின் கூட்டத்தில் ராமன் கோயிலைக் கட்டிடத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, வாஜ்பேயி உடனிருந்தார் என்று கூறியுள்ளாரே தவிர, அதனை எதிர்த்ததாகக் குறிப்பிடவில்லை என்பது கவனிக்கத் தக்கதாகும்.

அது போலவே விசுவ இந்து பரிஷத்தின் தலைவர் அசோக் சிங்கால் கூறியுள்ள கருத்தும் மிகவும் முக்கியமானதாகும்.

ராமன் கோயில் விவகாரம் தொடர்பாக வாஜ்பேயி லக்னோவில் கைது செய்யப்பட்டார். ராமன் கோயில் விவகாரத்தில் வாஜ்பேயிக்கு தொடர்பில்லை என்று கூறமாட்டேன் என அழுத்தம் திருத்தமாகவே கூறியுள்ளார்.

இந்த நிலையில் வாஜ்பேயி ஜென்டில்மேனாக இருந்தால், தன் நிலையை தெளிவு படுத்தியிருக்க வேண்டாமா? ஏன் வாயைத் திறக்கவில்லை?

பாபர் மசூதி இடிப்புப் பிரச்சினையில் அத்வானிக்கு ஒரு கருத்து, வாஜ்பேயிக்கு இன்னொரு கருத்து என்று இருக்க முடியுமா? இருந்தால் அது எப்படி கட்சியின் நிலைப்-பாட்டிற்கான மரியாதையைக் காப்பாற்றும்?

இப்பொழுது கூட அக்கட்சியின் பெரிய தலைவர்கள் என்று சொல்கிறவர்கள் பாபர் மசூதி இடிக்கப்பட்டஇடத்தில் ராமன் கோயில் கட்ட வேண்டும் என்றுதானே கூறுகிறார்கள். முரளி மனோகர் ஜோஷி மிகவும் வெளிப்படையாக வாரணாசியில் செய்தியாளர்களிடம் கூறி-யுள்ளாரே.

ராமன் கோயில் கட்டுவது எங்களின் நிகழ்ச்சி நிரலில் இருந்து இன்னமும் எடுக்கப்படவில்லை. இப்போதும் எங்களின் மய்யமான பிரச்சினை இதுதான் என்று வெளிப்படையாகக் கூறியிருக்-கிறார். அயோத்தியில் மட்டுமல்ல, மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி, காசியில் விசுவநாதர் ஆலயம் ஆகிய இடங்களிலும் முசுலிம்கள் தங்கள் கோரிக்கைகளைக் கைவிடவேண்டும் என்று விசுவ இந்து பரிஷத்தின் தலைவர் அசோக் சிங்கால் கூறியுள்ளார்.

இதற்கெல்லாம் முடிவு கட்டப்பட வேண்டு-மானால் பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்ட-னையை விரைவாகப் பெறச் செய்யவேண்டும். இல்லையெனின் இந்துத்வா வெறிக் கூட்டத்தின் வால் வாளாகச் சுழன்று தங்கள் நிகழ்ச்சி நிரலில் (அஜண்டா) உள்ள சிறுபான்மையினர் கோயிலின் மீது கை வைத்துதான் தீருவார்கள்.

ஒரு பக்கம் சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும். இன்னொரு பக்கத்தில் இந்தப் பிரச்-சினையை மதவெறியாக மாற்றி மக்களை ஈர்க்க முயலும் இந்தப் பிற்போக்குக் கூட்டத்தின் முகத் திரையைக் கிழிக்கும் வகையில் பிரச்சாரமும் நடை பெற்றாக வேண்டும். மதச்சார்பற்ற சக்திக்கு கூடுதல் கடமை உணர்வு உண்டு.

டிசம்பர் 3ஆம் தேதி மாவட்டத் தலை நகரங்-களில் திராவிடர் கழகம் நடத்தும் ஆர்ப்பாட்டம் இந்த வகையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தோழர்களே எழுச்சியுடன் ஆர்ப்பாட்டம் நடத்துவீர்! நடத்துவீர்!

விடுதலை தலையங்கம் 30.11.09

துக்ளக்.....பிறவிக்குணம்


முல்லை பெரியாறு பிரச்சினையிலே, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையே அலட்சியப்படுத்தி சட்டத் திருத்தம் கொண்டு வந்த கேரள முதல்வரின் துணிச்-சல் எனக்கு இல்லை. நீங்க என்ன நினைக்கி-றீங்க? என்று முதலமைச்-சர் கலைஞர் திராவிடர் கழகத் தலைவர் கி. வீர-மணி அவர்களிடம் கேட்-கி-றாராம்.

அதற்கு வீரமணி அவர்-கள் என்ன சொல்கிறாராம்?

அட விடுங்க, இந்த சின்ன விஷயத்துக்குப் போய் இப்படிப் பாராட் டறீங்களே, அய்ம்பது சதவிகிதத்துக்குமேலே இட ஒதுக்கீடு இருக்கக் கூடாதுன்னு சுப்ரீம் கோர்ட் உத்தரவு இருந் தும் எத்தனையோ வரு ஷமா 69 சதவிகிதம் கொடுத்துட்டு வர்றோமே! அதுவிடவா இது பெரிய துணிச்சல்?

_ துக்ளக் கார்ட்டூன் 2.12.2009

மொட்டைத் தலைக்-கும் முழங்காலுக்கும் முடிச்சு என்று சொல்லு-வார்களே, அது நூற்றுக்கு நூறு இதற்குத்தான் பொருந்தும். பொதுவாக சோவின் விவாத முறை என்பதே இந்தத் தன்மை வாய்ந்ததாகவே இருக்கும்.

முல்லை பெரியாறு விஷயத்தில் உச்சநீதி-மன்-றத்தின் தீர்ப்பை முடக்கும் வகையில் கேரள அரசு சட்டம் கொண்டு வந்ததை உச்சநீதிமன்றம் ஏற்றுக்-கொள்ளவில்லை.

அதேநேரத்தில், திராவி-டர் கழகத் தலை-வர் வீர-மணி அவர்கள் சொன்ன சட்ட ரீதியான யோச-னையை, கருத்துரையை ஏற்று அ.தி.மு.க. ஆட்சி-யில் கொண்டுவரப்பட்ட 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை, உச்சநீதிமன்றம் குற்றமுடையது என்று இதுவரை சொல்லவில்-லையே! 50 சதவிகித இட ஒதுக்கீட்டைத் தாண்டி வட கிழக்கு மாநிலங்-களில் தாழ்த்தப்பட்டோருக்கும், மலைவாழ் மக்களுக்கும் அளிக்கப்பட்டுக் கொண்டு-தானிருக்கிறதே!

உண்மை இவ்வாறு இருக்க, சோ இப்படிக் குழப்-புவது ஏன்? தமிழ்-நாட்டுக்கோ, தமிழர்க-ளுக்கோ நன்மை _ உரிமை கிடைக்கும் எதை-யும் கொச்சைப்படுத்து-வதும், குறுக்குச்சால் ஓட்-டுவதும்தான் பார்ப்பனர்-களின் பூணூல் தர்மமும், ரத்த ஓட்டமும் ஆகும்.

கொலை வழக்கில் சிக்-கிய சங்கராச்சாரியார்பற்றி எழுதும்போது, அவருக்கு அநீதி இழைக்கப்பட்-டுள்-ளது என்று கூசாமல் இந்தக் கூட்டத்தால் எழுத முடிகிறதே!

சிறுத்தை தன் புள்ளி-களை மாற்றிக்கொண்-டாலும், எதியோப்பியன் தன் நிறத்தை மாற்றிக்-கொண்டாலும் பார்ப்பான் தன் பிறவிப் புத்தியை மாற்றிக்கொள்ளவே மாட்-டான் என்ற டாக்டர் டி.எம்.-நாயரின் பொன்-மொழியை தமிழர்கள் கண்ணாடி சட்டம் போட்டு வீட்டில் மாட்டி வைத்துக் கொள்வார்-களாக!

-விடுதலை  30.11.09

Friday, November 27, 2009

இட ஒதுக்கீடு வேலை வாய்ப்பல்ல; அதிகாரப் பங்-கீடு


விசுவநாத் பிரதாப் சிங் (வி.பி. சிங்) வெறும் 11 மாத காலமே பிரதமராக இருந்-தவர். ஆனாலும், உண்மை-யான ஜனநாயகவாதியாக ஆட்சிப் பொறுப்பை நடத்-திக் காட்டிய மன்னர் குடும்-பத்தைச் சேர்ந்தவர் அவர்.


அவர் ஒரு சூத்திரத்தை, ஆட்சியின் இலக்கணத்தை உருவாக்கிக் கொடுத்தார்.

80 சதவிகித மக்களை ஜாதியின் பெயரால், சமூகத் தின் மய்ய நீரோட்டத்திலி ருந்து ஒதுக்கி வைத்திருப் பதைவிட மிகப்பெரிய திறமைக்கு எதிரான ஒரு செயல் இருக்க முடியுமா? என்ற வினாவை எழுப்பிய பெருமகன் அவர்.

இட ஒதுக்கீடு வேலை வாய்ப்பல்ல; அதிகாரப் பங்-கீடு என்ற உரிமைக் குரலை முழக்கிய கொள்கையாளர்.

பிரதமர் பதவிதான் தனக்கு முக்கியம் என்று அந்தச் சமூகநீதி சரித்திரம் நினைத்திருந்தால், பா.ஜ.க.-வுடன் சமரசமாகப் போயி-ருக்கலாம். மண்டல் குழுப் பரிந்துரையின் பக்கம் தலை வைத்துப் படுக்காமலும் இருந்திருக்கலாம். அதற்கு-முன் பத்தாண்டுகால ஆட்சி-யாளர்கள் அப்படித்தானே நடந்துகொண்டார்கள்.

பிற்படுத்தப்பட்ட மக்க-ளுக்கு வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்த ஒரே காரணத்தால், பாரதீய ஜனதா தன் ஆத-ரவை விலக்கி தன் முக-வரியைக்காட்டிக் கொண்டது. திராவிட இயக்கப் பாரம்-பரியம் என்று தங்களை சொல்-லிக் கொள்ளும் அ.தி.மு.க. உள்பட பா.ஜ.க., காங்கிரசோடு சேர்ந்து-கொண்டு வி.பி. சிங் ஆட்சி-யைக் கவிழ்த்தது. (விதி-விலக்கு, காங்கிரஸ் கூட்-டணியில் இருந்த ஏ.கே. அப்துல்சமது என்னும் பெருமகனார்) அப்போது-கூட அந்த உத்தரப்பிரதேச சிங்கம் எப்படி கர்ச்சித்தது தெரியுமா? சமூகநீதிக்காக நூறு பிரதமர் நாற்காலிகளை இழக்கத் தயார்! என்று சங்கநாதம் செய்தாரே, அவர் அல்லவோ மனிதகுல மாமனிதர்!

மும்பையில் வன்முறை-யைக் கண்டித்து ஒரு சொட்டு தண்ணீர்கூட அருந்-தாமல், உண்ணாவிரதம் இருந்தார். இரு சிறுநீரகங்-களையும் இழந்த நிலையில், அவருக்காக சிறுநீரகங்-களைத் தானமாகக் கொடுக்க திராவிடர் கழக இளைஞர-ணித் தோழர்கள் நீண்ட வரிசையில் நின்றனரே!

திராவிடர் கழகத் தோழர்-களிடத்திலும், தலைவரிடத்-திலும் அவர் வைத்திருந்த அன்புக்கு ஈடுஇணை எது-வும் கிடையாது. வீரமணி-யைப் பார்க்கும் பொழுதெல்-லாம் சமூகநீதி உணர்வைப் பெறுகிறேன் என்று நெகிழ்ச்சி ததும்பக் கூறிய அந்தச் சொற்களை இன்று நினைத்-தாலும் நம் கண்களில் நீர் கசிகிறது.

வி.பி. சிங் மறைவைக்-கூட இருட்டடித்தன _ உயர்ஜாதி ஊடகங்கள்! அந்த அளவுக்கு அவர் சமூகநீதியாளர் என்பதுதான் அதன் ஆழமான பொரு-ளாகும்.

வி.பி. சிங் மறைந்து இன்-றோடு ஓராண்டு ஆகிவிட்-டது. ஆனாலும், அவர் ஏற்றி வைத்த சமூகநீதிக் கொடியை இறக்கிட எந்தக் கொம்பனாலும் முடியாது_ முடியவே முடியாது! வாழ்க வி.பி. சிங்!!

-விடுதலை  மயிலாடன் 27.11.09

Wednesday, November 25, 2009

பெண்கள்


பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு _ சர்வ-தேச நாளாக இன்று கொண்-டாடப்படுகிறது. மத்திய பெண்கள் மற்றும் குழந்தை-கள் மேம்பாட்டு அமைச்சகம் டில்லியில் கருத்தரங்கம் ஒன்றினையும் ஏற்பாடு செய்துள்ளது.


இதுபோன்ற நாள்கள் அனுசரிக்கப்படுவதால் என்ன இலாபம் என்பதை-விட, பெண்களின் நிலை எந்த இடத்தில் இருக்கிறது என்கிற வரவு_செலவு பார்ப்பதற்கு நிச்சயமாகப் பயன்படும். அதன்மூலம் உரிமைக் குரலை ஓங்கி ஒலிக்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது.

இந்தியத் துணைக் கண்டத்தைப் பொருத்தவரை 2001 முதல் 2007 வரையி-லான ஒரு புள்ளி விவரம்:

பாலியல் வன்முறை (கற்பழிப்பு) _ 3,176
பாலியல் தொந்தரவு _ 10,006
கடத்தப்பட்டு துன்புறுத்-தப்பட்டோர் _ 4,482
வரதட்சணை சாவு _ 1,261
கணவனாலும், உறவினர்-களாலும் கொடுமைக்கு ஆளானோர் _ 8,549.

அரசுக்குத் தெரிந்த புள்ளி விவரங்கள் இவை. உண்மையில் இதைவிட அதிகமான துயரங்கள்தாம் பெண்களைக் குத்திக் குதறியிருக்கும்.

பரிதாபப் பள்ளத்தாக்கில் வீழ்ந்து கிடக்கும் இந்தப் பெண்களைக் கைதூக்கிவிட ஆண்கள் தோள் தூக்கி வரு-வார்கள் என்று எதிர்-பார்க்க முடியாது. பூனை-களால் எலிகளுக்கு உரிமை கிடைக்குமா என்ற தந்தை பெரியார் அவர்களின் வினாதான் இதற்குப் பதி-லாகும்.

சட்டப்பேரவைகளிலும், நாடாளுமன்றத்திலும் பெண்-களுக்கு 33 விழுக்காடு இடம் என்பது (நியாயமாக 50 விழுக்காடு தேவையே!) 1996 ஆம் ஆண்டுமுதல் நாடாளுமன்றத்தில் நிலு-வையில் உள்ளது. கட்சி-களைக் கடந்து ஆண்கள் இதில் எதிர்ப்பாக உள்ளனர் என்பது வெட்கப்படத்தக்க-தாகும்.

உலகில் இந்தப் பிரச்-சினையில் இந்தியா 104 ஆம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் மக்களவையில் பெண்களின் பிரதிநிதித்துவம் வெறும் 10.7 விழுக்காடுதான். பாகிஸ்தானில்கூட 21.3 விழுக்காடாகும். முதல் இடத்-தில் இருப்பது ருவாண்டா (48.8 விழுக்காடு).

பெண்களின் மக்கள் தொகையும் சரிந்து வரு-கிறது. இந்தியாவில் 1000 ஆண்களுக்குப் பெண்-களின் எண்ணிக்கை 933 ஆகும். சீனாவிலோ 100 ஆண்களுக்கு 117 பெண்கள் என்ற நிலை உள்ளது.

ஒரு நல்ல தகவல்_ இந்-தி-யாவில் ஆண்களின் சராசரி வயது 63.9. பெண்-களின் சராசரி வயதோ 66.9. இவ்வளவு இடர்ப்பாடு-களையும் கடந்து இந்த நிலை; காரணம், ஆண்-களைவிட பெண்களுக்கு எதிர்ப்புச் சக்தி அதிகமாம். இருந்தாலும் அவர்கள் தலையெடுக்க முடியாமல் இருப்பதற்குக் காரணம் ஆண்மை என்ற ஆண்-களின் அடக்குமுறை தத்-துவம்தான் என்பது தந்தை பெரியார் அவர்களின் கருத்தாகும். விழா எடுப்ப-வர்கள் இதுபற்றியெல்லாம் எங்கே சிந்திக்கப் போகி-றார்கள்?

- விடுதலை மயிலாடன் எழுதியது 25.11.09

Tuesday, November 24, 2009

நாட்டைப் பிடித்த அய்ந்து நோய்கள்

நாள்தோறும் நாட்டில் பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஒவ்-வொரு ஏடும், இதழும், பக்திச் செய்திகளைப் பரமார்த்தமாக வெளியிடு-கின்றன. ராசி பலன்களும் இடம்பெறும். மக்களை முட்டாள்களாகக் கட்டிப் போட்டால்தான் அவர்-களைச் சுரண்டிக் கொழுக்க முடியும் என்கிற பரந்த மனப்பான்மை பத்திரிகை முதலாளிகளுக்கு!


ஒரு இதழில் சிம்ம-ராசிக்-குப் பலன் இலாபம் என்றிருக்கும்; அதே நாளில் அதே ராசிக்கு இன்-னொரு பத்திரிகையில் பெருத்த நஷ்டம் என்றி-ருக்கும்.

இவற்றையெல்லாம் ஒப்பிட்டுப் பார்க்கும் அளவுக்குப் புத்திசாலித்-தனமோ, பொறுமையோ யாருக்கு இருக்கிறது? இந்த மெத்தனம்தான் பத்திரிகை முதலாளிகளுக்-குப் பெருத்த இலாபகர-மான ஒன்றாகும்.

இவற்றையும் தாண்டி வேறு விதமான தகவல்-களும் வந்துகொண்டு-தானி-ருக்கின்றன. அய்ம்பொன் சாமி சிலைகள் எனக் கூறி பித்-தளை சிலைகளை விற்க முயன்ற பூசாரி உள்பட நான்கு பேர் கைது! (தேனி மாவட்டம்). அடுத்தடுத்து 6 குழந்-தைகள் கொலை; பெண் சாமியார் மற்றும் அவரது கணவர் மீது 200 பக்க குற்றப் பத்திரிகை நீதிமன்-றத்தில் தாக்கல்; 47 பேர் சாட்சிகள் (சேலம் ஆத்-தூர் அருகே).

இவை வெறும் செய்தி-கள் மட்டுமல்ல; மதம், பக்தியின் பெயரால் நாட்-டில் நடக்கும் கீழ்த்தர-மான செயல்பாடுகள் _ இவற்றின்மூலம் பக்தர்-களாக இருப்பவர்கள்கூட சிந்திக்கவேண்டிய கட்-டாயம் _ எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவ-சியம்.

காஞ்சிபுரம் கோயிலில் அர்ச்சகப் பார்ப்பான் தேவநாதன் _ கோயில் கர்ப்-பக் கிரகத்துக்குள்ளேயே பெண்களிடம் நடத்திய காம விளையாட்டுகள் _ இவற்றிற்குப் பிறகும் கோயில், பக்தி சமாச்சாரங்-கள்பற்றி மக்கள் மறுபரி-சீலனை செய்யாவிட்டால் அவர்களின் அறிவுச் சாளரங்கள் எந்த அள-வுக்கு அடைபட்டுப் போயி-ருக்கின்றன என்பதைக் கவனிக்கவேண்டும்.

ஒவ்வொரு கோயிலுக்-கும் தலப்புரணாங்களை எழுதி வைத்திருப்பதில் மட்டும் குறைச்சல் இல்லை. அந்தக் கோயில்களில்-தான் இவ்வளவுக் கேவ-லங்களும் அரங்கேறுகின்-றன. அப்படியானால் அந்தத் தலப் புராணங்-களின் மகிமை எல்லாம் வெறும் வெத்து வேட்டு-தானே _ பொய்யில் புழுத்த புழுக்கள்தானே!

