Showing posts with label நாத்திகம். Show all posts
Showing posts with label நாத்திகம். Show all posts
Sunday, December 27, 2009
எம்.என்.ராய் - எனது நாத்திக ஆசான் பெரியார்
எம்.என்.ராய் உலகப் புகழ் பெற்ற நாத்திகர், மேற்கு வங்கம் அம்பாலி-யாவில் 1887ஆம் ஆண்டு பிறந்தார். இயற் பெயர் நரேந்திரநாத். ஆனால் அதனைமாற்றி இவர் தமக்குச் சூட்டிக் கொண்ட பெயர் மனோ-பந்திரநாத் ராய் (எம்.என். ராய்) என்பதாகும்.
உலகைச் சுற்றியவர், லெனினின் நண்பர், அவ-ரோடு பல விஷயங்களில் எதிர்த்து விவாதம் புரிந்தவரும்கூட!
ஒரு முறை காந்தி-யாரைப் புரட்சியாளர் என்று லெனின் சொன்ன -போது அதனை மறுத்தார் ராய். “அரசியல் செய்கை-களிலே எவ்வளவு புரட்-சியாளராகத் தோன்றி-னாலும், பழைய சனாதன தருமங்களையும், சமய வழிபாடுகளையும் வர-வேற்பவர்கள் சமுதாயப் புரட்சிக்குத் தடைக் கற்-களாகவே இருக்க முடி-யும்” என்று முகத்துக்கு முகம் லெனினிடம் அடித்-துக் கூறிய அஞ்சா நெஞ்சர் - _ கருத்துத் தெளி-வின் சின்னம்.
1944 டிசம்பர் 27_ஆம் நாள் (இந்நாள்) அன்றைய கல்கத்தாவில் எம்.என்.-ராய் கூட்டிய ஜனநாயகக் கட்சி மாநாட்டிற்குத் தந்தை பெரியார் அவர்-களை அழைத்திருந்தார். அம்மாநாட்டிற்கு அண்ணா அவர்களையும் அழைத்-துக் கொண்டு போனார் தந்தை பெரியார்.
அந்த மாநாட்டில் எம்.என். ராய், தந்தை பெரியார்பற்றி கூறிய கருத்தும், கணிப்பும் மிக-வும் குறிப்பிடத்தக்கதாகும் எனது நாத்திக ஆசான்” பெரியார் என்று பெரு-மிதத்தோடு குறிப்பிட்டார்.
நாத்திகத்தைப்பற்றி அதிகமாகப் பேசி, எழுதி, நூல்கள் அதிகம் வெளி-யிட்டதில் பெரியார் போல உலகில் எவருமே கிடை-யாது என்று உண்மையின் அடிப்படையில் புகழாரம் சூட்டினார்.
“முழு மூடநம்பிக்-கையை மேலான ஆன்-மீக நிலை என்று விளம்-பரப்படுத்துவதை உதறித் தள்ளினாலன்றி இந்தியா இழிவும், பழியும், இன்ன-லும், அவல நிலையும் விட்டு மீளவே வழி-யில்லை நம்பிக்கைக்கு எதிராக நல்லறிவும், ஆணைக்கு எதிராகப் பகுத்தறிவும், பண்பும், பாரம்பரியப் பழக்கங்-களைத் தூக்கி எறியும் துணிவும் உருவானால் அல்லாது இந்தியாவில் மறுமலர்ச்சி ஏற்படுத்துவது அரிது’’ என்கிறார் எம்.-என்.ராய்.
இவை தந்தை பெரி-யாரின் கருத்துகளை உரித்து வைத்தது போல் இல்லையா?
- விடுதலை (27.12.09) மயிலாடன்
உலகைச் சுற்றியவர், லெனினின் நண்பர், அவ-ரோடு பல விஷயங்களில் எதிர்த்து விவாதம் புரிந்தவரும்கூட!
ஒரு முறை காந்தி-யாரைப் புரட்சியாளர் என்று லெனின் சொன்ன -போது அதனை மறுத்தார் ராய். “அரசியல் செய்கை-களிலே எவ்வளவு புரட்-சியாளராகத் தோன்றி-னாலும், பழைய சனாதன தருமங்களையும், சமய வழிபாடுகளையும் வர-வேற்பவர்கள் சமுதாயப் புரட்சிக்குத் தடைக் கற்-களாகவே இருக்க முடி-யும்” என்று முகத்துக்கு முகம் லெனினிடம் அடித்-துக் கூறிய அஞ்சா நெஞ்சர் - _ கருத்துத் தெளி-வின் சின்னம்.
1944 டிசம்பர் 27_ஆம் நாள் (இந்நாள்) அன்றைய கல்கத்தாவில் எம்.என்.-ராய் கூட்டிய ஜனநாயகக் கட்சி மாநாட்டிற்குத் தந்தை பெரியார் அவர்-களை அழைத்திருந்தார். அம்மாநாட்டிற்கு அண்ணா அவர்களையும் அழைத்-துக் கொண்டு போனார் தந்தை பெரியார்.
அந்த மாநாட்டில் எம்.என். ராய், தந்தை பெரியார்பற்றி கூறிய கருத்தும், கணிப்பும் மிக-வும் குறிப்பிடத்தக்கதாகும் எனது நாத்திக ஆசான்” பெரியார் என்று பெரு-மிதத்தோடு குறிப்பிட்டார்.
நாத்திகத்தைப்பற்றி அதிகமாகப் பேசி, எழுதி, நூல்கள் அதிகம் வெளி-யிட்டதில் பெரியார் போல உலகில் எவருமே கிடை-யாது என்று உண்மையின் அடிப்படையில் புகழாரம் சூட்டினார்.
“முழு மூடநம்பிக்-கையை மேலான ஆன்-மீக நிலை என்று விளம்-பரப்படுத்துவதை உதறித் தள்ளினாலன்றி இந்தியா இழிவும், பழியும், இன்ன-லும், அவல நிலையும் விட்டு மீளவே வழி-யில்லை நம்பிக்கைக்கு எதிராக நல்லறிவும், ஆணைக்கு எதிராகப் பகுத்தறிவும், பண்பும், பாரம்பரியப் பழக்கங்-களைத் தூக்கி எறியும் துணிவும் உருவானால் அல்லாது இந்தியாவில் மறுமலர்ச்சி ஏற்படுத்துவது அரிது’’ என்கிறார் எம்.-என்.ராய்.
