வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, November 14, 2009

பேராண்மை.. இடஒதுக்கீடு.. ஜனநாதனுக்கு பாராட்டு


பேராண்மை படம் பற்றி பலரும் எதிர் வாதங்கள் மற்றும்
ரஷ்ய திரைபடத்தின் சாயல் என்றும் விமர்சனகள் எழுந்தாலும். தமிழ்நாட்டில் தமிழனுக்கு ஒரு சிறப்பான பொதுவுடமை, உலகரசியல் மற்றும் இடஒதிக்கீடு போன்ற எல்லாவற்றையும் தன் இரண்டரை மணிநேர படத்தில் சொல்லி இருக்கிறார் திரு.ஜனநாதன் அவர்கள். குப்பை போன்று வரும் தமிழ் சினிமாக்களை மாற்றி சமுக மாற்றத்திற்கு இந்த ஊடகம் எப்படி பயன் படும் என்று வரும் இளைய தலைமுறை இயக்குனர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமையும்
 என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. தொடரட்டும்
 அவர் பணி. நாமும் அவருடன் இருப்போம். இதோ தமிழக முதல்வரின் பாராட்டு.............

பேராண்மை படம் பார்த்த முதல்வர் கருணாநிதி, படம் முடிந்த பிறகு அதன் இயக்குநர் ஜனநாதனிடம், இட ஒதுக்கீடு பற்றி சிறிது நேரம் பேசிவிட்டுச் சென்றார்.
எஸ்.பி.ஜனநாதன் இயக்க, ஜெயம் ரவி நாயகனாக நடித்துள்ள படம் பேராண்மை. அய்ங்கரன் தயாரிப்பில் தீபாவளிக்கு வெளியான இந்தப் படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தப் படத்தை சில தினங்களுக்கு முன் வழக்கமாக தான் படம் பார்க்கும் ஃபோர்பிரேம்ஸ் திரையரங்கில் பார்த்தார் முதல்வர் கருணாநிதி . படம் பார்த்து முடித்ததும், ஜெயம் ரவி உள்பட அதில் பங்காற்றிய கலைஞர்கள் அனைவருக்கும் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

பின்னர், இந்தப் படம் குறித்து சிறிது நேரம் இயக்குநர் ஜனநாதனுடன் பேசிக் கொண்டிருந்தார் முதல்வர். இதுபற்றி ஜனநாதனிடம் கேட்டபோது, "இடஒதுக்கீடு பற்றி இந்தப் படம் விவாதிப்பதால், அது பற்றி சில விவரங்கள் மற்றும் விளக்கங்களைச் சொன்னார் முதல்வர் கலைஞர் . படம் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும், சமூக மாற்றத்துக்கு உதவும் கருத்துக்களைச் சொல்லியிருப்பதாகவும் பாராட்டினார். மிகவும் மகிழ்வாகவும், பெரிய அங்கீகாரம் கிடைத்ததாகவும் உணர்ந்தேன்" என்றார்..

நன்றி: OneInida

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]