பத்திரிகைக்காரர்கள் இந்தக் கண்ணோட்டத்தில் எல்லாம் எழுதமாட்டார்-கள், எழுதினால் பிழைப்-புப் போய்விடுமே!

நாட்டைப் பிடித்த அய்ந்து நோய்கள் என்று ஒரு பட்டியலிட்டார் தந்தை பெரியார். பார்ப்-பான், பத்திரிகை, அரசியல் கட்சிகள், தேர்தல், சினிமா என்பவைதான் அந்த அய்ந்தும். பொறுமையாகப் பொருத்திப் பாருங்கள், உண்மை புரியும்!

விடுதலை 25.11.09

Monday, November 23, 2009

தமிழ் தண்டால்தான் எடுக்கும் என்பதை மறந்துவிட-வேண்டாம்

உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் தமிழ் பாட வேளையில் ஆசிரியர்கள் பிற மொழிச் சொற்களைப் பயன்-படுத்-தக்-கூடாது; அவ்வாறு பயன்படுத்துவது தாய்-மொழி கற்பித்தலின் நோக்-கத்தை எட்ட இயலாத நிலையை ஏற்படுத்துகிறது.


முதன்மை கல்வி அலுவலர்கள் பள்ளிகளை ஆய்வு செய்யும்போது தமிழ்ச் சொற்கள் மட்டுமே பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யவேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் பெருமாள்சாமி ஆணை பிறப்பித்துள்ளார்.

நியாயமான சுற்ற-றிக்கை இது. தமிழ் வகுப்-பில்கூட தமிழ் தாண்டவ-மாடாவிட்டால், வேறு எந்த வகுப்பில் அதற்-குரிய மதிப்பு காப்பாற்றப்-படும்?

தமிழன் வீட்டுத் திரு-மணத்தில் சமஸ்கிருதத்-திற்கு இடம் இல்லை என்று கூறி, தமிழன் தலைமை தாங்கி, தமிழி-லேயே அது நடத்தப்பட-வேண்டும் என்கிற உணர்ச்-சியின் வகைப்பட்டது இந்தச் சுற்றறிக்கை.

சென்னையில் ஆங்-கில வழிக் கல்வி நிறு-வ-னங்களில் படிக்கும் மாணவ, மாணவிகள் தப்பித் தவறி தமிழில் உரையாடிவிட்-டால், அவர்களுக்குத் தண்டனை, ஒறுப்புத் தொகை விதிக்கப்படு-கின்றன என்ற தகவல்கள் வெளிவரவில்லையா? அந்த உணர்வு தமிழர்-களிடத்தில் ஏற்படவேண்-டாமா?

பொதுவாக ஆங்கிலத்-தில் ஒரே ஒரு எழுத்துத் (ஷிஜீமீறீறீவீஸீரீ) தவறாக எழுதி-விட்டால், இமயமலை உச்சியில் ஏறிக் கூவத்தில் குதிப்பவர்கள் உண்டு. அப்படி எழுதுபவர்-களுக்கு முட்டாள் பட்ட முத்திரையைக்கூடப் பொறித்து விடுவார்கள். அறிவாளித்தன்மை என்-பது ஆங்கில எழுத்து-களில் குடிகொண்டிருக்-கிறது என்பது அவர்-களின் நினைப்பு!

அதே ஆசாமிகள் பருப்பை பறுப்பு என்று எழுதினால், அப்படி எழு-துவதே ஒரு மேதாவித்-தனம் _ மெத்த படித்தவர் _ அவருக்குத் தமிழ் எல்லாம் அவ்வளவாக வராது என்று சொல்லு-வதே-கூட ஒரு பெருமை-யாகப் போய்விட்டது _ அந்த அளவுக்குத் தாழ்வு மனப்பான்மை தமிழர்களி-டத்தில் ததும்பி வழிகிறது.

இன்னொன்று, கல்வித் துறை இயக்குநருக்கு: பதவி உயர்வு, ஊதிய உயர்வு (மிஸீநீக்ஷீமீனீமீஸீ) கிடைக்கிறது என்பதற்காக, உடற்பயிற்சி ஆசிரியர் உள்ளிட்டோர் அஞ்சல் வழியில் தமிழ் படித்து, கோனார் உரைகளை மட்டும் மேலோட்டமாகப் படித்துவிட்டு, தேர்வுக்-குரிய அளவில் மட்டும் மதிப்பெண் வாங்கி, புலவர் பட்டமும் பெற்று தமிழாசிரியராக ஆக்கப்-பட்டால், வகுப்பில் தமிழ் தண்டால்தான் எடுக்கும் என்பதை மறந்துவிட-வேண்டாம்.

- மயிலாடன் விடுதலை 23.11.09

Sunday, November 22, 2009

திருவண்ணாமலை தீபமும்-திகைப்பும்


1947இல் விடுதலையில் வெளியான (கார்த்திகை 7 விய ஆண்டு) தீபமும் திகைப்பும் என்னும் பேராசிரியரின் திருவண்ணாமலை தீபம் பற்றிய கட்டுரை.


தம்முடைய கட்டுரையில் திருவண்ணாமலையில் ஏற்பட்ட தாழம்பூப் பிரச்சினை புராண வரலாற்றினை எடுத்துக்கூறிச் செயற்கைத் தீபம் ஏன் ஏற்றவேண்டும் என்று வினா எழுப்பி, ஒளியே முக்கிய மென்றும் எனவே தான் கடவுள் பெயரால் இவ்விழா வெனின் நூதன மின்சார சக்தியினால் குறைந்த செலவில் தீபத்தைப் போல் பல மடங்கு ஓளியைத் தரக்கூடிய மின்சாரவிளக்கை ஒன்றாகவோ ஓராயிரத்து ஒன்றாகவோ போட்டு (அமைத்து) ஏழை மக்களுடைய பொருளுக்கு அழில்லாமல் செய்யட்டும் உற்சவ காலங்களில் தீவட்டிக்கு பதில் காஸ்லைட் உபயோகிப்பது முறையானால் இது மட்டும் எப்படித்தவறாகும்? அனல் விளக்குக்குப்பதில் மின்சாரத் தொடர் விளக்குகள் அமைத்து கார்த்திகை கொண்டாடும் போதும் தீபம் மட்டும் ஏன் மாற்றம் பெறக்கூடாது என்று தீபத்திருநாள் கொண்டாடுபவர்களுக்கு மாற்றுச் சிந்தனை அளிக்கிறார். தீபம் நமக்குத் திகைப்பாக இருக்கிறது. தீபத்தைப் போற்ற வேண்டாம் என்று முடிக்கிறார். கார்த்திகை நெருங்கி விட்டது! வீடுகளிலெல்லாம் அகல் விளக்குகளை வரிசை வரிசையாக ஏற்றி-வைப்பார்கள். இரவு முழுவதுங்கூட விளக்கு-களுக்கு எண்ணெய் ஊற்றியபடி இருப்பர், செல்வர்-கள் வீடுகளிலே பணியாட்களும் பிறரும். அந்-நாளிலே திருவண்ணாமலையிலே தீபம். மலை யுச்சியிலே பெருங்கொப்பரை, அது நிறையக் கற் பூரத்துடன் கலந்த நெய், மேலும் மேலும் நெய்யும் திரியும் கொட்டிய வண்ணம் பக்தர்களின் கூட்டம்! தமிழகத்தில் உள்ள பெருவாரியான கோவில்-களி லேயும் அந்தந்தக் கடவுள்களின் பொருள் நிலைக் கேற்ற வண்ணம் கார்த்திகை கொண்-டாடப்பட்டே வருகின்றது.


தீபத்திற்காக ஆயிரக்கணக்கான மணக்கும் நெய்யும் நூற்றுக்கணக்கான (கேஸ்) பெட்டி கற்பூர-மும், கட்டுக்கணக்கிலே திரி நூலும் எரிக்கப்படு-கின்றன. வீடுகளிலே ஏற்றப்படும் கோடிக்கணக்கான கை விளக்குகளால் ஆயிரக்கணக்கான குடங்கள் அளவுள்ள எண்ணெய் வீணாக எரின்கிறது. தீப தரிசனத்திற்காக திருவண்ணாமலைக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான மக்களால், அவர்களது போக்கு-வரத்துக்காக ரயிலுக்குச் செலவிடும் தொகையும், வெளியூர்களில் தங்குவதால் ஏற்படும் செலவுத் தொகையும் ஏராளம். அவர்களுக்கு ஏற்படும் பொருள் இழப்பும் ஏராளம்!



நாசப்பட்டியல்

இவ்வளவு பெருங்கூட்டமான மக்கள் ஆண்-டிலே ஓரிரண்டு நாட்கள் திருவண்ணா-மலையிலே வந்து குவிவதை முன்னிட்டு நூற்றுக்கணக்கிலே கட்டப்பட்டுள்ள சத்திரங்களும், மடங்களும், பாக்கி இருக்கும் முன்னூற்று அறுபத்து மூன்று நாட்களும் பயன்படாமல் வீணாகக் கிடப்பதால் (சில சோம்-பேறிகளுக்கு உறையுள் ஆவதைத் தவிர ) அதற்-காகக் செலவழிக்கப்பட்ட மூலதனம் பாழாகின்றது. இவ்வளவு பெருங்கூட்டமாக மக்கள் திரளுவதால் இலாபம் அடையும் (கொள்ளையடித்து வாழும்) கோயிற்-பூனைகள், செல்வம் மிக்க செட்டியார் இனத்-தாரையும், பிறதமிழரையும் தூண்டிவிட்டு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான ரூபாய் செலவில் வெள்ளியிலே வாகனம், நூதனரதம், அற்புத கல்யாண மண்டபம், ஈஸ்வரனுக்குப் பொன்-னிலே கவசம், அம்மனுக்கு வைர ஒட்டியாணம் புதிய கோபுரக் கும்பாபிஷேகம், வேத வியாகர்ண பாடசாலை என்பவைகளை அமைக்கச் செய்வ-தாலும், அவைகளின் விளம்பரத்தின் மூலம் ஏராள-மான மக்களை திரளச்செய்துஅந்த பெருங்-கூட்டத்தால் பெருங்கொள்ளை கொண்டு கவலை-யின்றி வாழ்வதற்கு வழிசெய்து கொள்ளுந்-தன்மையாலும், ஏற்படும் பொருள் இழப்பு ஏராளம். எவ்வகையானும் தமிழர் கோடிக் கணக்கிலே பொருளைக் கொட்டியழவும் தமிழரின் வளம் கெட்டழியவும் காரணமாகின்றது கார்த்திகை தீபம்.

பொருள் பாழாக்கப்படுவதைத்தவிர மக்களுக்க ஏற்படும் தொல்லையும், தொத்து நோயும், துயரும் பெருந்துன்பமும் அளவற்றவை என்பதோடு, அவர்-களுடைய அறிவு அழியுந்தன்மையே திகைப்பை விளைப்பதாம்!

இது பற்றிய புராணக்கதை யாவருக்கும் தெரிந்தே! இதன் படி மும்மூர்த்திகள் சந்திக்-கின்றனர். ஏன்? எங்கே? எப்பொழுது? யாருக்கும் தெரியாது. மும்மூர்த்திகளிலே ஒருவர் சிவன், அவரே முழுமுதற் கடவுள் என சைவ மதத்தினர் கூறுவர்! அவர் ஏன் மற்ற சாதாரணக் கடவுளரைச் சந்திக்க வேண்டும்? நமக்குத் தெரியாது! சந்திப்பது ஒப்புரிமை படைத்தவர்களிடத்திலேயே நிகழ்வது இயற்கை. முழுமுதற் கடவுளின் உயர்வை எடுத்துக்காட்ட வந்த இக்கதையில் சிவனைக்காண மற்றிருவரும் சென்ற போது இவை நிகழ்ந்த தாகவாவது கூறியிருக்கலாம். அவ்வாறும் இல்லை. சந்தித்த இடத்திலேயே யார் பெரியவன் என்ற விவாதம் ஏன் தோன்றவேண்டும்? எதிர்பாராமல் சந்திக்க நேர்ந்தபோது பிரம்மாவும் விஷ்ணுவும், அப்-பொழுதே யார் பெரியவன் என்ற சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள விரும்பியதின் விளைவா? மற்ற புராணங்களின்படி விஷ்ணுவின் மகன் பிரம்மா என்ற கதையிருக்க சந்தித்த போது திடீரென்று சந்தேகம் பிறப்பானேன், தந்தைக்கும் மகனுக்குமே? யார்பெரியவர், என்ற விவாதம் மூர்த்திகளிடையிலே நடப்பானேன்? முக்காலத்தையும் உணரும் மூர்த்தி-கள் ஒருவரையொருவர் சந்திக்கப் போவதையே உணர வில்லை! சந்தித்தால் சச்சரவு ஏற்படும் என்பதை மட்டும்தான் உணரவில்லையா? அன்றி இவைகளை எதிர்பார்த்தேதான் சந்தித்தார்களா? அப்-படியானால் முடிவும் அவர்கள் அறிந்ததேதானா? அதற்கு ஏன் ஒவ்வொரு புதுஉருவிலே தோன்ற வேண்டும்? நாமறியோம் என்பது மட்டுமல்ல; மும்-மூர்த்திகளேகூட யாரை,எங்கே, எப்பொழுது சந்திக்கவேண்டும் என்ற நிர்ணயமில்லாமலும், ஏன் சந்திக்கவேண்டும் என்ற சிந்தனை இல்லாமலும், என்ன விளையும் என்பதை அறியாமலுமே தான் இருந்திருக்கவேண்டும்!

இது நிற்க. யார் பெரியவர் என்று பிரம்மாவுக்கு விஷ்ணுவுக்கும் இடையிலே வாதம் ஏற்பட்டதே தவிர, கதையின்படி யார் பெரியவர் என்ற முடிவு காணப்படவில்லை. இடையிலே சிவனார் ஜோதியாகி வானளாவினார்! இருவருக்கும் பெரிய-வருமானார்! அவ்வளவுதான்!

பொய் மூர்த்திகள் இது கிடக்க. ஜோதியாய் நின்ற பெருமான் அடியையும், முடியையும் காணச் சொன்னபோது எப்படிப் பேசினாரோ? அந்த முகந்-தெரிந்தால் பிரம்மா - முடியைக் காண்பதும் கடினமாமோ? அசரீரியாகச் சொன்னதாக வைத்துக் கொள்வோம்! அடிமுடியைக் காண விரும்பிய இருவரும் பன்றியும் அன்னமுமாய் உருவெடுப்-பானேன்? பன்றியாக பலமுறை உருவெடுத்த பழக்கத்-தால் திருமால் தான் உடனே பன்றி வடி-வெடுத்-தார்! பிரம்மாவாவது ஏன் உயரப்பறக்கக்கூடிய கருடனாக உருவெடுக்கக் கூடாதோ? தெரியவில்லை யென்றோ முடியவில்லை என்றோ கருத முடியுமா? இருந்ததென்றால் இரு மூர்த்திகளும் தங்களின் இயற்கை உருவத்தைவிட இதற்கேற்ற புது வடிவெடுத்துங்கூட காணமுடியாத காரணமென்ன? ஜோதி யென்றால் அடிமுடி இல்லாதது என்றால் - முழுமுதற் கடவுளல்லவா? எனவே அடிமுடி இல்லாத ஜோதியாகி நின்றார் என்-றால் - இல்லாத அடியையும் முடியையும் காணும்-படி கூறியது பொய்யல்லவா? அடி முடி இருந்ததென்றால்- இருவரும் காணாததால் காண இயலாததால் -மூர்த்திகள், படைப்பவர், காப்பவர் என்று பேசப்படுவது முழுப்பொய்யல்லவா? பின் விஷ்ணுவிற்கு மட்டும் கோயில்களேன்? பிரம்மாவைவிட எக்காரணத்தாலே விஷ்ணு கடவுளென்று கருதப்படமுடியும்?

விஷ்ணுவுக்கோ, பிரம்மாவுக்கோ கொஞ்சம் புத்தியைப் பயன்படுத்தும் திறமை யிருந்தாலும் தாங்களும் ஜோதியாகி - (தீயாகி) ஜோதியிலே கலந்து அய்க்கியமாகி அடியையோ முடியையோ மட்டு-மல்ல; அடி முடி இரண்டையுமே கண்டு திரும்பி வெளிவந்திருக்கலாம். அப்படியானால் சிவன் பெருமை நிலைக்காதே என்றெண்ணிய புராணீகர், விஷ்ணுவை பன்றியாக்கி, பிரம்மாவை அன்னமாக்கி, அரன் பெருமையைத் தடுத்தாட் கொண்டார் போலும்! தாழம்பூ பிரச்னைஇனி பிரம்மா முடியைத் தேடச்சென்றபோது வந்த தாழம்பூ முடியிலிருந்து வந்ததென்றால், முடியிருந்ததென்றாகிறது! அப்படியானால் பிரம்மாவால் ஏன் அடையமுடியவில்லை? அவரால் அடைய முடியவில்லையென்றால் தாழம்பூவால் மட்டும் கீழ்நோக்கி அவ்வளவு தூரம் வர முடிந்தது? தாழம்பூ தானாகவர வில்லையென்றால் - அது அசேதனம், சேதனமென்று, தானாக இயங்குவதென்று இயற்கையின் தன்மைக் கேற்ப இயல்வது. எனவேதான் கீழே விழுந்தது என்றால் அன்னப்பறவையிடம் எப்படி பேசமுடிந்தது? பொய் சாட்சி கூறியதுதான் எப்படி ? அது கூற-வில்லை, அன்னப்-பறவை அடையாளமாகக் கொண்டு வந்த-தென்றால், தாழம்பூவைத் தண்டிப்பானேன்? தாழம்-பூவைச் சிவனார் தண்டித்ததினின்றும் அது தலை-மையிலே இருந்தது என்பதைச் சிவனார் ஒப்புக்-கொண்டதாகத் தானே பொருள்? அப்படி-யானால் ஜோதியின் முடியிலே தாழம்பூவோ தாழைச் செடியோ எப்படியிருக்க முடியும்? எரிந்து சாம்ப-லாய்ப் போயிருக்காதா? ஜோதியான போது இறை-வன் இவைகளை நீக்கிவிட்டாரா? பிறகு தாழை-யின் கதியென்ன? ஜோதியிலே கங்கை சந்-திரன் முதலானோர் தங்கி இருப்பதனால் ஒரு தாழம்பூ ஏன் விழவேண்டும்? இறைவன் தலை-யிலே சூட்டப்பட்டு விட்டால் பின் என்றும் அழி-யாது என்ற கூற்று பொய்ப்பதன்றோ? அதுவன்றி இறைவன் முடியினின்று விழும்போது தாழை பொய் சொல்லிற்றென்றால் சிவனின் மகத் துவந்தான் என்ன?


1 1/2 அடி உருவம் ஏன்

இறைவன் ஜோதியாய் நின்றதால்தான் அண்ணா-மலையே தேயுஸ்தலம் என்று கூறப்படு-வதை ஏற்றுக்கொண்டால் பின் ஏன் தீபம் ஏத்து-கின்றனர்? அரனுடைய அடிமுடிகளை அரியும் அயனுமே காணமுடியவில்லையென்றால், அடி முடி இரண்டையுமே எவரும் காணக்கூடிய வகையிலே தீபம் அமைப்பதன் அர்த்தமென்ன? அல்லது அத்தீபத்தைத் கண்டவுடனேயே, மக்கள் இறை-வனின் செந்தழல் மேனியையும் அடி-முடிகாண இயலா விண்ணுயர ஓங்கிய உயர்-வையும் உணர்கின்றனர் என்றால், தீப விழா நடை-பெறும் அதே இடத்தில் அருணாசலேஸ்வரருக்கு ஒன்றரை அடி உயரத்தில் சிலை (விக்ரகம்) எதற்காக? இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக தீபம் ஒளி விட்டும் சிவனாரின் இலிங்க வடிவமும், மூர்த்தி வடிவமும், ஒரு காலைத் தூக்கியருளும் நடராசரும், பொன்முடி தரித்த சுந்தரேசுவரரும் எதைக் காட்டுகின்றன? அடிமுடியற்ற கடவுளைக் காட்ட தீபம் என்றால் தாளம் தவறாமல் அடி-வைத்துச் சதிராடும் சாமிக்கும், இசை கேட்டுருகித் தலை (முடி) யசைக்கும் சாமிக்கும் சிலை எதற்-காக? தீபம் கண்ட மக்களுக்கு, தீபத்தின் தத்துவம் பேசும் தொண்டர்கட்கும் விக்ரகவணக்கந்தான் எதற்-காக? அண்ணாமலை தீபத்தைக் கண்டு ஜோதி வடிவைக் கொண்டு. அங்கெங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி அருளோடு நிறைந்-ததை மக்கள் உணர்ந்து கொண்டால் தீபந்தான் எற்றுக்கு? இவைகளை மக்கள் உணர்-தல் எளிதோ, ஞானிகளன்றோ உணரவல்லார் எனின், தீபத்தின் பெயரால் மக்களின் பொருள் பாழாக்கப்படுவானேன்?