இவை தந்தை பெரி-யாரின் கருத்துகளை உரித்து வைத்தது போல் இல்லையா?
- விடுதலை (27.12.09) மயிலாடன்
Wednesday, December 09, 2009
பானைக்குள்ளே யானை ஒளிந்துள்ளது என்று கூறினால் சிரிக்கமாட்டீர்களா?
கடவுள் பக்தர்களே, நீங்கள் கடவுள் மறுப்பாளர்களான சுயமரியாதை, நாத்திக, பகுத்தறிவாளர்களை வெறுக்-கிறீர்களே நியாயந்தானா?
எதையும் காரண காரியத்துடன் சிந்தித்து நம்ப வேண்டியவைகளை நம்புவதும், நம்ப வேண்டாதவைகளை_ மூடநம்பிக்கைகள் என்று மூளையில் சேர்ந்துள்ள குப்பைகளை அங்கேயே வைத்துக் கொண்டு அவதியுறாதீர்கள்; அறிவு விடுதலை பெற்று, முழு சுதந்திர அறிவுள்ள, தன்னம்பிக்கையாளர்களாக வாழுங்கள் என்று அவர்கள் கூறுவது தவறா? குற்றமா?
1. பானைக்குள்ளே யானை ஒளிந்துள்ளது என்று கூறினால் சிரிக்கமாட்டீர்களா?
இருப்பது உண்மை; அஞ்ஞானிகள் கண்ணுக்கு அது தெரியாது, கண்ணால் பார்க்க முடியாது, உடம்பால் உணர முடியாது, உள்ளத்தாலும் அறிய முடி-யாது -‘மனோ’, வாக்கு, காயங்களுக்கு அப்பாற்பட்டவன் என்று சொல்லி நம்ப வைப்பதும், பானைக்குள் யானை இருக்-கிறது என்று கூறுவதும் ஒன்றுதானே? பானைக்குள் பூனை இருக்கிறது என்றால் நம்பலாம்; ஆனால் யானை இருக்கிறது என்றால் அது இல்லாத ஒன்றுதானே?
2. காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் சந்-நிதியில் பூஜை செய்த ஒரு காமாந்-தகாரனின் காமலீலைகள் அதுவும் கரு-வறையில் ஒரு நாள் அல்ல, பல நாள்; ஒரு பெண்ணோடு மட்டுமல்ல, பல பெண்களுடன் சல்லாபித்து, உல்லாச-மாக இருந்ததோடு, அவற்றை செல்-போன் கேமிராமூலம் படம் பிடித்தும் உள்ள அந்த அர்ச்சகப் பார்ப்பானின் செயல்கண்டு, ஆத்திரப்படும் பக்தை-களே, பக்தர்களே, உங்கள் கோபம் அந்த காமாந்தகாரன்மீது பாய்வதற்கு-முன் இதுபற்றிக் கவலையே இல்லாத சாமியும் சாட்சியாக மாறிவிட்டதன்-மூலம் என்ன புரிய வேண்டும் உங்-களுக்கு? கோயில் உள்ளே, கருவறை உள்ளே இருப்பது எல்லாம்வல்ல கடவுள் அல்ல; அது ‘வெறும் கல்’தான் என்று புரிந்து கொண்டிருக்க வேண்டுமே!
அர்ச்சகப் பார்ப்பனன் மீது பாய்-வதை (விளக்குமாறு, பழஞ்செருப்பு) -விட அங்குள்ள கடவுள் மீது அல்-லவா பாய வேண்டும்_ ‘‘கடவுள் இல்லை; இல்லவே இல்லை’’ என்று கூறிடும் எங்களுடன் அல்லவா வந்து சேரவேண்டும்?
3. அதே காஞ்சிபுரத்தில், காஞ்சி மடத்தின் முன்னாள் மேலாளர் சங்கர-ராமன் ரத்தம் வழிய வழியப் படு-கொலை செய்யப்பட்டாரே, அதனைத் தூண்டியவர்கள் என்று குற்றம்சாற்றி காஞ்சி மடத்தின் தலைவர்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் என்பவர்-கள் மீது கொலை வழக்கு நடைபெறு-கிறதே, அதை காஞ்சி வரதராஜபெரு-மாள் வேடிக்கைதானே பார்த்தார்? தடுத்-தாரா? அல்லது கொலையாளிகளின் கொடூர செயலைக் கண்டு அவர்களை ‘கண்ணவித்து’ விட்டாரா? எதுவும் இல்லையே! ஏன்? அது ‘வெறும் கல்’ என்பதுதானே!
4. திருட்டு நடந்துவிட்டாலே, அலட்சியமாக இருந்த காவலாளியை நீக்குகிறீர்களே, அதுபோல வேடிக்கை பார்த்த சாமிகளை மீண்டும் வழிபட அந்தக் கோயிலுக்குச் செல்லலாமா? யோசியுங்கள்.
‘கோயில்கள் விபச்சார விடுதிகள்’ என்றார் ‘தேசபிதா’ அண்ணல் காந்தி-யார். அதற்கு காஞ்சிபுரம் சம்பவம்போல் வேறு பொருத்தமானது உண்டா?
இதுபோலவே அய்யப்பன் கோயில் அர்ச்சகர்கள் கதையும். அதைப் பற்-றியே கவலைப்படாமல், மீண்டும் ‘‘கன்னி சாமிகளாக’’, ‘‘குருசாமிகளாக’’, ‘‘பெரிய சாமிகளாக’’ அங்கு சென்று பொருளையும், அறிவையும் (ஏன் சிலர் உயிரையும் பறிகொடுக்கின்றனர்) இழந்து திரும்புகிறீர்களே_- அதைவிட வேறு கொடுமை பரிதாபத்திற்குரிய அசிங்கம் வேறு உண்டா?
