வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Showing posts with label எம்.என்.ராய். Show all posts
Showing posts with label எம்.என்.ராய். Show all posts

Sunday, December 27, 2009

எம்.என்.ராய் - எனது நாத்திக ஆசான் பெரியார்

எம்.என்.ராய் உலகப் புகழ் பெற்ற நாத்திகர், மேற்கு வங்கம் அம்பாலி-யாவில் 1887ஆம் ஆண்டு பிறந்தார். இயற் பெயர் நரேந்திரநாத். ஆனால் அதனைமாற்றி இவர் தமக்குச் சூட்டிக் கொண்ட பெயர் மனோ-பந்திரநாத் ராய் (எம்.என். ராய்) என்பதாகும்.


உலகைச் சுற்றியவர், லெனினின் நண்பர், அவ-ரோடு பல விஷயங்களில் எதிர்த்து விவாதம் புரிந்தவரும்கூட!

ஒரு முறை காந்தி-யாரைப் புரட்சியாளர் என்று லெனின் சொன்ன -போது அதனை மறுத்தார் ராய். “அரசியல் செய்கை-களிலே எவ்வளவு புரட்-சியாளராகத் தோன்றி-னாலும், பழைய சனாதன தருமங்களையும், சமய வழிபாடுகளையும் வர-வேற்பவர்கள் சமுதாயப் புரட்சிக்குத் தடைக் கற்-களாகவே இருக்க முடி-யும்” என்று முகத்துக்கு முகம் லெனினிடம் அடித்-துக் கூறிய அஞ்சா நெஞ்சர் - _ கருத்துத் தெளி-வின் சின்னம்.
 
1944 டிசம்பர் 27_ஆம் நாள் (இந்நாள்) அன்றைய கல்கத்தாவில் எம்.என்.-ராய் கூட்டிய ஜனநாயகக் கட்சி மாநாட்டிற்குத் தந்தை பெரியார் அவர்-களை அழைத்திருந்தார். அம்மாநாட்டிற்கு அண்ணா அவர்களையும் அழைத்-துக் கொண்டு போனார் தந்தை பெரியார்.

அந்த மாநாட்டில் எம்.என். ராய், தந்தை பெரியார்பற்றி கூறிய கருத்தும், கணிப்பும் மிக-வும் குறிப்பிடத்தக்கதாகும் எனது நாத்திக ஆசான்” பெரியார் என்று பெரு-மிதத்தோடு குறிப்பிட்டார்.

நாத்திகத்தைப்பற்றி அதிகமாகப் பேசி, எழுதி, நூல்கள் அதிகம் வெளி-யிட்டதில் பெரியார் போல உலகில் எவருமே கிடை-யாது என்று உண்மையின் அடிப்படையில் புகழாரம் சூட்டினார்.

“முழு மூடநம்பிக்-கையை மேலான ஆன்-மீக நிலை என்று விளம்-பரப்படுத்துவதை உதறித் தள்ளினாலன்றி இந்தியா இழிவும், பழியும், இன்ன-லும், அவல நிலையும் விட்டு மீளவே வழி-யில்லை நம்பிக்கைக்கு எதிராக நல்லறிவும், ஆணைக்கு எதிராகப் பகுத்தறிவும், பண்பும், பாரம்பரியப் பழக்கங்-களைத் தூக்கி எறியும் துணிவும் உருவானால் அல்லாது இந்தியாவில் மறுமலர்ச்சி ஏற்படுத்துவது அரிது’’ என்கிறார் எம்.-என்.ராய்.

இவை தந்தை பெரி-யாரின் கருத்துகளை உரித்து வைத்தது போல் இல்லையா?

- விடுதலை (27.12.09) மயிலாடன்

Tamil 10 top sites [www.tamil10 .com ]