அகல் விளக்கிலெல்லாம், மின்மினியின் ஒளியைக் காண்பதாகக் கூறும் பக்தர்கள் அண்ணா-மலைக்கே ஆண்டு தோறும் செல்வானேன்?

அறிவுடைமையாகுமா ?

அகில உலகையும் அதில் வாழும் மக்களையும் படைத்த முழுமுதற் கடவுள் ஜோதிவடிவினன் என்பதை உலகோருக்கு உணர்த்தவேண்டுமானால், உலகில் பகல் முழுவதும் விளங்கும் பகல-வரனையே அதற்கு ஒர் அடையாளமாக்கியிருக்-கலாம்! அகல் விலக்குக்கு எண்ணெய்யோ, தீபத்திற்கு நெய்யுந்திரியுமோ வீணாகாது. இவை வீணாவது பற்றிக் கவலையில்லை யென்றேகரு-தினாலும்,-அரியும் அயனும் அளவிட முடியாத அரன் என்று எடுத்-துக் -காட்ட எழுதப்பட்ட இறைவன், அவரவர்கள் பொருள் வலிவுக் கேற்பவும், சேர்ந்த நெய், சூடம், திரி இவைகளுக்கேற்பவும் அளவிடப்படுவது அறிவுடைமையாகுமோ?

அண்ணாமலையே ஜோதிவடிவென்றும், அதற்கு அடையாளமாகவே அதன் மேல் தீபமென்றும் கூறினால், ஜோதி வடிவு ஜோதியை ஏன் இழந்தது என்பதையும் முன்பொரு காலத்தில் ஜோதி-யாகத்தான் இருந்ததென்றால்,அதுவே நெருப்பாக நின்று மாறிவிட்ட பிறகு எதற்காக செயற்கைத் தீபம் என்பதையும் எண்ணிப்பாருங்கள்!

ஒளியே முக்கியமென்றும், எனவேதான் கடவுள் பெயரால் இவ்விழாவெனின் நூதன மின்சார சக்தியினால் குறைந்த செலவில் தீபத்தைப் போல் மின்சார விளக்கை ஒன்றாகவோ, ஓராயிரத்து ஒன்றாகவோ போட்டு (அமைத்து) ஏழை-மக்-களுடைய பொருளுக்கு அழிவில்லாமல் செய்யப்-படும் உற்சவகாலங்களில் தீவெட்டிக்குப்பதில் காஸ்லைட் உபயோகிப்பது முறையானால் அது மட்டும் எப்படித்தவறாகும்? அகல்விளக்குக்குப் பதில் மின்சாரத் தொடர்விளக்குகள் அமைத்து கார்த்திகை கொண்டாடும் போது தீபம் மட்டும் ஏன் மாற்றம் பெறக்கூடாது?

ஆனால், தீபமோ வழக்கம் போல் வந்து போகிறது! தமிழர் பொருளோ என்றைக்கும் எரிகிற நெருப்பிலே எண்ணெய்யாகிறது! தமிழர் வாழ்வோ இன்றளவும் அறியாமை இருளிலே அழிவுறுகின்றது! இந்நிலையை உணர்ந்ததாலேயே தீபம் நமக்குத் திகைப்பாக இருக்கிறது! தீபத்தைப் போற்ற-வேண்டாம்! திகைப்புற்றே கலங்கவேண்டாம்!

நன்றி விடுதலை 22.11.09

Saturday, November 21, 2009

ஜெயேந்திரர் முதல் தேவநாதன் வரை...


காஞ்சிபுரம் மூக்கைத் துளைக்கிறது; கசுமாலம் _ இப்படியும் ஒரு பக்தியா? ஜென்மங்களா? என்று நாக்கைப் பிடுங்க நாலு கேள்விகளைப் பெண்கள் நடு வீதியில் கேட்டுக் கொண்டுதானிருக்-கிறார்கள்.


மச்சேஸ்வரர் கோயிலாம் _ அந்தக் கோயில் அர்ச்சகன் தேவநாதனாம் _ கோயில் கருவறையிலே கரு உற்பத்தி பண்ணிக்கொண்டு கிடக்கிறானாம்.

பகவான் கர்ப்பக் கிரகத்தில் சரச-மாடினால் முதுமை வந்து முட்டாதாம் _ என்றும் இளமையில் சுகிக்கலாமாம்! அர்ச்சகன் தேவநாதனின் பசப்பு வார்த்தைகளில் மயங்கி பாவையர் பலர் அவன் மடியில் வீழ்ந்தனராம்.

ஒரு பக்கம் அர்ச்சனைத் தட்டில் காசு விழுமாம் _ இன்னொரு பக்கம் கர்ப்பக்-கிரகத்தில் காமச் சேட்டை பூஜைகள் நடக்குமாம்.

எவ்வளவு கொழுப்பும், வக்கிரமும் இருந்தால் இந்தக் கேவலத்தை கை தொலைபேசி மூலம் படம் பிடித்து வைத்து, பிறகு தனியே போட்டுப் பார்த்து ரசிப்பானாம்.

ஒரு பெண், இரு பெண் அல்ல; 15 பெண்கள் வரை பட்டியல் நீள்கிறது. விஷயம் வெளியுலகுக்கு வரவே, ஆசாமிதன் குடும்பத்தோடு தலைமறை-வாகி விட்டான்! இப்பொழுது நீதிமன்றத்தில் சரண் அடைந்து கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறான்.

காமகோடி பீடாதிபதியே இந்தத் தரத்தில் உள்ளவர் என்கிறபோது இந்தத் தேவநாதன்தான் எம்மாத்திரம்!

காஞ்சி சங்கரமடத்தில் நடக்காத-வைகளா இந்தக் கோயிலில் நடந்து விட்டது?

காமத்தையறுத்த மடாதிபதியே காமக் குளத்தில் விழுந்து நீச்சல் அடிக்-கிறார் என்றால், அவாள் சிஷ்யாள் _ அவாள் வயதுக்கு எவ்வளவு ஆட்டம் போடுவா?

ஒவ்வொரு நாளும் பிரம்மமுகூர்த்த நேரத்தில் விடியற்காலை நாலரை மணிக்கு திருவரங்கத்திலிருந்து உஷா என்ற பெண் ஜெயேந்திரரோடு சல்லாப மொழிகளில் உல்லாசப் பேச்சுகளைப் கைப்பேசியில் பேசுவார் என்ற தகவல் எல்லாம் ஊர் சிரிக்கவில்லையா? அனுராதா ரமணன் என்ற பிரபல பார்ப்பனப் பெண் எழுத்தாளர், சங்கராச்-சாரி வேங்கையிடமிருந்து எப்படி தப்பித்தார் என்பதை கண்ணீ-ரும் கம்பலை-யுமாக தொலைக்காட்சி-களில் குமுறினாரே கொட்டியழுது வேதனை-யின் சூட்டைத் தணித்துக் கொள்ள-வில்லையா? மைதிலி என்ற பெண்ணுடன் தன் எதிரிலேயே அந்த மடாதிபதி உறவு வைத்தார் என்று ஊருக்கும் உலகுக்கும் அறிவித்தாரே _ அதைப் பார்க்கும்-போது இந்த தேவநாதன் விஷயம் அற்-பமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

வடக்கே குஜராத் மாநிலம் தபோயில் உள்ள சவுமியநாராயண் கோயிலில் என்ன நடந்தது?

அர்ச்சகர்ப் பார்ப்பனர்களான சந்த், தேவ்வல்லப் கோயிலுக்குள் உள்ள குடிலிலேயே கூத்தும் குடியுமாகக் கும்மாளம் போட்ட காட்சிகள் எல்லாம் வீடியோ கோப்புகளாக வெளியில் வந்த,, காரித் துப்பினார்களே!

சபரி மலைக் கோயிலின் மூத்த தந்திரி-யான மோகனரு விபச்சாரிகளின் வீட்டில் கையும் களவுமாகப் பிடிபட வில்லையா?

இவையெல்லாம் இந்த அர்த்தமுள்ள இந்து மதத்தில் சர்வ சாதாரண-மாயிற்றே!

ஓம் என்பதற்கு அவர்கள் கூறும் தத்-துவம் என்ன? ஆண் -_ பெண் சேர்க்கை-யின் வடிவம் என்றுதானே விளக்கம் சொல்லுகிறார்கள்?

பெண்கள் நெற்றியில் திலகமிட்-டால், அது வீட்டு விலக்கான பெண்-ணின் குருதியின் அடையாளம் என்று தானே கூசாமல் சொல்லுகிறார்கள். நாமம் தரிக்கிறீர்களே, அது என்ன என்று கேட்டால் அதற்கும் ஒரு தத்து-வத்தைத் தயாராகவே வைத்துள்ளனரே!

வெள்ளைக் கோடுகள் இரண்டும், விஷ்ணுவின் தொடைகள் என்றும், நடுவில் உள்ள சிவப்புக் கோடு விஷ்ணு-வின் ஆண் குறி என்றும்... அடேயப்பா, எவ்வளவு அட்சரப்பிசகு இல்லாமல் சொல்லுகிறார்கள்.

இந்து மதத்தை எடுத்துக் கொண்-டால் மும்மூர்த்திகளும் சரி, அவர்களின் சீடகோடிகளும் சரி, தேவாதி தேவர்-களும் சரி _ கற்பழிப்புக் குற்றம் செய்யாத ஒரே ஒரு கடைக்குட்டி சாமியைக் காட்ட முடியுமா?

காஞ்சிபுரம் தேவநாதன் இப்படி-யென்றால் அந்தத் தேவநாதனாகிய இந்திரன் கவுதமமுனிவரின் மனைவி அகலிகையை மாறுவேடம் பூண்டு கற்பழிக்கவில்லையா! சரசுவதியையே பெண்டாண்டவன் தானே படைத்தல் கடவுளான பிரம்மா.

தாருகாவனத்தில் இருந்த ரிஷிப் பத்தினிகளின் கற்பைச் சூறையாடி தன் சிசுனத்தை இழந்தவன் தான் முழு-முதற் கடவுளான சிவன். மகாவிஷ்ணுவைப்பற்றி கேட்கவும் வேண்டுமா? அதற்கென்றே ஒரு அவ-தாரமே எடுத்து (கிருஷ்ணாவதாரம்) காம வேட்டை யாடியவன் ஆயிற்றே!

தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்த பார்ப்பானுக்கு மோட்சம் அளித்த _ மாபாதகம் தீர்த்த புராணங்-கள் இந்துமதத்தைத் தவிர வேறு எங்குண்டு?

கோயில்களைப் பாருங்கள் _ அங்கு கொக்கோகக் காட்சிகள்; தேர்களைப் பாருங்கள் _ தேவர்களின் லீலா வினோத காட்சிகள்; இந்து மதத்தின் எந்தப்பரப்பை நோக்கினாலும் இத்-தியாதி, இத்தியாதி காம சேட்டைகளின் களேபரக் காட்சிகள்தாம்.

அதற்காக வெட்கப்படுவதில்லை; இன்னும் சொல்லப் போனால் அந்தராத்மாவும் பரமாத்வாவும் ---ஆலிங்கனம் செய்கின்றன என்று அதற்குத் தத்துவ வார்த்தைகள் எல்லாம் தடபுடலாகவே உண்டு.

சாஸ்திர ரீதியாகவே அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வைத்துள்-ளனர்.

வேஸ்யாதர்சனம் புண்யம்
ஸ்பர்சிவனம் பாபநாஸம்
சம்பனம் சர்வ தீர்த்தானாம்
மைதுனம் மோக்ஷ சாதனம்

பொருளும் வேண்டுமா?

வேசிகளைப் பார்ப்பதே புண்ணியம்; அவர்களைத் தொட்டால் பாவங்கள் நாசமாகும்; முத்தம் கொடுத்தால் சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய-தற்குச் சமம்; உடலுறவு கொள்வது மோட்சத்தை அடையும் வழி என்று மோட்சத்திற்குக் குறுக்கு வழிகளைக் கண்டுபிடித்து வைத்துள்ளது இந்தக் குள்ளநரிக் கூட்டம்.

இந்தப் பார்ப்பனர்களின் யோக்-கியதையை அவாளின் செல்லப் பிள்-ளையான கம்பனே கூறி வைத்திருக்-கிறான்.

இராமன் வனவாசம் சென்றபோது உயிர்கள் எல்லாம் அழுதன; மரங்கள் கருகின. ஆனால் பார்ப்பனர்கள் ராமனி-டம் தங்களுக்கு இளம் பசுவும் கன்றும் தேவை என்று கேட்டுப் பெறுகின்றனர். ராமன் வனவாசம் முடிந்து நாடு திரும்பும்போது வாடிய பயிர்கள் துளிர்த்தன, உயிர்கள் மகிழ்ந்தன. மக்கள் கூடினார்கள். அப்பொழுது விலைமகள் வீடுகளில் இருந்த பார்ப்-பனர்கள் வேசியர்களின் புடவையைக் கட்டிக் கொண்டும், வேசியர்கள் வேட்டிகளை கட்டிக் கொண்டும் வெளியில் வந்தனர் என்கிறான் கம்பன்.

வேசியர் உடுத்த கூறை வேதியர் சுற்ற வெற்றிப் பாசிழை மகளிர் ஆடை யந்தணர் பறித்துச் சுற்ற வாசம், மென் கலவைச் சாந்து என்று இனையன மயக்கந் தன்னால் பூசினர்க்கு இரட்டி ஆனார் பூசலார் புகுந்துளோரும்

காளமேகப் புலவர் என்ற குடந்தை பார்ப்பான், தான் மோகம் கொண்ட தாசிப் பெண்ணுக்காக தான் வரித்துக் கொண்ட வைணவத்திலிருந்து விலகி சிவத்துக்கு தாண்டினான் என்பதெல்-லாம் காமக்குரோ தங்களுக்குமுன் கடவுளாவது கத்தரிக்காயாவது _ வேதங்களாவது வெண்டைக்காயாவது _ மதங்களாவது மண்ணாங் கட்டிகளா-வது _ சர்வம் சரணம் காம சுகப்பவது.

ஒன்றைக் கவனிக்க வேண்டும்; காஞ்சிக் கோயில் தேவநாதன் அர்ச்சகப் பார்ப்பானின் சமாச்சாரம்பற்றி திருவா-ளர் துக்ளக் மூச்சு விட்டதுண்டா? கல்கி கண்டு கொண்டதுண்டா? தினமணி தீண்டியதுண்டா?


பக்தி போதைத் தமிழர்கள் சிந்திக்க வேண்டிய நேரமும், இடமும் இது!
இந்துக்கள் மதத்தை ஆராய்ச்சி செய்யுமிடத்து சுவாசமிடும் நுரையீரல் எரிந்து விடும் என்று விவேகானந்தரி-டம் கூறினாராம் மாக்ஸ்முல்லர், எந்த அர்த்தத்தில் கூறினாரோ தெரிய-வில்லை _ இதயத்துக்கும், மூளைக்கும் பாயும் ரத்தம் கெட்டுப் போய்விடும் என்று மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.

விடுதலை 22.11.09

Friday, November 20, 2009

கடவுளுடன் மனிதன் ஏறுக்குமாறாய் நடந்து போட்டி போடுகின்றானா?


உலகத்தை எல்லாம் உண்டாக்கி, அதிலுள்ள எல்லாவற்றையும் நடத்தும் சர்வ சக்தியுள்ள கடவுள் ஒருவர் இருக்கிறார்; அவரால்தான் (அவர் இஷ்டப்படி) உலகம் இயங்கு (நடைபெறு)கின்றது என்று சொல்லப்படுமானால், அவரை நடுநிலைமையுடையவனென்று சொல்லுவதைவிட பாரபட்ச-முடைய-வரென்று சொல்லுவதற்கே ஏராளமான பிரத்தியட்ச உதாரணங்கள் இருக்கின்றன. அவரை நீதிவான் என்று சொல்லுவதைவிட அநீதிவான் என்று சொல்லுவதற்கே தாராளமான ஆதாரங்கள் அதிகமிருக்கின்றன. அவரால் உலகுக்கு நன்மை ஏற்படுகிறது என்று சொல்லுவதைவிட அவரால் அதிகத் தீமையே ஏற்படுகின்றது என்று சொல்லுவதற்குப் போதுமான ஆதாரமிருக்கின்றது. அவர் அறிவாளி என்று சொல்லுவதைவிட மூடர் என்று சொல்லுவதற்கே போதுமான ருஜூ இருக்கின்றது. (அதுவே முடிந்த முடிவானால்) அப்படிப்பட்டவரை யோக்கியர் என்று சொல்லுவதைவிட அயோக்கியர் என்று சொல்லுவதற்கே திருஷ்டாந்தங்கள் பல இருக்கின்றன.


அவர் ஜீவன்களுக்கு நன்மையே செய்கிறாரென்பதைவிட தீமையே செய்கின்றார் என்பதற்கு போதிய காரணங்கள் இருக்கின்றன. அவரால் நன்மை அடைந்தவர்களைவிட தீமையடைந்தவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்று சொல்லத் தகுந்த அத்தாட்சிகள் மிகுந்து கிடக்கின்றன. அவர் நாகரிகமுடையவர் என்று சொல்லுவதைவிட அவர் காட்டுமிராண்டி என்று சொல்லுவதற்கே அளவுக்கு மீறிய அனுபவங்கள் காணப்படுகின்றன. அவர் இருந்தால் நல்லது என்று சொல்லுவதைவிட அப்படிப்பட்டவர் ஒருவர் இல்லாமல் இருந்தால் நல்லது என்று ஆசைப்படுவதற்கு அநேக காரணங்கள் இருக்கின்றன.

அப்படி ஒருவர் இருக்கிறார் என்று எண்ணிக்கொண்டு வாழ்க்கையை நடத்துவதைவிட, அப்படி ஒருவர் இல்லை என்று வாழ்க்கையை நடத்துவதே மனித சுதந்திரத்திற்கு அதிகமான நன்மை பயக்கத்தக்கது என்று கருதுவதற்கு வேண்டிய அவசியங்கள் பல இருக்கின்றன.

அறிஞர்களே, ஆராய்ந்து பாருங்கள், சர்வ வல்லமையுள்ள கடவுள் ஒருவர் இருந்தால், மனிதனுடைய தேவைக்கும், ஆசைக்கும் தகுந்தபடி நடந்து-கொண்டிருப்பார். அல்லது கடவுளுக்கு இஷ்டமில்லாத விஷயங்களைப்பற்றி மனிதனுக்குத் தேவையில்லாமலாவது, ஆசையில்லாமலாவது அல்லது நினைப்புக்கே வராமலாவது செய்திருப்பார். உதாரணமாக, மனிதன் தனக்கு முகத்தில் மயிர் வேண்டியதில்லையென்று கருதித் தினம் சவரம் செய்துகொள்ளுவதைப் பார்க்கின்றோம். ஆனால், கடவுள் அனுக்கிரகத்தால் அது தினம் தவறாமல் முளைத்துக்-கொண்டே வருவதையும் பார்க்கின்றோம். இது என்ன, கடவுளுடன் மனிதன் ஏறுக்குமாறாய் நடந்து போட்டி போடுகின்றானா? அல்லது மனிதனுடன் கடவுள் ஏறுக்குமாறாய் நடந்து போட்டி போடுகின்றாரா? அல்லது ஒருவருக்-கொருவர் சம்பந்தமில்லாமல் அவரவர் காரியத்தை அவரவர்கள் பார்க்-கின்றார்களா?