5. எல்லாக் கோயில்களின் நுழைவு வாயில்களில் ‘‘மெட்டல் டிடெக்டர்கள்’’ வைத்து, பரிசோதித்த பின்பே, பக்தர்களாகிய உங்களை கோயிலுக்குள் காவல்துறையின் கண்காணிப்புக்கு உட்-படுத்தப்பட்டு அனுப்புகிறார்களே, அதிலிருந்து தெரிய வேண்டிய ஓர் உண்மை_ மனிதனை கடவுள் பாது-காக்கவில்லை; கடவுளை, கடவுளச்சி-களை மனிதர்கள்தான், அதுவும் 47 துப்பாக்கி முனையில், தீவிரவாதிகளிட-மிருந்து கடவுளையும் காவல்துறை-தானே பாதுகாக்கிறது என்பதுதானே!
6. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் இனிமேல் தேங்காய் உடைக்க அனுமதி இல்லை. ஏனெனில், தேங்காய்களுக்குள் ‘குண்டு’ வைத்திருக்க சாத்தியக் கூறு உண்டு என்று கூறுகிறார்களே; அப்படியானால் கடவுளுக்கு ‘‘சர்வசக்தி’’ என்பது இல்லாத ஒன்று என்பதுதானே! தனக்கு வரும் தோங்காய்க்குள் மறைந்திருக்கும் ‘‘குண்டினைக்’’ கண்டுபிடிக்க கடவுளால், கடவுளச்சிகளால் முடியாதா? முடியாது என்றால் அந்தக் கடவுளை நம்பி, கைப்பொருளை இழப்பதனால் யாருக்-கென்ன லாபம் என்று யோசித்தீர்களா?
7. திருப்பதி கோயில் அருகில், ‘‘திருமலை மேல் செல்போன் அனுமதி இல்லை’’ என்பது தீவிரவாத பயத்-தால்தானே? அங்கிருப்பது ‘‘நட்டகல்’’ என்று கூறினாரே திருமூலர்? அது சரிதானே?
பக்தி வந்தால் புத்தி போகும்;
புத்தி வந்தால் பக்தி போகும்
என்ற தந்தை பெரியார் அறிவுரை எவ்வளவு உண்மை என்பதை உணருங்கள்.
‘‘மாடுகளும் வழக்கத்தால் செக்கைச் சுற்றும்’’ என்பது போல் சிந்திக்காமல், வழக்கம் என்ற பெயரால் கோயிலுக்குச் செல்லலாமா?
8. கோயில்கள் ஆதியில் இல்லை; பாதியில் வந்தது; அது அரசனுக்கு வரு-வாய் தேட என்று கவுடில்யரின் (சாணக்-கியர்) அர்த்த சாஸ்திரம் கூறு-கிறது. திருக்குறளில் கோயில் இல்லை. தமிழர்களே, வள்ளுவத்தைப் பாராட்டி-விட்டு கோயிலுக்குச் செல்லலாமா?
- விடுதலை 09-12-2009 ஆசிரியர் கி.வீரமணியின் கட்டுரை
எதையும் காரண காரியத்துடன் சிந்தித்து நம்ப வேண்டியவைகளை நம்புவதும், நம்ப வேண்டாதவைகளை_ மூடநம்பிக்கைகள் என்று மூளையில் சேர்ந்துள்ள குப்பைகளை அங்கேயே வைத்துக் கொண்டு அவதியுறாதீர்கள்; அறிவு விடுதலை பெற்று, முழு சுதந்திர அறிவுள்ள, தன்னம்பிக்கையாளர்களாக வாழுங்கள் என்று அவர்கள் கூறுவது தவறா? குற்றமா?
1. பானைக்குள்ளே யானை ஒளிந்துள்ளது என்று கூறினால் சிரிக்கமாட்டீர்களா?
இருப்பது உண்மை; அஞ்ஞானிகள் கண்ணுக்கு அது தெரியாது, கண்ணால் பார்க்க முடியாது, உடம்பால் உணர முடியாது, உள்ளத்தாலும் அறிய முடி-யாது -‘மனோ’, வாக்கு, காயங்களுக்கு அப்பாற்பட்டவன் என்று சொல்லி நம்ப வைப்பதும், பானைக்குள் யானை இருக்-கிறது என்று கூறுவதும் ஒன்றுதானே? பானைக்குள் பூனை இருக்கிறது என்றால் நம்பலாம்; ஆனால் யானை இருக்கிறது என்றால் அது இல்லாத ஒன்றுதானே?
2. காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் சந்-நிதியில் பூஜை செய்த ஒரு காமாந்-தகாரனின் காமலீலைகள் அதுவும் கரு-வறையில் ஒரு நாள் அல்ல, பல நாள்; ஒரு பெண்ணோடு மட்டுமல்ல, பல பெண்களுடன் சல்லாபித்து, உல்லாச-மாக இருந்ததோடு, அவற்றை செல்-போன் கேமிராமூலம் படம் பிடித்தும் உள்ள அந்த அர்ச்சகப் பார்ப்பானின் செயல்கண்டு, ஆத்திரப்படும் பக்தை-களே, பக்தர்களே, உங்கள் கோபம் அந்த காமாந்தகாரன்மீது பாய்வதற்கு-முன் இதுபற்றிக் கவலையே இல்லாத சாமியும் சாட்சியாக மாறிவிட்டதன்-மூலம் என்ன புரிய வேண்டும் உங்-களுக்கு? கோயில் உள்ளே, கருவறை உள்ளே இருப்பது எல்லாம்வல்ல கடவுள் அல்ல; அது ‘வெறும் கல்’தான் என்று புரிந்து கொண்டிருக்க வேண்டுமே!
அர்ச்சகப் பார்ப்பனன் மீது பாய்-வதை (விளக்குமாறு, பழஞ்செருப்பு) -விட அங்குள்ள கடவுள் மீது அல்-லவா பாய வேண்டும்_ ‘‘கடவுள் இல்லை; இல்லவே இல்லை’’ என்று கூறிடும் எங்களுடன் அல்லவா வந்து சேரவேண்டும்?
3. அதே காஞ்சிபுரத்தில், காஞ்சி மடத்தின் முன்னாள் மேலாளர் சங்கர-ராமன் ரத்தம் வழிய வழியப் படு-கொலை செய்யப்பட்டாரே, அதனைத் தூண்டியவர்கள் என்று குற்றம்சாற்றி காஞ்சி மடத்தின் தலைவர்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் என்பவர்-கள் மீது கொலை வழக்கு நடைபெறு-கிறதே, அதை காஞ்சி வரதராஜபெரு-மாள் வேடிக்கைதானே பார்த்தார்? தடுத்-தாரா? அல்லது கொலையாளிகளின் கொடூர செயலைக் கண்டு அவர்களை ‘கண்ணவித்து’ விட்டாரா? எதுவும் இல்லையே! ஏன்? அது ‘வெறும் கல்’ என்பதுதானே!
4. திருட்டு நடந்துவிட்டாலே, அலட்சியமாக இருந்த காவலாளியை நீக்குகிறீர்களே, அதுபோல வேடிக்கை பார்த்த சாமிகளை மீண்டும் வழிபட அந்தக் கோயிலுக்குச் செல்லலாமா? யோசியுங்கள்.
‘கோயில்கள் விபச்சார விடுதிகள்’ என்றார் ‘தேசபிதா’ அண்ணல் காந்தி-யார். அதற்கு காஞ்சிபுரம் சம்பவம்போல் வேறு பொருத்தமானது உண்டா?
இதுபோலவே அய்யப்பன் கோயில் அர்ச்சகர்கள் கதையும். அதைப் பற்-றியே கவலைப்படாமல், மீண்டும் ‘‘கன்னி சாமிகளாக’’, ‘‘குருசாமிகளாக’’, ‘‘பெரிய சாமிகளாக’’ அங்கு சென்று பொருளையும், அறிவையும் (ஏன் சிலர் உயிரையும் பறிகொடுக்கின்றனர்) இழந்து திரும்புகிறீர்களே_- அதைவிட வேறு கொடுமை பரிதாபத்திற்குரிய அசிங்கம் வேறு உண்டா?
5. எல்லாக் கோயில்களின் நுழைவு வாயில்களில் ‘‘மெட்டல் டிடெக்டர்கள்’’ வைத்து, பரிசோதித்த பின்பே, பக்தர்களாகிய உங்களை கோயிலுக்குள் காவல்துறையின் கண்காணிப்புக்கு உட்-படுத்தப்பட்டு அனுப்புகிறார்களே, அதிலிருந்து தெரிய வேண்டிய ஓர் உண்மை_ மனிதனை கடவுள் பாது-காக்கவில்லை; கடவுளை, கடவுளச்சி-களை மனிதர்கள்தான், அதுவும் 47 துப்பாக்கி முனையில், தீவிரவாதிகளிட-மிருந்து கடவுளையும் காவல்துறை-தானே பாதுகாக்கிறது என்பதுதானே!
6. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் இனிமேல் தேங்காய் உடைக்க அனுமதி இல்லை. ஏனெனில், தேங்காய்களுக்குள் ‘குண்டு’ வைத்திருக்க சாத்தியக் கூறு உண்டு என்று கூறுகிறார்களே; அப்படியானால் கடவுளுக்கு ‘‘சர்வசக்தி’’ என்பது இல்லாத ஒன்று என்பதுதானே! தனக்கு வரும் தோங்காய்க்குள் மறைந்திருக்கும் ‘‘குண்டினைக்’’ கண்டுபிடிக்க கடவுளால், கடவுளச்சிகளால் முடியாதா? முடியாது என்றால் அந்தக் கடவுளை நம்பி, கைப்பொருளை இழப்பதனால் யாருக்-கென்ன லாபம் என்று யோசித்தீர்களா?
7. திருப்பதி கோயில் அருகில், ‘‘திருமலை மேல் செல்போன் அனுமதி இல்லை’’ என்பது தீவிரவாத பயத்-தால்தானே? அங்கிருப்பது ‘‘நட்டகல்’’ என்று கூறினாரே திருமூலர்? அது சரிதானே?
பக்தி வந்தால் புத்தி போகும்;
புத்தி வந்தால் பக்தி போகும்
என்ற தந்தை பெரியார் அறிவுரை எவ்வளவு உண்மை என்பதை உணருங்கள்.
‘‘மாடுகளும் வழக்கத்தால் செக்கைச் சுற்றும்’’ என்பது போல் சிந்திக்காமல், வழக்கம் என்ற பெயரால் கோயிலுக்குச் செல்லலாமா?
8. கோயில்கள் ஆதியில் இல்லை; பாதியில் வந்தது; அது அரசனுக்கு வரு-வாய் தேட என்று கவுடில்யரின் (சாணக்-கியர்) அர்த்த சாஸ்திரம் கூறு-கிறது. திருக்குறளில் கோயில் இல்லை. தமிழர்களே, வள்ளுவத்தைப் பாராட்டி-விட்டு கோயிலுக்குச் செல்லலாமா?
- விடுதலை 09-12-2009 ஆசிரியர் கி.வீரமணியின் கட்டுரை
Saturday, November 14, 2009
நாத்திகத்துக்கான விளக்கம் (எஸ்.சி. ஹிச்காக்)
சொற்களுக்கான விளக்கங்கள் பற்றி தர்க்க சாத்திரம் அதிகமாகவே கையாள்கிறது. ஒரு பேச்சு வார்த்தை தொடர்ந்து நடைபெறவேண்டுமானால் பேசப்படும் பொருள் பற்றிய நிபந்தனை-களை அனைவரும் ஒப்பி ஏற்றுக் கொள்ளவேண்டும். ஆனால் இந்த எளிய அடிப்படை விதிகள் அடிக்கடி ஊடகங்களால் அலட்சியப்படுத்தப்-படுவ-தால், அது குழப்பத்தையே தூண்டி-விடுகிறது. இதுபற்றி விளக்குவதற்காக, நாம் அடிக்கடி பயன்படுத்தும் இரண்டு சொற்கள் பற்றிய விளக்கத்தை நான் இங்கு அளிக்கிறேன். அவை : மததீவிர-வாதி மற்றும் நாத்திகர். இந்த இரு சொற்களும் என்ன பொருள் தருகிறது என்பதை நுணுக்கமாகப் பகுத்தாய்ந்து அளிக்கப்படும் தெளிவான விளக்கம் பொது மக்கள் மனதில் நமது நிலை-யைப் பற்றிய தெளிவான கருத்தை உரு-வாக்க சுயசிந்தனையாளர்களுக்கு உதவும்.