சித்திரபுத்திரன் எனும் புனை பெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை ("குடி அரசு", 6.12.1947). தொகுப்பு: விடுதலை 20.11.09

Wednesday, November 18, 2009

ஜாதி வாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு! ஏன்? எதற்காக?

அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக சென்னையில் நேற்று (17.11.2009) அன்று மாலை சமூகநீதிக் கருத்தரங்கம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


1. பிற்படுத்தப்பட்ட மக்களை அடையாளம் காணவும், அந்த மக்களின் நலனுக்கான அரசின் திட்டங்கள் உரிய மக்களுக்கு சென்றடையவும், மேம்பாடு அடைந்த மக்களை பிற்படுத்தப்பட்-டோர் பட்டியலில் இருந்து நீக்கிடவும், ஜாதி வாரியான கணக்கெடுப்பு அவசியம் என நீதிமன்றங்கள் அறிவுறுத்தியதைக் கருத்தில் கொண்டு, வரும் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதி வாரியான கணக்கெடுப்பையும் நடத்திட உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக தொடங்கிடவேண்டும்.

2. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் நலத் திட்டங்கள் அந்த மக்-களுக்கு முறையாக சென்றடைவதைக் கண்-காணித்திட பிற்படுத்தப்பட்டோருக்கான நாடாளு-மன்றக் குழு மத்திய அரசு அமைத்திட-வேண்டும்.

3. தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்-திற்கு தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆணையத்திற்கு உள்ளதுபோன்று அதிகாரம் மத்திய அரசு அளித்திடவேண்டும்.

சமூகநீதிக் கண்ணோட்டத்திலும், பிற்படுத்தப்-பட்டோரின் இட ஒதுக்கீடு கண்ணோட்டத்திலும் இம்மூன்று தீர்மானங்களும் இக்காலகட்டத்தில் மிகவும் முத்தாய்ப்பானவை என்பதில் அய்ய-மில்லை.

பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. 1931_க்குப் பிறகு மக்கள் தொகைக் கணக்கெடுப்-போடு ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட-வில்லை.

இந்திய அரசமைப்புச் சட்ட ரீதியாக ஜாதி ஒழிக்கப்-படாத நிலையில், ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது மிகவும் அவசியமாகும்.

ஜாதி அமைப்பு வேரூன்றி நிற்கும் இந்திய சமூக அமைப்பில் தாழ்த்தப்பட்டவர்கள், மலை-வாழ் மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்பது சட்டப்படி நடைமுறைப்-படுத்தப்பட்டு வருகிறது.

அந்த இட ஒதுக்கீடு என்பது சமூக ரீதியாக-வும், கல்வி ரீதியாகவும் பின் தள்ளப்பட்டவர்-களுக்கு, ஒடுக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படு-கிறது. சமூகநீதி என்பதில் ஜாதிதான் முக்கிய அளவுகோலாகக் கொள்ளப்படுகிறது.

இந்த நிலையில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இட ஒதுக்கீடு எத்தனை விழுக்காடு என்பதை நிர்ணயம் செய்திட ஜாதி வாரியான கணக்கெடுப்பு என்பது அடிப்படையில் தேவையான புள்ளி விவரமாகும்.

நீதிமன்றங்களில் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் வரும்போதுகூட, நீதிபதிகள் தொடுக்-கும் வினா_ எந்த அடிப்படையில் இத்தனை சதவிகிதம் (சிக்ஷீவீtமீக்ஷீவீஷீஸீ) இட ஒதுக்கீடு என்பதே!

1931 ஆம் ஆண்டு ஜாதி வாரி கணக்-கெடுப்பை அரசு தரப்பில் சொல்லும்போது நீதிபதி-கள் அதில் குறை காண்கின்றனர். நீண்ட காலத்-திற்கு முன்னெடுக்கப்பட்ட புள்ளிவிவரக் கணக்கு தற்போது எப்படி பொருந்தும் என்று வினா எழுப்புகின்றனர்.

அப்படியிருக்கும்போது, 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதி வாரி புள்ளி விவரமும் இணைத்துக் கொள்ளப்படவேண்டும் என்று இந்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கறாராக ஏன் ஆணை பிறப்பிக்கக் கூடாது என்பதுதான் நமது முக்கிய வினாவாகும்.

இரண்டொரு வழக்குகளில் மறைமுகமான முறை-யில் இதற்கான அறிவுறுத்தலை உச்சநீதி-மன்ற-மும், சென்னை உயர்நீதிமன்றமும் காட்டி-யிருக்கின்றன என்று கருதப்பட்டாலும், இன்னும் தீர்க்கமாக அறுதியிட்டுக் கூறவேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பாகும்.

இட ஒதுக்கீடுக்கு மட்டுமல்ல; தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் பல்வேறு சமூக, பொருளாதார வளர்ச்சிகளுக்காக ஜாதிவாரி புள்ளி விவரம் என்பது மிகவும் தேவையானதே!

அதுவும், ஜாதியை சட்டப்படி ஒழிக்கும் காலம் வரைக்கும் இந்த விவரம் ஒவ்வொரு முறையும் திரட்டப்பட வேண்டியதே!

ஜாதி வாரி கணக்கெடுப்பால் ஜாதி உணர்ச்சி வளர்ந்துவிடும் என்பதெல்லாம், ஜாதி வாரி புள்ளி விவரம் எடுக்கப்படக்கூடாது என்று கருதுபவர்-களின் தந்திரப் பேச்சாகும்.

நன்றி விடுதலை தலையங்கம் 18.11.09

“பிராம-ணன் தியாகம்!’’ ‘‘சூத்திரன் தியாகம்’’


கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாள் இந்நாள் (1936).


சுதந்திரப் போராட்டம் என்று கூறப்படுகிறதே, அதில் வ.உ. சிதம்பரனார் செய்த தியாகத்திற்கான தராசு தட்டின் எதிர்த்தட்டில் நிறுத்தி வைக்க இன்னொ-ரு-வர் இந்தியாவில் பிறந்த-தில்லை.

ஆனாலும், வ.உ.சி. சூத்திரர்தானே _ அதனாலே அவரது தியாகம்கூட மலிவு சரக்காகிவிட்டது.

‘வெள்ளையனே வெளி-யேறு!’ என்ற தீரக் குரல் வெடித்துக் கிளம்பிய நேரத்தில், கட்சியை விட்டே வெளியேறியவர் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார், அவ-ருக்குத்தான் “வெற்றி-லைப் பாக்கு’’ வைத்து அழைத்து முதல் இந்தியன் கவர்னர் ஜென-ரல் என்ற மகுடம் சூட்டப்-பட்டது; என்ன செய்வது, காந்-தியா-ரின் சம்பந்தியாகவும் ஆகி-விட்டாரே!
இன்னொரு குறிப்பு “குங்குமம்’’ இதழ் பக்கம் 17 இல் (7.4.2000) வெளியானது.

1973_74 ஆம் ஆண்-டில் ஆச்சாரியாரின் பென்ஷன் முதலியன குறித்த கோப்பு-களைக் கண்ணுறும் வாய்ப்-புள்ள ஒருவர் கூறியது:

“ராஜாஜி அவர்கள் கவர்னர் ஜெனரலாக இருந்து ஓய்வு பெற்றார். தான் நெடுங்-காலம் வாழப் போவதாகவும், அக்காலம் முழுவதும் தனக்கு வரவேண்டிய பணி ஓய்வு காலத் தொகைகளைக் கணக்கிட்டால் கிண்டி ராஜ்-பவனத்தின் மதிப்பைவிடக் கூடுதலாக வரும் என்றும்; எனவே, அரசே கிண்டி ராஜ்-பவன் நிலம் முழுதும் தனக்-குக் கொடுத்துவிடவேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்தக் கோரிக்கையை அரசு நிரா-கரித்துவிட்டது’’ என்பதுதான் குங்குமம் வெளியிட்டிருந்த அந்தத் தகவல்!

ஆச்சாரியாரின் தியாகத்-தையும், சுதந்திரப் போராட்-டத்-துக்காக இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட வ.உ.சி. தமிழரின் தியாகத்-தையும் “மனச்சான்று’’ உள்ளபடியே உள்ளவர்கள் எடை போட்டுப் பார்க்கட்டும்!

தியாகத்தில்கூட “பிராம-ணன் தியாகம்!’’ ‘‘சூத்திரன் தியாகம்’’ என்கிற இரட்டை அளவுகோல் இருப்பதை எண்ணும்போது இதயத்தில் திடீர் தீ பிடித்தது போலவே தகிக்கிறது.

வ.உ.சி. அவர்கள், தந்தை பெரியார் அவர்களி-டத்திலும், சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சிகளின் நடவடிக்கைகளிலும் மிகுந்த மதிப்பும், ஈடுபாடும் கொண்ட மாந்தராகத் திகழ்ந்தார்கள்; பல நிகழ்ச்சிகளிலும் கலந்து-கொண்டு மடைதிறந்த தன் எண்ண நீரோட்டத்தையும் வெளிப்படுத்தியதுண்டு.

“நீதிக்கட்சி தோன்றிய பிறகுதான் தமிழர்களின் அந்தஸ்து உயர்ந்துள்ளது. உதாரணமாக முன்பெல்லாம் “இந்து’’ பத்திரிகை அலு-வலகத்திற்குச் சென்றபோது, திரு. கஸ்தூரி ரெங்க அய்-யங்கார் “வாடா சிதம்பரம்!’’ என்றழைத்துப் பேசுவார். ஆனால், நீதிக்கட்சி கொள்கை தமிழ்நாட்டில் கோலோச்சிய பிறகு ஒரு நாள் போனேன். “வாங்கோ சிதம்பரம்பிள்ளை, சவுக்கியமா?’’ என்றழைத்தார் என்கிறார் வ.உ.சி.

வ.உ.சி. நினைவு நாளில் இந்த வரலாற்றுக் குறிப்பு-களை அசை போடுவோமாக!

நன்றி விடுதலை 18.11.09

Tuesday, November 17, 2009

பால்தாக்-க-ரேயா _ நரேந்திர மோடியா?

சச்சின் டெண்டுல்கர் என்ற ஒரு விளையாட்டு வியாபாரி இருக்கிறார். பத்து ஆட்டங்களில் ஒழுங்காக ஆடமாட்டார்; ஒரு ஆட்டத்தில் நூறு ஓட்டங்களை எடுத்து-விட்டு, எல்லாப் புகழை-யும் அவர் மட்டுமே சம்பாதித்துக் கொள்வார். பதாகைகளை அவருக்-காகத் தூக்கிப் பிடிக்க பார்ப்பன ஊடகங்கள் ஆயத்தமாகவே எப்-பொழுதும் இருக்கும்.


மும்பையில் பெரிய ஓட்டலுக்கு உரிமையாளர். அப்படிப்பட்டவர் இப்-பொழுது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார். 20 ஆண்டுகளாக கிரிக்கெட் ஆடுகிறார் என்பதற்காக அவருக்கு ஒரு பாராட்டு விழா மும்பையில் நடை-பெற்றுள்ளது. அதில் அவர் உரையாற்றும்போது, “மராட்டியன் என்பதில் நான் மிகுந்த பெருமிதம் கொள்கிறேன். ஆனால், மும்பை என்பது இந்தி-யாவின் ஓர் அங்கம்தான். நான் இந்தியாவின் சார்-பில் விளையாடுவதில் பெருமை அடைகிறேன்’’ என்று பேசிவிட்டார்.

அவ்வளவுதான் _ விட்டு-விடுவாரா பால்தாக்-கரே? மும்பைக்கு மொத்த குத்தகைக்காரராயிற்றே! முஷ்டியைத் தூக்கிக்-கொண்டு கிளம்பிவிட்டார். ‘அடப் பொடிப்பையா, மும்-பையின் வரலாறு தெரி-யுமா? அதனை மராட்-டியத்தின் தலைநக-ராகத் தக்க வைக்க எவ்-வளவு பாடுபட்டு இருக்கி-றோம் தெரியுமா? அப்-பொழுதெல்லாம் நீ பிறந்தி-ருக்கவே மாட்டாய். விவ-ரம் தெரியாமல் ‘விளை-யா-டாதே!’ உன் விளை-யாட்டை கிரிக்கெட்டோடு வைத்துக்கொள். மற்றவற்-றில் மூக்கை நுழைக்காதே _ மூக்கை நுழைத்தால் விபரீதம் ஏற்படும் எச்-சரிக்கை!’ என்று தாக்க-ரேக்கு உரிய பாணியில் தாக்கி எழுதியுள்ளார்.

இதே காலகட்டத்தில் குஜராத் மாநிலத்தில் அக-மதாபாத்தில் உள்ள சர்தார் படேல் விளையாட்டு அரங்கில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் விளையாடச் சென்ற டெண்டுல்கரை முதல-மைச்சர் நரேந்திர மோடி ஓகோ என்று உச்சி குளிரப் பாராட்டுப் பனி மழையைப் பெய்து தள்ளிவிட்டார். தங்கத் தட்டையும் பரிசாகத் தந்திருக்கிறார்.

சபாஷ்! சரியான போட்டி, (கிரிக்கெட் போட்-டியல்ல!) பால்தாக்-க-ரேயா _ நரேந்திர மோடியா? இதில் வெல்லப் போகிற-வர்-கள் யார்? என்று தெரியவில்லை.

இதில் இன்னொரு கொசுரு. இந்தியக் கிரிக்-கெட் வாரியத் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, ‘பால்தாக்கரே அரசியல் விவ-காரத்தோடு நிற்கட்-டும் _ தேவையில்லாமல் கிரிக்கெட்டில் தலையிட-வேண்டாம் என்று எச்-சரித்துள்ளார்.

இது என்ன மும்-முனைப் போட்டியோ!

விடுதலை 18.11.09

Monday, November 16, 2009

“கலகம்’’ பிறந்தால்தானே ‘‘வழியும்’’ பிறக்கிறது

ரோஸ் நேரம்’ என்ற ஒரு பகுதி கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறு-தோறும் இரவு 10 மணி முதல் 11 மணிவரை அரங்-கேறுகிறது. அதனை நடத்-தும் தோழியர் மிகச் சிறப்-பாகவே அதனைக் கையா-ளுகிறார்.


“பேய்’’ உண்டா? உண்-மையா? நிரூபிக்க முடி-யுமா?’’ என்ற காரசார விவாத மேடை சுவைக்கத்தக்கது மட்டுமல்ல; சிந்திக்கத்தக்-கதும் ஆகும்.

பேராசையும், அச்சமும் போட்டி போட்டுக்கொண்டு மக்களைத் துன்புறுத்தும் நிலையில், மக்கள் மூட நம்பிக்கைக் குழிக்குள் வீழ்ந்து மூச்சுத் திணறிக் கொண்டிருக்கின்றனர்.

அவர்களைக் கரை-யேற்றுவதுதான் கண்ணிய-மான மனிதத் தொண்டாக இருக்க முடியும். பாமர மக்களோடு மக்களாகக் கரைந்து அவர்களின் மூடத்தனத்தினை மேலும் உற்சாகப்படுத்தும் போக்கில் அவர்களின் முதுகைத் தட்டிக் கொடுத்துக் காசு பறிக்கும் முதலாளிகள் பெரும்பாலும் ஊடகங்களை நடத்திக் கொண்டிருக்-கிறார்கள்.

இராசி பலன் என்ற ‘பிள்ளையார் சுழிபோட்டு’ விடியற்காலைப் பொழு-தையே களங்கப்படுத்தப்-பட்ட குடிநீரில் மக்களைக் குளிப்பாட்டி, மக்களை வஞ்சிப்பதையே வாடிக்கை-யாகக் கொண்டு, வங்கிக் கணக்கை வளப்படுத்திக் கொள்ளும் நயவஞ்சகப் பிழைப்பு ஒரு பக்கத்தில் நடந்துகொண்டுதானிருக்கிறது.

அதே நேரத்தில், கலை-ஞர் தொலைக்காட்சியின் ‘‘ரோஸ் நேரத்தில்’’ ஓர் அறிவிப்பு; பேய் இருப்பதாக நிரூபித்தால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு என்பதுதான் அந்த அறிவிப்பு _ பாராட்-டத்தக்க ஒன்றே! அதனை ஏற்றுக்கொண்டு, இதோ நாங்கள் நிரூபிக்கிறோம் என்று கூறி ஒரு அணியி-னர்; பேயாவது, வெங்காய-மாவது! எங்கே இருக்கிறது பேய்? நிரூபிக்க முடியுமா? ‘என்மீது பேயை ஏவி நிரூபிக்கட்டும்; அவர்களுக்-குப் பத்து லட்சம் ரூபாய் தருகிறேன்’ என்று கூறி அதே இடத்தில் காசோலை-யைப் பூர்த்தி செய்து சவால் விட்டார் கருஞ்சட்டைத் தோழர் ம. திருநாவுக்கரசு. (தற்-போது தண்டையார்-பேட்டைவாசி _ சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம், சாலைக்கிராமம்).

எதிர்பாராத இந்தத் திருப்பத்தினை ஏற்படுத்தி ஒருங்கிணைப்பாளர் உள்பட எதிர்த்தரப்பினர் அனை-வரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கினார் நமது தோழர். அவர் சார்ந்த அணியி-னரோ உற்சாகப் பெருக்கில் திளைத்தனர்.

அதுதான் சந்தர்ப்பம் என்று கடவுள், மதம், ஜாதி, சம்பிரதாயம், பேய், பிசாசு, பூதம் என்ற பித்தலாட்டங்-களை எல்லாம் ஒரு பிடி-பிடித்தார் பாருங்கள் _ ‘பலே பலே’ என்று பாராட்டும்படி-யாக இருந்தது.

கழகத் தோழர், ஒருவர் இருந்தாலும் போதும், பிற்போக்குத்தனங்களுக்கு எதிராகக் ‘‘கலகக் கொடி-யைத்’’ தூக்கிப் பிடிப்பார் என்பதற்கு தோழர் ம. திரு-நாவுக்கரசே ஓர் எடுத்துக்-காட்டு!

அவரைப் பாராட்டு-வோம்.

இதுபோன்ற களங்-களைத் தவறவிடவேண்டாம் என்று கழகத் தோழர்-களை-யும் கேட்டுக்கொள்கிறோம்.

“கலகம்’’ பிறந்தால்தானே ‘‘வழியும்’’ பிறக்கிறது.

விடுதலை 17.11.09

Sunday, November 15, 2009

இலங்கையின் இருண்ட வரலாறு....

எனது நண்பரின் கவிதையை கொடுத்துள்ளேன். வாசித்து நீங்களும் உங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

தாய் வசிக்கிறாள் தாய்லாந்து நாட்டில்....!
தந்தையோ அகதியாய்
தமிழ்த்திருநாட்டில்...!!
கணவன் ஊனமாய்
கனடா நாட்டில் ..!
கட்டிய மனைவியோ கள்ளி காட்டில் ....!
ஈழத்து கள்ளிக்காட்டில்...!!!
உறவை இழந்த மக்கள் ...!
ஊரை இழந்த மக்கள் ..!
உறுப்பை இழந்த மக்கள் ..!!
ஆனாலும் இவர்கள் இன
உணர்வை இழக்காத மக்கள் ..!!
தமிழன் கறி விற்கின்றது
கசாப்பு கடை .!
தமிழச்சி மானம் பறிக்கிறது
சிங்களப்படை ..!!
வீடுகளை இடிக்கின்றது
விமானப்படை ..!
வீதியில் நிற்பதுதான் இனி
தமிழனின் நிலை ..!!
உலகத்தின்
எல்லா தேசத்திலும்
சுடுகாடு உள்ளது
ஆனால்
இந்த தேசம் மட்டும்தான்
சுடுகாட்டில் உள்ளது .!
கைத்தொழில் தொடங்கி
கனரக தொழில் வரை
சிங்கள இராணுவம்
சீரழித்து விட்டது ..!!
இனி இந்த தேசத்தில்
சவப்பெட்டிகளுக்குதன்
சரியான தொழில் வளமும்
சந்தை வளமும் இருக்க போகிறது .!!
சவப்பெடிகள்
அதிகம் விற்பனையாகும்
ஆசிய நாடு என்னும் பெருமை
இலங்கை தேசத்துக்கு மட்டுமே
இருக்க முடியும் ..!!
பல்லாங்குழி ஆடும் வயதில்
பதுங்கு குழி தேடும்
பரிதாப நிலையில்
பாவப்பட்டவர்களாய்
பாவையர் கூட்டம்.!!!
மக்களுக்கு பகவனை விட
பதுங்கு குழிகள்தான்
பாதுகாப்புக்கு தருகிறது .!!
மரணத்தின் பிடியில் தவிக்கும்
மனிதாபிமானம் ..!
சிங்களச் சிப்பாய்களின்
தூப்பாக்கி கத்திகள்தான்
தமிழ் பெண்களுக்கு
கருவறை கிழித்து
பிரசவம் பார்க்கிறதாம்..!!
என்ன பாவம் செய்தார்கள்
எங்கள் தமிழச்சிகள் ?
நினைவு நாட்களும்
இழவு நாட்களும் மட்டுமே
தமிழர் வீடுகளில்
தினம் தினம் நிகழும் திருவிழா ..!
கணவன் கண் முன்னே
கற்பழிக்கும் கொடுமை .!
தந்தையை பார்க்க வைத்து
தகாத உறவு .!!
சிறுமிகளை துரத்தி
சிற்றின்பம் .!!!
இவற்றில் தான்
சிங்கள இராணுவம்
பெற்றுள்ளது
சிறப்பு பயிற்சி ..!!
அநேகமாய்
அடுத்த நூற்றாண்டில்
இலங்கை தமிழனின்
எலும்பு கூடுகள் தான்
எஞ்சி இருக்க கூடும் .!
நேற்று
புத்த பூமி ..!
இன்று
யுத்த பூமி ..!
நாளை
தமிழன் செத்த பூமி .!!!
இவைதான் இனி
இலங்கை தேசத்தின்
இருண்ட வரலாறு .!!!