மதத் தீவிரவாதம்
மதத் தீவிரவாதி என்ற சொல்லே வியப்பளிப்பதாக இருப்பது மட்டு-மன்றி ஒருதலையான விருப்பு வெறுப்பு கொண்டதுமாகவும் இருக்கிறது. பைபிள் அல்லது குரானில் கட்டளை-யிட்டுள்ளபடி சில கிறித்துவர்களும், முஸ்லிம்களும் தங்களது பெரும் செல்வத்தை அறச் செயல்களுக்காக வழங்குகின்றனர். சில மதக்கட்டளை-களை அளவுக்கு மீறி கடைப்பிடிப்ப-வர்கள் அவர்கள் என்று கூறலாம். என்றாலும், அவர்கள் தீவிரவாதிகள் என்று அழைக்கப்படுவதில்லை. தங்கள் மதத்தைப் பின்பற்றுபவர்களை வன்முறைச் செயல்களில் ஈடுபடவும், அறச்செயல்களுக்கு செல்வத்தை அளிக்கவும் கட்டளையிடுகின்றன. ஆனால் வன்முறைச் செயல்களில் ஈடுபடும் மதவாதிகளை மட்டுமே நாம் தீவிரவாதிகள் என்கிறோம். ஏன்?
தீவிரவாதி அல்லாத மத நம்பிக்கையாளரின் சுயசிந்தனை ஆற்றல்
இந்த வினாவுக்கு விடையளிக்க வேண்டுமானால், வேறு ஒரு வினாவை நாம் எழுப்ப வேண்டும். தீவிரவாதி அல்லாத மதநம்பிக்கையாளர் ஒருவரை நாம் எவ்வாறு விவரிப்போம்? வன்-முறைச் செயல்களில் ஈடுபட வலியுறுத்-தும் கட்டளைகளுக்குக் கீழ்படியாத ஒருவரை தீவிரவாதி அற்ற மதநம்பிக்-கையாளர் என்று கூறலாம். அப்படி-யானால், வன்முறைச் செயல்களைச் செய்ய தங்களின் புனித நூல்கள் கட்டளையிட்ட போதும், அவற்றைச் செய்யாமல், அறச்செயல்களுக்கு செல்-வம் அளிக்கவேண்டும் என்ற கட்ட-ளையை மட்டும் நிறைவேற்றுபவர்-களை, சுயமாக சிந்திப்பவர்கள் என்று நாம் பாராட்டுவதில்லையா? வேறு சொற்களில் கூறுவதானால், தீவிரவாதி அல்லாத நம்பிக்கையாளரான அவர் மதக்கட்டளைகளை விட சுயமாக சிந்திப்பதை மேலாகக் கருதி போற்று-பவர் அல்லவா? வன்முறையில் ஈடுபடக் கூறும் மத நூல்களின் கோட்பாட்டை அந்த மதநம்பிக்கையாளரின் ஏதோ ஒரு சிந்தனை நடைமுறை பின்பற்றாமல் இருக்கச் செய்கிறது. அப்படியானால், மத நம்பிக்கையாளரின் சுயமாக சிந்திப்பதற்கான ஆற்றல் பாராட்டப் படாமல், அறச்செயல்களுக்காக அவர் செல்வம் அளிப்பது மட்டுமே பாராட்-டப்படுவது ஏன்?
மேலும், மதத் தீவிரவாதிகள் எனப்-படும் பலர் வன்முறைச் செயல்களில் ஈடுபடுவது மட்டுமன்றி, அறச்செயல்-களிலும் ஈடுபடுகிறார்கள். அவர்களின் புனித நூல்கள் கூறுவதை அவர்கள் முழுமையாகப் பின்பற்றுபவர்கள் அல்லவா? அப்படியானால், அவர்கள் ஏன் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள்? தூய்மையான-வர்கள் என்று அவர்களை அழைப்பது மிகவும் பொருத்தமானதாக இருக்காதா?
நாத்திகம் என்றால் என்ன என்று தெளிவுபடுத்துவதற்கு நான்இரண்டு விளக்கங்களைத் தருகிறேன்.
கடவுள் நம்பிக்கை கொண்டவரும் கடவுள் இல்லை என்ற ஊகத்தில் செயல்படுகிறார்
முதல் விளக்கம் என்னவென்றால், நாம் அனைவருமே பயன்படுத்தும் ஒரு கருவிதான் நாத்திகம் என்பது. சில செயல்களைச் செய்யும் போது மிகுந்த கடவுள் நம்பிக்கை கொண்டவரும் கூட, கடவுள் இல்லை என்ற ஊகத்திலேயே அச் செயல்களைச் செய்கிறார். தன் காருக்கு கடவுள் வந்து பெட்ரோல் போடமாட்டார் என்று கருதும் ஒரு கிறித்துவர்தானே பெட்ரோல் போடச் செய்கிறார். விமானத்திலிருந்து பாரா-சூட்டின் மூலம் குதிப்பவர் தன்னை எந்த தேவனோ, தேவதையோ வந்து காப்பாற்றும் என்று கருதாமல் பாரா-சூட்டை நம்பியே குதிக்கிறார். இத்-தகைய வடிவிலான நாத்திகம் என்பது அவரவர் செயல்பாடுகளின் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது. மதஅமைப்-புகள் கூட இதனை வெளிப்படுத்து-கின்றன. மற்ற மத மக்களைத் தங்கள் கடவுள் வந்து மதம் மாற்றுவார் என்று எதிர்பார்க்காமல், அவர்களே மற்றவர்களைத் தங்கள் மதத்துக்கு மாறச் செய்கின்றனர். இதே போன்றது-தான் மத அமைப்புகளுக்கு அளிக்கப்-படும் நன்கொடைகளும். கடவுள் வந்து தங்களுக்கு பொருளுதவி செய்யப் போவதில்லை என்பதால்தான் மத-அமைப்பாளர்கள் மக்களிடம் நன்-கொடை பெறுகின்றனர். இவ்வாறு கூறு-வதைக் கேட்டு மதநம்பிக்கையாளர்கள் கோபம் கொள்ளலாம். ஆனால், இந்த உலகில் எந்த ஒரு உருப்படியான செயலை செய்து முடிக்க வேண்டுமா னாலும், இயற்கையைக் கடந்த அனைத்து ஆற்றலும் பெற்ற ஒரு கடவுள் மீதான நம்பிக்கையின்மையை ஏதோ ஒரு வழியில் வெளிப்படுத்தியே தீரவேண்டும் என்ற உண்மையை எந்த விதத்திலும் மறுக்கமுடியாது.