கவிதை ஆக்கம்:
சுய. சரவணன்
44, மேலத்தெரு,
மேலவாசல் (அ)
மன்னார்குடி (வ)
திருவாரூர் மாவட்டம்.
தமிழ்நாடு - 614001

Saturday, November 14, 2009

நாத்திகத்துக்கான விளக்கம் (எஸ்.சி. ஹிச்காக்)


சொற்களுக்கான விளக்கங்கள் பற்றி தர்க்க சாத்திரம் அதிகமாகவே கையாள்கிறது. ஒரு பேச்சு வார்த்தை தொடர்ந்து நடைபெறவேண்டுமானால் பேசப்படும் பொருள் பற்றிய நிபந்தனை-களை அனைவரும் ஒப்பி ஏற்றுக் கொள்ளவேண்டும். ஆனால் இந்த எளிய அடிப்படை விதிகள் அடிக்கடி ஊடகங்களால் அலட்சியப்படுத்தப்-படுவ-தால், அது குழப்பத்தையே தூண்டி-விடுகிறது. இதுபற்றி விளக்குவதற்காக, நாம் அடிக்கடி பயன்படுத்தும் இரண்டு சொற்கள் பற்றிய விளக்கத்தை நான் இங்கு அளிக்கிறேன். அவை : மததீவிர-வாதி மற்றும் நாத்திகர். இந்த இரு சொற்களும் என்ன பொருள் தருகிறது என்பதை நுணுக்கமாகப் பகுத்தாய்ந்து அளிக்கப்படும் தெளிவான விளக்கம் பொது மக்கள் மனதில் நமது நிலை-யைப் பற்றிய தெளிவான கருத்தை உரு-வாக்க சுயசிந்தனையாளர்களுக்கு உதவும்.



மதத் தீவிரவாதம்

மதத் தீவிரவாதி என்ற சொல்லே வியப்பளிப்பதாக இருப்பது மட்டு-மன்றி ஒருதலையான விருப்பு வெறுப்பு கொண்டதுமாகவும் இருக்கிறது. பைபிள் அல்லது குரானில் கட்டளை-யிட்டுள்ளபடி சில கிறித்துவர்களும், முஸ்லிம்களும் தங்களது பெரும் செல்வத்தை அறச் செயல்களுக்காக வழங்குகின்றனர். சில மதக்கட்டளை-களை அளவுக்கு மீறி கடைப்பிடிப்ப-வர்கள் அவர்கள் என்று கூறலாம். என்றாலும், அவர்கள் தீவிரவாதிகள் என்று அழைக்கப்படுவதில்லை. தங்கள் மதத்தைப் பின்பற்றுபவர்களை வன்முறைச் செயல்களில் ஈடுபடவும், அறச்செயல்களுக்கு செல்வத்தை அளிக்கவும் கட்டளையிடுகின்றன. ஆனால் வன்முறைச் செயல்களில் ஈடுபடும் மதவாதிகளை மட்டுமே நாம் தீவிரவாதிகள் என்கிறோம். ஏன்?


தீவிரவாதி அல்லாத மத நம்பிக்கையாளரின் சுயசிந்தனை ஆற்றல்

இந்த வினாவுக்கு விடையளிக்க வேண்டுமானால், வேறு ஒரு வினாவை நாம் எழுப்ப வேண்டும். தீவிரவாதி அல்லாத மதநம்பிக்கையாளர் ஒருவரை நாம் எவ்வாறு விவரிப்போம்? வன்-முறைச் செயல்களில் ஈடுபட வலியுறுத்-தும் கட்டளைகளுக்குக் கீழ்படியாத ஒருவரை தீவிரவாதி அற்ற மதநம்பிக்-கையாளர் என்று கூறலாம். அப்படி-யானால், வன்முறைச் செயல்களைச் செய்ய தங்களின் புனித நூல்கள் கட்டளையிட்ட போதும், அவற்றைச் செய்யாமல், அறச்செயல்களுக்கு செல்-வம் அளிக்கவேண்டும் என்ற கட்ட-ளையை மட்டும் நிறைவேற்றுபவர்-களை, சுயமாக சிந்திப்பவர்கள் என்று நாம் பாராட்டுவதில்லையா? வேறு சொற்களில் கூறுவதானால், தீவிரவாதி அல்லாத நம்பிக்கையாளரான அவர் மதக்கட்டளைகளை விட சுயமாக சிந்திப்பதை மேலாகக் கருதி போற்று-பவர் அல்லவா? வன்முறையில் ஈடுபடக் கூறும் மத நூல்களின் கோட்பாட்டை அந்த மதநம்பிக்கையாளரின் ஏதோ ஒரு சிந்தனை நடைமுறை பின்பற்றாமல் இருக்கச் செய்கிறது. அப்படியானால், மத நம்பிக்கையாளரின் சுயமாக சிந்திப்பதற்கான ஆற்றல் பாராட்டப் படாமல், அறச்செயல்களுக்காக அவர் செல்வம் அளிப்பது மட்டுமே பாராட்-டப்படுவது ஏன்?

மேலும், மதத் தீவிரவாதிகள் எனப்-படும் பலர் வன்முறைச் செயல்களில் ஈடுபடுவது மட்டுமன்றி, அறச்செயல்-களிலும் ஈடுபடுகிறார்கள். அவர்களின் புனித நூல்கள் கூறுவதை அவர்கள் முழுமையாகப் பின்பற்றுபவர்கள் அல்லவா? அப்படியானால், அவர்கள் ஏன் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள்? தூய்மையான-வர்கள் என்று அவர்களை அழைப்பது மிகவும் பொருத்தமானதாக இருக்காதா?

நாத்திகம் என்றால் என்ன என்று தெளிவுபடுத்துவதற்கு நான்இரண்டு விளக்கங்களைத் தருகிறேன்.

கடவுள் நம்பிக்கை கொண்டவரும் கடவுள் இல்லை என்ற ஊகத்தில் செயல்படுகிறார்

முதல் விளக்கம் என்னவென்றால், நாம் அனைவருமே பயன்படுத்தும் ஒரு கருவிதான் நாத்திகம் என்பது. சில செயல்களைச் செய்யும் போது மிகுந்த கடவுள் நம்பிக்கை கொண்டவரும் கூட, கடவுள் இல்லை என்ற ஊகத்திலேயே அச் செயல்களைச் செய்கிறார். தன் காருக்கு கடவுள் வந்து பெட்ரோல் போடமாட்டார் என்று கருதும் ஒரு கிறித்துவர்தானே பெட்ரோல் போடச் செய்கிறார். விமானத்திலிருந்து பாரா-சூட்டின் மூலம் குதிப்பவர் தன்னை எந்த தேவனோ, தேவதையோ வந்து காப்பாற்றும் என்று கருதாமல் பாரா-சூட்டை நம்பியே குதிக்கிறார். இத்-தகைய வடிவிலான நாத்திகம் என்பது அவரவர் செயல்பாடுகளின் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது. மதஅமைப்-புகள் கூட இதனை வெளிப்படுத்து-கின்றன. மற்ற மத மக்களைத் தங்கள் கடவுள் வந்து மதம் மாற்றுவார் என்று எதிர்பார்க்காமல், அவர்களே மற்றவர்களைத் தங்கள் மதத்துக்கு மாறச் செய்கின்றனர். இதே போன்றது-தான் மத அமைப்புகளுக்கு அளிக்கப்-படும் நன்கொடைகளும். கடவுள் வந்து தங்களுக்கு பொருளுதவி செய்யப் போவதில்லை என்பதால்தான் மத-அமைப்பாளர்கள் மக்களிடம் நன்-கொடை பெறுகின்றனர். இவ்வாறு கூறு-வதைக் கேட்டு மதநம்பிக்கையாளர்கள் கோபம் கொள்ளலாம். ஆனால், இந்த உலகில் எந்த ஒரு உருப்படியான செயலை செய்து முடிக்க வேண்டுமா னாலும், இயற்கையைக் கடந்த அனைத்து ஆற்றலும் பெற்ற ஒரு கடவுள் மீதான நம்பிக்கையின்மையை ஏதோ ஒரு வழியில் வெளிப்படுத்தியே தீரவேண்டும் என்ற உண்மையை எந்த விதத்திலும் மறுக்கமுடியாது.


தர்க்க, நியாய ரீதியிலான சுயசிந்தனை

‘சுயசிந்தனை’ என்ற ஒரு அகண்ட தலைப்பின் கீழான ஒரு தனிப்பட்ட துறையாக நாத்திகத்தைக் காட்டுவது இரண்டாவது விளக்கமாகும். தர்க்க நியாய வழியிலான ஆதாரங்களைக் கேட்டு, கடவுள், மத நம்பிக்கைகளுக்கு எதிராக சிந்திக்கும் ஒரு வழியான சிந்-தனைதான் சுயசிந்தனையாகும். இத்-தகைய தர்க்க, நியாய ரீதியிலான சிந்-தனையை எல்லா விஷயங்களிலும் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக பறக்கும் மாபெரும் விலங்கு ஒன்று இருப்பதாக தான் நம்புவதாக என்னிடம் ஒருவர் கூறிவதாக வைத்துக் கொள்-வோம். அது பற்றி தர்க்க நியாய ரீதியில் சிந்தித்தபின் அதனை நம்பப் போது-மான காரணங்கள் இல்லை என்று நான் கருதினால், நான் பறக்கும் மாபெரும் விலங்கை நம்பாதவன் என்று ஆகிவிடுகிறது. அது போலவே காரல் மார்க்சின் கோட்பாடுகளில் அதிக அளவு தர்க்க ரீதியான உடன்பாடு எனக்கு இல்லை என்றால், நான் கம்யூ-னிஸ்ட் அல்லாதவன். மதம் பற்றிய விஷயங்களில் எனது சுயசிந்தனையை நான் மேற்கொள்ளும்போது, கடவுள் இருக்கிறார் என்பதிலோ மற்ற ஆன்மிக அறிவிக்கைகளிலோ நம்பிக்கை கொள்வதற்குப் போதுமான தர்க்க நியாய ரீதியிலான காரணங்கள் இல்லை என்று நான் காண்கிறேன். அதனால் நான் ஒரு நாத்திகன். மதப் பிரச்சாரம் பலமாக நடைபெற்று வரும் ஒரு நாட்டில் நான் வாழ்வதால் எனது நாத்திகத் தன்மை மந்தையிலிருந்து தனியாகத் தெரிகிறது. நான் ஒரு கம்யூனிஸ்ட் அல்லது நாஜி நாட்டில் வாழ்ந்திருந்தால், எனது நாத்திகத் தன்மையை விட அதிகமாக கம்யூனிசம் அல்லது நாசிசத்திற்கு எதிரான எனது நிலைப்பாடு தனியாகத் தெரியும்.

தாங்கள் இருப்பதைப் பற்றி அல்லாமல் கடவுள் இருப்பதைப் பற்றி என்று வரும்போது, மதநம்பிக்கை கொண்டவர்களும் கூட நாத்திகர்-களாகவே இருக்கிறார்கள் என்பதை புகழ்பெற்ற சுய சிந்தனையாளர்கள் சிலர் கவனித்திருக்கிறார்கள். ஒருவர் நாத்திக-ராக இருக்க வேண்டுமானால், அனைத்து வகையான ஆன்மிகக் கருத்துகளிலும் சிறிதும் நம்பிக்கை அற்றவராக இருக்க வேண்டும். வேற்று மத நம்பிக்கை கொண்டவர் நாத்திகர் அல்ல

யேசுவை அன்றி வேறு ஒரு கடவுளை நம்புபவராக இருந்தாலும், ஓர் இந்துவை ஒரு கத்தோலிக்கர் நாத்திகர் என்று அழைக்கமுடியாது. அந்த இந்துவை யேசுவை நம்பாதவர் என்று வேண்டுமா-னால் கூறலாம். அனைத்து கிறித்துவர்-களையும் முஸ்லிம்களை அல்லாவை நம்பாதவர்கள் என்று வேண்டுமானால் கூறலாம். ஆனால் அவர்களை நாத்தி-கர்-கள் என்று அழைக்க முடியாது.


நாத்திகத்தைவிட சுயசிந்தனை மேலானது

மேலே கூறிய விளக்கங்களின் மூலக் கருத்தில் இருப்பது சுயசிந்தனையாகும். நம்பிக்கையாளர்களை அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையின் உண்மைத்தன்மை காரணமாக நாம் பாராட்டா விட்டாலும், மத போத-னைகளில் அவர்கள் கொண்டு வரும் சுயசிந்தனை என்ற அளவிலாவது அவர்-களைப் பாராட்டலாம். நாத்திகத்திற்-கும்கூட இரண்டு வேறுபட்ட வழி-களில் விளக்கம் அளிக்கலாம். விளக்கத்-தின் முதல் பகுதி செயல்பாடுகளைப் பற்றிக் கூறுவதாகும். இரண்டாவது, சுயசிந்தனை என்ற பெரிய கட்டமைப்-பில் உள்ள ஒரு சிறிய கட்டமைப்பாக நாத்திகத்தை மாற்றிவிடுகிறது என்ப-தாகும். அந்த ஒரு காரணத்துக்காகவே, எனது நாத்திகத்தை விட சுயமாக சிந்திக்கும் எனது ஆற்றலை நான் மேலானதாக மதிக்கிறேன். நமது அனைத்து விளக்கங்களின் மய்யத்திலும் சுயசிந்தனையை வைத்துக் காண-வேண்டிய நேரமிது. இறுதியில் அனைத்து பொது வாதங்களின் மய்யத்தி-லும் இதுவே வைக்கப்படவேண்டும்.

நன்றி விடுதலை 14.11.04

குழந்தைகள் தினம் - சர்-வதேச பட்டினி அட்ட-வணை-யில் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள இடம் 66


இன்று குழந்தைகள் தினம். ஆம் உலகம் முழு-வதும் கொண்டாடப்படு-கிறது. 1955 ஆம் ஆண்டு அய்.நா. அறிமுகப்படுத்தி-யது.


1963 இல் பிரதமர் நேரு மறைந்த நிலையில், அவர் பிறந்த நாள் குழந்தைகள் தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. பல நாளேடுகளில் வெவ்வேறு நாள்களில் இது கடைபிடிக்-கப்படுகிறது.

எதிர்கால ஒளி முத்து-களாகிய குழந்தைகளுக்காக ஒரு நாள் என்பது மிகமிக முக்கியம்தான். குழந்தைப் பரு-வத்தில் எப்படி வளர்க்கப்-படுகிறார்களோ _ பெற்றோ-ரும், வீட்டாரும் குடும்பங்-களில் எப்படி நடந்துகொள்-கிறார்களோ அவர்களைப் பொறுத்த பாதிப்பு நிச்சய-மாகக் குழந்தைகளுக்கு உண்டு! உண்டு!!

குழந்தைகள் நலன் கருதியாவது பெற்றோர்கள் பொறுப்பானவர்களாக, ஒழுக்கம் உள்ளவர்களாக, சிக்கனக்காரர்களாக, எதிலும் ஒரு திட்டம் உடையவர்-களாக, நேரம் தவறாதவர்-களாக வாழ்ந்து காட்ட வேண்டியவர்களே!ஊட்டச்சத்து என்பது மிகமிக இன்றியமையாதது!

நாள் ஒன்றுக்கு 20 ரூபாய் வருமானமுள்ள மக்கள் 77 விழுக்காடு வாழும் நாட்டில், குழந்தை-களுக்குச் சத்துணவை எங்கே போய் தேடுவது? சர்-வதேச பட்டினி அட்ட-வணை-யில் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள இடம் 66. (“கரீபி ஹட்டாவோ’’ _ வறுமையே வெளியேறு _ பிரதமர் இந்திரா காந்தியின் கோஷம்!). பரவாயில்லை நமக்கும்கீழ் இன்னும் 22 நாடுகள் இருக்கின்றன _ இது ஒரு அற்ப ‘போனஸ்’ சந்தோஷம்!

நீதிக்கட்சித் தலைவர் சர் பிட்டி தியாகராயர் சென்னை மாநகர மேயராகவிருந்த காலகட்டத்தில் முதன் முத-லாக அறிமுகப்படுத்தப்பட்ட மதிய உணவு இலவசத் திட்டம், காமராசர் காலத்தில், கல்வி நெறிக் காவலர் நெ.து. சுந்தரவடிவேலு அவர்களின் வழிகாட்டுதலோடு வளர்ந்து, தமிழ்நாட்டில் இன்றைய தினம் பல்கிப் பெருகி, இந்தியாவுக்கே மகுடமாக ஜொலிக்கிறது! (வாழ்க கலைஞர்!).

இந்தியத் துணைக் கண்டத்தில் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவு _ 50 விழுக்காடு என்று தேசிய மனித உரிமை ஆணையத்-தின் தலைவர் நீதிபதி ராஜேந்திரபாபு கூறியுள்ளார் (10.10.2008).

ஒரே ஆண்டில் உலக அளவில் மரணம் அடை-யும் குழந்தைகளின் எண்-ணிக்கை 1.25 கோடியாகும். இதில் இந்தியாவில் மட்டும் 25 லட்சம் ஆகும். முதல் பிறந்த நாளைக் கொண்டாட முடியாத இந்தியக் குழந்-தைகள் ஆயிரத்துக்கு 58; உலக அளவில் எடை குறை-வாகப் பிறக்கும் குழந்தைகள் 35 விழுக்காடு _ இந்தியாவில்தானாம். இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்-ணிக்கை 1,26,66,377. இந்தி-யாவில் பள்ளிக்குச் செல்-லாத குழந்தைகள் அதிகம் இல்லை _ வெறும் 7 கோடிதானாம்! ராஜஸ்தானில் இன்னும் குழந்தைகள் திருமணம்; தமிழ்நாட்டில் தீட்சதர் குடும்பங்களில் இன்னும் அதே நிலைதான்!

இன்னும் சொல்லலாம், புள்ளி விவரங்களை அதி-கம் சொன்னால் தலையைச் சுற்றுமே!

ஒரு கூடுதல் தகவல்: இலங்கைத் தீவில் முள்-வேலி முகாம்களில் உள்ள தமிழ்க் குழந்தைகளின் எண்ணிக்கை 90 ஆயிர-மாகும்.