தர்க்க, நியாய ரீதியிலான சுயசிந்தனை
‘சுயசிந்தனை’ என்ற ஒரு அகண்ட தலைப்பின் கீழான ஒரு தனிப்பட்ட துறையாக நாத்திகத்தைக் காட்டுவது இரண்டாவது விளக்கமாகும். தர்க்க நியாய வழியிலான ஆதாரங்களைக் கேட்டு, கடவுள், மத நம்பிக்கைகளுக்கு எதிராக சிந்திக்கும் ஒரு வழியான சிந்-தனைதான் சுயசிந்தனையாகும். இத்-தகைய தர்க்க, நியாய ரீதியிலான சிந்-தனையை எல்லா விஷயங்களிலும் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக பறக்கும் மாபெரும் விலங்கு ஒன்று இருப்பதாக தான் நம்புவதாக என்னிடம் ஒருவர் கூறிவதாக வைத்துக் கொள்-வோம். அது பற்றி தர்க்க நியாய ரீதியில் சிந்தித்தபின் அதனை நம்பப் போது-மான காரணங்கள் இல்லை என்று நான் கருதினால், நான் பறக்கும் மாபெரும் விலங்கை நம்பாதவன் என்று ஆகிவிடுகிறது. அது போலவே காரல் மார்க்சின் கோட்பாடுகளில் அதிக அளவு தர்க்க ரீதியான உடன்பாடு எனக்கு இல்லை என்றால், நான் கம்யூ-னிஸ்ட் அல்லாதவன். மதம் பற்றிய விஷயங்களில் எனது சுயசிந்தனையை நான் மேற்கொள்ளும்போது, கடவுள் இருக்கிறார் என்பதிலோ மற்ற ஆன்மிக அறிவிக்கைகளிலோ நம்பிக்கை கொள்வதற்குப் போதுமான தர்க்க நியாய ரீதியிலான காரணங்கள் இல்லை என்று நான் காண்கிறேன். அதனால் நான் ஒரு நாத்திகன். மதப் பிரச்சாரம் பலமாக நடைபெற்று வரும் ஒரு நாட்டில் நான் வாழ்வதால் எனது நாத்திகத் தன்மை மந்தையிலிருந்து தனியாகத் தெரிகிறது. நான் ஒரு கம்யூனிஸ்ட் அல்லது நாஜி நாட்டில் வாழ்ந்திருந்தால், எனது நாத்திகத் தன்மையை விட அதிகமாக கம்யூனிசம் அல்லது நாசிசத்திற்கு எதிரான எனது நிலைப்பாடு தனியாகத் தெரியும்.
தாங்கள் இருப்பதைப் பற்றி அல்லாமல் கடவுள் இருப்பதைப் பற்றி என்று வரும்போது, மதநம்பிக்கை கொண்டவர்களும் கூட நாத்திகர்-களாகவே இருக்கிறார்கள் என்பதை புகழ்பெற்ற சுய சிந்தனையாளர்கள் சிலர் கவனித்திருக்கிறார்கள். ஒருவர் நாத்திக-ராக இருக்க வேண்டுமானால், அனைத்து வகையான ஆன்மிகக் கருத்துகளிலும் சிறிதும் நம்பிக்கை அற்றவராக இருக்க வேண்டும். வேற்று மத நம்பிக்கை கொண்டவர் நாத்திகர் அல்ல
யேசுவை அன்றி வேறு ஒரு கடவுளை நம்புபவராக இருந்தாலும், ஓர் இந்துவை ஒரு கத்தோலிக்கர் நாத்திகர் என்று அழைக்கமுடியாது. அந்த இந்துவை யேசுவை நம்பாதவர் என்று வேண்டுமா-னால் கூறலாம். அனைத்து கிறித்துவர்-களையும் முஸ்லிம்களை அல்லாவை நம்பாதவர்கள் என்று வேண்டுமானால் கூறலாம். ஆனால் அவர்களை நாத்தி-கர்-கள் என்று அழைக்க முடியாது.
நாத்திகத்தைவிட சுயசிந்தனை மேலானது
மேலே கூறிய விளக்கங்களின் மூலக் கருத்தில் இருப்பது சுயசிந்தனையாகும். நம்பிக்கையாளர்களை அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையின் உண்மைத்தன்மை காரணமாக நாம் பாராட்டா விட்டாலும், மத போத-னைகளில் அவர்கள் கொண்டு வரும் சுயசிந்தனை என்ற அளவிலாவது அவர்-களைப் பாராட்டலாம். நாத்திகத்திற்-கும்கூட இரண்டு வேறுபட்ட வழி-களில் விளக்கம் அளிக்கலாம். விளக்கத்-தின் முதல் பகுதி செயல்பாடுகளைப் பற்றிக் கூறுவதாகும். இரண்டாவது, சுயசிந்தனை என்ற பெரிய கட்டமைப்-பில் உள்ள ஒரு சிறிய கட்டமைப்பாக நாத்திகத்தை மாற்றிவிடுகிறது என்ப-தாகும். அந்த ஒரு காரணத்துக்காகவே, எனது நாத்திகத்தை விட சுயமாக சிந்திக்கும் எனது ஆற்றலை நான் மேலானதாக மதிக்கிறேன். நமது அனைத்து விளக்கங்களின் மய்யத்திலும் சுயசிந்தனையை வைத்துக் காண-வேண்டிய நேரமிது. இறுதியில் அனைத்து பொது வாதங்களின் மய்யத்தி-லும் இதுவே வைக்கப்படவேண்டும்.
நன்றி விடுதலை 14.11.04
மதத் தீவிரவாதம்
மதத் தீவிரவாதி என்ற சொல்லே வியப்பளிப்பதாக இருப்பது மட்டு-மன்றி ஒருதலையான விருப்பு வெறுப்பு கொண்டதுமாகவும் இருக்கிறது. பைபிள் அல்லது குரானில் கட்டளை-யிட்டுள்ளபடி சில கிறித்துவர்களும், முஸ்லிம்களும் தங்களது பெரும் செல்வத்தை அறச் செயல்களுக்காக வழங்குகின்றனர். சில மதக்கட்டளை-களை அளவுக்கு மீறி கடைப்பிடிப்ப-வர்கள் அவர்கள் என்று கூறலாம். என்றாலும், அவர்கள் தீவிரவாதிகள் என்று அழைக்கப்படுவதில்லை. தங்கள் மதத்தைப் பின்பற்றுபவர்களை வன்முறைச் செயல்களில் ஈடுபடவும், அறச்செயல்களுக்கு செல்வத்தை அளிக்கவும் கட்டளையிடுகின்றன. ஆனால் வன்முறைச் செயல்களில் ஈடுபடும் மதவாதிகளை மட்டுமே நாம் தீவிரவாதிகள் என்கிறோம். ஏன்?
தீவிரவாதி அல்லாத மத நம்பிக்கையாளரின் சுயசிந்தனை ஆற்றல்
இந்த வினாவுக்கு விடையளிக்க வேண்டுமானால், வேறு ஒரு வினாவை நாம் எழுப்ப வேண்டும். தீவிரவாதி அல்லாத மதநம்பிக்கையாளர் ஒருவரை நாம் எவ்வாறு விவரிப்போம்? வன்-முறைச் செயல்களில் ஈடுபட வலியுறுத்-தும் கட்டளைகளுக்குக் கீழ்படியாத ஒருவரை தீவிரவாதி அற்ற மதநம்பிக்-கையாளர் என்று கூறலாம். அப்படி-யானால், வன்முறைச் செயல்களைச் செய்ய தங்களின் புனித நூல்கள் கட்டளையிட்ட போதும், அவற்றைச் செய்யாமல், அறச்செயல்களுக்கு செல்-வம் அளிக்கவேண்டும் என்ற கட்ட-ளையை மட்டும் நிறைவேற்றுபவர்-களை, சுயமாக சிந்திப்பவர்கள் என்று நாம் பாராட்டுவதில்லையா? வேறு சொற்களில் கூறுவதானால், தீவிரவாதி அல்லாத நம்பிக்கையாளரான அவர் மதக்கட்டளைகளை விட சுயமாக சிந்திப்பதை மேலாகக் கருதி போற்று-பவர் அல்லவா? வன்முறையில் ஈடுபடக் கூறும் மத நூல்களின் கோட்பாட்டை அந்த மதநம்பிக்கையாளரின் ஏதோ ஒரு சிந்தனை நடைமுறை பின்பற்றாமல் இருக்கச் செய்கிறது. அப்படியானால், மத நம்பிக்கையாளரின் சுயமாக சிந்திப்பதற்கான ஆற்றல் பாராட்டப் படாமல், அறச்செயல்களுக்காக அவர் செல்வம் அளிப்பது மட்டுமே பாராட்-டப்படுவது ஏன்?
மேலும், மதத் தீவிரவாதிகள் எனப்-படும் பலர் வன்முறைச் செயல்களில் ஈடுபடுவது மட்டுமன்றி, அறச்செயல்-களிலும் ஈடுபடுகிறார்கள். அவர்களின் புனித நூல்கள் கூறுவதை அவர்கள் முழுமையாகப் பின்பற்றுபவர்கள் அல்லவா? அப்படியானால், அவர்கள் ஏன் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள்? தூய்மையான-வர்கள் என்று அவர்களை அழைப்பது மிகவும் பொருத்தமானதாக இருக்காதா?
நாத்திகம் என்றால் என்ன என்று தெளிவுபடுத்துவதற்கு நான்இரண்டு விளக்கங்களைத் தருகிறேன்.
கடவுள் நம்பிக்கை கொண்டவரும் கடவுள் இல்லை என்ற ஊகத்தில் செயல்படுகிறார்
முதல் விளக்கம் என்னவென்றால், நாம் அனைவருமே பயன்படுத்தும் ஒரு கருவிதான் நாத்திகம் என்பது. சில செயல்களைச் செய்யும் போது மிகுந்த கடவுள் நம்பிக்கை கொண்டவரும் கூட, கடவுள் இல்லை என்ற ஊகத்திலேயே அச் செயல்களைச் செய்கிறார். தன் காருக்கு கடவுள் வந்து பெட்ரோல் போடமாட்டார் என்று கருதும் ஒரு கிறித்துவர்தானே பெட்ரோல் போடச் செய்கிறார். விமானத்திலிருந்து பாரா-சூட்டின் மூலம் குதிப்பவர் தன்னை எந்த தேவனோ, தேவதையோ வந்து காப்பாற்றும் என்று கருதாமல் பாரா-சூட்டை நம்பியே குதிக்கிறார். இத்-தகைய வடிவிலான நாத்திகம் என்பது அவரவர் செயல்பாடுகளின் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது. மதஅமைப்-புகள் கூட இதனை வெளிப்படுத்து-கின்றன. மற்ற மத மக்களைத் தங்கள் கடவுள் வந்து மதம் மாற்றுவார் என்று எதிர்பார்க்காமல், அவர்களே மற்றவர்களைத் தங்கள் மதத்துக்கு மாறச் செய்கின்றனர். இதே போன்றது-தான் மத அமைப்புகளுக்கு அளிக்கப்-படும் நன்கொடைகளும். கடவுள் வந்து தங்களுக்கு பொருளுதவி செய்யப் போவதில்லை என்பதால்தான் மத-அமைப்பாளர்கள் மக்களிடம் நன்-கொடை பெறுகின்றனர். இவ்வாறு கூறு-வதைக் கேட்டு மதநம்பிக்கையாளர்கள் கோபம் கொள்ளலாம். ஆனால், இந்த உலகில் எந்த ஒரு உருப்படியான செயலை செய்து முடிக்க வேண்டுமா னாலும், இயற்கையைக் கடந்த அனைத்து ஆற்றலும் பெற்ற ஒரு கடவுள் மீதான நம்பிக்கையின்மையை ஏதோ ஒரு வழியில் வெளிப்படுத்தியே தீரவேண்டும் என்ற உண்மையை எந்த விதத்திலும் மறுக்கமுடியாது.