விடுதலை 14.11.09

பேராண்மை.. இடஒதுக்கீடு.. ஜனநாதனுக்கு பாராட்டு


பேராண்மை படம் பற்றி பலரும் எதிர் வாதங்கள் மற்றும்
ரஷ்ய திரைபடத்தின் சாயல் என்றும் விமர்சனகள் எழுந்தாலும். தமிழ்நாட்டில் தமிழனுக்கு ஒரு சிறப்பான பொதுவுடமை, உலகரசியல் மற்றும் இடஒதிக்கீடு போன்ற எல்லாவற்றையும் தன் இரண்டரை மணிநேர படத்தில் சொல்லி இருக்கிறார் திரு.ஜனநாதன் அவர்கள். குப்பை போன்று வரும் தமிழ் சினிமாக்களை மாற்றி சமுக மாற்றத்திற்கு இந்த ஊடகம் எப்படி பயன் படும் என்று வரும் இளைய தலைமுறை இயக்குனர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமையும்
 என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. தொடரட்டும்
 அவர் பணி. நாமும் அவருடன் இருப்போம். இதோ தமிழக முதல்வரின் பாராட்டு.............

பேராண்மை படம் பார்த்த முதல்வர் கருணாநிதி, படம் முடிந்த பிறகு அதன் இயக்குநர் ஜனநாதனிடம், இட ஒதுக்கீடு பற்றி சிறிது நேரம் பேசிவிட்டுச் சென்றார்.
எஸ்.பி.ஜனநாதன் இயக்க, ஜெயம் ரவி நாயகனாக நடித்துள்ள படம் பேராண்மை. அய்ங்கரன் தயாரிப்பில் தீபாவளிக்கு வெளியான இந்தப் படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தப் படத்தை சில தினங்களுக்கு முன் வழக்கமாக தான் படம் பார்க்கும் ஃபோர்பிரேம்ஸ் திரையரங்கில் பார்த்தார் முதல்வர் கருணாநிதி . படம் பார்த்து முடித்ததும், ஜெயம் ரவி உள்பட அதில் பங்காற்றிய கலைஞர்கள் அனைவருக்கும் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

பின்னர், இந்தப் படம் குறித்து சிறிது நேரம் இயக்குநர் ஜனநாதனுடன் பேசிக் கொண்டிருந்தார் முதல்வர். இதுபற்றி ஜனநாதனிடம் கேட்டபோது, "இடஒதுக்கீடு பற்றி இந்தப் படம் விவாதிப்பதால், அது பற்றி சில விவரங்கள் மற்றும் விளக்கங்களைச் சொன்னார் முதல்வர் கலைஞர் . படம் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும், சமூக மாற்றத்துக்கு உதவும் கருத்துக்களைச் சொல்லியிருப்பதாகவும் பாராட்டினார். மிகவும் மகிழ்வாகவும், பெரிய அங்கீகாரம் கிடைத்ததாகவும் உணர்ந்தேன்" என்றார்..

நன்றி: OneInida

Friday, November 13, 2009

பெண்களும் மதமும்....


“கடவுளிடத்திலும், _ அவரால் ஒன்றுக்கொன்று முரணாகவும், போட்டியாகவும் உண்டாக்கப்பட்டுள்ள பல்வேறு மதங்களிடத்திலும், நீங்காப்பற்றுக் கொண்டுள்ள ஆண்களைக் காட்டிலும் பெண்களின் எண்ணிக்கை பன் மடங்கு பெரிதாகும். பல “சர்ச்களில்” கணக்கிட்டுப் பார்த்ததில் ஆண்களைவிட 5_6 மடங்கு அதிகமாகவே பெண்கள் இருந்தனர். முன்னாள் மதத்தலைவர் ஒருவரிடம் இதுபற்றிக் கேட்டபோது, “நரகம் என்ற நம்பிக்கையும், பெண்களின் ஆதரவும் இல்லா விட்டால் எங்கள் ‘சர்ச்’ (கோவில்) நாளைக் காலையிலேயே அழிந்து போய்விடும்’, என்று தெரிவித்தார்.

இதன் காரணமென்ன? பெண்கள் மிகமிகக் காரியவாதிகள் என்றாலும், ஆண்களைக் காட்டிலும், சுளுவாக ஏமாறக் கூடியவர்கள்; தத்துவ ரீதியாக சிந்திக்கக் கூடிய திறமையற்ற-வர்கள். உதாரணமாக, பர்ட்ரண்டு ரஸ்ஸல் எழுதி-யுள்ள ‘மேல் நாட்டுத் தத்துவ வரலாறு’ என்ற மாபெரும் நூலைப் படித்துப்பார்த்தால், அதில் பெண் தத்துவ ஞானி ஒருவரைக்கூடக் காண முடியாது. அதுவும் ரஸ்ஸல், ஸ்பினோசா, சாக்ரட்டீஸ், ஹ்யூம், லாக்கே, மாண்டேன், காண்ட், ஹெகல், லியனார்டோ போன்ற உலகப் பெரியார்களைப் போல் ஒரு பெண்கூட இல்லை. மனித வரலாறு முழுவதையும் பார்த்தாலும், ஆண்களுக்குச் சமமாக வைத்து எண்ணக்கூடிய பெண் பெரியோர்-கள் இரண்டே இரண்டு பேர்தாம் : மேரி க்யூரி;’ ஃபளாரன்ஸ் நைட்டிங் கேல்! இது போதுமா? பெண்களுக்-குத் தத்துவ ரீதியான சிந்தனா சக்தி இல்லாத படியால்தான் மதவாதிகளிட-மும், மந்திரவாதிகளிடமும், சோதிடர்-களிடமும், அர்ச்சகரிடமும் சுளுவில் ஏமாந்து விடுகின்றனர்.

“நான் என் தாயாரின் மடியில் என் மதத்தைக் கற்றுக் கொண்-டேன்” என்று ஆண்கள் கூறு-வதைக் கேட்டி-ருக்கிறோமல்லவா? நான் ஒரு சர்வாதிகாரியா-யிருந்தால் எந்தத் தாயாரும் நின்ற நிலை-யிலேதான் தங்கள் குழுந்தை-களுக்கு எதையும் கற்றுத் தர வேண்டும் என்று உத்தரவிடுவேன்!

“மதத்துக்கு விரோதமாகவும் கடவுளுக்கு விரோதமாகவும் எந்த விவாதத்தையும் பெண்கள் பொதுவாகக் கேட்க விரும்புவதேயில்லை.

“பெண்கள் கற்பிற் சிறந்தவர்களாயிருக்கலாம்; தனி அன்புடையவர்களாகவும் இருக்கலாம். ஆனால் சரி - _ தப்பு என்ற தத்துவ ரீதியான ஆராய்ச்சி உணர்ச்சி _ அவர்களுக்குப் போதாது. குறிப்பாக மதத் துறையில் அவர்கள் ஆபத்-தானவர்கள். ஏதோ, இரண்டொரு விதி-விலக்கு இருக்கலாம் என்பதை மறுப்பதற்-கில்லை.”

_ ‘ஃப்ரீதிங்க்கர்’ (தொகுப்பு விடுதலை 13.11.09)

“விளையாட்டாகக்’’கூட பெண்களை அங்கீகரிக்க மாட்டார்களோ!


விளையாட்டில்கூட ஆண் _ பெண் பேதம் இருக்கிறது என்ற செய்-தியை அறியும்போது நெஞ்சைப் பிளக்கிறது.


சீனாவில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை பெண்கள் ஹாக்கிப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து நாடு திரும்-பிய இந்தியப் பெண்கள் அணி வீராங்கனை-க-ளுக்கு அரசு தரும் சலு-கைகள் பெறத் தகுதி-யில்லை என்று அரசு தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் எந்த-வித சாதனைகளையும் படைக்காத இந்தியாவின் ஆண்கள் அணிக்குப் பல்வேறு சலுகைகளாம்.

ஹாக்கி விளையாட்டு என்றால், இந்தியாதான் என்று கொடிகட்டி ஆண்ட-தெல்லாம் பழங்கதை! மிகக்குறுகிய காலத்தில் ஹாக்கி விளையாடத் தொடங்கிய நாடுகள் எல்லாம் இந்தியாவுக்குத் தண்ணீர் காட்டுகின்றன.

ஆனால், பெண்கள் அணி சீனா சென்று இரண்டாவது இடம்பெற்று வெற்றிப் பேரிகை முழங்க இந்தியா வரும்போது பெரிய அளவில் வரவேற்-புக் கொடுத்திருக்க-வேண்-டாமா?

விளையாட்டில்கூட ஏனிந்த ஆண் _ பெண் பேதம்? அண்மையில் தங்க-மங்கை பி.டி. உஷா அவமதிக்கப்பட்ட செய்தி ஒன்று கசிந்தது.

இன்னொரு முக்கிய விஷயம் விளையாட்டில்-கூட கிரிக்கெட் என்றால் பிராமணன் _ மற்றவை என்-றால் சூத்திரன் என்கிற வர்ண தர்மப் பார்வை இருப்பதையும் இந்த இடத்-தில் சுட்டிக்காட்டியே தீரவேண்டும்.

கிரிக்கெட்டில் 8 மூத்த வீரர்களுக்கு ஆண்டு ஒன்-றிற்கு ரூ.50 லட்சம் ஊதியம்; அடுத்த நிலை-யில் உள்ள (பி_ பிரிவு) கிரிக்கெட் விளையாட்டுக்-காரர்களுக்கு ஆண்டு ஊதியம் ரூ.35 லட்சம்; மூன்றாவது பிரிவு (சி) காரர்களுக்கு ரூ.20 லட்சம். இவற்றோடு விளை-யாடும்பொழுது (மேட்ச்) உள்நாடு என்றால் ஒவ்-வொரு ஆட்டக்காரர்க-ளுக்கும் ஊதியம் 2 லட்-சம்; வெளிநாடு என்றால், ரூ.2.40 லட்சமாம். ஒரு நாள் விளையாட்டுக்கு உள்நாட்டில் 1.60 லட்சம்; வெளிநாட்டில் ரூ.1.85 லட்சமாம்.

இவ்வளவுக்கும் இவர்-கள் கிழித்த சாதனை என்ன? ஆஸ்திரேலியக்-காரன் இந்திய மண்ணில் விளையாடி, இந்திய வீரர்-களின் முகத்தில் கரியைப் பூசிச் சென்றதுதான் மிச்சம்.

கால்பந்து போலவோ, ஹாக்கி போலவோ கடு-மையான உழைப்பைச் செலுத்தக்கூடியதும் அல்ல கிரிக்கெட்.

இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கி-யில் பெண்கள்தான் கொஞ்-சம் மானத்தைக் காப்பாற்றி-யிருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஆனால், அதனை அங்கீகரிக்கும் மனப்பான்மை ஆணா ஆதிக்கச் சமூக அமைப்-பில் இல்லை என்பது வெட்கக்கேடானதாகும்.

“விளையாட்டாகக்’’கூட பெண்களை அங்கீகரிக்க மாட்டார்களோ!

விடுதலை  13.11.09 - மயிலாடன்

Thursday, November 12, 2009

அசல் நாத்திகர்கள்...அய்யப்பன் கோவில் நிருவாகிகள்.

சபரிமலை அய்யப்பன் கோவில் நிருவாகிகள், அறங்காவலர்கள் அசல் நாத்திகர்கள் போல தோன்றுகிறது. இல்லாவிட்டால் அய்யப்பனுக்கு சக்தி இல்லை என்று இவளவு கேவலமாக அறிவிப்பார்களா?

18 படிகளை தாண்டி அய்யபனை தரிசிக்க வரும் அணைத்து பக்தர்களையும் தீவிரமாக சோதனை நடத்திட திடமிடபட்டுள்ளதாம். இதன் பொருள் என்ன?

பக்தர்கள் வெடிகுண்டுகளை எடுத்துசென்று அய்யப்பன் மீது வீசியிரிவார்கள் என்ற பயம் தானே!

அய்யப்பன் சர்வசக்தி வாய்ந்தவன்.அவனை யாரும் அசைக்கவோ அழிக்கவோ முடியாது என்ற நம்பிக்கை கோவில் அரங்காவளர்களுக்கு இருந்தால் இது மாதிரி நடவடிக்கையில் ஈடுபடுவார்களா?

அதே போல முதல் படிக்கட்டில் ஏறி 18 படிகளை தாண்டி பக்தர்கள் சரண கோசம் எழுப்பி தேங்காய் உடைப்பது வழக்கமேயாகும்.இப்பொழுது அதற்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அய்யபனை அசிங்க படுத்தியே தீருவது என்று அறங்காவலர் குழு தீர்மாநிதுவிட்டதாக தெரிகிறது.

தேன்காய்குள் வெடிபொருட்களை வைத்திருந்தால் அய்யப்பன் கதி என்னாவது என்ற என்னதில்தானே இந்த தடை?

நியமாக அய்யப்பன் மீதும் அவன் சக்தியின் மீதும் அபார நம்பிக்கை வைத்துள்ள யாரவது ஒரு பக்தர் அய்யப்பன் கோவில் அறங்காவலர் குழு நாத்திக பாணியில் செயல்படுகிறது இது எங்களின் உள்ளத்தை அதிக ஆழமாக புண்படுத்துகிறது என்று கூறி நீதிமன்றத்திற்கு செல்லவேண்டமா?

நீதிபதிகளுக்கு தான் வேறு என்ன வேலை இது போன்ற நாட்டுக்கு தேவையான பிரச்சினைகளில் தலையிடாமல் வேறு எந்த கடமையை செய்ய போகிறார்கள்.

ஏற்கனவே மகர சோதி என்பது பொய். அது ஒரு பித்தலாட்டம். கேரளா மின்வாரிய தொழிலாளர்கள்தான் பொன்னம்பல மேட்டிலிருந்து ஒரு சட்டியில் சூடத்தை கொளுத்தி காட்டுகிறார்கள் என்ற உண்மையை கேரளா பகுத்தறிவாளர்கள் நிருபித்துவிட்டார்கள். அது உண்மைதான் என்று கேரளா அறநிலைய துறை அமைச்சர் ஜி.சுதாகர், அய்யப்பன் கோவில் தலைமை பூசாரி கண்டேறு மகேஸ்வரரு, தேவச்தன் போர்ட் முன்னால் தலைவர் ராமன் நாயரும், முன்னால் முதலமைசர் ஈ.கே. நாயனாரும் ஆமாம் மகர சோதி என்பது உண்மையல்ல, மோசடிதான். செயற்ககையநதுதான் என்று ஒப்புக்கொண்டுவிட்டனர்.

இவலவுக்கு பிறகும் மகரஜோதி என்றால் அய்யோகியதனத்தின் மோசடியின் புகலிடம்  என்பது விளங்கவில்லையா?

விடுதலை 12.11.09

Wednesday, November 11, 2009

வாழ்த்துவது என்பது முட்டாள்தனமேயாகும் ஏன்?



பொதுவாக யாருக்கு பிறந்த நாள் கொண்டாடினாலும் பிறந்தநாள் என்பது கொள்கையை பாராட்ட, பரப்ப என்கிற கருத்திலேயே ஆகும். வாழ்த்துவது என்பது முட்டாள்தனமேயாகும். அந்த வார்த்தைக்கு உண்மையில் மதிப்பே கிடையாது. நாமம் போட்டுக் கொள்வது எப்படி முட்டாள்தனமோ அப்படிப்பட்ட முட்டாள்தனம் தான் வாழ்த்துக் கூறுவதுமாகும். பார்ப்பான் பிச்சை எடுப்பதற்கு ஆசீர்வாதம் என்று ஆரம்பித்தான். அதையே தமிழாக்கி இவன் வாழ்த்து என்கிறானே ஒழிய அதில் எந்த பலனும் கிடையாது. ஒருவன் நூறு வருஷம் வாழவேண்டும் என்று சொன்னதனாலேயே எவனும் வாழ்ந்துவிடமுடியாது. அதுபோல வசை கூறுவதால் எவரும் கேட்டுப் போய்விடபோவதும் இல்லை. என்னை வாழ்துகிரவர்களை விட வசை சொல்லுகிறவர்கள் தான் அதிகம். அதற்க்கு உண்மையான பலனிருக்குமானால் நான் இத்தனை ஆண்டுகள் உயிரோடுடிருந்திருக்க முடியாது. எனவே வாழ்த்துவதற்கும் வசை கூருவதர்க்குமுள்ள பலன் ஒன்றே ஆகும். வாழ்த்துவது வாய்க்கும் காதுக்கும் இனிமையாக இருக்குமே தவிர பலனில் ஒன்றுமில்லை.

விடுதலையில்  (12.12.1968) அய்யா அவர்கள் வாழ்த்துவதன் பலன் பற்றி கூறியது. நம் வாழ்கையில் நிறைய பேருக்கு பொருந்தும். இதனை சொல்லுவதால் யாரையும் வாழ்த்தவேண்டம் என்ற அர்த்தம் இல்லை. ஒரு சிலர் அவர் எனக்கு வாழ்த்து கூறவே இல்லை என்று கூறி மிகவும் வேதனை படுவார்கள். எனவே யாரும் நமக்கு வாழ்த்துவதை எதிர்பார்கவும் தேவை இல்லை.நாமும் அதற்க்கா வேதனை படவும் தேவையும் இல்லை.

அன்றைக்கு அய்யா அவர்கள் சொன்னது என்றும் பொருந்த கூடிய ஒன்றுதான்.

மார்க்சியம் என்பது மந்தையோடு மந்தையாக செல்வது-தானா?


உலகில் ஒரே இந்து நாடாகவிருந்த நேபாளத்-தில் இந்துமத ஆட்சி மாறினாலும், மாவோயிஸ்ட்கள் கையில் ஆட்சி வந்தாலும் இந்து மத சனாதன சடங்குகள் மட்டும் ஆணி அடித்ததுபோல அப்படியே ஆணிவேருடன் அப்படியே நிலை பெற்றுதான் இருக்கின்றன.


அய்ந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நேபாள நாட்டின் தென்பகுதியில் உள்ள பர மாவட்டத்தில் நேபாள பெண் கடவுளான காதிமையைச் சாந்திபடுத்த அய்ந்து லட்சம் ஆடு, மாடு, கோழி, புறா, வாத்துகளைப் பலி-யிடு-வார்களாம். இம்மாதம் 24, 25 ஆகிய நாள்களில் இந்த காட்டுவிலங்காண்டித்தனமான நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாம்.

ஒருகணம் நினைத்துப் பார்ப்போம்; அய்ந்து லட்சம் உயிர்களைப் பலியிடுவ-தென்-றால் அது எவ்வளவுப் பெரிய அச்சுறுத்தக்-கூடிய பயங்கரமான செயலாக, கோர காட்சியாக இருக்க முடியும்? அந்த வட்டாரமே ரத்த வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடாதா? அந்தப் பகுதிவாழ் மக்களின் அன்றாட வாழ்வு பாதிக்கப்படாதா? சுற்றுச்சூழல் பாதிக்கப்-படாதா? எவ்வளவு குரூர நெஞ்சம் படைத்-திருந்தால் அய்ந்து லட்சம் உயிர்களை துடிக்கத் துடிக்க வெட்டிக் கொல்லுவார்கள்!

இந்த நிகழ்ச்சியைத் தடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை நேபாள அரசு நிராகரித்து-விட்டதாம். மக்களின் மத நம்பிக்கைகளில் தலையிடாதாம் நேபாள அரசு.

பக்தியின் பெயரால் நடக்கும் இந்தக் காட்டுவிலங்காண்டித்தனத்தைத் தடுக்க முடியவில்லையே மாவோயிஸ்ட்களால் என்றால், அந்நாடு மன்னராட்சியிலேயே இருந்து-விட்டுப் போகலாமே! மார்க்சியம் என்பது மந்தையோடு மந்தையாக செல்வது-தானா? மூட நம்பிக்கைகளை அழிக்கும் சக்தியை, ஆற்றலை, அறிவை மார்க்சியம் அளிக்கவில்லையா? அல்லது அதனை இந்த மாவோயிஸ்ட்கள்தான் புரிந்துகொள்ள-வில்லையா?

பசுவதையைத் தடுக்கவேண்டும் என்று கூறும் சங்கராச்சாரியார்களும், சங் பரிவார்க் கும்பலும் இதுபற்றியெல்லாம் கவலைப்படுவது கிடையாது.

இவர்களின் அர்த்தமுள்ள இந்து மதத்தில் மனிதர்களையே கொன்று யாகம் நடத்தி-யிருக்கிறார்களே, அதற்கு “புருஷ யஜ்ஞ’’ என்று பெயர் ஆகும்.

“இந்தியாவில் உள்ள ஆரியர்களிடம் மனிதனைக் கொன்று யாகம் செய்யும் வழக்கம் இருந்திருக்கிறது என்று நிச்சயமாகச் சொல்லலாம்’’ (இம்பீரியல் இந்தியன் கெஜட் 1909 ஆம் வருடத்தில் பதிப்பு வால்யூம் ஒன்று 405 ஆம் பக்கம்).

மனிதனையே கொன்று குவிக்கும் கொலைகாரத்தனத்துக்கு இந்து மதம் சூட்டும் பெயர் “புருஷ யஜ்ஞ’’வாம்.

மாட்டுக்குத் தார்குச்சி போட்டால் அது மிருகவதை என்று கூறி, அது குற்றச்செயல் என்று (ஷிறிசிகி) தண்டிக்கும் சட்டம் தனியே இருக்கிறது. ஆனால், யாகம் என்ற பெயரால் மாடுகளையும், ஆடுகளையும் வெட்டிக் கொல்-லுவது அனுமதிக்கப்பட்டுள்ளது என்றால், இது என்ன இரட்டை அளவுகோல்!

ஒரே நேரத்தில் 5 லட்சம் உயிர்களைப் பலி கொடுப்பது என்பது உலகில் வேறு எங்குமே கிடையாதாம்.

வேறு எங்கு இருக்க முடியும் _ ஒரு இந்து நாட்டைத் தவிர? இதே நேபாளத்தில்தானே (2001) சோதிடக் கிறுக்குத்தனம் காரணமாக தாய், தந்தையர் உள்பட எட்டு பேர்களைச் சுட்டுக் கொன்றான் இளவரசன்.

எந்த சோதிடனும் இதுபோல் நடக்கும் என்று முன்கூட்டியே சொல்லவில்லையே! இவ்வளவு கொடூரம் நடந்ததற்குப் பிறகும்கூட அதுபற்றிய உரத்த சிந்தனைக்கு இடமில்லாமல், தோஷம் கழிக்கும் பார்ப்பனிய சடங்குகளைத்-தானே நடத்தினார்கள்.

இது ஏதோ நேபாள நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினை என்று மற்ற நாடுகள் ஒதுங்கிக் கொள்ளக்-கூடாது. கொடூரமான செயல்கள் எங்கு நடந்தாலும் அதனைக் கண்டிக்க, தடுத்து நிறுத்த உலக நாடுகள் கடமைப்படவில்லையா?

விடுதலை தலையங்கம் 11.11.09

Tuesday, November 10, 2009

காந்தியார் கிளப்பி-விட்ட கூத்து!



1. “மார்த்தாண்டம் பேச்சிப்பாறை சாலையி-லிருந்து இட்டவேலி சாஸ்தான் கோயில் சாலை (வழி) தெங்கன் விளை, ஹரிஜன் காலணி சாலை கி.மீ. 0/0.1/0.


குமரி மாவட்டம் செருப்-பாலூரில் இருந்து அதன் அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் தாழ்த்தப்பட்ட-வர்கள் இருக்கிறார்களாம். அதைக் குறிப்பிடுவதற்-காக இப்படி ஒரு விளம்பரப் பலகையினை நெடுஞ்-சாலைத் துறை பொறித்தி-ருக்கிறது.

தாழ்த்தப்பட்டவர்கள் ‘ஹரிஜன்’ அதாவது இந்து மதக் கடவுளான விஷ்ணு-வின் புத்திரர்கள் என்றால், மற்றவர்கள் எல்லாம் ‘ஹரன்_ சிவனின்’ புத்-திரர்களா?


இது காந்தியார் கிளப்பி-விட்ட கூத்து! கடவுளின் பிள்ளைகள் என்றால் அதன் பொருள் தீண்டத்-தகாதவர்கள் என்று அர்த்-தமா? ஊருக்கு வெளிப்-புறத்தில் குப்பைமேடு-களில் வாழவேண்டும் என்று பொருளா?

இந்த ஹரியின் புத்-திரர்கள் சிறீரங்கம் ரெங்க-நாதர் கோயில் கருவறைக்-குள் நேராக நுழைய முடியுமா?

தாழ்த்தப்பட்ட தோழர்-களைத் தனியே பிரித்துக் காட்டும் அவசியம் நெடுஞ்-சாலைத் துறைக்கு என்ன வந்தது? அதுகூட காலனி அல்லவாம் _ காலணி-யாம்! உண்மைதானே, செருப்பாகத்தானே அந்த உழைப்பாளித் தோழர்-களை பாழ்படுத்தும் இந்த இந்து மதம் இறுக்கி வைத்-திருக்கிறது.

ஹரிஜன நலத்துறை என்ற பெயர் ஆதிதிராவி-டர் நலத்துறை என்று மாற்-றப்பட்டதுகூட நெடுஞ்-சாலைத் துறைக்குத் தெரிய-வில்லையே!

2. குமரி மாவட்டம் மருங்கூர் சுப்பிரமணிய-சாமிக்கு ஆராட்டு விழா-வாம். நடந்து தொலையட்-டும்! அதற்குப் பேரூராட்சி மன்றத்தின் நிதியிலிருந்து நாளேட்டுக்கு பல்லாயிரம் ரூபாய் செலவில் விளம்-பரமாம்.

இங்குதான் இடிக்கிறது. பேரூராட்சி என்பது மதச் சார்பற்றது. அப்படியி-ருக்-கும்போது குறிப்பிட்ட ஒரு மதத்தின் விழாவுக்கு ஊராட்சி நிதியிலிருந்து எப்படி பணம் செலவு செய்யலாம் என்பது நியாய-மான வினாதானே?

3. நாகர்கோவிலில் சட்டப்பேரவை உறுப்பி-னர் நிதியிலிருந்து குறிப்பிட்ட கோயிலுக்கு ரூபாய் 5 லட்சம் தரப்பட்டதற்காக இந்து முன்னணி நன்றி தெரிவித்து சுவரொட்டி வெளியிட்டுள்ளது.

சட்டப்பேரவை உறுப்-பி-னர் நிதி மக்கள் நல்-வாழ்வுக்குப் பயன்பட-வேண்டுமே தவிர, குட்டிச் சுவர்களுக்கு வண்ணம் தீட்டுவதற்காக அல்லவே! இதுகுறித்தெல்லாம் தெளிவு-படுத்தி அரசு சுற்றறிக்கை-விட்டால் நல்லது.

விடுதலை 10-11-09

Monday, November 09, 2009

பார்ப்பான் பண்ணை-யம் கேட்பாருண்டோ?


திருச்செந்தூர் முருகன் கோயிலில் அண்மையில் வேள்விச் சாலை (யாகம்) நடத்தினார்கள். செலவு எவ்வளவு தெரியுமா? பதினாறு லட்சம்தான்.


அப்படி யாகத்தில் என்னதான் செய்வார்கள்? உணவுப் பொருள்களை-யும் (மிக முக்கியமாக நெய், பால் வகையறாக்-கள்) பட்டுத் துணிகள் முதலானவற்றையும் தீயில் போட்டுக் கொளுத்துவார்-கள். அதாவது மக்க-ளுக்கு அன்றாடத் தேவையான உணவுப் பொருள்களைத் தீயில் போட்டுப் பொசுக்கி நாசப்படுத்துவார்கள்.

இவ்வளவுக்கும் இந்தி-யாவில் 50 விழுக்காடு குழந்தைகள் ஊட்டச் சத்து குறைவால் மரணம் அடைகின்றனர். ஊட்டச்-சத்து இல்லாத உலக மக்-களில் 27 விழுக்காட்டி-னர் இந்தியாவில் உள்ள-னராம்.

இந்த நிலையில்தான் 17 லட்சம் ரூபாய் மதிப்-புள்ள உணவுப் பொருள்-கள் உள்ளிட்ட இன்றிய-மையாத பொருள்களை பக்தி என்ற பெயரால் ‘‘கிரி-மினல் வேலையில்’’ ‘பிள்ளை விளையாட்டாக’ ஈடுபட்டுக் கொண்டிருக்-கின்றனர்.

இந்த யாகத்தில் பொருள்கள் நட்டமடைந்-தாலும், யாகப் புரோகிதப் பார்ப்பான் வயிற்றில் மட்-டும் அறுத்துக் கட்டுவது ஏராளம்.

பார்ப்பான் வயிறு பர-லோகத்துக்குத் தபால் பெட்டியோ என்பார் நடிக-வேள் ராதா இரத்தக்-கண்ணீர் நாடகத்தில் அதுதான் நினைவிற்கு வருகிறது.

பாலில் நீர் கலந்தால் கலப்படக் குற்றத்தின்கீழ் கைது செய்யும் சட்டம் இருக்கிறது. ஆனால், நெருப்பில் உணவுப் பொருள்களைக் கொட்டி-னால், அது தெய்வ காரிய-மோ!


இதில் இன்னொரு கொடுமையும் கூத்தாடு-கிறது. இந்த யாகத்தைச் செய்வதற்குமுன் பூமி பூஜை செய்யவேண்டு-மாம்; அதைச் செய்யாமல் யாகம் செய்துவிட்டார்-களாம் _ அது சாத்திரக் குற்றமாம்! நீதிமன்றம் எதற்கு இருக்கிறது?

இந்து மதவாதி ஒருவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடுத்-தார். கனம் நீதி-மன்றம் சாத்திரங்களை-யெல்-லாம் கரைத்துக் குடித்து சோதனை செய்து பார்த்து, ‘ஆமாம், ஆமாம் சாத்திரக்குற்றம்தான், எனவே, பரிகாரப் பூஜை செய்யவேண்டும்’ என்று ‘கறாராக’ தீர்ப்பு அளித்து-விட்டது.

இந்தப் பரிகாரப் பூஜைக்கு ஆன செலவு என்ன தெரியுமா? மறு-படியும் ரூ.17 லட்சமாம்.பார்ப்பனிய அமைப்-பில் சாத்திரப்படி நடந்து-கொண்டாலும் அவா-ளுக்கு இலாபம் _ சாத்தி-ரத்தை மீறி நடந்துகொண்-டாலும் கொள்ளை இலாபம்.

இந்தத் தகடுதத்தம் _ மோசடியை உலகில் எங்-காவது கேள்விப்பட்ட-துண்டா?

நியாயப்படி என்ன செய்திருக்கவேண்டும்? பூமிப் பூஜை செய்யாத-தால் ஏற்பட்ட நட்டத் தொகையை, அதற்குக் காரணமான புரோகிதர்-களிடமிருந்துதானே பறி-முதல் செய்திருக்கவேண்-டும்?



பார்ப்பான் பண்ணை-யம் கேட்பாருண்டோ?


- மயிலாடன் (விடுதலை 09-11-09)

பார்ப்பனர்களை ஒழிக்க வேண்டுமென்றால் அவர்களைக் கொண்று ஒழிப்பது என்பது அல்ல….


வாயில் - நாக்கில் - குற்றம் இருந்தா லொழிய வேம்பு இனிக்காது; தேன் கசக்காது; இபறவியில் மாறுதல் இருந்தாலொழிய புலி புல்லைத் தின்னாது; ஆடு இறைச்சி உண்ணாது. அதுபோன்றதே பார்ப்பனர் தன்மை. தன் சுய இன நன்மை ஒன்றே அவர்கள் குறியாக இருக்கும்.


பார்ப்பான், பணக்காரன் என்ற இரண்டில், பணக்காரன் என்பது இயற்கையான பேதம் அல்ல; செயற்கையே யாகும். அதாவது எவனும் தான் பிறக்கும் போதே பணக்காரனாகவே பிறந்து பின் சாகும்போதும் பணக்காரனாகவே சாவான் என்பதில்லை. ஆனால், பார்ப்பான் பேதம் அப்படியில்லையே. அது அவன் அம்மா வயிற்றிலிருந்து வரும் போதே நான் பார்ப்பானாக வருகின்றேன் என்கின்றான்.

பார்ப்பானுடைய தர்மம் உடல் வியர்க்கப் பாடுபடல் கூடாது. பிச்சை எடுத்துப் புசிக்க வேண்டும். பார்ப்பான் கேட்டால் எந்தப் பொருளையும் உடனே கொடுக்க வேண்டியது நம்முடைய (சூத்திரம்) தர்மம். பார்ப்பான் யாரிடம் பிச்சை கேட்டாலும் தன் பொருளையே சொத்தையே வாங்கிக் கொள்கிறான். பூமி, பணம் எல்லாம் பார்ப்பானுடையது. அதைக் கொடுக்காவிட்டால் உதைத்து வாங்கலாம் என்பது பார்ப்பான் தர்மம். ஏர் கலப்பை, வட கயிற்றைப் பார்ப்பான் கையால் தொட்டாலே பாவம். நாம்தான் உழ வேண்டும்.

ஆரியர் இந் நாட்டுக்கு வருமுன், நிலம், நீர் , இடம் காரணமாக மக்கள் பழக்க, வழக்க, இயற்கைத் தன்மைகளில் பேதமிருந்ததாக்க் காணப்படுவதல்லாமல் மதம், மதத்தின் பயனாய் ஏற்பட்ட வேடம், சடங்கு, சாதி என்பவைகள் காரணமாகப் பேதம், பிரிவு இருந்ததாகச் சொல்லுவதற்கு அறிகுறிகள் காணப்படவில்லை.

பார்ப்பனரின் நடத்தையும், கொடுமையும், அக்கிரமும்தான் நம்மைப் பார்ப்பானே வெளியேறு என்று கூறும் முடிவுக்கு வரச் செய்தது.ஒரு இடத்தில் ஒரு வியாதி ஏற்பட்டால் - வியாதிவந்தவனைப் பார்த்துப் பார்த்து மருந்து கொடுத்துக கொண்டு வருவதால் - வியாதியை ஒழித்துவிட முடியாது. வியாதியின் மூலாதாரத்தைக் கண்டுபிடித்து, அதை அடியோடு அழிக்க வேண்டும். அது போலவே கொசுக்கள் இந்த மண்டபத்திற்குள் வருவதற்குக் காரணம் என்ன என்பதைக் கண்டு பிடித்து அதை அழிக்க வேண்டும். இந்த மண்டபத்தில் இவ்வளவு அதிகமான கொசுக்கள் கொச கொச வென்று இருக்கின்றனவென்றால் இதற்குக் காரணம் இங்குள்ள ஓதம், அருகிலுள்ள நீர்த் தேக்கம், அதிலுள்ள அசுத்தம், அழுக்கு ஆகிய காரணங்களால்தான் கொசுக்கள் உண்டாகின்றன என்பதை நன்றாய் அறிய வேண்டும். கொசு உபத்திரவங் கூடா தென்கிறவர்கள் மேற் கண்ட அசிங்கங்களையும் தீர்த் தேக்கங்களையும் அழிக்க வேண்டும். அக்கம் பக்கம் உள்ள வல்லா இடமும் சுத்தமாக வைக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் கொசுக்கள் ஒழியும், இல்லா விட்டால் வெட்ட வெட்டத் தழைக்கும் மரம் போல எவ்வளவு அழித்தாலும் வட்டியுடன் பெருகும் என்பதை என் அபிப்பிராயம். அது போலவே பார்ப்பனர்கள் எப்படி உண்டானார்கள்? அவர்கள் தொல்லை எதனால் ஏற்பட்டது? அதை எது பாதுகாத்து வளர்க்கின்றது? என்பவைகளைக் கண்டு பிடித்து அவற்றை அழியுங்கள்; நசுக்குங்கள்; அதுதான் பார்ப்பனீயத்தை ஒழிக்கும் மார்க்கமாகும்.

பார்ப்பனர்களை ஒழிக்க வேண்டு மென்றால் அவர்களைக் கொண்று ஒழிப்பது என்பது அல்ல…. சாக்கடைக் கசுமாலமு ஒழிந்தால் எப்படி கொசு ஒழியுமோ அப்படி இந்த மதம், கடவுள், கோயில், புராணம் ஒழிந்தால் பார்ப்பனர் ஒழிந்து விடுவார்கள்.

இந்து மத எதிப்புக்கோ, இந்துத்தான் எதிர்ப்புக்கோ, ஆரியர் - திராவிடர் என்கின்ற உணர்ச்சிக்கோ பார்ப்பனத் துவேசம் காரணமல்ல. மக்கள் மீது உள்ள பரிதாபமே காரணம்.

சமுதாயத் துறையில் பார்ப்பனர்கள் அனுஷ்டிக்கிற உயர்வு, அவர்கள் அனுபவிக்கிற அளவுக்கு மேற்பட்ட விகிதம் ஆகியவைகளில் தான் எனக்கு வெறுப்பு இருக்கிறது. இது பார்ப்பனர்களிடம் மாத்திரமல்ல. இந்த நிலையில் உள்ள எல்லோரிட்த்திலுமே வெறுப்புக் கொள்கிறேன்.

பார்பானை  என்ன நாங்கள் இந்நாட்டில் இருக்க வேண்டாம் என்றா கூறுகிறோம்? தாராளமாக இருக்கட்டும் ஆனால் அவர்களு மனிதர்களாக இருக்கட்டும். தேர்களாக இருக்க வேண்டாம் என்றுதானே நாங்கள் கூறுகிறோம். எங்களுக்கும் மற்ற மதத்தவர்களுக்கும் இடையூறில்லாத எந்த உரிமையையும் பார்ப்பனர்க்கும் வழங்க நாங்கள் தயாராகத்தானே இருந்து வருகிறோம்.


----------பார்பனியம் பற்றி தந்தை பெரியார்

Friday, November 06, 2009

பிச்சைக்காரனுக்குச் சோறு போடுவதும் நாத்திகமேயாகும்


பிச்சைக்காரனுக்குச் சோறு போடுவதும் நாத்திகமேயாகும். ஏனெனில் கடவுள் பார்த்து ஒருவனை அவனது கர்மத்திற்காகப் பட்டினி போட்டிருக்கும்போது நாம் அவனுக்குச் சோறு போடுவது கடவுளுக்கு விரோதமான காரியமே யாகும். அதாவது, கடவுளே நம்பாத - கடவுள் செயலை நம்பாத செயலே யாகும்.


தங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு என்று காட்டிக் கொள்கிற எவரும், கடவுள் நம்பிக்கையாளர்கள் என்கின்ற எவரும் கடவுளை நம்பி எந்தக் காரியத்தையும் கடவுளிடம் விடுவது கிடையாது. தலைவலி வந்தால்கூட டாக்டரிடம்தான் செல்கிறார்கள். இவர்கள் எப்படி உண்மையான கடவுள் நம்பிக்கைக்காரர்களாக இருக்க முடியும்? எனவே தான் இவர்களைச் சிந்தனையாளராக இல்லாத நாத்திகர்கள் என்கின்றேன்.

நாத்திகம் என்பது: நாத்திகம் அவரவர்கள் மன உணர்ச்சி - ஆராய்ச்சித் திறன் ஆகியவைகளைக் கொண்டதே தவிர அது ஒரு குணமல்ல; ஒரு கட்சி அல்ல; ஒரு மத மல்ல.

ஒருவனை ஒருவன் நாத்திகன், கடவுள் இல்லை என்று சொல்லுகிறவன் என்று சொல்லுவதே நாத்திகமாகும். கடவுளைச் சரியாக அறியாத்தே யாகும். அந்த வார்த்தையை உண்டாக்கினவர்களே நல்ல நாத்திகர்களாவர். கடவுள் இருந்தால் ஒரு மனிதன் இல்லை என்று சொல்ல முடியுமா? அல்லது ஒருவன் இல்லை என்று சொல்லுகிறான் என்று மற்றவன் நினைக்கவாவது முடியுமா? ஆகவே நாத்திகம், நாத்திகன் என்பன கடவுள் வியாபாரக்காரர்கள் தங்கள் வியாபாரத்துக்கு ஆதரவாகக் கண்டுபிடித்த உப கருவிகளேயாகும். கடவுள் வியாபாரக்காரனுக்கு அல்லாமல் மற்றவனுக்கு இந்தக் கவலையே இருக்க நியாயமில்லை.