தர்க்க, நியாய ரீதியிலான சுயசிந்தனை
‘சுயசிந்தனை’ என்ற ஒரு அகண்ட தலைப்பின் கீழான ஒரு தனிப்பட்ட துறையாக நாத்திகத்தைக் காட்டுவது இரண்டாவது விளக்கமாகும். தர்க்க நியாய வழியிலான ஆதாரங்களைக் கேட்டு, கடவுள், மத நம்பிக்கைகளுக்கு எதிராக சிந்திக்கும் ஒரு வழியான சிந்-தனைதான் சுயசிந்தனையாகும். இத்-தகைய தர்க்க, நியாய ரீதியிலான சிந்-தனையை எல்லா விஷயங்களிலும் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக பறக்கும் மாபெரும் விலங்கு ஒன்று இருப்பதாக தான் நம்புவதாக என்னிடம் ஒருவர் கூறிவதாக வைத்துக் கொள்-வோம். அது பற்றி தர்க்க நியாய ரீதியில் சிந்தித்தபின் அதனை நம்பப் போது-மான காரணங்கள் இல்லை என்று நான் கருதினால், நான் பறக்கும் மாபெரும் விலங்கை நம்பாதவன் என்று ஆகிவிடுகிறது. அது போலவே காரல் மார்க்சின் கோட்பாடுகளில் அதிக அளவு தர்க்க ரீதியான உடன்பாடு எனக்கு இல்லை என்றால், நான் கம்யூ-னிஸ்ட் அல்லாதவன். மதம் பற்றிய விஷயங்களில் எனது சுயசிந்தனையை நான் மேற்கொள்ளும்போது, கடவுள் இருக்கிறார் என்பதிலோ மற்ற ஆன்மிக அறிவிக்கைகளிலோ நம்பிக்கை கொள்வதற்குப் போதுமான தர்க்க நியாய ரீதியிலான காரணங்கள் இல்லை என்று நான் காண்கிறேன். அதனால் நான் ஒரு நாத்திகன். மதப் பிரச்சாரம் பலமாக நடைபெற்று வரும் ஒரு நாட்டில் நான் வாழ்வதால் எனது நாத்திகத் தன்மை மந்தையிலிருந்து தனியாகத் தெரிகிறது. நான் ஒரு கம்யூனிஸ்ட் அல்லது நாஜி நாட்டில் வாழ்ந்திருந்தால், எனது நாத்திகத் தன்மையை விட அதிகமாக கம்யூனிசம் அல்லது நாசிசத்திற்கு எதிரான எனது நிலைப்பாடு தனியாகத் தெரியும்.
தாங்கள் இருப்பதைப் பற்றி அல்லாமல் கடவுள் இருப்பதைப் பற்றி என்று வரும்போது, மதநம்பிக்கை கொண்டவர்களும் கூட நாத்திகர்-களாகவே இருக்கிறார்கள் என்பதை புகழ்பெற்ற சுய சிந்தனையாளர்கள் சிலர் கவனித்திருக்கிறார்கள். ஒருவர் நாத்திக-ராக இருக்க வேண்டுமானால், அனைத்து வகையான ஆன்மிகக் கருத்துகளிலும் சிறிதும் நம்பிக்கை அற்றவராக இருக்க வேண்டும். வேற்று மத நம்பிக்கை கொண்டவர் நாத்திகர் அல்ல
யேசுவை அன்றி வேறு ஒரு கடவுளை நம்புபவராக இருந்தாலும், ஓர் இந்துவை ஒரு கத்தோலிக்கர் நாத்திகர் என்று அழைக்கமுடியாது. அந்த இந்துவை யேசுவை நம்பாதவர் என்று வேண்டுமா-னால் கூறலாம். அனைத்து கிறித்துவர்-களையும் முஸ்லிம்களை அல்லாவை நம்பாதவர்கள் என்று வேண்டுமானால் கூறலாம். ஆனால் அவர்களை நாத்தி-கர்-கள் என்று அழைக்க முடியாது.
நாத்திகத்தைவிட சுயசிந்தனை மேலானது
மேலே கூறிய விளக்கங்களின் மூலக் கருத்தில் இருப்பது சுயசிந்தனையாகும். நம்பிக்கையாளர்களை அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையின் உண்மைத்தன்மை காரணமாக நாம் பாராட்டா விட்டாலும், மத போத-னைகளில் அவர்கள் கொண்டு வரும் சுயசிந்தனை என்ற அளவிலாவது அவர்-களைப் பாராட்டலாம். நாத்திகத்திற்-கும்கூட இரண்டு வேறுபட்ட வழி-களில் விளக்கம் அளிக்கலாம். விளக்கத்-தின் முதல் பகுதி செயல்பாடுகளைப் பற்றிக் கூறுவதாகும். இரண்டாவது, சுயசிந்தனை என்ற பெரிய கட்டமைப்-பில் உள்ள ஒரு சிறிய கட்டமைப்பாக நாத்திகத்தை மாற்றிவிடுகிறது என்ப-தாகும். அந்த ஒரு காரணத்துக்காகவே, எனது நாத்திகத்தை விட சுயமாக சிந்திக்கும் எனது ஆற்றலை நான் மேலானதாக மதிக்கிறேன். நமது அனைத்து விளக்கங்களின் மய்யத்திலும் சுயசிந்தனையை வைத்துக் காண-வேண்டிய நேரமிது. இறுதியில் அனைத்து பொது வாதங்களின் மய்யத்தி-லும் இதுவே வைக்கப்படவேண்டும்.
நன்றி விடுதலை 14.11.04
Subscribe to:
Posts (Atom)