நாத்திகன் ஆத்திகன்: காரண காரியத்தைத் தெரிந்து அதன்படி நடப்பவன் நாத்திகன். வெறும் நம்பிக்கையை ஆதாரமாக வைத்துச் சாத்திரம் சொல்லுகிறது, பெரியோர்கள் சொல்லுகிறார்கள் என்பதை நம்பி அந்த நம்பிக்கையின் படி நடப்பவன் ஆத்திகன்.
நாத்திகன் என்பதற்குக் கடவுள் இல்லை யென்பவன் என்று பொருளல்ல; புராண இதிகாச வேத சாத்திரங்களை ஒப்புக் கொள்ளாதவர்களையே, அவற்றைப் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்ப்பவர்களையே, பார்ப்பனர்கள் நாத்திகர்கள் என்று எழுதி வைத்திருக்கின்றனர். இராமாயணத்தில் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்த புத்தர் முதலானவர்களை நாத்திகர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பகுத்தறிவுக்கும் நாத்திகத்திற்கும் உள்ள உறவு: சமுதாயச் சீர்திருத்தத்தின் கடைசி எல்லை பொது உடைமை என்பதைப் போலவே நாத்திகமும் அறிவின் உண்மையான கடைசி எல்லையாகும்.


நாத்திகத்தின் பிறப்படம்: எங்கு எங்கு அறிவுக்கு மரியாதை இல்லையோ, சமத்துவத்திற்கு இட மில்லையோ ங்கெல்லாம் இருந்துதான் நாத்திகம் முளைக்கின்றது. கிருத்துவையும், முகமது நபியையும் கூட நாத்திகர்கள் என்று யூதர்கள் சொன்னதற்கும் அவர்களது சமதர்மமும், சீர்திருத்தமும்தான் காரணமாகும்.

இருக்கிற கடவுளை இல்லை என்று சொல்லுவதில் சொல்லுபவனுக்கு என்ன லாபம்? அல்லது சர்வத்தையும் செய்விக்கிற, சொல்லச் செய்கிற ஒரு கடவுள் இப்படியாக ஒருவனைச் சொல்லவும் நினைக்கவும் செய்வதில் கடவுளுக்குத்தானாகட்டும் என்ன லாபம் வரும்? ஆகவே ஒரு மனிதன் இப்படி முட்டாள் தனமான காரயத்தைச் செய்வானா அல்லது ஒரு கடவுள் இப்படிப் பைத்தியக்காரத்தனமான காரியதைதச் செய்விப்பாரா என்பதையாவது, ஒருவன் கடுகளவு நினைத்தாலும், சிந்திக்கும் சக்தி இருந்தாலும் மற்றவனை நாத்திகன், கடவுளை மறுக்கிறவன் என்று குறையோ குற்றமோ சொல்ல மாட்டான்.

நாத்திகனாகவோ, நாத்திகனாவதற்குத் தயாராகவோ, நாத்திகன் என்று அழைக்கப்படுவதற்குக் கலங்காதவனாகவோ இருந்தால் ஒழிய ஒருவன் சமதர்மம் பேச முடியவே முடியாது.

---------பெரியாரின் புரட்சி மொழிகள்

கிரிக்கெட் விளையாட்டு........சிந்தியுங்கள்!!!



கிரிக்கெட் என்ற அந்நிய நாட்டு விளையாட்டு நம் இந்தியாவை தொற்றிக்கொண்டு அட்டிவிப்பது கொஞ்சம் நஞ்சமல்ல. இதுதான் நம் தேசிய விளையாட்டு போலவும் ஆகிவிட்டது இதற்க்கு அரசாங்கம் ஊக்குவிப்பு வேறு. என்ன ஒரு வெட்க்ககேடு மானகேடு. நம் தேசிய விளையாட்டகிய காக்கியை மறந்து ஒவொரு இளைங்கர்களும்,சிறுவர்களும் ஏன் தள்ளாத முதியர்வல்களும் கூட சச்சின் என்ன ஸ்கோர் என்று கேட்க்கும் அளவுக்கு, இந்த கிரிகெட் மோகம் பத்தாம் பசலித்தனமாக எங்கும் பரவி கிடக்கிறது. இது அரோகியமா? என்றால் இல்லை என்று ஒடெனே சொல்லிவிடலாம்.

நம் நாட்டில் எத்தனையோ நம் பண்பாடு சார்ந்த விளையாட்டுகள் அழிந்து இதனை போன்றதொரு விளையாட்டு மோகம் நம்மவர்களிடம் வளர்ந்து வருபவதை அறிவுள்ள எவரும் ஏற்க மாட்டார்கள். அதிலும் குறிப்பாக இந்திய கிரிக்கெட்  வீரர்களிடம் சூதாட்டமாகவும் மற்றும் மக்களிடம் ஒரு போதயயை (பான்பராக், குடிபழக்கத்தை விடவும் மோசமாக) போலவும் இருக்கிறது.

சரி இந்த கிர்க்கெட் விளையாட்டில் யாரேனும் வசதி இல்லாதவர்கள் விளையாடமுடியுமா என்றால் அது நினைத்து கூட பார்க்க முடியாது. எவளவு திறமை இருந்தாலும் நல்ல வசதியும் கொஞ்சம் பார்பன வாடை உள்ளவர்களாகவும் இருந்தால் தான் இந்த முட்டாள் விளையாட்டில் சேர இயலும் என்பது இன்னொரு விஷயம். இதற்க்கு உதரணமாக வேறு எங்கும் போக தேவை இல்லை நம் தமிழ்நாட்டிலேயே எடுத்துக்கொண்டோமானால் வெங்கட்ராகவன் தொடங்கி கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்,டபுள்.வீ. ராமன்,சடகோபன் ரமேஷ்,தினேஷ் கார்த்தி இன்னும் தேர்ந்தெடுத்து போவோர் அனைவரும் அவாள் தான். இப்பொழுது புரிந்திருக்கும் கிரிக்கெட் ஒன்றும் சிரமமான விளையாட்டு இல்லை ஒரு சோம்பேறி விளையாட்டு என்று. ஏன் சொல்லுகிறேன் என்றல் அவாள் தேர்ந்தெடுக்கும் அனைத்தும் நோகாமல் நொங்கு தின்பது (மற்றவர்களை ஏமாத்தி பிழைப்பது) தான் கோவில் கற்பகிரகம் உட்பட.

சரி நம் பொது மக்களுக்கு இதனால் என்னதான் பெருமை என்றல் ஒன்றும் கிடையாது. கிட்டத்தட்ட 7 மணிநேரம் தான் விரயம் வேறு ஒன்றும் இல்லை. "மேலும் உலக கோப்பை போன்ற சமயத்தில் செயிதிதாள்களில் என்ன செய்தி என்றால் மேட்ச் பார்க்கும் பொது ஒரு பாலில் ரெண்டு ரன் இந்தியா அடிக்க முடியமால் போன பதட்டத்தில் மாரடைப்பு வந்து மேட்ச் பார்த்த இடத்திலே ஒருவர் சாவு".  எந்த அளவு மோகம் நம்மவர்களுக்கு அனால் சச்சின்,டோனி எல்லோரும் வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் ஒரு மேட்ச் க்கு இவளவு என்று பணம் வங்கி கொண்டு விடுவர். அதுவும் இப்பொழுது ஏலம் வேறு விடுகிறார்கள் கோடி கோடி ரூபாயாக டாலர் களாக. இந்த சூதாட்டத்தை பார்க்க நம்மவர்கள் கூட்டம் கடைக்கு கடை, வீதிக்கு வீதி, அப்புறம் வேலை சேயும் இடங்களில் இன்டர்நெட்டில் வச்ச கண்ணை திருப்பாமல் ஸ்கோர் பார்த்து கொண்டு நேரத்தை வீணடித்து கொண்டு இருக்கிறார்கள்.

இதனை போன்று பார்த்து விட்டு வாரம் சனி கிழமை அனால் மட்டையும் பந்தையும் எடுத்து கொண்டு மெரினா போண்டற இடங்களில் (உட்புற சாலைகளில்) யாரையும் வாகனம் ஓட்ட விடாமல் விளையாடுவது. ஏன் சாலைகளிலேயே இந்த கிரிக்கெட் விளையாட்டால் நிறைய பொது மக்களும் பாதிக்க படுகிறார்கள்.

இவளவு இடையூறும் கஷ்டமும் தரும் இந்த பணக்கார, சோம்பேறி, முட்டாள், சூதாட்ட விளையாட்டு நம்மை போன்ற வளரும் நாடுகளுக்கு தேவை தனா?. சீனா,ஜப்பான்,அமெரிக்க,பிரான்ஸ்,ஜெர்மனி,ரஷ்ய.....(இவை அனைத்தும் ஒலிம்பிக்கில் அதிக தங்கம் வெல்லும் நாடுகள்) மற்றும் பல முனேற்ற நாடுகளில் இந்த சூதாட்ட விளையாட்டு விளையாடுவதில்லை. ஏன் விளையாடும் அவுஸ்திரேலியா (கிரிக்கெட் தேசிய விளையாட்டு) போன்ற நாடுகளில் கூட மக்கள் இந்த அளவு போதை கொண்டு இருக்கவில்லை.

ஆதனால் தான் பெரியார் அவர்கள் சொன்னார்கள்  11 முட்டாள்கள் விளையாட 11000 சோம்பேறிகள் பார்க்கும் விளையாட்டுதான் இது என்று. அது எவளவு பொருத்தம் என்பது இன்று தெரிகிறது.

 இளைய தலைமுறைகளே, வருங்கால இந்தியாவின் தூண்களே இந்த கிரிகெட் போதை தேவையா?  தயவு செய்து சிந்தியுங்கள்!!!

Thursday, November 05, 2009

இவன்தான் பிள்ளை - யார்!


திருவிராகம் பண் வியாழக் குறிஞ்சி, 1ஆம் திருமுறை திருவலிவலம் திருங்கனசம்பந்தர் (தேவாரம்)

"பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை இறையே"

இப்பாடலின் கருத்து:

சிவபெருமானின் மனைவியாரான உவமையால் பெண் யானை வடிவத்தை மேற்க்கொள்ள இளமை மிகுந்த ஆண் யானையின் வடிவத்தை சிவபெருமான் மேற்க்கொள்ள இருவரும் கூடினர். அப்படிக் கூடியதால் கணபதி பிறந்தார். சிவபெருமான் தன்னுடைய அடியை வழிபடும் அடியவர்களின் துன்பங்களை போக்க கனபதியயை பெற்றுடுத்தனர். அத்தகைய சிவபெருமான் திருவலம் என்ற ஊரில் உள்ளவர், தங்களிடத்து வந்து இரந்தவர்கு இல்லை என்னாது இயன்ற உதவிகளை செய்யும் கோடை பண்புடைய மக்கள் வாழும் ஊர் வலிவலம் ஆகும் என்பது கருத்து.

உயிரினங்களின் பெரிதும் வலிவுடயதும் யானையாகும். ஆணும் பெண்ணுமாக கூடி ஆபவிக்கும் உயிரின இன்பங்களில் யானையும் யானையும் கூடி அனுபவிக்கும் உயிரின் இன்பம் பெரிதாக இருக்கலாம் என்னும் நினைப்பில் சிவபெருமானும், பார்வதியும் யானை வடிவு கொண்டு கூட, அதன் விளைவாக யானை முகத்தோடு யானை கன்று ஆகிய பிள்ளையார் பிறந்தார் என்று பாடியுள்ளார்.

திருகனசம்பந்தர் எழுதிய இந்த தேவார பாடல் தஞ்சை மாவட்டம் வலிவலத்தில் உள்ள கோயிலிலும் வடிக்கப்பட்டுள்ளது. மும்மலமும் கடந்த கடவுள் என்று ஒரு பக்கம் கூறி கொண்டு காமவெறியுடன் காட்டு யானைகளாக உருவெடுத்து அம்மையும், அப்பனும்(சிவனும் பார்வதியும்) கலவி செய்தார்கள் என்பதும், அதன் காரணமாக விநாயகர் என்கிற பிள்ளையார் பிறந்தார் என்பதும் எவ்வளவு பெரிய காட்டுமிரண்டித்தனம்!

சும்மாவா, சொன்னார் பெரியார் கடவுளை கற்பித்தவன் முட்டாள் என்று....சிந்தியுங்கள் தோழரே!!!

பெரியாரால் என்ன பயன்?


சில தோழர்களுடன் நான் உரையாடி கொண்டிருக்கும்பொழுது அவர்கள் கேட்பது பெரியார் என்ன செய்து கிழித்துவிட்டார். அவரால் ஒரு நன்மையும் கிடையாது. இதுதான் இந்த தோழர்களின் வசைபாடக உள்ளது. இப்படி கேட்பவர்கள் மேலும் சொல்லுவார்கள் பெரியாரும் அவருடைய ஆட்களும் இந்து கடவுள்களை மட்டும்தான் விமர்சிக்க முடியும் உங்களால் மற்ற இஸ்லாமிய, கிருஸ்தவ கடவுள்களை விமர்சிக்க முடியாது என்று.

பெரியாரும் அவரை சார்ந்தவர்களும் ஒன்றும் தானாக எதனையும் பேசவில்லை. இந்து மதத்தில் பார்ப்பார்கள் கடவுள் கதைகளை எழுதி இந்த கூமுட்டைகளை அடிமையாக்கிய யோகிதயைதான் சொல்ளிஇருக்கிரர்கள்.மற்ற இரண்டிலும் இவளவு அபசமோ மற்ற மனிதர்களை அடிமைகளாக நடத்துவதோ கிடையாது. இது ஒரு அடிப்படை கருத்துதான் என்றாலும் நிறைய தோழர்களுக்கு இது புரிவதில்லை. இதனை விளக்குவது என்றல் இன்னும் எழுதி கொண்டே போகலாம்.

சரி விசயத்துக்கு வருகிறேன். அப்படி என்னதான் பெரியார் செய்து கிழித்து விட்டார். இவரால் ஒன்றும் பயன் கிடையாது இனியும் கிடக்க போவதில்லை என்று உதட்டை பிதுக்கும் கூமுட்டைகளுக்கு அடிபடியிலேயே ஒன்றும் புரிந்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

இப்படி கூறும் கூமுட்டைகளின் வீட்டிலேயே இட ஒதுக்கீடை அனுபவித்து அவரோ மற்றும் அவருடைய சகோதரர்களோ, சகோதரிகளோ ஒரு மருத்துவராகவோ,பொறியியல் வல்லுனர்களவோ, ஆசிரியர்களாகவோ வந்து இருப்பார்கள். இது அவர்களுக்கு தானாக ஏற்பட்ட மாற்றம். இனிவரும் காலத்திலும் அதனை அனுபவிக்க IIT,IIM போன்ற இடங்களில் காத்திருப்பார்கள். அனால் என்ன பயன் ஒன்றும் கிடையாது என்று மீண்டும் இந்த கூமுட்டைகளின் கூவல். இந்த கூமுட்டைகளுக்கு புரியவில்லை என்றால் நமக்கு ஒன்றும் கவலை இல்லை.

பெரியாரின் தாக்கத்தை பார்ப்பனர்கள் நன்றாகவே உணர்ந்து வைத்திருக்கிறார்கள். அனால் எதிரிகள் புரிந்து வைத்திருக்கும் அளவிற்கு இவர்களுக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் இவர்களுக்கு பெரியார் பற்றியும் ,திராவிட இயக்கம் பற்றியும் அவர் போராட்டம் பற்றியும் ஒரு கடுகளவு கூட படிதிருக்கவோ அல்லது கேட்டிருக்கொவோ வாய்ப்பே இல்லை.(இவர்கள் தினசரி பத்திரிக்கையை ஒப்புக்குதானும் எட்டி பார்ப்பது கிடையாது அப்புறம் எப்படி இதனை எதிர்பார்க்கமுடியும். ஒருவேளை ஏதேனும் அகவிலைப்படி உயர்வு என்று வந்தால் பத்திரிக்கை எட்டி பார்பார்கள்).

பெண்கள் முன்னேற்றம் பற்றி பெரியார் கூறியது எல்லாம் இவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. பெண் அடிமை (இதில் பார்ப்பன பெண்களும் அடங்குவர் , பெரியார் பார்பன எதிரி என்றல் இதில் பார்பனரல்லாத பெண்களுக்கு மட்டும்தான் போராடியிருக்க வேண்டும் ஆனால் அவர் அப்படி யல்ல மனித அடிமை தனத்திற்கு எதிராக போராடியவர் என்பதை இதன் மூலமாவது சில கூமுட்டைகள் புரிந்து கொள்ளவேண்டும் ) பற்றி பெரியார் செய்த செயல்கள் கொஞ்ச நஞ்சம் இல்லை.

ஆண்களுக்கு நிகராக ஆக்குவதற்கு அவர்கள் பட்ட பாடு இவர்களுக்கு எங்கு புரியபோகிறது. பெண்களுக்கு கல்வியில் ஆண்களுக்கு நிகராக வர 50% பெண்களுக்கு இடம் தரவேண்டும் என்று கோரிக்கை வைத்து போராடியபொழுது எல்லோரும் கேட்டார்கள் ஆண்கள் சண்டைக்கு வரமாட்டார்களா என்று அதற்க்கு அய்யா அவர்கள் ஏன் அவருடைய தங்கை, மகள்,மனைவி போன்றவர்கள் பயனடைவர்களே என்று. இப்படி கொஞ்சம் கொஞ்சமாக மனித இனத்தின் அடிமைத்தனத்தை ஒழிக்க எவளவோ செய்து இருக்கிறார்கள். பெரியாரை பற்றி நன்கு தெரிந்தவர்கள் நினைக்கலாம் ஏன் பெரியாரை பற்றி இந்த அடிப்படி செய்தி கூட தெரியாத என்று. அனால் இந்த மிக மிக அடிப்படை செய்தி கூட தெரியாத கூமுட்டைகளும் இந்த தமிழகத்தில் வாழ்ந்துகொண்டு விதண்டாவாதம் பேசிக்கொண்டு தானிருக்கிறார்கள்.

கவியரசு வைரமுத்து கூறியது போல

புத்தர் வந்தார் அவர் ஒரு வாழ்க்கை சாவி தந்தார்
நபிகள் வந்தார் அவர் ஒரு வாழ்க்கை சாவி தந்தார்
இயேசு வந்தார் அன்பு எனும் சாவி தந்தார்
காந்தி வந்தார் அகிம்சை எனும் சாவி தந்தார்
பெரியார் வந்தார் பகுத்தறிவு எனும் சாவி தந்தார்
அனால் இன்று இவை அனைத்தும்
ஈயம்,பித்தளைக்கு கொடுத்து பேரிச்சம்பளம்
வாங்கி விட்டார்கள்.
(நினைவில் இருந்த வரிகள் மட்டும் கூறியிருக்கிறேன்)

இவர்களை நினைக்கும் போது மேலும் ஒரு கவிதை தான் நினைவுக்கு வருகிறது.

“என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?”
பனை ஏறும்
தந்தை தொழிலில்
இருந்து தப்பித்து
தலைமைச் செயலகத்தில் வேலை செய்பவர் கேட்டார்

“பெரியாரின்
முரட்டுத்தனமான அணுகுமுறை
அதெல்லாம் சரிபட்டு வராதுங்க”
இதுமுடி
வெட்டும் தோழரின் மகனான
எலக்ட்ரிக்கல் என்ஜினியர்.

“என்னங்க
பெரியார் சொல்லிட்டா சரியா?
பிரமணனும் மனுசந்தாங்க.
திராவிட இயக்கம்
இலக்கியத்துல என்ன செஞ்சி கிழிச்சது?”

இப்படி ‘இந்தியா டுடே’
பாணியில்கேட்டவர்
அப்பன்
பிணம் எரித்துக் கொண்டிருக
இங்கே டெலிபோன் டிபார்மென்டில்
சுபமங்களாவை விரித்தபடி
சுஜாதா
சுந்தர ராமசாமிக்கு
இணையாக
இலக்கிய சர்ச்சைசெய்து கொண்டிருக்கும்
அவருடைய மகன்.

ஆமாம்
அப்படி என்னதான் செய்தார் பெரியார்?


இனியாவது பெரியாரைப்பற்றி அடிப்படை அறிவை வளர்த்துக்கொண்டு சிந்தித்து செயல் படுவோம் .......

Tamil 10 top sites [www.tamil10 .com ]